தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை (அதிகாலை 4 மணி வரை) முழு ஊரடங்கு என அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்.
எனவே இதனை முன்னிட்டு இன்றும், நாளையும் (மே 8 மற்றும் மே 9) அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளித்துள்ளனர்.
இந்த நிலையில் ராமசாமி என்ற முரளி தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில்… கொரோனா ஊரடங்கு உத்தரவை திரையுலகினர் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வெளியூர்களில் சூட்டிங் நடத்துபவர்கள் உடனடியாக பத்திரமாக வீடு திரும்ப வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
‘அண்ணாத்த’ சூட்டிங்குக்காக ஹைதராபாத்தில் தங்கி உள்ளார் ரஜினிகாந்த்.
தயாரிப்பாளர் சங்க உத்தரவை மதித்து ரஜினி உடனே திரும்புவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏற்கெனவே பலமுறை கொரோவினால் தடைப்பட்டது அண்ணாத்த பட சூட்டிங்.
இம்முறை அண்ணாத்த பட சூட்டிங்கை முடித்துவிட வேண்டும் என சிவா & சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
New trouble for Rajini’s Annaatthe