தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் 300 கோடி ரூபாய் செலவில் தயாராகி வருகிறது.
இந்நிலையில் பாகுபலி படத்தின் போர்க்கள காட்சிகள் இணையதளத்தில் வெளியானது.
எனவே, பட தயாரிப்பாளர் ஹைதராபாத் போலீசில் புகார் செய்தார்.
இக்காட்சிகளை கிராபிக்ஸ் டிசைனர் கிருஷ்ண தயானந்த சவுத்ரிதான் இணையத்தில் வெளியிட்டதாக கண்டுபிடித்த போலீஸ் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
மேலும் இணையத்தில் உள்ள அந்த காட்சிகளை நீக்குமாறு யூ டியூப் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
அந்த காட்சிகள் தற்போது நீக்கப்பட்டுவிட்டது.