ஸ்டாலினை எதிர்க்க முடியாமல் தொகுதியை மாற்றிய சீமான்.; அடித்த பல்டிக்கு அதிரடி விளக்கம்

ஸ்டாலினை எதிர்க்க முடியாமல் தொகுதியை மாற்றிய சீமான்.; அடித்த பல்டிக்கு அதிரடி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது.

கடந்த தேர்தலை போலவே இந்த முறையும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிப்படுத்தி இருந்தார்.

அதன்படி நேற்று நாம் தமிழர் கட்சி தங்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்தது.

234 வேட்பாளர்களையும் சென்னை YMCA மைதானத்தில் ஒரே மேடையில் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் 117 பெண் வேட்பாளர்களும், 117 ஆண் வேட்பாளர்கள் என மொத்தம் 234 வேட்பாளர்களும் இருந்தனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலைப் போலவே சட்டமன்ற தேர்தலிலும் 50 சதவீத பெண் வாக்காளர்களை சீமான் களமிறக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக தலைவர் ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என பிரச்சாரம் செய்தார் சீமான்.

திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நிற்கிறார்.

எனவே சீமானும் அங்கு தான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார்.

இந்த தொகுதி மாற்றம் குறித்து விளக்கமளித்துள்ளார் சீமான்.

“கொளத்தூரில் போட்டியிடலாம் என இருந்தேன். ஆனால் மக்கள் நலன் தான் முக்கியம்.

ஒருவரை வீழ்த்துவதை விட மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பது தான் முக்கியம்.” என விளக்கம் கொடுத்துள்ளார்.

Naam Tamilar leader Seeman to contest in thiruvottiyur assembly constituency

கவர்ச்சியில் இருந்து காக்கி-கிக்கு மாறிய யாஷிகா ஆனந்த்.; வில்லனாகும் இசையமைப்பாளர்

கவர்ச்சியில் இருந்து காக்கி-கிக்கு மாறிய யாஷிகா ஆனந்த்.; வில்லனாகும் இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yashika Aannand (1)முகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் முகேஷ் தயாரிக்கும் படம் ” சல்பர் ” யாஷிகா அனந்த் கதாநாயகியாக நடிக்கிறார்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்து, முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார்.

மற்ற நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இயக்குனர் வடிவுடையானிடம் உதவியாளராக பணியாற்றிய புவன் இந்த படத்தை இயக்குகிறார்.

ஒளிப்பதிவு – இனியன் ஜே ஹாரிஸ். இவர் கன்னிமாடம், பாம்பாட்டம் போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர்.

இசை – சித்தார்த் விபின்

எடிட்டிங் – எலிசா

கலை – பழனி

ஸ்டில்ஸ் – சக்தி பிரியன்

மக்கள் தொடர்பு – மணவை புவன்

ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் யாஷிகா அனந்த் முதல் முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். சித்தார்த் விபின் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னையில் ஓர் காவல் நிலையத்தில் SI ஆக பணியாற்றுகிறார் நாயகி பாரதி.

அங்கே எதிர்பாராத விதமாக ஏற்படும் சிக்கலால் பணியிடை மாற்றம் பெற நேரிடுகிறது.

தான் மிகவும் நேசித்த crime department-ல் இருந்து காவல்துறைக்கட்டுபாட்டு அறைக்கு பணி மாற்றமாகிறார்.

தன் திறமைக்கு இங்கே பெரிதாக வேலை ஒன்றும் இல்லை என அவள் நினைத்து சாதாரணமாக தன் வேலையை தொடர்கையில், ஒருநாள் மாலை கட்டுபாட்டு அறைக்கு ஓர் அழைப்பு வருகிறது.

எதிர்முனையில் பேசும் பெண் தான் இன்னும் சில மணி நேரங்களில் இறந்துவிடுவேன், என்னை நிச்சயம் கொன்றுவிடுவார்கள் என சொல்ல, ஆரம்பத்தில் அந்த கால் frank என பாரதி நினைக்க, பின்புதான் பாரதிக்கு அந்த வழக்கின் தீவிரம் புரிகிறது.

பின் அந்த வழக்கை பாரதி எப்படி எதிர்கொண்டாள் என்பதை “ஆக்‌ஷன்-திரில்லர்” கலந்த்து திரைக்கதை வடிவமைக்க பட்டிருக்கிறது.

Yaashika Anand’s new film starts with pooja

மகளிருக்காக புதிய அவதாரம் எடுத்த பாடலாசிரியர் அருண்பாரதி

மகளிருக்காக புதிய அவதாரம் எடுத்த பாடலாசிரியர் அருண்பாரதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்கள் தினத்தை முன்னிட்டு “பெண்” என்கிற தலைப்பில் குறும்படப் பாடல் ஒன்று வெளியாகிவுள்ளது.

வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றிய P.T தினேஷ் இப்பாடலை இயக்கியுள்ளார்.

இப்பாடலில் வளர்ந்துவரும் பிரபல முன்னனி பாடலாசிரியர் அருண்பாரதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் விஸ்வாசம், அண்ணாதுரை, சண்டக்கோழி2, திமிருபுடிச்சவன், கொலைகாரன் களவாணி2, கபடதாரி, உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

மேலும் பாடலுக்கு பின்னால் பணியாற்றிய நான், முதன் முறையாக பாடலுக்கு முன்னால் தோன்றி முகம் காட்டியிருக்கிறேன் என்றும் தொடர்ந்து சமூகத்திற்கு பயன்படும் நல்ல படைப்புகளை கொடுப்பது என் கடமை என்றும் கூறினார்.

இப்பாடலுக்கு அபுபக்கர் இசையமைக்க P.T தினேஷ் மற்றும் தமிழ்செல்வன் இரத்தினம் ஆகிய இருவரும் இணைந்து இப்பாடலை எழுதியுள்ளனர்.

https://t.co/nr2xZMc2qQ

Title : பெண்
Actors: Arunbharathi &Tamil selvi& Santhosh & Seetharaman& varadhan
Music: Abubakkar
Lyrics: P.T.Dinesh &Tamilselvan
Cinematography& Editing DIRECTION : P.T.DINESH

Lyricist Arun Bharathi turns hero for women’s day

மீண்டும் இணையும் ஜோடி கார்த்திக் & சுகன்யா.; ‘சிந்துபாத்’ படத் தயாரிப்பாளர் இயக்குனரானார்

மீண்டும் இணையும் ஜோடி கார்த்திக் & சுகன்யா.; ‘சிந்துபாத்’ படத் தயாரிப்பாளர் இயக்குனரானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’.

இந்த படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’ படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார்.

அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம் பாடல்களையும் எழுதி அசத்தியுள்ளார்.

இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் மறைந்த குணசித்திர நடிகர் பெராரே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். செய்கிறார்.

(‘சின்ன ஜமீன்’ உள்ளிட்ட பல படங்களில் கார்த்திக் & சுகன்யா இணைந்து நடித்திருந்தனர்)

படம் பற்றி இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் கூறியதாவது…

*இன்றைய நவீன காலத்தில் நம் கிராமத்து பண்பாடும், நாகரீகமும், உறவுகளும் மறைந்து வருகிறது. அதனை இந்த தலைமுறைக்கு தரும் படமாக இது உருவாகி உள்ளது.

அண்ணன், தங்கை பாசத்தை சொல்ல நிறைய படங்கள் வந்திருந்தபோதும் இதில் ரத்தமும், சதையுமான அந்த உறவை சொல்கிறோம். உயிரை விட மானம் பெரிது என்பதுதான தமிழர்களின் உச்சபட்ட நாகரீகம் அதை உணர்த்தும் படமாக இது இருக்கும்.

படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு பாடல் காட்சி பிரபல பாலிவுட் நடிகையை வைத்து மும்பையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்க இருக்கிறோம்.

இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஹார்லி டேவிட்சன் பைக்கில் டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்துள்ளார்.

இன்றைக்கு நடிக்க வரும் இளம் நடிகர்களே இந்த காட்சிகளை நடிக்க தயங்குவார்கள் அப்படியான காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார்.

அந்த சண்டைகாட்சிகள் படத்தில் பிரமாண்டமாக இருக்கும்.

அது மட்டுமல்லாது ஹம்மர் என்ற விலையுர்ந்த கார் ஒன்றை வைத்து பாடல் காட்சி ஒன்றை ஹாலிவுட் தரத்தில் எடுத்துள்ளோம் அதுவும் பிரமாண்டமாக வந்திருக்கிறது.

இந்த படம் வெளியானபிறகு நடிகர் கார்த்திக் மீண்டும் பல படங்களில் நாயகனாக நிச்சயம் நடிப்பார்.

500 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி ஒன்றை பிரமாண்டமாக அண்மையில் படமாக்கினோம்.

கொரோனா காலம் என்பதால் பள்ளி மாணவர்களை சமூக இடைவெளியுடன் நடிக்க வைத்து படமாக்கி இருக்கிறோம். மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் தயாராகி உள்ளது.

ஓடிடி தளங்களில் இருந்து பேசினாலும், படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம்” என்கிறார் படத்தின் இயக்குனர் டி. எம்.ஜெயமுருகன்.

ஒளிப்பதிவு – ஒய்.என்.முரளி

பிண்ணனி இசை, எடிட்டிங் – அலிமிர்சாக்

கலை இயக்கம் – சோலை அன்பு

நடனம் – கூல் ஜெயந்த்

ஸ்டண்ட் – கிக்காஸ் காளி

மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு நிர்வாகம் – அப்பு

கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்குகிறார் – டி.எம்.ஜெயமுருகன்.

Karthik and Suganya joins for a new film

ஷங்கர் & ராம்சரண் இணையும் படத்தில் தென் கொரிய நடிகை..?

ஷங்கர் & ராம்சரண் இணையும் படத்தில் தென் கொரிய நடிகை..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் அனிருத் லைகா ஷங்கர் கூட்டணியில் உருவான படம் ‘இந்தியன் 2’.

இப்பட சூட்டிங் தளத்தில் நடந்த விபத்தாலும் கொரோனா ஊரடங்காலும் இதன் சூட்டிங் அப்படியே நிறுத்தப்பட்டது.

தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் கமல் பிஸியாக இருப்பதால் மீண்டும் இதன் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ராம் சரண் நடிப்பில் உருவாகவுள்ள படமொன்றை இயக்க ஷங்கர் தயாராகி விட்டார்.

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்க தென்கொரிய நடிகை பேசூஜியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Korean actress is on board for Shankar’s film

tumblr_p5w7zoaowg1s6htkio1_r1_500

சூப்பர் ஸ்டார்ஸ் பாராட்டிய விஜய் சேதுபதி படம் ரூ 100 கோடி வசூல் வேட்டை

சூப்பர் ஸ்டார்ஸ் பாராட்டிய விஜய் சேதுபதி படம் ரூ 100 கோடி வசூல் வேட்டை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தெலுங்கில் வெளியான படம் ‘உப்பென்னா’.

அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கிய இந்த படத்தில் புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தனர்.

இதில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ராம் சரண் உள்ளிட்ட பலரும் இப்படக்குழுவினரை பாராட்டி இருந்தனர்.

இந்த நிலையில் ‘உப்பென்னா’ படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் ‘உப்பென்னா’ திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Vijay Sethupathi film into 100 crore club

More Articles
Follows