தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘2.0’.
பிரபல லைக்கா நிறுவனம் இப்படத்தை ரூ. 350 கோடியில் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இதன் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் நவம்பர் 20ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.
இவ்விழா மும்பையில் நடைபெறுவதால் தென்னிந்தியாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் நேரடியாக பார்க்க முடியாதே என கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து லைக்கா நிறுவனத்தைச் சேர்ந்த ராஜுமகாலிங்கம் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…
“2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டும்தான் மும்பையில் நடைபெறுகிறது.
மீதமுள்ள டீசர், பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா ஆகியவற்றை தென்னிந்தியாவில் நடத்த உள்ளோம்.
இது ரசிகர்கள் மாபெரும் விருந்தாக அமையும்” என்றார்.