பெயிண்ட் அடித்தவர் பெயரை உங்க வீட்டுக்கு வைப்பீர்களா..? ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ பெயருக்கு வைகோ கண்டனம்

பெயிண்ட் அடித்தவர் பெயரை உங்க வீட்டுக்கு வைப்பீர்களா..? ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ பெயருக்கு வைகோ கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vaikoகோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

“சென்னை மாநகர மெட்ரோவின் தலைமை அலுவலகம், கோயம்பேட்டில் அமைந்து இருக்கின்றது. அங்கே இருக்கின்ற பாலத்திற்கு, கடந்த சில நாள்களாக பெயிண்ட் அடித்தார்கள்.

திடீரென நேற்று, ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என, புதிய பெயரைச் சூட்டி எழுதி இருக்கின்றார்கள். இதுகுறித்து, எந்தவிதமான முன்அறிவிப்பையும், மாநகரத் தொடரி வெளியிடவில்லை. இந்தப் பெயர் மாற்றத்தை, வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

அந்த பாஷ்யம்? கோயம்பேடு மெட்ரோ நிலையத்தை விலைக்கு வாங்கி இருக்கின்றாரா? அது நிறுவனமா? அல்லது தனி ஒருவரா? அல்லது பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தம் பெற்று இருக்கின்றாரா?

அவர் தமிழ்நாட்டுக்குச் செய்த தியாகம் என்ன? எதற்காக இந்தப் பெயர் மாற்றம்? என்பதற்கு, சென்னை மாநகரத் தொடரி விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்தப் பெயர் மாற்றம், தமிழக அரசுக்குத் தெரியுமா? இதற்கு இசைவு அளித்து இருக்கின்றார்களா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

நாடு விடுதலை அடைந்து 72 ஆண்டுகளாக, வான் ஊர்திகள், தொடரி நிலையங்களில் எத்தனையோ நிறுவனங்கள் ஒப்பந்தங்களைப் பெற்றுச் செய்து வருகின்றன.

இதுவரை எந்த நிறுவனத்தின் பெயரையும் எழுதியது இல்லை. ஆனால், கேரளத்தில் திருவனந்தபுரம் வான்ஊர்தி நிலையத்தின் பராமரிப்புப் பணிகளைப் பெற்ற அதானி குழுமம், ‘அதானி ஏர்போர்ட்’ எனப் பெயர் மாற்றம் செய்ததை, கேரள மாநில அரசு கடுமையாகக் கண்டித்து இருக்கின்றது. உங்கள் வீட்டுக்கு வண்ணம் பூச வருகின்ற ஒருவர், வீட்டு முகப்பில், தன் பெயரை எழுதினால், ஒப்புக் கொள்வீர்களா?

அதுபோல, வான் ஊர்தி மற்றும் தொடரி நிலையங்களைப் பராமரிக்கின்ற நிறுவனங்கள், அவற்றைச் சொந்தம் கொண்டாட முடியாது.

கோயம்பேடு மெட்ரோ நிலையத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டு இருக்கின்ற பாஷ்யம் என்ற பெயரை, உடனே நீக்க வேண்டும்“ என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Koyembedu metro train station name controversy

BaashYaam Koyembedu Metro

ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்!

ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vaibhav Vani Bhojan2020 ஆம் ஆண்டில், ZEE5 ‘லாக்கப்’ ‘க / பெ. ரணசிங்கம்’, ‘முகிலன்’ உள்ளிட்ட தனித்துவமிக்க, தரமான படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து மகிழ்வித்தது.

இந்த 2021ம் வருடத்தில் ZEE5 மேலும் பல சுவாரஸ்யம் மிகுந்த படைப்புகளை தொடர்ந்து வழங்க இருக்கிறது.

ZEE5 இந்த வருடத்தின் அடுத்த படைப்பாக, வைபவ் – வாணி போஜன் நடிக்கும் இந்த முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை வழங்குகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைப் பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
படத்தொகுப்பு – கே.எல்.பிரவீன்
இசை – பிரேம்ஜி
கலை – கதிர்

இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், ”OTTல் இது எனது முதல் படம். மிகச்சிறந்த முறையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து அனைவரும் அற்புதமாக நடிக்கிறார்கள்.

வைபவ், வாணிபோஜன், கருணாகரன் மற்றும் என் நண்பர் M.S.பாஸ்கர் ஆகியோருடன் இப்படத்தில் கை கோர்ப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி’’ என்றார்.

நடிகர் வைபவ் கூறுகையில்…, ”

‘லாக்கப்’, ‘டானா’, ‘கப்பல்’ போன்ற படங்களுக்குப் பிறகு, மீண்டும் இப்படத்தின் மூலம் ZEE5 உடனான நட்பு தொடர்கிறது. இந்த நகைச்சுவை படத்தில் இதுவரை நான் ஏற்றிராத சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

குடும்பமாக அனைவரும் ரசித்துப் பார்க்கும்படி எடுக்கப்படும் இப்படத்தில் இயக்குநர் ராதாமோகன், வாணிபோஜன், கருணாகரன், M.S.பாஸ்கர் ஆகியோருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.

நடிகை வாணி போஜன் கூறுகையில்,… ” ‘ZEE5ன் ‘லாக்கப்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் வைபவ் உடன் இணைந்து நடிக்கிறேன். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட ஒரு படம். நகைச்சுவை மிகுந்த இப்படத்தில் பெண்கள் குறிப்பாக இல்லத்தரசிகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கின்றேன்.

ராதாமோகன் சார், M.S.பாஸ்கர் சார், கருணாகரன் ஆகியோருடன் பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது.”

நடிகர் M.S.பாஸ்கர் கூறுகையில்,….

‘’இயக்குநர் ராதாமோகன் என்று சொல்வதை விட அவர் என் சகோதரர், என் நலனில் அக்கறை செலுத்துபவர், என்னை ரசிப்பவர், ரசித்துப் பல கதாபாத்திரங்களை உருவாக்குபவர், என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவரோடு ‘அழகிய தீயே’ படத்தில் இணைந்தேன்.

அதைத் தொடர்ந்து ‘மொழி’, ‘பிருந்தாவனம்’, ‘காற்றின் மொழி’ இப்படிப் பல படங்களில் நடித்த எனக்கு, இந்த படத்திலும் அவருடன் இணைய வாய்ப்பளித்திருக்கிறார்.

மத்த படங்கள் போல் இதிலும் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுப்பார் என்று அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

நடிகர் கருணாகரன் கூறுகையில்…,

”நான் சமீபத்தில் கேட்ட கதைகளில் இப்படத்தின் கதை மிகவும் ரசிக்கும்படி நகைச்சுவையாக இருந்தது. ‘உப்பு கருவாடு’ படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் ராதாமோகனுடன் இணைவதில் மகிழ்ச்சி.

அதே சமயம் வைபவ், M.S.பாஸ்கர், வாணிபோஜன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதிலும் சந்தோஷம். இப்படத்தின் மூலம் அனைவரையும் மகிழ்விக்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

Vaibhav and Vani bhojan joins for Radha Mohan’s next

நாட்டின் பாதுகாப்பை காக்க பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்கள் முடக்கம்..!

நாட்டின் பாதுகாப்பை காக்க பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்கள் முடக்கம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

facebookகடந்த 2020ல் நவம்பர் மாதம், பொதுத் தேர்தல் மியான்மர் நாட்டில் நடைபெற்றது.

மொத்தமுள்ள, 476 இடங்களில், 396 இடங்களைக் கைப்பற்றியது ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக கட்சி.

இந்த நாட்டில் ராணுவ கட்சியாக கருதப்படும், ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி, 33 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

இதனால் மக்களே சற்று குழப்பத்தில் இருந்தனர்.

இந்த தேர்தல் முடிவில் மோசடி நடந்துள்ளதாக, ராணுவத்தினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

ஆனால் அதற்கான ஆதாரங்களை, அவர்களால் திரட்டி நிரூபிக்க முடியவில்லை.

இதனால் ராணுவத்தின் குற்றச்சாட்டுகளை, மியான்மர் தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.

இந்த பரபரப்பான நிலையில், மியான்மர் அரசை, ராணுவம் அதிரடியாக கைப்பற்றியது.

இதனையடுத்து மியான்மரில் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பை பேண பிப்ரவரி 7ம் தேதி வரை பேஸ்புக் தடை செய்யப்படும்’ என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Myanmar bans Facebook, temporarily

இசையமைப்பாளர் இமான் பார்த்து பாராட்டிய ஆல்பம் ‘முற்றுப்புள்ளி’

இசையமைப்பாளர் இமான் பார்த்து பாராட்டிய ஆல்பம் ‘முற்றுப்புள்ளி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

immanஇசையமைப்பாளர் கிறிஸ்டி சினிமா தாகத்தோடு ஒரு திருப்புமுனை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர் .சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்த அவர் கர்நாடக இசை, இந்துஸ்தானி, மேற்கத்திய இசை என்று மூன்று வகை இசையிலும் பயிற்சி பெற்றுக் கற்று 15 ஆண்டுகள் செலவழித்துத் தன்னைத் தகுதியாக்கிக் கொண்டு களத்திற்கு வந்திருப்பவர்.

அவர் இப்போது ‘நறுவி’,’ வன்முறைப்பகுதி’ ‘குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் ‘ என மூன்று படங்களுக்கு இசையமைத்து வருகிறார் .இவை விரைவில் வெளியாக உள்ளன.படங்கள் வெளியாகும் இடைவெளியில் நேரத்தை விரயமாக்காமல் தானே ஒரு கதை எழுதி ஒரு ஐந்து நிமிட மியூசிக் வீடியோ ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார் .அதுதான் ‘முற்றுப்புள்ளி ‘ ‘ சமூக அக்கறையுடன் ஒரு படைப்பு,…கிறிஸ்டிக்கு இசையோடு கதை அமைப்பதிலும் ஆர்வம் உண்டு. அப்படி அவர் சமூகத்தில் இன்றைக்குப் பரவலாக அறியப்படும் பிரச்சினைகளான குழந்தையின்மை,கந்துவட்டிக் கொடுமை,குழந்தைகள் தத்தெடுப்பது என மூன்று கருத்துக்களை மையமாக வைத்து உருவாக்கி இந்தச் சமூகப் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவெடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவாக்கியதுதான் ‘முற்றுப்புள்ளி ‘வீடியோ சிங்கிள் ஆல்பம்.

இது ஒரு பைபிள் சார்ந்த கிறிஸ்தவக் கருத்தைக் கூறும் கதை என்றாலும் அனைத்து மதத்தினருக்கும் ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆல்பம் இருக்கும் என்கிறார் . முற்றுப்புள்ளி ஆல்பத்தை ஒளிப்பதிவு செய்து டைரக்ஷன் செய்திருப்பவர் அரவிந்த் ஜெகன்

கேத்தரின் எபிநேசர், பிரணிதி பாடியுள்ளனர்.

இந்த ஆல்பத்தில் நடிகர் மாஸ் ரவி,பவுலின் ஜெசிகா , பிரணிதி, பிரியா,மகேஸ்வரன், தண்டபாணி , லவீன் சேகர் , சிஸ்டர் ரான்சம் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாடல் பாபு, ஒளிப்பதிவு ,எடிட்டிங் அரவிந்த் ஜெகன் .

தனது போராளி கிரியேஷன்ஸ் சார்பில் கதை திரைக்கதை எழுதி இசையமைத்து தயாரித்துள்ளார் கிறிஸ்டி.

தனது திரை வாய்ப்புக்காக பெரிதும் உதவியவர் இயக்குநர் பா. ரஞ்சித் என்று கூறுகிறார்.ஏற்கெனவே அவருடன் இணைந்து குறும்படத்தில் பணியாற்றி இருப்பதாகக் கூறுகிற கிறிஸ்டி, அவரால்தான் ‘நறுவி ‘ பட வாய்ப்பு வந்ததாக நன்றியுடன் கூறுகிறார். இந்த முற்றுப்புள்ளி அனைவருக்கும் பிடித்த சமூக சிந்தனையுள்ள ஆல்பமாகப் பேசப்படும் .

இசை அமைப்பாளர் டி. இமான் இந்த ஆல்பத்தைப் பார்த்து பாராட்டி வாழ்த்தியதுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு சமூக ஊடகங்களுக்கு அறிமுகம் செய்தார். பலரும் பாராட்டி வருகின்றனர்.

சமூக அக்கறையுடன் ஒரு படைப்பு

MUTRUPULLI song link

Music director D Imman praises Mutrupulli album

‘சுந்தரி’ சீரியலின் ஹீரோயின் ஆனார் ‘டிக் டாக்’ புகழ் கேப்ரியலா

‘சுந்தரி’ சீரியலின் ஹீரோயின் ஆனார் ‘டிக் டாக்’ புகழ் கேப்ரியலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sundari serialடிக் டாக் செயலி பலரின் வாழ்க்கையில் பெரிய பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது.

இது இந்தியாவில் அறுமதிக்கப்பட்ட போது பிரபலமானவர் கேப்ரியலா.

இவர் 2016-ம் ஆண்டிலேயே விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு டிவி நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார்.

கேப்ரியலாவுக்கு இன்று வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இவரின் முதல் படத்திலேயே நயன்தாராவின் சிறுவயது கேரக்டரில் நடித்திருந்தார்.

அதாவது ‘ஐரா’ படத்தில் நடித்திருந்தார்.

பின்னர் ‘செத்தும் ஆயிரம் பொன்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது டிவி சீரியலில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்துள்ளார்.

சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘சுந்தரி’ சீரியலில் நாயகி கேப்ரியலா தான்.

கிராமத்து பெண் ஒருவர் எப்படி தனது லட்சியங்களுக்காக போராடுகிறார் என்பதாக இந்த சீரியல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

TikTok fame Gabriella plays lead role in new serial

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் மீண்டும் ‘டாக்டர்’ ஹீரோயின்..; SJ சூர்யாவும் இணைந்தார்!

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் மீண்டும் ‘டாக்டர்’ ஹீரோயின்..; SJ சூர்யாவும் இணைந்தார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள “டாக்டர் மற்றும் அயலான்” திரைப்படங்கள் விரைவில் வெளியாகிறது.

இதில் ‘டாக்டர்’ படம் 2021 மார்ச் 26ஆம் தேதி ரிலீசாகிறது.

அண்மையில் சிவகார்த்திகேயனின் 19வது படமாக ‘டான்’ பட அறிவிப்பு வெளியானது.

இயக்குநர் அட்லியிடம் “மெர்சல், பிகில்” படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இப்படத்தினை இயக்குகிறார்.

லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இப்பட பிரியங்கா அருள் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரே டாக்டர் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் பாண்டிராஜ் & சூர்யா இணையும் படத்திலும் பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் எஸ் ஜே சூர்யா & சமுத்திரக்கனியும் இணைந்துள்ளனர் என்பதை சற்றுமுன் அறிவித்துள்ளனர்.

Sivakathikeyan’s Don movie updates

EtTinLeXAAADlEH

EtTlduHWQAMDsY-

More Articles
Follows