தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோலிவுட்டில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சரத்குமார் & ராதிகா தம்பதி.
இதில் ராடன் மீடியா என்ற நிறுவன மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து வருகிறார் ராதிகா.
இதில் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வருகிறார்.
நேற்று நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து களம் கண்டனர் ராதிகா சரத்குமார்.
இந்த கூட்டணியில் சரத்குமார் சமக கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையிலும் ராதிகாவும், சரத்குமாரும் தேர்தலில் போட்டியிடவில்லை.
மேலும் 3 தொகுதிகளை திருப்பி கமலிடமே கொடுத்தனர்.
இந்த நிலையில் இவர்கள் மீது போடப்பட்ட பழைய வழக்கு குறித்து தீர்ப்பு இப்போது வந்துள்ளது்
விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு & கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த ‘இது என்ன மாயம்’ பட தயாரிப்புக்காக ரேடியன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ 1.5 கோடியை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் வாங்கியது.
அதன் பின்னர் கடனை திருப்பி அளிப்பதில் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் காசோலை மோசடி செய்தது .
அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக நடிகர் சரத்குமாரும், ராதிகாவும் உள்ளனர்.
இவர்களின் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 7 காசோலைகளும் திரும்பி வந்தன.
இதனால் சரத்குமாருக்கு செக் மோசடி தொடர்பான ஏழு வழக்குகளில் தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராதிகாவுக்கு 2 வழக்குகளில் தலா ஒரு வருடமும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் பங்குதாரர்களின் லிஸ்டன் ஸ்டீபனுக்கு 2 வழக்குகளில் தலா 7 ஆண்டு சிறை தண்டனை அளித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
One Year Jail for Sarathkumar and Radhika