தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வாட்ஸ்அப் ஷேரிங் பற்றிய நிகழ்வுகளை மையமாக கொண்டு ‘பகிரி’ படம் தயாராகியுள்ளது.
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரபு ரணவீரன் நாயகனாகவும், நாயகிகளாக ஷார்வியா, ஆதிரா நடித்துள்ளனர்.
இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு நடிகர் கருணாஸ் இசையமைத்துள்ளார்.
இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நடிகை நமீதா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக புதிதாகத் தேர்வான தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியனின் நிர்வாகிகள் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் A.ஜான், பொருளாளர் விஜய முரளி, துணைத்தலைவர் வி.கே. சுந்தர், இணைச் செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ‘பகிரி’ படக் குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர்.
விழாவில் சுரேஷ் காமாட்சி பேசியதாவது…
“நான் மற்றும் ‘பகிரி’ இசக்கி கார்வண்ணன் எல்லாருமே ஒரே இடத்திலிருந்து பயணத்தை தொடங்கியவர்கள்.
இப்படத்தின் இசையமைப்பாளர் கருணாஸ் ஜல்லிக்கட்டு பற்றி சட்டசபையில் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது.
இன்றைய தமிழ் சினிமாவிற்கு ஒரே நம்பிக்கை ஊடகங்கள்தான்.
ஆனால் ஊடகங்களின் விமர்சனங்கள் மக்கள் பார்வைக்கு வருவதற்குள் திரையரங்கில் அந்த படத்தை தூக்கி விடுகிறார்கள்.
இன்று சினிமா பார்க்காதவர் யாருமில்லை. திருட்டு விசிடி அல்லது டவுன்லோடு செய்து பார்க்கிறார்கள்.
ஆனால் தியேட்டருக்கு வந்து பார்க்கத்தான் அவர்கள் தயார் இல்லை.
சினிமா டிக்கெட்டை விட அதன் பார்க்கிங் கட்டணம் அதிகம். ரூ. 200 வரை இருக்கிறது.
படம் பார்க்கத்தான் தியேட்டருக்கு வருகிறார்கள். ஆனால் இப்படி கட்டணம் வைத்தால் எப்படி வருவார்கள்?
காலை, மதியம் காட்சிக்கு கேண்டீனில் வியாபாரம் இல்லையென்றால் அடுத்த காட்சிக்கு அந்த படம் இருக்காது. கேண்டீனில் வியாபாரம் செய்வதற்கா தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டுப் படம் எடுக்கிறார்கள்?
எனவே, ஏன் எல்லாரையும் தியேட்டருக்கு போய் படம் பார்க்கக் கட்டாயப்படுத்த வேண்டும்?
கள்ளச் சாராயத்தை ஒழிக்க டாஸ்மாக் வந்தது போல் திருட்டு விசிடியை ஒழிக்க அதையும் சட்டப் பூர்வமாக்கி விடலாம்.” என்றார்.