தனுஷ் படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் அடுத்த பட அப்டேட்

தனுஷ் படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் அடுத்த பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள தனுஷின் ப’ஜகமே தந்திரம்’ படம் ஜூன் 18ல் ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது.

ஒரு பக்கம் பிஸியாக இயக்குனராக இருந்தாலும் அவ்வப்போது படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார் கார்த்திக் சுப்பராஜ்.

இவரின் ஸ்டோன் பென்ச் கிரியேஷன் சார்பாக அவியல், மேயாதமான், பெண்குயின் ஆகிய படங்களை தயாரித்தும் உள்ளார்

இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் தயாரான 777 சார்லி படத்தை தமிழில் தனது ஸ்டோன் பென்ச் கிரியேஷன் சார்பாக வெளியிடுகிறார்
கார்த்திக் சுப்பராஜ்.

777 சார்லி படத்தில் ரக்ஷித் ஷெட்டி நடிக்க, கிரண்ராஜ் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டியுடன் இணைந்து ஜிஎஸ்.குப்தா என்பவர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படமானது ஒரு இளைஞனுக்கும், அவனது நாய்க்கும் இடையில் நடைபெறும் ஓர் அழகான பாசத்தை சொல்லும் கதை.

ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இப்பட மலையாள பதிப்பை நடிகர் பிருத்விராஜ் வெளியிடுகிறார்.

Karthik Subbaraj to release Charlie 777 movie in Tamil

E3A_HEhVIAArFvH

என் நேரத்தையும் எனர்ஜியையும் வீணாக்க விரும்பல.; டூப்ளிகேட்யர்களை கிழி கிழிவென கிழித்த ராதிகா

என் நேரத்தையும் எனர்ஜியையும் வீணாக்க விரும்பல.; டூப்ளிகேட்யர்களை கிழி கிழிவென கிழித்த ராதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

radhika sarathkumarஇந்திய பிரபலங்கள் பலரும் பயன்படுத்தும்
சமூகவலைத்தளங்களில் முக்கியமானது ட்விட்டர்.

ட்விட்டரில் பிரபலங்கள் பெயரில் நிறைய போலிகள் உருவாகி வருவதால் முக்கிய பிரமுகர்களுக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் டுவிட்டர் தளம் பற்றிய தனது அதிருப்தியை கோபமாக வெளியிட்டுள்ளார்.

“சில நேரங்களில் சில மூளையில்லாத, வேலையில்லாத டுவீட்களைப் பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த உலகத்தை நாம்தான் காக்கிறோம் என்ற எண்ணம் கொண்டவர்கள் பலர் இப்போது நிறைய இருக்கிறார்கள்.

இன்டர்நெட்டில் நீங்கள் எப்படி இருக்க நினைக்கிறீர்களோ அப்படி இருக்கலாம். முட்டாள்தனமான பலவற்றைப் பார்க்கிறேன்.

எனது நேரத்தையும், சக்தியையும் இனிமேல் வீணாக்க விரும்பவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Sometimes we should be aware that some brainless and jobless twit, who thinks they are the saviours of this world are present. On the Internet u can be anything u want, I see a lot choose stupid.. Dont want to waste my time or energy anymore..

Actress Radika Sarathkumar reply to her haters

இந்திய துணை ஜனாதிபதிக்கே இந்த நிலைமையா.? ப்ளூ டிக்கை நீக்கி விட்டு விளக்கம் தந்த ட்விட்டர்.; மீண்டும் Verified !

இந்திய துணை ஜனாதிபதிக்கே இந்த நிலைமையா.? ப்ளூ டிக்கை நீக்கி விட்டு விளக்கம் தந்த ட்விட்டர்.; மீண்டும் Verified !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venkaiah Naiduஇந்திய பிரபலங்கள் பலரும் பயன்படுத்தும்
சமூகவலைத்தளங்களில் முக்கியமானது ட்விட்டர்.

ட்விட்டரில் பிரபலங்கள் பெயரில் நிறைய போலிகள் உருவாகி வருவதால் முக்கிய பிரமுகர்களுக்கு ப்ளூ டிக் வழங்கப்பஎட்டு வருகிறது.

ஒரு ப்ளூ டிக் வழங்கும் முறையில் நிறைய புகார்கள் வந்தன.

எனவே புளூ டிக் வழங்கும் முறையை கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்தது டுவிட்டர் நிறுவனம்.

தற்போது மீண்டும் ப்ளூ டிக் வழங்கும் முறையை தொடர்ந்துள்ளது.

துணை குடியரசுத்்தலைவர் வெங்கையா நாயுடு் ட்விட்டரில் Official and Personal என. இரண்டு அக்கௌண்ட் வைத்துள்ளார்.

அவரின் இரண்டு அக்கௌண்ட்டுக்கும் நீல நிற டிக் ஏற்கனவயவே வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இன்று காலை அந்த ப்ளூ டிக்கை அவரின் பெர்சனல் அக்கௌண்டில ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.

இதனால் இந்திய மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தரனர். துணை ஜனாதிபதிக்கே இந்த நிலைமையா? #BanTwitterInIndia என ட்ரெண்ட் செய்தனர்.

இந்த ட்விட்டர் கணக்கு, இறுதியாக கடந்த வருடம் 2020 ஜூலை மாதம், 23-ஆம் தேதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக வெங்கையா நாயுடுவின், கணக்கு பயன்படுத்தப்படவில்லை.

எனவே நீல நிற டிக்கை திரும்ப பெற்றதாக கூறியது ட்விட்டர் நிறுவனம்.

தற்போது இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்நிறுவனம் புளூ டிக்கை மீண்டும் வழங்கியுள்ளது.

Twitter removed #blueTick from Vice President of India #VenkaiahNaidu account

‘என்னு நிண்டே மொய்தீன்’ பட இயக்குனருடன் இணைந்த இசையமைப்பாளர் கே.பி.

‘என்னு நிண்டே மொய்தீன்’ பட இயக்குனருடன் இணைந்த இசையமைப்பாளர் கே.பி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music director KBஇசை இயக்குனர் கே.பி. அவர்களின் இசையமைப்பில் வெளியான ஆல்பம் தற்போது மொழியியல் தடைகளை தாண்டி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

கலைப்புலி எஸ்.தாணு வி கிரியேஷன்ஸ், ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன்ஸ் மற்றும் பல புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்கள் உடன் இணைந்த உருவாக்கப்பட்ட இந்த ஆல்பம் அவருக்கு பெரும் புகழைப் பெற்று தந்துள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவரது பி.ஜி.எம், அவரின் மற்ற பன்முகப்படுத்தப்பட்ட ஆல்பங்கள் மற்றும் அவரது தனித்துவமான இசை பாணி அவரை இசை பிரியர்களின் விருப்பமான நட்சத்திரமாக மாற்றுகிறது.

இத்தகைய பாராட்டத்தக்க படைப்புகளின் தொடர்ச்சியாக இப்போது அவருக்கு ஒரு மகத்தான வாய்ப்பை ஏற்படுத்தியது தான் ‘சூரியபுத்ரா மகாவீர் கர்ணன்’ திரைப்படம்.

பல மொழிகளில் பெரிய பட்ஜெட்டாக தயாரிக்கப்பட்டு பான்-இந்தியன் திரைப்படம் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜாக்கி பூஜா என்டர்டெயின்மென்ட்டின் ஜாக்கி பகானி என்பவரால் தயாரிக்கப்பட உள்ளது.

பிரபல இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கியுள்ளார்.

(இவர் பிருத்விராஜ் மற்றும் பார்வதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ‘என்னு நிண்டே மொய்தீன்’ என்ற மலையாள திரைப்படத்தை இயக்கியுள்ளார்).

மேலும் கே.பி மலையாளத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.

அதே போன்று தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கும் இசையமைக்கிறார்.

இவை அனைத்தும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு
இயக்கப்படுகின்றன.

Suryaputre Mahavir Karna’s Music Director KP.

அபிசரவணன் & பிரியங்கா இணையும் ‘தராதிபன்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சக்தி வேலன்

அபிசரவணன் & பிரியங்கா இணையும் ‘தராதிபன்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சக்தி வேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல சக்தி ஃபிலிம் பேக்டரி டிஸ்டிபியூட்டர் சக்தி வேலன் R.S.K. எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள *தராதிபன்* படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

R.S.K.எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் *H.சையத்* இயக்கத்தில், *அபி சரவணன்* வழங்கும் *தராதிபன்* படம் ஒரு திரில்லர் கலந்த காதல் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே H.சையத் இயக்கத்தில் வெளிவர இருக்கும் *யாமா* படத்தில் பணியாற்றிய பல தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திலும் பணியாற்றுகின்றனர்.

மேலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது.

இந்த முக்கிய அறிவிப்பை மக்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி என அப்படத்தின் இயக்குனர் *H.சையத்* அவர்கள் தெரிவித்துள்ளார்.

Cast & crew
கதாநாயகன் – அபிசரவணன்
கதாநாயகி – பிரியங்கா
இயக்கம் – H.சையத்
ஒளிப்பதிவு – S.சக்திவேல்
இசை – L.V.முத்து கணேஷ்
படத்தொகுப்பு – ஆனந்த் ஜெரால்டின்
கலை – C.S.சாய்மணி
பாடல்கள் – கவிஞர் பிறைசூடன், மதுரா
நடனம் – I.ராதிகா, தஸ்தா
ஸ்டண்ட் – ராக்கி ராஜேஷ்
ஸ்டில்ஸ் – தேனி சீனு
ஒப்பனை – ராவ்
ஒலி – A.M.ரஹ்மதுல்லா
DI – ஷேட் 69 ஸ்டுடியோஸ்
Sfx – சவுண்ட் ஹோலிக் சினிமா
VFX Design – N.டாக்கீஸ்
மீடியா பார்ட்னர் – லைட்சன் மீடியா
தயாரிப்பு மேற்பார்வை – சங்கர்
தயாரிப்பாளர் – அபிசரவணன்
மக்கள் தொடர்பாளர் – பிரியா

Abi Saravanan and Priyanka joins for Tharathipan

IMG-20210604-WA0080

BIG NEWS ஜூன் 14ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் ஸ்டாலின்

BIG NEWS ஜூன் 14ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK-Stalin-5தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஜூன் 14ஆம் தேதி தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது

11 மாவட்டங்கள் தவிர, எஞ்சிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்த ஜூன் 14 வரை ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன?

காய்கறி, பழங்கள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

மீன்சந்தைகள், இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதிக்கப்படும்.

அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்

சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 டோக்கன்ககள் மட்டுமே வழங்கப்பட்டு பத்திரப்பதிவு

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

Tamilnadu extended Covid19 lockdown till 14th June with relaxation

Lockdown extended till 14 June – 6 am. Major points mentioned below

Existing conditions shall continue apart from certain relaxation’s

1. Groceries, Vegetable stores can work from morning 6 am to 5 pm

2. Similar road side vendors selling vegetable and flowers can work from morning 6 am to 5 pm

3. Fish market & Slaughter house will be allowed only wholesale meantime they work on finding alternative for retail sales

4. Government offices are allowed to work with 30% workforce

5. Private security agencies and house keeping services are all allowed with E pass registration.

6. Self employed electrician, plumbers, motor technicians are allowed to work from morning 6 am to 5 pm with E pass

7. Electrical goods stores shall be open from 6 am to 5 pm

8. Service centres of automobile will be allowed to operate from 6 am to 5 pm

9. Taxi / Cab / Auto shall be allowed to operate with E pass. Car : 3 Pax, Auto 2 Pax

10. Tourism places such as Ooty, Yelagiri can travel only on emergency purpose with E Pass.

More Articles
Follows