*அண்ணனுக்கு ஜே* போட மேக்கப் இல்லாமல் நடித்த மஹிமா நம்பியார்

*அண்ணனுக்கு ஜே* போட மேக்கப் இல்லாமல் நடித்த மஹிமா நம்பியார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mahima nambiar“அண்ணனுக்கு ஜே ” திரைப்படம் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் , பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.இப்படத்தினை அறிமுக இயக்குனரான ராஜ்குமார் இயக்கியுள்ளார் .இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

இந்தப்படத்தில் கதநாயகனாக தினேஷ் நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.மேலும் ராதாரவி ,மயில் சாமி ஆகியோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
.அர்ரோல் கொரளி இசை அமைத்துள்ளார்.விஷ்ணு ரங்கசாமி அறிமுக ஒளிப்பதிவாளராக இப்படத்தில் அறிமுகமாகி உள்ளார்.எடிட்டிங் G .B வெங்கடேஷ் செய்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் தினேஷ் பேசியவை “இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கும் வெற்றிமாறன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.மஹிமா அருமையாக நடித்துள்ளார்.இசையமைப்பாளர் அர்ரோல் 7 பாடல்கள் நன்றாக இசையமைத்துள்ளார் .ராதா ரவி அவர்களுடன் நடித்தது மிக்க சந்தோசமாக உள்ளது.இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் ” இவ்வாறு பேசினார் .

பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ராஜ்குமார் பேசியவை ” முதலில் வெற்றிமாறன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,இப்படத்திற்கு பக்கபலமாக கூட இருந்துள்ளார் .நடிகர் தினேஷ் அவர்களுக்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன்.நடிகை மஹிமா மேக்கப் கூட போடாமல் நடித்திருந்தார். மயில் சாமி மற்றும் வையாபுரி இருவரும் எப்பபோதும் நகைச்சுவை நடிகர்களாக பல படங்களில் நடித்து இருப்பார்கள் ,இந்தபடத்தில் ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்” என பேசினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் இசைஅமைப்பாளர் அர்ரோல் கொரளி பேசியவை ” இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த வெற்றிமாறன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.எனது மற்ற படங்களை விட இந்த படத்தில் ஒருவித வித்யாசமான முறையில் இசைஅமைத்துள்ளேன்.7 பாடல்களுள் ஒவ்வொருவிதம் ” இவ்வாறு பேசினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை மஹிமா நம்பியார் பேசியவை ” வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனரின் தயாரிப்பு நிறுவனத்தில் படம் நடிப்பது சந்தோசமாக உள்ளது.இந்தப்படத்தில் தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன்.இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி.மேலும் இந்த படத்தில் எனது சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளேன்” இவ்வாறு பேசினார் .

பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெற்றிமாறன் பேசியவை ” நடிகர் தினேஷ் தனது முழு எனர்ஜி வாய்ந்த நடிப்பை தந்துள்ளார்.படத்தில் நடித்த அனைவரும் அருமையாக நடித்துள்ளார்.இயக்குனர் ராஜ்குமார் நல்ல படத்தை தந்துள்ளார்.படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என பேசியுள்ளார்.

பாலிவுட்டில் கால் பதிக்கும் *காலா* பட டைரக்டர் ரஞ்சித்

பாலிவுட்டில் கால் பதிக்கும் *காலா* பட டைரக்டர் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director pa ranjithரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கியவர் பா. ரஞ்சித்.

ரஜினி படத்தை இயக்கியதால் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

தற்போது பாலிவுட்டிலும் இவருக்கு அழைப்பு வந்துள்ளது.

பியாண்ட் தி க்ளவுட்ஸ் என்ற திரைப்படத்தை தயாரித்த ஷரீன் மத்ரி மற்றும் கிஷோர் அரோரா ஆகியோர் அடுத்து ரஞ்சித் இயக்கும் இந்தி படத்தைத் தயாரிக்க முன் வந்துள்ளனர்.

இது உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் பீரியட் படம் என கூறப்படுகிறது

சிவகார்த்திகேயனை அடுத்து சூர்யா படத்திலும் சூப்பர் சிங்கர் செந்தில்கணேஷ்.

சிவகார்த்திகேயனை அடுத்து சூர்யா படத்திலும் சூப்பர் சிங்கர் செந்தில்கணேஷ்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and senthil ganeshசூப்பர் சிங்கர் 6’ போட்டியில் வெற்றி பெற்ற செந்தில் கணேஷ் அவர்கள் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘சீமராஜா’வில் பாடுகிறார்.

இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை முதலில் அறிவித்தார்.

இந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தில், அறிமுகப் பாடலைப் பாடியிருக்கிறார் செந்தில் கணேஷ்.

இதற்கான பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் இப்படத்தில் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள்.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்தது.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘என்.ஜி.கே.’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா.

லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. படத்துக்கு இன்னும் பெயரிடப்படாததால் ‘சூர்யா 37’ என்றே சொல்லப்படுகிறது.

பிரபு சாலமன் இயக்கும் *கும்கி 2* படத்தில் நிவேதா பெத்துராஜ்..?

பிரபு சாலமன் இயக்கும் *கும்கி 2* படத்தில் நிவேதா பெத்துராஜ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nivetha pethurajகும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகத்தையும் இயக்கி வருகிறார் பிரபு சாலமன்.

தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். வில்லனாக ஹரிஷ் பேராடியும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள்.

டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்தை பென் இந்தியா லிமிடெட் சார்பில் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் பிரபுசாலமன் கூறியதாவது..

படப்பிடிப்பு தற்போது மைசூர் அருகே உள்ள சிவ சமுத்திரம் அருவியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த இதயக்கனி படப்பிடிப்பிற்கு பிறகு கும்கி 2 படப்பிடிப்பு தான் அங்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்காக இரண்டு விஷயங்களில் சிரமப்பட்டோம். ஒன்று யானை.. அது கிடைத்து விட்டது.

மற்றொன்று படத்தின் நாயகி. இன்னும் கிடைக்கவில்லை. தேடிக்கொண்டிருக்கிறோம்.

நாயகி இல்லாத காட்சிகளை மட்டுமே தற்போது படமாக்கி வருகிறோம் என்றார் பிரபுசாலமன்.

இந்த படத்தில் நடிக்க நிவேதா பெத்துராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

என் ரசிகர்கள் புத்திசாலிகள்; அவர்களை ஏமாத்த முடியாது… : கமல்

என் ரசிகர்கள் புத்திசாலிகள்; அவர்களை ஏமாத்த முடியாது… : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanகமல்ஹாசன் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்து நடித்துள்ள படம் விஸ்வரூபம் 2.

இப்படத்தை ஆஸ்கர் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இது தொடர்பான புரோமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார் கமல்ஹாசன்.

அப்போது அவர் அளித்து பேட்டியில் கூறியதாவது…

’சில வருடங்களுக்கு முன் நேபாள நடிகர்களை நடிக்க வைத்து விட்டு சீனர்கள் என சொன்னால் நம்பிவிடுவார்கள் ஆனால் இப்போது அப்படி இல்லை.

தஜிகிஸ்தானில் சூட்டிங் நடத்தியபோது ஒரு பிளாக் ஹாக் வகை ஹெலிகாப்டர்கள் தேவைப்பட்டது. எனவே ஒரிஜினலாக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தினோம்.

வேறு வகையான ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தினால் என் புத்திசாலியான ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.” என்றார்.

மேலும் நாட்டை விட்டு ஓட தயாரானவன் இன்று நாட்டை காப்பாற்ற போகிறானா என சிலர் கிண்டல் செய்கிறார்கள்.

ஆனால் நான் நாட்டை விட்டுப் போகிறேன் எனச் சொன்னது என்னுடைய பணியை செய்ய விடாமல் தடுத்ததற்காகத் தான. மற்றபடி நான் பயந்து போய் அப்படி சொல்லவில்லை’ எனவும் கூறினார் கமல்.

பைக் ரேஸர் ஜிவி. பிரகாஷ்; போலீஸ் சித்தார்த்.. சசி போட்ட திட்டம்

பைக் ரேஸர் ஜிவி. பிரகாஷ்; போலீஸ் சித்தார்த்.. சசி போட்ட திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

siddharth and gv prakashபிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து சசி இயக்கவுள்ள படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், சித்தார்த் என இரண்டு நாயகர்கள் நடிக்கவுள்ளனர்.

இருவரும் இந்த படத்தில் உறவுக்காரர்களாக நடிக்கிறார்களாம். அதாவது மாமன் மச்சான்னாக நடிக்கிறார்களாம்.

அதில் ஜி.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும், டிராபின் போலீஸாக சித்தார்த்தும் நடிக்கிறார்களாம்.

இது குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு பக்காவான பேமிலி டிராமாவாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம் சசி.

பொதுவாகவே சசியின் படங்கள் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் நமக்கு சந்தேகமில்லை.

More Articles
Follows