சிங்கிளாக வாழ நினைக்கும் தீப்தியை தன் புத்திசாலித்தனத்தால் கரம் பிடிக்கும் தினேஷ்

சிங்கிளாக வாழ நினைக்கும் தீப்தியை தன் புத்திசாலித்தனத்தால் கரம் பிடிக்கும் தினேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nanum Single Than“புன்னகை பூ கீதா” மலேசியாவில் பண்பலை, தொலைக்காட்சி, சினிமா எனப் பலத் துறைகளில் பிரபலமானவர்.

இவர் அறிந்தும் அறியாலும், பட்டியல் படங்களை தயாரித்துள்ளார். தற்போது Three Is A Company Production சார்பில் அவர் தயாரித்துள்ள படம் “நானும் சிங்கிள் தான்’

கதாநாயகனாக தினேஷ் நடித்துள்ளார். நாயகியாக தீப்தி சதி நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, ரமா, ஆதித்யா, கதிர், செல்வா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – K.ஆனந்தராஜ்

இசைப்புயல் A.R.ரகுமானிடம் உதவியாளாராக இருந்த ஹித்தேஷ் மஞ்சுநாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாடல்கள் – கபிலன் வைரமுத்து

எடிட்டிங் – ஆண்டனி

ஸ்டண்ட் – கனல்கண்ணன், ஆடம் ரிச்சட்ஸ்

கலை இயக்குனர் – ஆண்டனி

நடனம் – சின்னி பிரகாஷ், ரேகா சின்னி பிரகாஷ், அபிப்.RK

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – R. கோபி

படம் பற்றி இயக்குனர் R. கோபி கூறியதாவது..

“ஆண்கள் மேல் நம்பிக்கையே இல்லாமல் தன்னால் சிங்கிளாவே வாழ்க்கை முழுவதும் வாழமுடியும் என நினைக்கும் பெண்ணுக்கும், கனவிலும் காதல் கைகூடாமல் சிங்கிளாவே இருக்கும் இளைஞனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் இந்த படம்.

இவர்களுக்கு எப்படி மொட்ட ராஜேந்திரன் “குப்பிடாக” மாறி காதலுக்கு உதவுகிறார், ஹீரோ தன் புத்திசாலித்தனத்தால் காதலில் வெற்றி கொள்கிறாரா? பிடிவாதமாக இருக்கும் ஹீரோயின் மனதை மாற்றுகிறாரா? இல்லை இவர் மனம் மாறுகிறாரா என்பது தான் கதை.

என்ன தான் நாங்கள் முழுக் கதையையும் கூறினாலும் இது ஒரு கதைதான் இதுவரை சொல்லாத இன்னொரு கதையும் படத்தில் இருக்கிறது.

அது படம் பார்த்தால் தான் தெரியும் என மிகுந்த நம்பிக்கையுடன் இயக்குனர் ரா.கோபி தெரிவித்தார்.

கதைக்கான காட்சிகள் வித்தியாசமாகவும், இளமையாகவும் படமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் உலகில் இளைஞர்கள் வாழ்வில் எடுக்கும் சில சிக்கலான முடிவுகளையும், ஃபெமினிசம் தொடர்பான சில விஷயங்களையும் இப்படம் பேசியுள்ளது.

குறிப்பாக இன்று பெண்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளைப் மையப்படுத்தி சில காட்சிகளும் இப்படத்தில் காரசாரமாக வைத்துள்ளனர்.

வலிமையான ஹீரோயின் கதாப்பாத்திரம் ஒரு பாலியல் குற்றத்தை எப்படி சாமர்த்தியமாக கையாள்கிறார் என்பது பெண்கள் எவ்வாரு துணிந்து நின்று செயல்பட வேண்டும் என்பதை பறைசாற்றும் விதமாக இருக்கும் என்கிறார்கள்.

படம் இம்மாதம் 12 ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

Nanum Single Than Movie to release on feb 12th

மீண்டும் மீண்டும் அஜித் பட ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் சிரஞ்சீவி

மீண்டும் மீண்டும் அஜித் பட ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் சிரஞ்சீவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chiranjeeviஅரசியலில் எதையும் சாதிக்க முடியாமல் மீண்டும் சினிமாவில் தன் முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார் சிரஞ்சீவி.

விஜய் நடித்த ‘கத்தி’ பட தெலுங்கு ரீமேக் மூலம் தான் ரீஎன்ட்ரி கொடுத்தார் சிரஞ்சீவி.

அண்மையில் சைரா என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்திருந்தார்.

இவருடன் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா, தமன்னா, ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது.

தற்போது ‘ஆச்சார்யா’ என்ற தெலுங்குப் படத்திலும் மேலும் மலையாள ‘லூசிபர்’ ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

இத்துடன் அஜித்தின், ‘வேதாளம்’ ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

இவையில்லாமல், அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ பட தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார் சிரஞ்சீவி.

அப்பட தெலுங்கு ரீமேக் உரிமையை சிரஞ்சீவியின் தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chiranjeevi to do remake of Ajith’s hit film

சிம்புவின் பிறந்த நாளுக்கு ஹன்சிகா வாழ்த்து..; இப்போ இது வேறயா..?! கடுப்பான ரசிகர்கள் அட்வைஸ்!

சிம்புவின் பிறந்த நாளுக்கு ஹன்சிகா வாழ்த்து..; இப்போ இது வேறயா..?! கடுப்பான ரசிகர்கள் அட்வைஸ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu Hansikaநேற்று பிப்ரவரி 3ஆம் தேதி நடிகர் சிம்பு தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

எனவே சிம்பு நடித்து வரும் ‘மாநாடு’ படத்தின் டீசர் ஐந்து மொழிகளில் வெளியானது.

மேலும் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஹன்சிகாவின் ‘மஹா’ பட புதிய போஸ்டர் ஒன்றும் வெளியானது.

இத்துடன்ஹன்சிகாவும் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார்.

சிம்புவும் நயன்தாராவும் காதலித்து பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

அதன் பின் ஹன்சிகாவை காதலித்தார் சிம்பு. ஆனால் இந்த காதலும் முறிந்தது.

தற்போது மாநாடு, பத்து தல, ஞானகிரி இயக்கும் படம் என பிஸியாக இருக்கிறார் சிம்பு.

மறுபடியும் காதல் கீதல் என வந்துவிட்டால் சிம்புவின் கவனம் சினிமாவில் இருக்காது என்ற நோக்கத்தில் சில ரசிகர்கள் ஹன்சிகாவுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் சில ரசிகர்களோ ஹன்ஷிகாவை சிம்பு திருமணம் செய்து கொள்ளலாம் என அட்வைஸ் செய்கின்றனர்.

Fans reaction on Hansika wishes to STR

அஜித்திடம் ‘வலிமை’ அப்டேட் கேட்ட ரசிகர்..; தல என்ன சொன்னாரு தெரியுமா..?

அஜித்திடம் ‘வலிமை’ அப்டேட் கேட்ட ரசிகர்..; தல என்ன சொன்னாரு தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimai (1)அஜித் நடிப்பில் வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’

இதில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் அஜித்.

இந்தப் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.

ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்டோர் அஜித்துடன் நடித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே ‘வலிமை’ அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

தமிழக முதல்வரின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவரிடம் கூட அப்டேட் கேட்ட கூத்தும்… கடவுள் முருகனிடமும் அப்டேட் கேட்ட கூத்தும் இந்த தமிழகத்தில் மட்டும் தான் நடக்கும்.

(முதல்வரிடம் முறையிட எவ்வளவோ பிரச்னைகள் இருக்கும் போது இது தேவதையா? என பொது மக்களே கேட்டனர்.)

இந்த நிலையில் அண்மையில் பைக்கிலேயே பயணம் செய்த அஜித்தை சிலர் சந்தித்து புகைப்படம் எடுத்தனர்.

அந்த சந்திப்பின் போது ஒரு ரசிகர் அஜித்திடமே வலிமை அப்டே குறித்து கேட்டு இருக்கிறார்.

அதற்கு அஜித் அவரது பாணியில் சிரித்துக் கொண்டே, “SOON” என பதில் அளித்ததாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

Thala Ajith about Valimai update

அசோக்செல்வன் & அஞ்சு குரியனுடன் நட்சத்திர பட்டாள கூட்டணி.; படத்தயாரிப்பில் இறங்கும் A R ENTERTAINMENT

அசோக்செல்வன் & அஞ்சு குரியனுடன் நட்சத்திர பட்டாள கூட்டணி.; படத்தயாரிப்பில் இறங்கும் A R ENTERTAINMENT

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ashok Selvanதமிழ் திரையுலகில் திரைப்பட விநியோகம் செய்து கொண்டிருக்கும் A R ENTERTAINMENT எனும் நிறுவனம் திரைப்பட தயாரிப்பிலும் அடியெடுத்து வைக்கிறது.

இந்த நிறுவனத்தின் முதல் படைப்பை அறிமுக இயக்குநர் விஷால் வெங்கட் எழுதி இயக்குகிறார்.

இவர் சந்துரு மற்றும் மதுமிதா ஆகிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும், டிவி, OTT மற்றும் விளம்பரத்துறைகளிலும், பிக்பாஸ் போன்ற முன்னணி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றிய அனுபவம் உடையவர்.

இத் திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் அஷோக் செல்வன், ரியா, பிரவீன்ராஜா, ரித்விகா, அபிஹாசன், அஞ்சு குரியன், மணிகண்டன் ஆகியோர் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், K.S.ரவிக்குமார், பானுப்பிரியா, மற்றும் அனுபமா குமார் ஆகியோர் ஒன்றினைந்து நடிக்க இருக்கிறார்கள்.

விக்ரம் வேதா படத்தின் புகழ் பெற்ற வசனகர்த்தா மணிகண்டன் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட KD என்கிற கருப்புதுறை படத்தின் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ரதன் இசையமைக்கிறார்.

பிரசன்னாGK படத்தொகுப்பு செய்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

TRIDENT ARTS நிறுவனம் இந்த படத்தை வெளியீடு செய்கிறது.
இந்த படம் வெவ்வேறு வாழ்க்கை சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான்கு கதாபாத்திரங்களின் ஒரு உணர்ச்சிப் பூர்வமான கதையாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

இரண்டு நாட்களில் நடக்கும் இந்த கதை மனித மனத்தின் உள்ளார்ந்த உணர்ச்சிகளை பற்றி பேசும் படமாகவும் இருக்கும்.

Ashok Selvan and Anju Kurian joins for a new film

இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டினர் கருத்து..; மத்திய அரசு கண்டனம்

இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டினர் கருத்து..; மத்திய அரசு கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Modiபுதுடெல்லியில் கடந்த 80 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று போலீஸ் தடியடியுடன் கலவரமாக மாறியது.

இந்திய தேசிய கொடி பறந்த செங்கோட்டையில் அன்றைய தினம் சீக்கிய கொடியையும் பறக்க விட்டனர் விவசாயிகளில் சிலர்.

இன்று வரை தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா என்பவர் “நாம் ஏன் விவசாயிகள் போராட்டம் பற்றி பேசுவதில்லை?” என டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரை தொடர்ந்து, சுவீடனை சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க் என்பவரும், இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்” என தெரிவித்தார்.

இது தொடர்பாக, வெளிநாட்டினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“விஷயம் தெரியாமல் பேச வேண்டாம். கிளர்ச்சியை தூண்டும் வகையில் செயல்பட வேண்டாம்” என மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நம் நாட்டு விவகாரத்தில் தலையிட்டு கருத்து பதிவிட்ட பிரபலங்களுக்கு சச்சின் டெண்டுல்கர், நடிகர் அக்ஷய்குமார், நடிகை கங்கனா ரணாவத், டாப்சி உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Central Government launches India against Propaganda

More Articles
Follows