தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 45 நாட்களாக தமிழ் சினிமா துறையிலிருந்து எந்தவொரு புதுப்படமும் ரிலீஸ் ஆகவில்லை.
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் செய்துவருவதால், இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் பட சூட்டிங் முதல் சினிமா சம்பந்தமாக எந்த நிகழ்வும் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே வேலையிழந்து காணப்படுகிறது.
இந்நிலையில், பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள மெர்குரி படத்தை இயக்கி தயாரித்துள்ளார் டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ்.
இந்த படத்தை வசனங்களே இல்லாமல் உருவாக்கியிருக்கிறார்.
இந்த படத்தில் வசனங்கள் இல்லாத காரணத்தினால் இது எல்லா மொழி ரசிகர்களுக்கும் பொதுவானதாகவே மாறியுள்ளது.
எனவே இந்த படத்தை தமிழ் புத்தாண்டு வெளியீடாக வெளியிட நினைத்திருந்தார்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பவே, படத்தை தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் வெளியிட போவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று தமிழகம் தவிர உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களில் வெளியிட்டுள்ளார்.
படத்திற்கு எல்லா தரப்பில் இருந்தும் நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், படம் தொடர்பாக ஓர் அறிக்கை ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
இன்று நான் நல்ல நிலையில் இருப்பதற்கு தமிழ் ரசிகர்கள்தான் காரணம்.
ஆனால் இந்த படத்தை தவிர்க்க முடியாத காரணத்தால், இன்று வெளியிட்டுள்ளேன்.
ஸ்டிரைக் முடிந்த பிறகு தமிழகத்தில் வெளியிடுவேன். இதன் ஹிந்தி பதிப்பை கூட தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கவில்லை.
எனவே ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டுகிறேன் என்றும் என் சொந்த மாநிலத்தில் வெளியிடாமல் போனதற்கு வருந்துகிறேன் மன்னிப்பு கோருகிறேன் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.
தயவுசெய்து திருட்டுத்தனமாக படம் பார்க்காதீர்கள். ரிலீஸ் ஆனவுடன் தியேட்டரில் பாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Karthik Subbaraj statement about his Mercury release today
அவரின் அந்த அறிக்கை இதோ…