BREAKING தாயார் மரணமடைந்த 3 நாட்களில் நடிகர் இர்பான்கான் மரணம்

BREAKING தாயார் மரணமடைந்த 3 நாட்களில் நடிகர் இர்பான்கான் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

National award Actor Irrfan Khan passes awayஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்தவர் இர்பான் கான்.

இர்பான் கான், 1988 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வந்தார். 2017-ல் இவர் நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது.

2011-ல் பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் இர்பான் கானின் தாயார் சாயிதா பேகம், முதுமை காரணமாக மரணம் அடைந்தார்.

இவருக்கும் அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. .

மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் பெரும் மன அழுத்த பிரச்சினைக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட தீவிர சிகிச்சை பிரிவி அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று இர்பான் கானும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவருக்கு வயது 54.

இர்பான்கான் கடந்த 2018ம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாக அவர் நடித்த ஆங்கிரேஸி மீடியம் என்ற படம் ரிலீசானது இங்கே கவனிக்கதக்கது.

National award Actor Irrfan Khan passes away

ஆணியே புடுங்க வேணாம் போலதான் இது.; துல்கருக்கு பிரசன்னா ஆதரவு

ஆணியே புடுங்க வேணாம் போலதான் இது.; துல்கருக்கு பிரசன்னா ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aaniye Pudingavenam Prasanna supports Dulquer in Dog Prabakaran issueஅனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசானது.

தற்போது ஆன்லைனில் இந்த படத்தில் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழைப்பது போல காட்சிகள் இருக்கும்.

இது தமிழர்களிடையே சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதனையடுத்து அந்த காட்சிக்கு விளக்கமளித்து துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த நிலையில், மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மானிடம் நடிகர் பிரசன்னா மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ஆணியே புடுங்க வேணாம், என்ன கொடுமை சரவணா என்று நாம் பயன்படுத்தும் வசனங்களைப் போலத்தான் அவர்கள் ஊரில் இந்த வசனமும் பிரபலமானது.

அன்பார்ந்தவர்களே, அந்தப் பெயருக்குப் (பிரபாகரன்) பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் தவறான புரிதலின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்ப வேண்டாம்.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Aaniye Pudingavenam Prasanna supports Dulquer in Dog Prabakaran issue

Namma oorla like how we use “aaniye pudingavenam” or “enna koduma saravanan” the name is used from a famous old film dialog. Dear ppl i understand the sentiment involved with the name but let’s not spread hate based on misunderstanding.

சிரஞ்சீவிக்காக மீண்டும் உதயநிதியை உதறிய காஜல் அகர்வால்.?

சிரஞ்சீவிக்காக மீண்டும் உதயநிதியை உதறிய காஜல் அகர்வால்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kajal walks out of Udhayanidhi movie for the 2nd timeகாஜல் அகர்வால் தற்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இப்பட சூட்டிங் சமயத்தில் நடந்த விபத்து மற்றும் கொரோனா ஊரடங்கு ஆகியவற்றால் இப்பட சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உதயநிதியுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தாராம்.

ஆனால் மற்றொரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்கவிருந்ததால் உதயநிதி படத்திலிருந்து காஜல் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ தொகையை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதாவது… கொரட்டல சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்ததால் உதயநிதி படத்திலிருந்து விலகிவிட்டார்.

ஏற்கெனவே நண்பேன்டா படத்திலும் உதயநிதியுடன் நடிக்க மறுத்து விலகி விட்டதாக கூறப்பட்டது. அதன் பின்னர் தான் நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். அந்த படம் படு தோல்வியை சந்தித்தது என்பது வேறு கதை.

Kajal walks out of Udhayanidhi movie for the 2nd time

‘ஓ மை கடவுளே’ பட நடிகைக்கு வாய்ப்பளித்த ஏஆர். முருகதாஸ்

‘ஓ மை கடவுளே’ பட நடிகைக்கு வாய்ப்பளித்த ஏஆர். முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Murugadoss and Vani Bhojan team up for Web Seriesடிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.

நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் ஏர் ஹோஸ்டஸ் வேலையை உதறிவிட்டு வந்தவர். தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

அப்பட வெற்றியால் தற்போது அவர் கைவசம் 5 படங்கள் உள்ளதாம்.

இந்த நிலையில் தற்போது வெப் தொடரிலும் நடிக்கவுள்ளார் வாணி போஜன்.

இந்த வெப் சீரிஸை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க அவரின் துணை இயக்குனர் இயக்கி வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் இதன் சூட்டிங்கில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

எனவே விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.

AR Murugadoss and Vani Bhojan team up for Web Series

மலையாளியை விட தமிழன் தாழ்ந்தவனா.? நானும் வைக்கிறேன் பாரு… – SR பிரபாகரன்

மலையாளியை விட தமிழன் தாழ்ந்தவனா.? நானும் வைக்கிறேன் பாரு… – SR பிரபாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director SR Prabhakaran slams Dulquer and advice to Prasannaஅனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசானது.

தற்போது ஆன்லைனில் இந்த படத்தில் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழைப்பது போல காட்சிகள் இருக்கும்.

இது தமிழர்களிடையே சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்த நிலையில் சுந்தர பாண்டியன் பட இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபாகரன் கூறியுள்ளதாவது…
அன்பிற்குரிய துல்கர் சல்மான் & அனுப் சத்யன் உங்களின் சமீபத்திய வெளியீடான #VaraneAvashyamund ” எனும் மலையாள திரைப்படத்தில், நாய்க்கு “பிரபாகரன்” என்று பெயர் சூட்டி இருப்பதாக வரும் வசனம் பற்றியும் அதன் மூலம் எழுந்த சர்ச்சை பற்றியும், அதற்கு, மன்னிப்பா? அல்லது விளக்கமா என்று புரியாத வகையில் நீ அளித்த பதிவையும் சற்று முன்பே பார்க்கவும் படிக்கவும் நேர்ந்தது., நிற்க.,

அதென்ன கேரள தேசத்திலும் மலையாள திரைப்படங்களிலும் தமிழர்களையும் தமிழினத்தின் தேசியத் தலைவரையும் தொடர்ந்து கொச்சை படுத்தி வருகிறீர்கள்.? யார் சொல்லி கொடுத்தது உங்களுக்கு, மலையாளிகளை விட தமிழர்கள் தாழ்ந்தவர்கள் என்று.

உங்களின் தாய்மொழி மலையாளத்திற்கும் தாய்மொழி எங்களின் தமிழ்மொழி என்பதை மறந்து விடாதீர்கள்..!

“பிரபாகரன்” என்பது உங்களுக்கு ஒரு சாதாரண பெயர்., எங்களுக்கு அதுவே உயிர்., இதை சொன்னால் உங்களுக்கு நிச்சயம் புரியாது., இனியும் நீங்கள் தமிழர்களையும் தமிழின தலைவரையும் தொடர்ந்து தரம் தாழ்த்தி பேசுவதாக இருந்தால்- நாங்களும் “கேரளத்து காந்தி” என்றழைக்கப்பட்ட கே.கேளப்பன் பெயரையும் சுதந்திர போராட்ட காலத்திலிருந்து பெருந்தலைவராக அங்கு அறியப்பட்ட “மொகம்மத் அப்துல் ரஹிமான் சாகிப்” பின் பெயரையும் “வக்கம் மௌலாவி” யின் பெயரையும் எங்களின் படைப்புகளில் நாய்களுக்கும் பன்றிகளுக்கும் பெயராக சூட்ட வேண்டிய சூழல் ஏற்படும்.

யார் இதை செய்கிறார்களோ இல்லையோ., நான் நிச்சயம் என் படைப்பில் இதை செய்வேன் என்பதை பணிவோடு கூறிக்கொள்கிறேன்.,

இத்துடன் நடிகர் பிரசன்னாவுக்கும் பிரபாகரன் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் பிரசன்னா சக நடிகர் என்கிற முறையில் துல்கர்க்கு ஆதரவாக பேசுவதை விட்டு விட்டு., “தலைவர்” பிரபாகரன் யார் என்பதை எடுத்து கூறினால் நன்றாக இருக்கும்.., என தெரிவித்துள்ளார்.

Director SR Prabhakaran slams Dulquer and advice to Prasanna

மிடில் கிளாஸ் நிதி.; விஜய் தேவரகொண்டாவின் வித்தியாச கொரோனா நிதி

மிடில் கிளாஸ் நிதி.; விஜய் தேவரகொண்டாவின் வித்தியாச கொரோனா நிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Devarakondas different Announcements on Corona Crisisதெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா.

இவர் கொரோனா நிவாரண நிதியாக வித்தியாசமான ஒரு விஷயத்தை அறிவித்துள்ளார்.

கொரோனா நிவாரணத்திற்காக 1.3 கோடி ருபாய் அளித்துள்ளார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பயிர்ச்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு நிதி அளித்திருப்பதாக கூறினார் அவர்.

மேலும் இந்த கொரோனா பிரச்சனையை சமாளிக்க தான் பண ரீதியாக தயார் நிலையில் இல்லை என குறிப்பிட்ட அவர், தனது தயாரிப்பு நிறுவனத்தின் 30 பணியாளர்களுக்கு தொடர்ந்து சம்பளம் தர வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இவருடைய அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ள வெப்சைட்டில் ஏழைகள், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், ஊருக்கு செல்ல முடியாத வெளியூர் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பதிவு செய்ய வேண்டும்.

அவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் நிதி வழங்கப்படும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது..

விஜய் தேவரகொண்டா அறக்கட்டளையில் மொத்தம் 35 பேர் பணிபுரிகின்றனர். தற்போது என்னிடம் எந்த நிதியும் இல்லை. நான் இப்போது இரண்டு விஷயங்களை கையில் எடுத்துள்ளேன். உடனடி தேவைகள், எதிர்கால தேவைகள்.

ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்த பிரச்சினையை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்.

கடந்த ஆண்டு நான் ஒரு ரகசிய திட்டத்தை தொடங்கினேன். அதன் மூலம் 650 பேரை நேர்காணல் செய்து அதிலிருந்து 50 பேரை இறுதி செய்தோம்.

அவர்கள் அனைவருக்கும் பயிற்சி கொடுத்து அதிலிருந்து 2 பேரை ஏற்கெனவே தேர்வு செய்து விட்டோம். மீதமுள்ள 48 பேரும் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள். வேலை வாய்ப்புக்காக ரூ. 1 கோடி வழங்குகிறேன்.

இன்னும் அதிக மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பிடித்த துறையில் பயிற்சி வழங்கப்படும். வழங்கப்பட்ட மொத்த தொகையும் இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக பயன்படும். ‘ரவுடி’ மற்றும் ‘கிங் ஆஃப் தி ஹில்’ குழுமங்களின் மூலமும் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளோம்.

மக்களின் தற்போதைய உடனடி தேவைகளுக்காக ரூ.25 லட்சம் வழங்குகிறேன். ஆந்திரா மற்றும் தெலங்கானா முழுவதும் உள்ள 2000 ஏழை குடும்பங்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

உடனடி உதவி தேவைப்படுபவர்கள் எங்கள் thedeverakondafoundation.org இணையதளத்தை பார்க்கவும். அதில் அனைத்து தகவல்களும் உள்ளன.

படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் என்னுடைய படங்கள் அனைத்தும் பாதியில் நிற்கின்றன. தற்போது நான் வேலையின்றி இருக்கிறேன். தேவையுள்ளவர்களுக்கு உதவுதற்காக என் நண்பர்களிடம் பணம் கேட்டிருக்கிறேன்.

மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியதும் அவர்களுக்கு திரும்ப அந்த பணத்தை கொடுத்து விடுவேன்.

இவ்வாறு விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்

Vijay Devarakondas different Announcements on Corona Crisis

More Articles
Follows