தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு ஏற்கெனவே வழங்கி கௌரவித்துள்ளது.
தற்போது ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை ஏப்ரல் 1ஆம் தேதி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.
இதனையடுத்து ரஜினி ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
ரஜினியை தலைவா என குறிப்பிட்டு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தும் நண்பன், அண்ணன், குரு முதல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 2ஆம் தேதி பாராளுமன்ற உறுப்பினரும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியும் மகளுமான கனிமொழி மறைமுகமாக ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.
அவரின் ட்விட்டர் பதிவு இதோ…
*திரையுலகில் தனக்கென தனிப்பாதையை வகுத்துக் கொண்ட, தகுதிவாய்ந்த ஒருவருக்கு, பெருமைக்குரிய தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.
The prestigious Dada Saheb Phalke Award is a well deserved accolade for a trailblazer in the film industry. Congratulations…*
இவ்வாறு மக்களவை உறுப்பினர் கனிமொழி தன் ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.
ரஜினியின் பெயரை கூட குறிப்பிடாமல் வாழ்த்து சொல்வதன் நோக்கம் என்ன? என ரஜினி ரசிகர்களும் நடுநிலையாளர்களும் இந்த ட்வீட்டுக்கு தங்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
அவற்றில் சில…
சரி யார் அவர் பேர் தெரியாதா?? இல்லை சொல்ல முடியாதா?? அவ்வளவு தலைக்கணமா உனக்கு?? பேர் சொல்ல முடியலனா எதுக்கு வாழ்த்து சொல்ற?? யார் கட்டாயத்தின் பேரில் இந்த டிவிட்
ஈயம் பூசினா மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்…
என கமெண்ட்டுகளை வீசி வருகின்றனர்.
Netizens slams Kanimozhi for wishing Rajinikanth