கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் காசுக்காக இப்படி செய்யலாமா..?

கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் காசுக்காக இப்படி செய்யலாமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KamalHaasans Vijay Star Value Pack Promo in controversyமக்களை எப்போதுமே வாட்டும் விஷயங்களில் மிக மிக முக்கியமானது விலைவாசி உயர்வு தான்.

தினம் தினம் பெட்ரோல் விலை உயர்வதால் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தினம் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது.

இதனால் எதிர்க்கட்சிகள் இந்த குற்றச்சாட்டை வைத்தே அரசியல் செய்து வருகின்றனர்.

அரசியலுக்கு வரும் புதுமுகங்களும் இந்த குற்றச்சாட்டை கூறாமல் இருப்பது இல்லை.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஸ்டார் விஜய் டிவி விளம்பரத்தில் கேபிள் டிவி சந்தா கட்டணம் குறைவாக இருப்பதாக கூறி இன்னும் அதிக விலைக்கு விற்கலாமே என சொல்வதாக காட்சிகள் உள்ளது.

பொதுவாக பேரம் பேசி பணத்தை குறைக்கச் சொல்வோம். ஆனால் கடைக்காரர் பசுபதி விலை குறைவாக சொன்ன போதும், அதற்கு அதிக பணம் தருவதாக கமல் சொல்வது போல் விளம்பரம் உள்ளது.

அது விளம்பரம் தான் என்றாலும் மக்களே விலைவாசி உயர்வால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது, மக்கள் பிரச்சினையை பேசும் கமல், காசுக்காக இப்படி பேசலாமா? என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

KamalHaasans Vijay Star Value Pack Promo in controversy

தேர்தல் அறிக்கையில் மொழிக்கொள்கையை அறிவிக்க வைரமுத்து கோரிக்கை

தேர்தல் அறிக்கையில் மொழிக்கொள்கையை அறிவிக்க வைரமுத்து கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Vairamuthu speech at Tamilattrupadai event‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து.

அந்த வரிசையில் 21ஆம் ஆளுமையாக அப்துல் ரகுமான் குறித்த கட்டுரையை நேற்று திருப்பூரில் அரங்கேற்றினார்.

ராம்ராஜ் காட்டன் நிறுவனர் தொழில் அதிபர் நாகராஜன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் முன்னிலை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :

தமிழாற்றுப்படை நிகழ்ச்சி திருப்பூரில் நிகழ்வது மகிழ்ச்சி. மற்ற ஊர்களையெல்லாம் நான் மூளையில் பதிவு செய்திருக்கிறேன்; திருப்பூரை மட்டும் நான் இதயத்தில் அணிந்திருக்கிறேன். பனியன் வடிவத்தில் திருப்பூர் என் இதயத்துக்கு நெருக்கமாக இருப்பதால் அப்படிச் சொல்லுகிறேன்.

சித்திரைத் திருவிழாவில் புல்லாங்குழல் வாசித்தவரைப்போல அப்துல் ரகுமான் கவனம் பெறாமல் போய்விட்டார். அவர் கவிதைகளைத் தமிழர்கள் போற்ற வேண்டும்.

ஒரு மொழியின் உலக அடையாளமே அது எத்தனை ஆண்டு நீண்ட இலக்கியத்தைக் கொண்டிருக்கிறது என்பதுதான். ஆண்டு வளையங்களைக் கொண்டு மரங்களின் வயதறியலாம்.

பற்களைப் பார்த்து மாடுகளின் வயதறியலாம். ஒரு மலையின் வயதை அது வெளியிடும் கார்பன் அளவுகொண்டு கணக்கிடலாம். அதுபோல ஒரு மொழியின் வயதை அதன் இலக்கியத்தை வைத்தே அளவிட இயலும்.

பழந்தமிழர் வாழ்வில் இலக்கியம்தான் அறம்; இலக்கியம்தான் சட்டம். இலக்கியத்தின் வழிதான் ஆட்சி செலுத்தப்பட்டது; வாழ்வு இயக்கப்பட்டது. தவறுகளைத் தண்டிக்கப் பிறந்ததுதான் பிற்காலத்தில் சட்டம்.

ஆனால் தவறுகளே செய்துவிடக்கூடாது என்று தடுத்ததுதான் இலக்கியம். ஓர் இனத்தின் பண்பாடும் நாகரிகமும், வீரமும் காதலும் இலக்கியத்தில் மட்டும்தான் பாதுகாப்பாகப் பதிவுசெய்யப்பட முடியும்.

ஆனால் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்குப் பிறகு இந்தியக் கல்வியில் இலக்கியம் தன் இடத்தை இழந்துகொண்டிருக்கிறது என்பது கவலை தருகிறது.

மூன்று நிமிடங்களுக்குமேல் காற்று இல்லை என்றால் மூளை இறந்துபோகும். மூன்று ஆண்டுகளுக்குமேல் இடைவெளி விட்டால்கூட இலக்கியம் மறந்துபோகும். அதனால் தொழில்நுட்பக் கல்வியிலும்கூட இலக்கியத்தை ஒரு பாடமாகச் சேர்ப்பது பலன்தரும் என்று தோன்றுகிறது.

தமிழ் ஒரு கடல். எல்லா நதிகளையும் உள்ளிழுத்துக்கொண்டு அது தன்மயம் ஆக்கிவிடும். பெளத்தத்தை உள்ளிழுத்துக்கொண்டு அது மணிமேகலையாய் மாற்றிக்கொண்டது. சமணத்தை உள்ளிழுத்து அது பதினெண்கீழ்க்கணக்காய்ப் பரிணாமம் பெற்றது.

இஸ்லாத்தை உள்ளிழுத்து அது சீறாப்புராணமாய்ச் சிறந்தோங்கியது. கிறித்துவத்தை உள்ளிழுத்து உலகைத் தனக்கும், தன்னை உலகத்துக்கும் அறிமுகம் செய்துகொண்டது. அப்படி வந்த மதங்களெல்லாம் தமிழ் வழியாகத்தான் வினைப்பட்டனவே தவிர, தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் தங்கள் மொழியை அமர்த்திவிடவில்லை.

ஆனால் இந்த நூற்றாண்டு அச்சம் தருகிறது. எப்போதும் நேராத ஓர் உலகப் படையெடுப்பு ஒவ்வொரு தாய்மொழியின் மீதும் இப்போது நிகழ்த்தப்படுவதாய் அறிவுலகம் பதறுகிறது.

இன்றைக்குப் பெருகிவரும் ஆங்கிலப் பள்ளிகளின் எண்ணிக்கை கிராமங்கள் வரைக்கும் தமிழைக் கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கின்றன. அதனால் முதலில் தமிழின் தரம் குறையும்; பிறகு புலமை குறையும்; பிறகு எண்ணிக்கை குறையும்; பிறகு பேச்சுமொழி ஆகிவிடும் பெருவிபத்தும் நேர்ந்துவிடும்.

சட்டத்தின் துணையின்றி இங்கு எதையும் சாதிக்க முடியாது. மக்களின் குரலின்றிச் சட்டம் ஏதும் இயற்ற முடியாது. எனவே தமிழர்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும். ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொழுது உங்கள் மொழிக்கொள்கையைத் தனித் தலைப்பிட்டு அறிவியுங்கள். பொருளாதாரத்தைக் காப்பது மட்டும் ஜனநாயகத்தின் கடமை அல்ல; கலாசாரத்தையும் காப்பதுதான்.

Lyricist Vairamuthu speech at Tamilattrupadai event

நடிகர் ஷாரங்க் இயக்குனராக அறிமுகமாகும் *நடுவன்* படத்தில் பரத்

நடிகர் ஷாரங்க் இயக்குனராக அறிமுகமாகும் *நடுவன்* படத்தில் பரத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mind boggling and daredevilry challenges in Bharath starrer Naduvanநடிகர் பரத் எப்போதும் நடிப்பிற்கு மிகவும் சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர்.

முதல் முறையாக, நடிகர் ஷாரங்க் இயக்குனராக அறிமுகமாகும் ‘நடுவன்’ படத்தில் தந்தையாக நடிக்கிறார்.

மலைப்பகுதி பின்னணியில் அமைந்திருக்கும் இந்த திரில்லர் ட்ராமா, ஏராளமான சவால்களை கொண்டிருந்தது.

இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடிகர்களின் அர்ப்பணிப்பு பற்றிய சில மறக்க முடியாத தருணங்களை இயக்குனர் நம்முடன் பகிர்கிறார்.

“படத்தில் உள்ள அனைவருமே ஸ்டண்ட் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். இது பரத் மற்றும் கோகுல் மட்டுமல்லாமல் நாயகி அபர்ணா வினோத் மற்றும் குட்டிப்பெண் ஆரத்யா ஆகியோரும் சண்டைக்காட்சிகளில் அவர்களே நடித்திருந்தனர்.

இதை செய்ய சொல்லி யாரும் திணிக்கவில்லை, டூப் கலைஞர்கள் கூட தயாராக இருந்தனர். இருப்பினும், கதை மற்றும் சூழ்நிலையின் ஆழத்தை உணர்ந்து, கதையும் அதை கோரியதால், மழை மற்றும் மூடுபனியையும் பொருட்படுத்தாமல் அந்த சவாலான காட்சிகளில் தாங்களே முன் வந்து நடித்தனர். ஒரு ஸ்டண்ட் காட்சியின்போது நடிகர் பரத் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது.

ஓய்வெடுக்க வற்புறுத்தியும், அவர் உடனடியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அபர்ணா வினோத் எந்தவொரு டூப்பும் இல்லாமல் சண்டைக்காட்சியில் நடிக்கும் அளவுக்கு தைரியமாக இருந்தார்.

ஒரே டேக்கில் ஒரு சண்டைக்காட்சியில் எந்த காயமும் படாமல் நடித்து எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இரவு நேரத்தில் ஒரு சண்டைக் காட்சியில், கோகுல் ஆனந்த தலையில் கடுமையாக அடிபட்டது.

மிகவும் குளிராக இருந்தது, உண்மையில் யாராக இருந்தாலும் ஒரு பிரேக் கேட்டிருப்பார்கள். ஆனால் அவர் தொடர்ந்து காயத்துடன் நடித்தார்” என்றார்.

உறியடி மற்றும் ராட்சசன் போன்ற திரைப்படங்களில் அவரது சிறந்த சண்டைக் காட்சிகளை வழங்கிய சண்டைப் பயிற்சியாளர் விக்கி அவர்களுக்கு தான் அதிக நன்றியை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

நடுவன் படத்துக்கு தரண்குமார் இசையமைக்க, யுவா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கார்க்கி, டாக்டர் பர்ன் மற்றும் மிர்ச்சி விஜய் ஆகியோர் இந்த படத்தில் பாடல் எழுதியுள்ளனர்.

Mind boggling and daredevilry challenges in Bharath starrer Naduvan

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு தரும் வக்கீல்; நீங்களும் ஈசியா உதவலாம்

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு தரும் வக்கீல்; நீங்களும் ஈசியா உதவலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Advocate Karthikeyan giving Re life to beggars by Agavoli Iyakkamபிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு தரும் பணியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் ஈடுபட்டு வருகிறார்.

“இருட்டாக இருக்கிறதே என்று புலம்புவதை விட ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுவது உயர்வானது “என்பதைத் தன் செயல்கள் மூலம் நிரூபித்து வருகிறது ‘அகவொளி மக்கள் நல இயக்கம்’.

இதன் நிறுவனர் வழக்கறிஞர் கார்த்திகேயன், பொருளாளர் ‘திட்டி வாசல் ‘படத்தின் இயக்குநர் பிரதாப் முரளி, செயலாளர் முனுசாமி, நத்தர்ஷா, சமன்த்ராய், சுகதேவ், பிடல் காஸ்ட்ரோ, ஹரிஷ், அருண், வசந்த் மற்றும் தன்னார்வலர்கள். இவர்கள் ஒரு குழுவாக இயங்கி வருகிறார்கள்.

நாட்டின் அவலங்களில் பிச்சை எடுப்பது ஒன்று என்பதை உணர்ந்து பிச்சை எடுப்பவர்களை அணுகி அவர்களின் பின்னணி அறிந்து முதியோர் இல்லத்தில் சேர்ப்பது சிறு சிறு கடைகள் வைக்க உதவுவது, வேளைக்கு அமர்த்துவது, அரசு சலுகைகள் பெற்று தருவது என்று அவர்களை மறு பிறவி எடுக்க வைத்துள்ளார்கள்.

இப்படி இதுவரை 50 பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இதே போல மாற்றுத் திறனாளிகள் பலருக்கும் சாலையோர சிறு கடைகள் வைத்து உதவியதோடு நிற்காமல், பத்து ஆண்டுகளில் CONFLUXLIVE என்ற நிறுவனம் மூலம் 600க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது ‘அகவொளி’ இயக்கம்.

சென்னை வெள்ளம், தானே புயல், வர்தா புயல், கேரள வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் வந்தபோது உதவியுள்ள இந்த இயக்கம், இப்போது கஜா புயல் பாதிப்புக்குப் பின் களமிறங்கியுள்ளது.

டெல்டா மாவட்டத்தில்…

பட்டுக்கோட்டை, வேதாரண்யம் பகுதிக்குச் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கியதுடன் ‘நம்ம விழுப்புரம்’, ‘நம்ம கடலூர், ‘திருச்சி SRM கல்லூரி மாணவர்களுடன் இணைந்து 1000 மரக்கன்றுகள் நட்டு களப்பணியாற்றியுள்ளனர்கள்.

அந்நிகழ்வில் ‘தேசிய விருது’ பெற்ற திரைப்பட இயக்குநர் சற்குணம் கலந்து கொண்டு இருக்கிறார்.
வேதாரண்யம் பகுதிக்கும் 800 தென்னங்கன்றுகள் அனுப்பி தன்னார்வலர்கள் மூலம் அவற்றை நடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இது பற்றி வழக்கறிஞர் கார்த்திகேயன் கூறும் போது” இந்த இயக்கத்தை நான் தன்னார்வலர்களுடன் இணைந்து தொடங்கினேன். இயக்குநர் பிரதாப் முரளி, வழக்கறிஞர்கள், மென்பொருளார்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து செயல் படுகின்றோம். எங்களோடு மேலும் பல ஈரமுள்ள இதயங்கள் இணைந்து இருக்கின்றன என்கிறார்.

“பாசமுள்ள பார்வையிேலே கடவுள் வாழ்கிறான். அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்” என்பது வெறும் திரைப்பாடல் அல்ல. வாழ்வில் நிரூபணமாகியுள்ள உண்மையும் கூட எனலாம்.

பிச்சையெடுப்பவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நினைத்தால் அவர்கள் பிச்சை எடுக்கும் இடம், இரவில் தங்கும் இடம், புகைப்படம், வயது, ஏதேனும் குறைபாடுகள், முடிந்தால் அவர்களிடம் அன்புடன் பேசி அவர்களை பற்றிய நெகிழ்வான விவரங்களை கேட்டறிந்து உங்கள் விபரங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Advocate Karthikeyan giving Re life to beggars by Agavoli Iyakkam

Advocate Karthikeyan giving Re life to beggars by Agavoli Iyakkam

விஸ்வாசம் படத்தில் டாய்லெட் பைட் சவாலானது.. : திலீப் சுப்புராயன்

விஸ்வாசம் படத்தில் டாய்லெட் பைட் சவாலானது.. : திலீப் சுப்புராயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Stunt Master Dhilip Subbarayan talks about Ajith and Viswasam movieஅஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் சண்டை இயக்குனர் திலிப் சுப்பராயன் தன் பட அனுபவம் குறித்து கூறியுள்ளதாவது…

படத்தில் ஒவ்வொரு சண்டைக்காட்சியும் ஒவ்வொரு கான்செப்டில் இருந்ததால், எங்களுக்கு சவால்களை விட, நிறைய பொறுப்புகள் இருந்தன.

உண்மையில், ஒவ்வொரு சண்டைக்காட்சியும் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் ஒரு புள்ளியாக இருக்கும்.

எனவே அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. ஸ்கிரிப்ட் எழுதும்போதே, என்ன தேவை என்பதில் சிவா மிகவும் தெளிவாக இருந்ததால் எங்களின் வேலை மேலும் எளிதானது, அவருக்கு நன்றி.

இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் நிறைய புதுமை இருக்கும்” என்று கண்கள் விரிய மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பிக்கிறார் சண்டைப்பயிற்சியாளர் திலீப் சுப்பராயன்.

அஜித்குமார் பற்றி அவர் பேசும்போது…

“அஜித் சார் மிகவும் கண்ணியமான, எளிமையான நபர். ஒவ்வொரு சண்டைக் கலைஞரையும் அவர் மதிக்கும் விதம் அவர்களுக்கு மிகப்பெரிய வியப்பாக இருந்தது. தொழில் என்று வந்து விட்டால் அவர் ஒருபோதும் குறுக்கிட மாட்டார்.

எப்போதும் எங்கள் முடிவுகளை முன்னெடுத்து செல்ல தயாராக இருக்கிறார். ட்ரெய்லரில் பார்த்து அனைவரும் பாராட்டும் மழை சண்டைக்காட்சியை பற்றி சிவா எனக்கு விவரித்த போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

அஜித் சாரின் பைக் ஸ்டண்ட் பார்வையாளர்களுக்காக மிகவும் பரபரப்பாகவும், அதே நேரம் எமோஷனல் விஷயங்களையும் கொண்டிருக்கும். இதை பற்றி மேலும் சொல்ல முடியாது, அதை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும்” என்றார்.

மற்ற சண்டைக்காட்சிகளைப் பற்றி, குறிப்பாக கழிவறை பின்னணியில் நடக்கும் சண்டைக்காட்சியை பற்றி அவர் கூறும்போது, “மிகவும் குறைவான இடத்தில் மொத்த சண்டைக்காட்சியும் இருக்கும் என்பதால் அதை அமைக்க நிறைய சவால்கள் இருந்தன.

எல்லாவற்றிற்கும் மேலாக, அது மிகவும் வழக்கும் டைல்ஸ் தரையாக இருந்தது மிகவும் ஆபத்தானதாக இருந்தது.

அந்த தரையை காய வைத்தால் அடுத்த காட்சிக்கான கண்டினியூவிட்டி தவறி விடும் என்பதால் அதை நாங்கள் அப்படியே தொடர வேண்டியிருந்தது. நடக்கவே சிரமப்படும் தரையில், சண்டை காட்சிகள் படமாக்கப்படும் சூழ் நிலையை நினைத்து பார்க்கவே சவாலாக இருந்தது.

ஒட்டுமொத்த குழுவும் உறுதியுடன் இருந்தது, அதை சிறப்பாக நிறைவேற்ற எங்களுக்கு உதவியது” என்றார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கியிருக்கும் “விஸ்வாசம்” ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியாகிறது.

நயன்தாரா, ஜகபதிபாபு, விவேக், தம்பி ராமையா, கோவை சரளா, யோகிபாபு, பேபி அனிகா மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

Stunt Master Dhilip Subbarayan talks about Ajith and Viswasam movie

தெலுங்கு சினிமாவை கலக்கிய *உஷாரு* தமிழுக்கும் வருகிறது

தெலுங்கு சினிமாவை கலக்கிய *உஷாரு* தமிழுக்கும் வருகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VV Kathir directing Usaru telugu movie remake in Tamilதெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன “உஷாரு” தமிழில் ரீமேக் ஆகிறது. அப்படத்தை V.V.கதிர் இயக்குகிறார்.

திரையுலகிற்கு எப்போதுமே ஆக்சிசனாக இருப்பது புது முகங்களை வைத்து எடுக்கப்படும் படங்களே. ஜிக் ஜாக் இல்லாமல் யதார்த்த படைப்புகளே சினிமாவின் சக்சஸ் பார்முலா.

அந்த வகையில் தெலுங்கில் புதுமுகங்கள் நடித்து சமீபத்தில் வெளியான படம் “உஷாரு”

உஷாரு என்றால் தமிழில் புத்துணர்வு என்று பொருள்படும். சமீபத்தில் வெளியான இந்த படம் ஆந்திராவில் கொண்டாடப்படும் படமாக கருதப்படுகிறது.

சுமார் 3.50 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் சுமார் 20 கோடி வசூலை எட்டும் என்பது தெலுங்கு திரையுலகின் வசூல் கணக்கு. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர்.

இந்த படத்தை ஜீவா நடித்து வெற்றி பெற்ற தெனாவட்டு படத்தை இயக்கிய V.V.கதிர் 10 வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீமேக் செய்ய உள்ளார்.

பலத்த போட்டிக்கு பிறகு படத்தின் ரீமேக் ரைட்சை கைப்பற்றிய காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட் J. பணீந்திரகுமார் தயாரிக்கிறார்.

இவர் ஏற்கெனவே பிரபுசாலமன் இயக்கத்தில் லாடம் என்ற படத்தை தயாரித்தவர்.

புதுமுகங்களும் பிரபலங்களும் இனைய உள்ள இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளவர் ராதன். விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.

VV Kathir directing Usaru telugu movie remake in Tamil

More Articles
Follows