பாகுபலி-2 சீன்களை லீக் செய்த டிசைனர் கைது

பாகுபலி-2 சீன்களை லீக் செய்த டிசைனர் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baahubaliராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் 300 கோடி ரூபாய் செலவில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் பாகுபலி படத்தின் போர்க்கள காட்சிகள் இணையதளத்தில் வெளியானது.

எனவே, பட தயாரிப்பாளர் ஹைதராபாத் போலீசில் புகார் செய்தார்.

இக்காட்சிகளை கிராபிக்ஸ் டிசைனர் கிருஷ்ண தயானந்த சவுத்ரிதான் இணையத்தில் வெளியிட்டதாக கண்டுபிடித்த போலீஸ் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் இணையத்தில் உள்ள அந்த காட்சிகளை நீக்குமாறு யூ டியூப் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
அந்த காட்சிகள் தற்போது நீக்கப்பட்டுவிட்டது.

விஜயகாந்த்-அஜித் படங்களை இயக்கிய சுபாஷ் மரணம்

விஜயகாந்த்-அஜித் படங்களை இயக்கிய சுபாஷ் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director subhashஇயக்குனர் சுபாஷ் சென்னையில் இன்று வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு மற்றும் இதய கோளாறு காரணமாக காலமானர். அவருக்கு வயது 57.

இவர் பராசக்தி, ரத்த கண்ணீர் படங்களை வெற்றி படங்களை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு-வின் கிருஷ்ணனின் மகன் ஆவார்.

மறைந்த இயக்குனர் சுபாஷ், விஜயகாந்தின் சத்ரியன், அஜித்தின் பவித்ரா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் சுயம்வரம், 123, நினைவிருக்கும் வரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

ஹிந்தியில் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே போன்ற படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகத்தினர் வந்த வண்ணம் உள்ளனர்.

இவரது உடல் இன்று மாலை நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மாயனத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பட அப்டேட்ஸ்

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பட அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriya stillsஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

சில நாட்கள் படப்பிடிப்பை சென்னையில் முடித்துவிட்டு, தற்போது காரைக்குடியில் முகாமிட்டுள்ளனர்.

கிட்டதட்ட ஒரு வாரம் அங்கே படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்களாம்.

அதன்பின்னர், லண்டன் பறந்து பாடல் காட்சிகளை படமாக்கவிருக்கிறார்களாம்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சூர்யாவினால் கேன்சல் ஆகும் ‘சிங்கம்-3’ இசை வெளியீட்டு விழா?

சூர்யாவினால் கேன்சல் ஆகும் ‘சிங்கம்-3’ இசை வெளியீட்டு விழா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singam suriyaஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் ‘சிங்கம் 3’.

‘எஸ் 3’ என்று அழைக்கப்படும் இப்படத்தின் இசையை வருகிற 27ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இதற்கான விழா சென்னையில் நடைபெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விழா எதுவும் இல்லாமல், யுடியூப், ட்விட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

சூர்யா தற்போது காரைக்குடியில் நடைபெற்று வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படப்பிடிப்பில் உள்ளார்.

அவர் இவ்விழாவுக்கு வந்தால் அங்கே சூட்டிங் கேன்சல் ஆகும் என்பதால் இந்த மாற்று ஏற்பாடாம்.

நிருபர்களுக்கு பதிலளிக்காமல் கேள்வி கேட்ட ரஜினிகாந்த்

நிருபர்களுக்கு பதிலளிக்காமல் கேள்வி கேட்ட ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajiniஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் ஓரிரு தினங்களுக்கு முன் மும்பையில் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், பின்னர் சென்னை திரும்பினார்.

அப்போது ரஜினியை சுற்றி வளைத்த பத்திரிகையாளர்கள் பல கேள்விகளை கேட்டனர்.

அதில்…
500, 1000 ரூபாய் நோட்டுகள் தடைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் சந்திக்க செல்வீர்களா?

கருணாநிதியும் உடல் நலமில்லாமல் இருக்கிறாரே அவரையும் சந்திப்பீர்களா?

என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டே பின்னால் வந்தனர்.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்காத ரஜினி, “2.ஓ பர்ஸ்ட் லுக் பார்த்தீங்களா நல்லா இருந்துச்சா?” என்று நிருபர்களை கேட்டு விட்டு கிளம்பிச் சென்றார் சூப்பர் ஸ்டார்.

விஜய்க்காக செல்வராகவன் எழுதிய கதையில் சூர்யா

விஜய்க்காக செல்வராகவன் எழுதிய கதையில் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay suriya selvaraghavan‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை தொடர்ந்து சந்தானம் நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார் செல்வராகவன்.

இதனையடுத்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்க உள்ளார் செல்வராகவன்.

இதனிடையில் சில தினங்களுக்கு முன், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய்-செல்வராகவன் இணையவுள்ளதாக செய்திகள் வந்தன.

ஆனால் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார்.

இந்நிலையில், தற்போது சூர்யாவுடன் செல்வராகவன் இணைய உள்ள படம் விஜய்க்காக எழுதப்பட்ட கதை என்று தெரிய வந்துள்ளது.

More Articles
Follows