என் இசையை கேட்டுத்தான் ஆகனும்.. அது தலையெழுத்து.. – இளையராஜா

என் இசையை கேட்டுத்தான் ஆகனும்.. அது தலையெழுத்து.. – இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilaiyaraajaகடந்த 45 வருடங்களாக தன் இசை பணிகளை பிரசாத் ஸ்டூடியோவில் செய்து வந்தார் இளையராஜா.

சில பிரச்சனைகளால் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டடார்.

தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் (பழைய MM தியேட்டர்) தன் இசை பணிகளை தொடர புதிய ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா.

இன்று பிப்ரவரி 3 முதல் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி – விஜய் சேதுபதி நடிக்கும் பட பாடல் ரெக்கார்டிங்கை தொடங்கியுள்ளார்.

எனவே இளையராஜாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த பணிகளின் போது சில செய்தியாளர்களை சந்தித்தார் இளையராஜா.

அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

ஒரு இடத்தை (தியேட்டரை) வாங்கி அதை புதுப்பித்து ஸ்டுடியோ அமைத்துள்ளேன்.

இன்னும் சில பணிகள் முடியாமல் உள்ளது.

கேள்வி.. : என்ன மாதிரியான இசையை இனி வரும் படங்களில் கொடுக்கப் போகிறீர்கள்.?

பதில்.: மழை எப்போது வரும் என தெரியாது. அது போல தான் என்ன மாதிரியான இசை வரும் என தெரியாது.

நாங்க என்ன இசை போட்டாலும் அதை ரசிகர்கள் கேட்டுத்தான் ஆகனும்.. அது அவங்க தலை எழுத்து.

எந்த மாதிரியான இசை என்பது அந்த பாடலுக்கு இசை போடும் போதுதான் தெரியும்.” என்றார்.

Music director Ilaiyaraaja talks about his composing

மலேசியா டூ சென்னை.; ஒரு ஃபுல் தியேட்டரையே புக் பண்ணி ‘மாஸ்டர்’ படம் பார்த்த விஜய் ரசிகை

மலேசியா டூ சென்னை.; ஒரு ஃபுல் தியேட்டரையே புக் பண்ணி ‘மாஸ்டர்’ படம் பார்த்த விஜய் ரசிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Masterலோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ விஜய் நாயகனாக மாளவிகா நாயகியாக, விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தனர்.

ஜனவரி 13 பொங்கலை முன்னிட்டு இந்த படம் இந்தியாவில் ரிலீசானது

ஆனால் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் வெளியாகவில்லை.

இந்த நிலையில், மலேசியாவில் வாழும் ஆஷ்லினா என்ற பெண் சென்னைக்கு வந்து மாஸ்டர் படத்தை பார்க்க ஒரு தியேட்டரையே புக் பண்ணியிருக்கிறார்.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த இவர் இவர் விஜய்யின் தீவிர ரசிகை.

கடந்த சில வருடங்களாக இவர் மலேசியாவில் வசித்து வருகிறார்.

‘மாஸ்டர்’ படத்தை பார்க்க சென்னை வர பலமுறை முயற்சித்துள்ளார்.

ஒரு வழியாக சென்னை வந்து அண்ணாசாலையில் உள்ள 150 இருக்கைகள் கொண்ட ஒரு திரையரங்கில் ஒட்டுமொத்த இருக்கைகளையும் முன்பதிவு செய்துள்ளார்.

இதன் பின்னர் சென்னை உள்ள தனது உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு தியேட்டருக்கு சென்று படம் பார்த்து ரசித்துள்ளார்.

அந்த படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Thalapathy fan girl came from Malaysia to watch Master movie in chennai

Vijay fan

பிரபல நிறுவனத்திற்காக ‘சிவகுமாரின் சபதம்’ போடும் ஹிப் ஹாப் ஆதி

பிரபல நிறுவனத்திற்காக ‘சிவகுமாரின் சபதம்’ போடும் ஹிப் ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hip hop aadhiநடிகர், பாடகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் ஹிப் ஹாப் ஆதி.

‘நான் சிரித்தால்’ படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

அஸ்வின் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஹிப் ஹாப் ஆதி.

சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதனையடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தை ஆதியே இயக்கி நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு ‘சிவகுமாரின் சபதம்’ என தலைப்பு வைக்கவுள்ளதாக தெரிகிறது.

விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Hiphop Aadhi next is titled Sivakumarin Sabatham

சென்னை 28 ஜெய் கேரக்டர் என்னுடையது..; என் கதையை வெப் சீரிஸாக்கிவிட்டார் வெங்கட் பிரபு..; ‘பிக்பாஸ்’ ஆரி பட இயக்குனர் குற்றச்சாட்டு

சென்னை 28 ஜெய் கேரக்டர் என்னுடையது..; என் கதையை வெப் சீரிஸாக்கிவிட்டார் வெங்கட் பிரபு..; ‘பிக்பாஸ்’ ஆரி பட இயக்குனர் குற்றச்சாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Sasi Dharanஇயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் வெப் சீரிஸ் தான் ‘லைவ் டெலிகாஸ்ட்’.

விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இந்த வெப் சீரிஸின் கதை தன்னுடையது என்றும் தனக்கு தெரியாமலேயே, தன்னுடைய அனுமதி இல்லாமலேயே இதனை வெங்கட்பிரபு வெப் சீரிஸாக இயக்கியுள்ளார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் இயக்குனர் சசிதரன்.

இவர் அட்டகத்தி தினேஷ் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘வாராயோ வெண்ணிலாவே’ என்கிற படத்தை இயக்கி முடித்து..

தற்போது bigboss புகழ் ஆரி அர்ஜுன் உடன் புதிய படத்தை இயக்கி கொண்டு இருக்கிறார்.

தன்னுடைய கதையான
வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘லைவ் டெலிகாஸ்ட்’ சீரிஸ் கதை உருவான விதம் குறித்தும் இயக்குனர் வெங்கட்பிரபு குறித்தும் இயக்குனர் சசிதரன் கூறியதாவது,..

“2005 காலகட்டத்தில் வெங்கட்பிரபுவும் நானும் நண்பர்களாக இருந்தோம். அந்தசமயத்தில் அவர் நடித்திருந்த ‘உன்னை சரணடைந்தேன்’ என்கிற படம் வெளியாகி இருந்தது.

அப்போது அவரை ஹீரோவாக வைத்து நான் ஒரு படம் இயக்குவதற்காக, இருவரும் முயற்சி செய்து கொண்டிருந்தோம். அந்த சமயத்தில்தான் தயாரிப்பாளர் எஸ்பிபி சரணிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் வெங்கட்பிரபு.

ஜெயம் ரவி நடித்த ‘மழை’ படத்தை தொடர்ந்து, அடுத்ததாக மாதவனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக கூறிய எஸ்பிபி சரண் என்னிடம் கதை இருக்கிறதா? என கேட்டார்.

அப்போது அவரிடம் நான் ஒரு கதை கூறினேன் அது அவருக்கும் பிடித்துவிட்டது. ஆனால் அதன்பிறகு அதுபற்றிய பேச்சே இல்லை.. ஒருநாள் திடீரென வெங்கட்பிரபு என்னிடம் வந்து, தனது நண்பரான சிங்கப்பூரை சேர்ந்த கேபிடல் சினிமாஸ் சரவணன் என்பவர் மூலமாக தனக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறினார்.

அப்போது ஆங்கில ஹாரர் படம் ஒன்றை தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றலாம் என கூறினார்கள்.. ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.. அதனால் நாமே புதிதாக ஒரு கதையை உருவாக்கலாம் என கூறி, சில நாட்களில் ‘நேரடி ஒளிபரப்பு’ என்கிற ஒரு புதிய ஹாரர் கதையை உருவாக்கி வெங்கட்பிரபுவிடம் கூறினேன்.

அவருக்கும் அந்த கதை பிடித்துவிட்டது உடனே அதை எஸ்பிபி சரணிடம் கூற அவரும் சம்மதித்து, கதை விவாதத்தில் உட்கார்ந்து விட்டனர். அப்போதும் என்னை அழைத்த வெங்கட்பிரபுவும் எஸ்பிபி சரணும் இந்தப்படத்தின் முழு திரைக்கதையையும் வசனத்தையும் என்னையே உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.

ஏற்கனவே எஸ்பிபி சரண், எனக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு தருவதாக கூறியிருந்ததால், அந்த நம்பிக்கையில் வெங்கட்பிரபு இயக்குவதற்காக இந்த ஹாரர் கதையை நான் முழு மூச்சாக அமர்ந்து உருவாக்கி முடித்தேன்.

அதன்பிறகு மொத்த டீமையும் அழைத்து நான் உருவாக்கிய மொத்த ஸ்கிரிப்டையும் படித்துக் காட்டினேன்.. அனைவருக்குமே பிடித்துவிட்டது.. தயாரிப்பாளர் எஸ்பிபி சரணுக்கு இந்த கதை பிடித்திருந்தாலும், படத்திற்கு அதிக செலவாகும் என்பதாலும் இயக்குனர் வெங்கட் பிரபுவை நம்பி அவரது முதல் படமாக அவ்வளவு ரூபாய் செலவு செய்ய முடியாது என்றும் கூறினார்.

அதன்பிறகு சில மாதங்கள் வரை அதுபற்றிய பேச்சே இல்லாமல் இருந்தது. ஒரு நாள் அவர்கள் இருவரும் தாங்கள் இணைந்து நடித்துக் கொண்டிருந்த ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு என்னை வரவழைத்தார்கள்.

அப்போதும் நான் கூறிய கதையை படமாக்க வேண்டும் என வெங்கட் பிரபு சொல்ல, பட்ஜெட் அதிகம் என மீண்டும் மறுத்தார் எஸ்பிபி சரண்.. அதேசமயம் வெங்கட் பிரபுவிடம் வேறு ஒரு கதை உள்ளது அதை பண்ணலாம் என்று கூற, அப்போது வெங்கட் பிரபு தெருவோர கிரிக்கெட் விளையாடுபவர்கள் நட்பு என்கிற வரியை மட்டும் என்னிடம் கூறினார்.

ஆனால் வெங்கட் பிரபுவுவோ, தெருவோர கிரிகெட் என்கிற வார்த்தை மட்டுமே தன்னிடம் உள்ளது அதை வைத்து மேற்கொண்டு என்ன செய்வது என்று மீண்டும் என்னிடமே கேட்க,

சரன் எனக்கு இயக்குனர் வாய்ப்பு அளிக்கிறேன் என்று சொன்னதை மட்டுமே நம்பி.. அதன் பிறகு தெருவோர கிரிக்கெட் என்ற புள்ளியை மட்டுமே வைத்து மீண்டும் சென்னை 28 அதற்கான முழு கதையையும் திரைக்கதையையும் நானே தயார் செய்து வசனத்தையும் எழுதினேன்.

அந்த படத்தில் இடம்பெற்ற நடிகர் ஜெய்யின் கதாபாத்திரம் கூட, எனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் தான்.. அப்படி என் திறமை அனைத்தையும் கொட்டி எழுதிய கதைதான் சென்னை-28.

ஆனால் மொத்த படத்தின் கதையை எழுதி முடித்து அவர்களிடம் கொடுத்ததுமே அதன்பின் வந்த நாட்களில் வெங்கட் பிரபுவும் எஸ்பிபி சரணும் என்னை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.

சொல்லப்போனால் அந்தப்படத்தில் நான் பணிபுரிவதையே அவர்கள் விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் அந்த படத்தில் இருந்து நானே விலகுவதாக கூறி வெளியே வந்துவிட்டேன்..

சென்னை 28 படத்தின் டைட்டில் கார்டில் கதை திரைக்கதை வசனம் என என் பெயர் போடும்படி கேட்டேன். ஆனால் திரைக்கதை வசனம் என்று போட்டுவிட்டு அதன் அருகில் சிறியதாக உதவி என்று சிறியதாக போட்டார் வெங்கட்பிரபு.

அதன்பிறகு அந்த படம் வெளியாகி வெற்றி பெற்றதும், வெங்கட்பிரபு மீண்டும் இணைந்து பணியாற்றலாம் என என்னை அழைத்தார். ஆனால் எனக்கு அவருடன் மீண்டும் இணைவதற்கு விருப்பம் இல்லாததால் அவரது அழைப்பை நிராகரித்து விட்டேன்.

அதன்பிறகு அட்டகத்தி தினேஷை வைத்து, தற்போது ‘வாராயோ வெண்ணிலாவே’ என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டேன். சென்சார் பணிகள் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில்தான் ஹாட்ஸ்டார் விளம்பரத்தில் ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்கிற பெயரில் வெங்கட்பிரபு இயக்கியுள்ள வெப்சீரிஸின் டீசரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். காரணம் சரவணன் மற்றும் சரன் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்குவதற்காக நான் எழுதிக்கொடுத்து, பட்ஜெட் அதிகம் என ஒதுக்கி வைத்தார்களே, அதே ஸ்கிரிப்ட்டை தான் தற்போது வெங்கட்பிரபு ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்கிற வெப் சீரியஸாக இயக்கியுள்ளார்.

கடந்த 2007-லேயே, இந்த கதையை நான் எழுத்தாளர் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்து வைத்துள்ளேன். அந்தக் கதைக்கும் கூட ‘நேரடி ஒளிபரப்பு’ என்று டைட்டில் வைத்து தான் பதிவு செய்துள்ளேன். அதையே தற்போது ஆங்கிலத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்கிற பெயரிலேயே வெப்சீரிஸாக இயக்கியுள்ளார் வெங்கட்பிரபு.

என் பெயரில் அந்தக்கதை இருக்கும்போது, என்னிடம் அனுமதி பெறாமலேயே, எனக்கு தெரியாமலேயே வெங்கட்பிரபு இவ்வளவு துணிச்சலாக அதை வெப் சீரிஸாக இயக்கி இருக்கிறார் என்றால் அதற்கு பின்னணியில் இன்னொரு வலுவான காரணமும் இருக்கிறது.

அதாவது கடந்த 2007-ல் நான் சென்னை விருகம்பாக்கத்தில் குடியிருந்தபோது, என்னுடைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்தில் பல பொருட்கள் எரிந்து நாசம் ஆனாலும், நான் எழுதி வைத்திருந்த எண்பதுக்கும் மேற்பட்ட கதைகள் அடங்கிய பெட்டி அதிர்ஷ்டவசமாக தப்பியது. பெரிய அளவில் சேதாரம் இல்லாமல் என்னுடைய கதைகளும் தீயிலிருந்து தப்பின.

இந்த தீ விபத்து குறித்து எப்படியோ கேள்விப்பட்ட வெங்கட்பிரபு, மறுநாள் என்னிடம் அது குறித்து விசாரித்து விட்டு, அப்படியே பேச்சுவாக்கில் என் கதைகள் எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று கேட்டார். நான் அவையெல்லாம் தீயில் எரிந்து விட்டன என்று கூறினேன். அதை கேட்டுக்கொண்ட வெங்கட் பிரபு, அதன்பிறகு என்னிடம் தொடர்பு கொள்ளவே இல்லை..

இப்போது தான் எனக்கு தெரிகிறது, என்னுடைய கதைகள் எரிந்து விட்டது என்கிற தைரியத்தில் தான், வெங்கட்பிரபு ‘லைவ் டெலிகாஸ்ட்’ கதையை வெப்சீரிஸாக தற்போது எடுத்துள்ளார்.

வெங்கட்பிரபுவுக்கு இது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியான விஷயமாக இருந்தது. காரணம் இதே கதையை, அதாவது நான் ஏற்கனவே எழுதிய ‘நேரடி ஒளிபரப்பு’ என்கிற கதையைத்தான் வெப் சீரிஸாக இயக்குவதற்காக ‘வி கோஷ் மீடியா’ என்கிற நிறுவனத்துடன் பேசி கடந்த அக்டோபர் மாதம் தான், அதற்காக முன்பணமும் வாங்கியுள்ளேன்.

இந்த நிலையில்தான் இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிந்து கொண்டேன். இதுகுறித்து தற்போது நான் எழுத்தாளர் சங்கத்திற்கு மெயில் அனுப்பியுள்ளேன்.

விரைவில் நேரில் சென்று அவர்களிடம் இது குறித்து பேச இருக்கிறேன்.. எனக்கான நியாயத்தை சங்கத்தின் மூலமாக பெற முயற்சி எடுக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்

இயக்குனர் சசிதரன் வெங்கட்பிரபு குறித்து அவர் இயக்கியுள்ள லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸ் கொடுக்கும் கூறியுள்ள தகவல்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Director Sasi Dharan blames Venkat Prabhu

மாஸ்டர் 50.. கபடதாரி 30… விதியை மீறிய விஜய்..; தயாரிப்பாளர் சங்கத்துடன் தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனை!

மாஸ்டர் 50.. கபடதாரி 30… விதியை மீறிய விஜய்..; தயாரிப்பாளர் சங்கத்துடன் தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Masterஇந்த மாதம் பிப்ரவரி முதல் தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.

இந்த நிலையிலும் விஜய் நடித்த மாஸ்டர் படம் ஓடிடியில் ஓடிக் கொண்டிருப்பதால் தியேட்டர் வசூல் பாதிப்படைந்துள்ளது.

இந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ளதாவது..

‘மாஸ்டர்’ பட லைசென்ஸ் பிப்ரவரி 4ம் தேதி வரை மட்டுமே உள்ளது.

ஆகையால் 5ம் தேதி முதல் யாரெல்லாம் படத்தை திரையிட விரும்புகிறீர்களோ அவர்கள் அந்தந்த மாவட்ட விநியோகஸ்தர்களிடம் பேசி புதிய ஒப்பந்தம் போட்டு கொள்ள வேண்டும்.

‘கபடதாரி’ படத்தை 30 நாள் கழித்துத்தான் ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என தயாரிப்பாளர் கடிதம் கொடுத்துள்ளார்.

சின்ன பட்ஜெட் படங்கள் 30 நாட்களுக்கு பிறகும், பெரிய பட்ஜெட் படங்கள் 50 நாட்களுக்கு பிறகு மட்டுமே ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளோம்.

எனவே இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துடன் விரைவில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்”

இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் பேசியிருக்கிறார்.

Theatre owners to discuss with film producers council regarding OTT license

சூரி – கதை நாயகன்… விஜய்சேதுபதி – கதாநாயகன்..; இளையராஜா புதிய ஸ்டூடியோவில் வெற்றிமாறன் பேச்சு

சூரி – கதை நாயகன்… விஜய்சேதுபதி – கதாநாயகன்..; இளையராஜா புதிய ஸ்டூடியோவில் வெற்றிமாறன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi sooriசென்னை கோடம்பாக்கத்தில் (பழைய MM தியேட்டர்) தன் இசை பணிகளை தொடர புதிய ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா.

இன்று பிப்ரவரி 3 முதல் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி – விஜய் சேதுபதி நடிக்கும் பட பாடல் ரெக்கார்டிங்கை தொடங்கியுள்ளார்.

(45 வருடங்களாக தன் இசை பணிகளை பிரசாத் ஸ்டூடியோவில் செய்து வந்தார். சில பிரச்சனைகளால் அவர் அங்கிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.)

எனவே இளையராஜாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் விஜய் சேதுபதி பேசியதாவது…

“நான் இளையராஜாவின் பெரிய ரசிகன். அவர் எங்க வீட்டுக்குப் பக்கத்தில் வந்தாச்சு.

சூரி நாயகனாக நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பதே சந்தோஷம்.

எங்க பட பாடல்கள் உருவாக்கம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறனுடன் பணிபுரிய வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை. என் வாழ்க்கையில் இந்த நாள் முக்கியமான நாள்.” என்று தெரிவித்தார்.

வெற்றிமாறன் பேசியதாவது…, “இளையராஜாவின் இசையைக் கேட்டுத்தான் நாம் வளர்ந்திருக்கிறோம்.

ஒவ்வொரு பட உருவாக்கத்தின்போதும், அவருடைய பாடல்களை முன்வைத்தே பேசுவோம்.

இளையராஜா உடன் பணிபுரிவது, இந்தப் படத்தில் அமைந்திருப்பது சந்தோஷம்.

அவரின் புதிய ஸ்டுடியோவில் எங்கள் பட முதல் பாடல் ரெக்கார்டிங் நடக்கிறது என்பது இன்னொரு சந்தோஷம்.

இந்த படத்தின் கதை நாயகன் சூரிதான், கதாநாயகன் விஜய் சேதுபதி. சூரியின் மீதுதான் முழுக் கதையும் நடக்கும்.” என வெற்றிமாறன் பேசினார்.

சூரியின் அப்பாவாக விஜய்சேதுபதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Vetrimaaran talks about his upcoming film

More Articles
Follows