தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடமாடும் கொரோனா தடுப்பூசி மையங்களின் தொடக்க விழா நடைப்பெற்றது.
இதில் கலந்துக் கொண்டார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
அப்போது கொரோனா நடமாடும் தடுப்பூசி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது…
“பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், கொரோனாவை கட்டுப் படுத்துவதில் மக்களின் பங்களிப்பு மிக முக்கியம்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்” எனவும் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தினார்.
Mobile vaccination centre in pondy inaugurated by Governor