கண்ணீர் நனைக்கிறது.. காலத்தை நினைக்கிறது..; தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மரணத்திற்கு டிஆர் இரங்கல்

கண்ணீர் நனைக்கிறது.. காலத்தை நினைக்கிறது..; தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மரணத்திற்கு டிஆர் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Ibrahimதயாரிப்பாளர் திரு E.M.இப்ராஹிம் அவர்களின் மறைவுக்கு டிஆர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில்..

1980ம் ஆண்டு வெளியான என் முதல் படமான ‘ஒரு தலை ராகம்’ படத்தின் தயாரிப்பாளர் E.M.இப்ராஹிம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாய் பாய்கிறது.

மீளா அதிர்ச்சிக்கு உள்ளானேன்,
காரணம் அவர் அரங்கக்குடியில் பிறந்தவர்
என்னை திரையுலகிற்கு அரங்கேற்றம் செய்தவர் வடகரை பக்கத்தில் வாழ்ந்தவர்
என் திரையுலக வாழ்க்கை படகை கரை சேர்த்தவர்

இன்று ஏன் மறைந்தார்..
இந்த உலகை விட்டு பிரிந்தார்..

கண்ணீர் கண்களை நனைக்கிறது..
என் மனம் கடந்த காலத்தில் அவரோடு வாழ்ந்த காலத்தை நினைக்கிறது..

அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இப்படிக்கு,
டி. ராஜேந்தர் M.A,
தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர்,
தலைவர்,
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.
கௌரவ ஆலோசகர்,
தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம்.
Oru Thalai Ragam film producer EM Ibrahim passed away

ஹே மச்சான்ஸ்.. ஒரு ஹாப்பி நியூஸ்.; ‘நமீதா தியேட்டர்ஸ்’ தொடங்கினார் நடிகை நமீதா

ஹே மச்சான்ஸ்.. ஒரு ஹாப்பி நியூஸ்.; ‘நமீதா தியேட்டர்ஸ்’ தொடங்கினார் நடிகை நமீதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் OTT தளங்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கணக்கற்ற வகையில் OTT தளங்கள் துவங்கப்பட்டு வருகின்றன.

இவை ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமல்லாது உலகம் முழுதும் பரந்து விரிந்து ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.

தரமான OTT தளங்களின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது “நமீதா தியேட்டர்ஸ்” தளம்.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தளத்தின் முதன்மை தூதுவராக ( Brand Partner ) நடிகை நமீதா அவர்களும் நிர்வாக இயக்குநராக ரவி வர்மா அவர்களும் உள்ளனர்.

இது குறித்து நடிகை நமீதா கூறியதாவது…

திரை உலக நண்பர்களும் மக்களும் கடந்த வருடங்களில் எனக்கு மிகுந்த பிரபலத்தையும் பெரும் அன்பையும் அளித்து வந்துள்ளார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அதை திருப்பி அளிக்க நினைத்தேன்.

பல விதமான ஐடியாக்களை நினைத்து வந்தபோது தான் ரவி வர்மா அவர்களை சந்தித்தேன். திரைப்பட தொழில்நுட்ப டிப்ளமோ படிப்பு முடித்து, பல வித கார்பரேட் வணிகங்களை செய்து வந்துள்ளார்.

அவர்தான் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் கதைக்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு OTT தளத்தை ஆரம்பிக்கும் ஐடியாவை தந்தார்.

புதிதாக திரைத்துறைக்கு வரும் இளம் திறமைகளுக்கு தேவையான உதவியை அளிக்கும் எண்ணம் எப்போதுமே என்னிடம் இருந்து வந்தது.

புதிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் இது ஒரு நல் வாய்ப்பாக அமையும்.

மேலும் சிறு படத் தயாரிப்பாளர்களும் இத்தளம் மூலம் தங்கள் திரைப்படங்களை திரையிடலாம்.

நாங்கள் இத்தளத்தை துவங்க ஆரம்பித்த கணமே, நாங்கள் நினைத்தே பார்த்திராத அளவு, இத்தளத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.

முதல் பகுதி கதைகள் திரைப்படங்களை நமீதா தியேட்டர்ஸ் தளத்தில் வெளியிட அடுத்த மாதத்தில் ஒரு நல்ல நாளை எதிர்பார்த்துள்ளோம்.

இந்த இனிய பயணத்தில் என்னையும் பங்கேற்க வைத்ததற்கு இந்நேரத்தில் ரவி வர்மா அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ரவி வர்மா கூறியதாவது..,

“நமீதா தியேட்டர்ஸ்” எனும் இந்த கனவு பயணத்தை அறிவிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.

முற்றிலும் தனித்த வகையிலான தராமான கதைகள் எந்த மீடியா அல்லது சினிமாவில் வெளியானாலும் நல்ல வரவேற்பை பெறும். அந்த வகையில் நான் ஒரு தனித்த ஐடியாவை உருவாக்கினேன் அதற்கு ஆதரவளித்து முதன்மை தூதுவராக நமீதா சம்மதித்தது மிகவும் மகிழ்ச்சி.

ஆனால் இந்த வாய்ப்பு கடந்த 27 வருடங்களாக Sunshine Casting Agency நடத்தி வரும் எனது நண்பர், நடிகர், நடிகர்கள் தேர்வாளர் மனோஜ் கிருஷ்ணா அவர்கள் மூலம் தான் இது அனைத்தும் சாத்தியமானது.

அவரும் நானும் 30 வருட கால நண்பர்கள். நடிகை நமீதா அவர்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும், நமீதா தியேட்டர்ஸ் தளம் குறித்து அவர் தந்த ஐடியாக்கள் மிகவும் மதிப்பு மிகுந்ததாகவும் இருந்தது.

அவருக்கு எல்லா வயதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மனோஜ்குமார் அவர்கள் நமீதா தியேட்டர்ஸ் தளத்தில் Chief Administrative Officer ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

சினிமா மீதான தீவிரமான காதல் ஈடுபாடு எங்களுக்குள் ஒரே அளவில் இருந்தது. இருவருக்கும் 40 வருட கால அனுபவம் சினிமா துறையிலும், வணிக துறையிலும் உள்ளது.

எங்கள் இருவரது பங்களிப்பும் நமீதா தியேட்டர்ஸ் தளத்தை மிக சிறப்பாக வழிநடத்தும் என நம்புகிறேன்.

மிக விரைவில் முதல் பகுதி கதைகள், திரைப்படங்களை நமீதா தியேட்டர்ஸ் தளத்தில் வெளியிடுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி.

namitha theatres

Actress Namitha starts new OTT

JUST IN ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..’ பாடல் புகழ் மாற்றுத் திறனாளி கோமகன் காலமானார்

JUST IN ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..’ பாடல் புகழ் மாற்றுத் திறனாளி கோமகன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Komaganசிநேகா, கோபிகா, மல்லிகா, கனிகா ஆகியோருடன் சேரன் இயக்கி நாயகனாக நடித்த படம் ‘ஆட்டோகிராஃப்’.

இந்த படத்தில் இடம்பெற்ற ’’ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!’’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

இந்த பாடலில் ‘’மனிதா உன் மனதைக் கீறி விதை போடு உரமாகும்’’ என்கிற வரிகளைப் பாடியவர் கோமகன்.

இவர் கோமகனின் ராகப்ரியா’ எனும் இசைக்குழுவையும் நடத்தி வந்தார்.

பிறப்பிலேயே பார்வையற்றவர் கோமகன். இவரது பூர்வீகம் நாகர்கோவில் என்றாலும் சென்னையிலுள்ள தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் வேலை செய்து வந்தார்.

அங்கேயே பணிபுரிந்த அனிதா என்பவருடன் காதல் மலர, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் போமகனுக்கு அரசு வேலை கிடைத்தது.

சில மாதங்களுக்கு முன் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றார்.

இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சையில் முன்னேற்றம் இல்லை.

இவரின் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து கொண்டே வந்ததால் வென்ட்டிலேட்டரிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக இன்று நள்ளிரவு 1.15 மணியளவில் மரணமடைந்தார்.

Autograph fame Singer Komagan passes away

அஜித்தை அறிமுகப்படுத்திய இயக்குனரின் தந்தை கொரோனா தொற்றால் மரணம்

அஜித்தை அறிமுகப்படுத்திய இயக்குனரின் தந்தை கொரோனா தொற்றால் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Selva fatherபிரபல டைரக்டர் செல்வா தந்தை பக்தவச்சலம் 85 இன்று காலை 7.15 மணியளவில் காலமானார்.

கொரோனா தொற்று காரணமாக பெரம்பூர் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

சிகிச்சை பலனின்றி இறந்தார்.

டைரக்டர் செல்வா குறிப்பு:

DD பொதிகை டி வி யில் பரபரப்பாக பேசப்பட்ட நீலா மாலா , சித்திரபாவை தொடர்களை இயக்கிய டைரக்டர் செல்வா இயக்கிய முதல் திரைப்படம் தலைவாசல். சூப்பர் ஹிட் ஆனது.

அஜித்குமாரை அறிமுகப்படுத்தி அமராவதி படத்திற்காக இயக்கினார். இதில் சங்கவி நாயகியாக நடித்திருந்தார்.

அதன்பிறகு கர்ணா, புதையல், பூவேலி, உன்னருகே நானிருந்தால், ஜேம்ஸ்பாண்டு, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், நான் அவனில்லை, தோட்டா போன்ற வெற்றிப் படங்களான 25 படங்களுக்கு மேல் டைரக்ட் செய்துள்ளார்.

இப்போது அரவிந்த் சாமி நடிக்கும் வணங்காமுடி படத்தை இயக்கி முடித்துள்ளார் செல்வா.

Fame director Selva’s father Bakthavachalam 85 passed away in Chennai, today 7.15 am battling COVID19 infection.

#RIPBakthavachalam | #selva #directorselva #COVID19 | #Coronavirus | #WearMask | #StaySafe
+91 98406 37906,
+91 98406 55333

JUST IN நடிகர் பாண்டு திடீர் மரணம்..; அதிமுக கொடி & தமிழ்நாடு டூரிஸம் லோகோ டிசைன் செய்தவர் இவரே.!

JUST IN நடிகர் பாண்டு திடீர் மரணம்..; அதிமுக கொடி & தமிழ்நாடு டூரிஸம் லோகோ டிசைன் செய்தவர் இவரே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சின்னத் தம்பி’, ‘திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நகைச்சுவை-குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று அதிகாலை காலமானர். அவருக்கு வயது 74.

கொவிட் பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது.

அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

பாண்டுவின் பயணம் ஒரு பார்வை..

இடிச்சபுளி செல்வராஜ் இவரின் அண்ணன்.

இவர் ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

சென்னை ஓவியக் கல்லூரியின் முன்னாள் மாணவர். இவர் நல்ல ஓவியரும்கூட. பிசினஸ்மேன், நடிகர், நகைச்சுவைப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர்.

கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்த எம்ஜிஆர் அவரை கட்டிபிடித்து பாராட்டி இருக்கிறார்.

இவர் மிகப்பெரிய ஆர்ட்டிஸ்ட் என்பது பலர் அறிந்திராத விசயம். தமிழ்நாடு டூரிஸம் டிபார்ட்மெண்ட் லோகோவும் இவரின் கைவண்ணமே.

மெட்டல்ல லெட்டரிங் போர்டு வைக்கிறதை முதன்முதலா சென்னையில அறிமுகம் செய்தவரும் இவரே.

ADMK flag designer Cum Actor Pandu passes away

உயிருக்கு போராடிய கொரோனா நோயாளிக்கு விமான ஆம்புலன்ஸ் அனுப்பிய சோனு சூட்

உயிருக்கு போராடிய கொரோனா நோயாளிக்கு விமான ஆம்புலன்ஸ் அனுப்பிய சோனு சூட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sonu soodஉத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டது.

இந்த நோயாளிக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் வேறு ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

எனவே என்ன செய்வது என தெரியாத அவர் உயிருக்கு போராடும் தன்னை காப்பாற்றுமாறு அந்த நபர் நடிகர் சோனு சூட் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையறிந்த சோனு சூட் அவருக்கு ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

உடனே ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்பி அவரை ஐதராபாத்துக்கு கொண்டு சேர்த்துள்ளார்.

தற்போது அங்கு சிகிச்சை பெறும் அந்த நபர் உடல்நலம் தேறி வருகிறார்.

உயிர் காத்த ரியல் ஹீரோ சோனு சூட்டுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Actor Sonu Sood Gets Critically Ill Covid-19 Patient Airlifted From Jhansi to Hyderabad

More Articles
Follows