நாட்டின் பாதுகாப்பை காக்க பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்கள் முடக்கம்..!

நாட்டின் பாதுகாப்பை காக்க பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்கள் முடக்கம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

facebookகடந்த 2020ல் நவம்பர் மாதம், பொதுத் தேர்தல் மியான்மர் நாட்டில் நடைபெற்றது.

மொத்தமுள்ள, 476 இடங்களில், 396 இடங்களைக் கைப்பற்றியது ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக கட்சி.

இந்த நாட்டில் ராணுவ கட்சியாக கருதப்படும், ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி, 33 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

இதனால் மக்களே சற்று குழப்பத்தில் இருந்தனர்.

இந்த தேர்தல் முடிவில் மோசடி நடந்துள்ளதாக, ராணுவத்தினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

ஆனால் அதற்கான ஆதாரங்களை, அவர்களால் திரட்டி நிரூபிக்க முடியவில்லை.

இதனால் ராணுவத்தின் குற்றச்சாட்டுகளை, மியான்மர் தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.

இந்த பரபரப்பான நிலையில், மியான்மர் அரசை, ராணுவம் அதிரடியாக கைப்பற்றியது.

இதனையடுத்து மியான்மரில் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பை பேண பிப்ரவரி 7ம் தேதி வரை பேஸ்புக் தடை செய்யப்படும்’ என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Myanmar bans Facebook, temporarily

இசையமைப்பாளர் இமான் பார்த்து பாராட்டிய ஆல்பம் ‘முற்றுப்புள்ளி’

இசையமைப்பாளர் இமான் பார்த்து பாராட்டிய ஆல்பம் ‘முற்றுப்புள்ளி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

immanஇசையமைப்பாளர் கிறிஸ்டி சினிமா தாகத்தோடு ஒரு திருப்புமுனை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர் .சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்த அவர் கர்நாடக இசை, இந்துஸ்தானி, மேற்கத்திய இசை என்று மூன்று வகை இசையிலும் பயிற்சி பெற்றுக் கற்று 15 ஆண்டுகள் செலவழித்துத் தன்னைத் தகுதியாக்கிக் கொண்டு களத்திற்கு வந்திருப்பவர்.

அவர் இப்போது ‘நறுவி’,’ வன்முறைப்பகுதி’ ‘குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் ‘ என மூன்று படங்களுக்கு இசையமைத்து வருகிறார் .இவை விரைவில் வெளியாக உள்ளன.படங்கள் வெளியாகும் இடைவெளியில் நேரத்தை விரயமாக்காமல் தானே ஒரு கதை எழுதி ஒரு ஐந்து நிமிட மியூசிக் வீடியோ ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார் .அதுதான் ‘முற்றுப்புள்ளி ‘ ‘ சமூக அக்கறையுடன் ஒரு படைப்பு,…கிறிஸ்டிக்கு இசையோடு கதை அமைப்பதிலும் ஆர்வம் உண்டு. அப்படி அவர் சமூகத்தில் இன்றைக்குப் பரவலாக அறியப்படும் பிரச்சினைகளான குழந்தையின்மை,கந்துவட்டிக் கொடுமை,குழந்தைகள் தத்தெடுப்பது என மூன்று கருத்துக்களை மையமாக வைத்து உருவாக்கி இந்தச் சமூகப் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவெடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவாக்கியதுதான் ‘முற்றுப்புள்ளி ‘வீடியோ சிங்கிள் ஆல்பம்.

இது ஒரு பைபிள் சார்ந்த கிறிஸ்தவக் கருத்தைக் கூறும் கதை என்றாலும் அனைத்து மதத்தினருக்கும் ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆல்பம் இருக்கும் என்கிறார் . முற்றுப்புள்ளி ஆல்பத்தை ஒளிப்பதிவு செய்து டைரக்ஷன் செய்திருப்பவர் அரவிந்த் ஜெகன்

கேத்தரின் எபிநேசர், பிரணிதி பாடியுள்ளனர்.

இந்த ஆல்பத்தில் நடிகர் மாஸ் ரவி,பவுலின் ஜெசிகா , பிரணிதி, பிரியா,மகேஸ்வரன், தண்டபாணி , லவீன் சேகர் , சிஸ்டர் ரான்சம் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாடல் பாபு, ஒளிப்பதிவு ,எடிட்டிங் அரவிந்த் ஜெகன் .

தனது போராளி கிரியேஷன்ஸ் சார்பில் கதை திரைக்கதை எழுதி இசையமைத்து தயாரித்துள்ளார் கிறிஸ்டி.

தனது திரை வாய்ப்புக்காக பெரிதும் உதவியவர் இயக்குநர் பா. ரஞ்சித் என்று கூறுகிறார்.ஏற்கெனவே அவருடன் இணைந்து குறும்படத்தில் பணியாற்றி இருப்பதாகக் கூறுகிற கிறிஸ்டி, அவரால்தான் ‘நறுவி ‘ பட வாய்ப்பு வந்ததாக நன்றியுடன் கூறுகிறார். இந்த முற்றுப்புள்ளி அனைவருக்கும் பிடித்த சமூக சிந்தனையுள்ள ஆல்பமாகப் பேசப்படும் .

இசை அமைப்பாளர் டி. இமான் இந்த ஆல்பத்தைப் பார்த்து பாராட்டி வாழ்த்தியதுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு சமூக ஊடகங்களுக்கு அறிமுகம் செய்தார். பலரும் பாராட்டி வருகின்றனர்.

சமூக அக்கறையுடன் ஒரு படைப்பு

MUTRUPULLI song link

Music director D Imman praises Mutrupulli album

‘சுந்தரி’ சீரியலின் ஹீரோயின் ஆனார் ‘டிக் டாக்’ புகழ் கேப்ரியலா

‘சுந்தரி’ சீரியலின் ஹீரோயின் ஆனார் ‘டிக் டாக்’ புகழ் கேப்ரியலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sundari serialடிக் டாக் செயலி பலரின் வாழ்க்கையில் பெரிய பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது.

இது இந்தியாவில் அறுமதிக்கப்பட்ட போது பிரபலமானவர் கேப்ரியலா.

இவர் 2016-ம் ஆண்டிலேயே விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு டிவி நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார்.

கேப்ரியலாவுக்கு இன்று வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இவரின் முதல் படத்திலேயே நயன்தாராவின் சிறுவயது கேரக்டரில் நடித்திருந்தார்.

அதாவது ‘ஐரா’ படத்தில் நடித்திருந்தார்.

பின்னர் ‘செத்தும் ஆயிரம் பொன்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது டிவி சீரியலில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்துள்ளார்.

சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘சுந்தரி’ சீரியலில் நாயகி கேப்ரியலா தான்.

கிராமத்து பெண் ஒருவர் எப்படி தனது லட்சியங்களுக்காக போராடுகிறார் என்பதாக இந்த சீரியல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

TikTok fame Gabriella plays lead role in new serial

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் மீண்டும் ‘டாக்டர்’ ஹீரோயின்..; SJ சூர்யாவும் இணைந்தார்!

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் மீண்டும் ‘டாக்டர்’ ஹீரோயின்..; SJ சூர்யாவும் இணைந்தார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள “டாக்டர் மற்றும் அயலான்” திரைப்படங்கள் விரைவில் வெளியாகிறது.

இதில் ‘டாக்டர்’ படம் 2021 மார்ச் 26ஆம் தேதி ரிலீசாகிறது.

அண்மையில் சிவகார்த்திகேயனின் 19வது படமாக ‘டான்’ பட அறிவிப்பு வெளியானது.

இயக்குநர் அட்லியிடம் “மெர்சல், பிகில்” படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இப்படத்தினை இயக்குகிறார்.

லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இப்பட பிரியங்கா அருள் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரே டாக்டர் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் பாண்டிராஜ் & சூர்யா இணையும் படத்திலும் பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் எஸ் ஜே சூர்யா & சமுத்திரக்கனியும் இணைந்துள்ளனர் என்பதை சற்றுமுன் அறிவித்துள்ளனர்.

Sivakathikeyan’s Don movie updates

EtTinLeXAAADlEH

EtTlduHWQAMDsY-

நாங்க சட்டப்படி விவாகரத்து செய்து விட்டோம்.; ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த நடிகர் அசீம்

நாங்க சட்டப்படி விவாகரத்து செய்து விட்டோம்.; ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த நடிகர் அசீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

azeem divorceவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘பகல் நிலவு’ மற்றும் ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய சீரியல்களில் நடித்தவர் அசீம்.

‘பகல் நி்லவு’ சீரியலில் நடித்த அசீம் மற்றும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த சீரியலுக்குப் பின்னர் தான் ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.

இந்த நிலையில் நடிகர் அசீம் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளாராம்.

அவரின் பதிவில்…” நாங்கள் (மனைவி) சட்டப்படி பிரிந்து விட்டோம். எங்கள் இருவரின் பரஸ்பர விருப்பத்தின் பேரில் நீதிமன்றத்தால் விவாகரத்து செய்ய பட்டிருக்கிறோம்.

தயவுசெய்து எங்கள் திருமண நிலை குறித்து எந்த ஒரு தனிப்பட்ட கேள்விகளும் கேட்க வேண்டாம்’ என பதிவிட்டுள்ளார்.

Serial actor Azeem divorced by mutual consent, requests privacy

என் இசையை கேட்டுத்தான் ஆகனும்.. அது தலையெழுத்து.. – இளையராஜா

என் இசையை கேட்டுத்தான் ஆகனும்.. அது தலையெழுத்து.. – இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilaiyaraajaகடந்த 45 வருடங்களாக தன் இசை பணிகளை பிரசாத் ஸ்டூடியோவில் செய்து வந்தார் இளையராஜா.

சில பிரச்சனைகளால் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டடார்.

தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் (பழைய MM தியேட்டர்) தன் இசை பணிகளை தொடர புதிய ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா.

இன்று பிப்ரவரி 3 முதல் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி – விஜய் சேதுபதி நடிக்கும் பட பாடல் ரெக்கார்டிங்கை தொடங்கியுள்ளார்.

எனவே இளையராஜாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த பணிகளின் போது சில செய்தியாளர்களை சந்தித்தார் இளையராஜா.

அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

ஒரு இடத்தை (தியேட்டரை) வாங்கி அதை புதுப்பித்து ஸ்டுடியோ அமைத்துள்ளேன்.

இன்னும் சில பணிகள் முடியாமல் உள்ளது.

கேள்வி.. : என்ன மாதிரியான இசையை இனி வரும் படங்களில் கொடுக்கப் போகிறீர்கள்.?

பதில்.: மழை எப்போது வரும் என தெரியாது. அது போல தான் என்ன மாதிரியான இசை வரும் என தெரியாது.

நாங்க என்ன இசை போட்டாலும் அதை ரசிகர்கள் கேட்டுத்தான் ஆகனும்.. அது அவங்க தலை எழுத்து.

எந்த மாதிரியான இசை என்பது அந்த பாடலுக்கு இசை போடும் போதுதான் தெரியும்.” என்றார்.

Music director Ilaiyaraaja talks about his composing

More Articles
Follows