நாளை கமல்ஹாசன் பிறந்தநாளில் லோகேஷ் தரும் மெகா ட்ரீட்

நாளை கமல்ஹாசன் பிறந்தநாளில் லோகேஷ் தரும் மெகா ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal 232 title reveal teaser on Kamalhassan birthdayஉலகநாயகன் கமல்ஹாசன் நாளை நவம்பர் 7ல் தன் 66வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிசியாக இருந்தபோதிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி பணிகளிலும் அதிக ஆர்வம் காட்டி ஆலோசனை நடத்தி வருகிறார்.

விரைவில் ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கவுள்ளார்.

இதன் பின்னர் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.

கமல்ஹாசனின் 232வது படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

இந்நிலையில் நாளை மாலை 5 மணிக்கு கமலின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்புடன் கூடிய டீசர் வெளியாகும் என படக்குழுவின்ர அறிவித்துள்ளனர்.

பல வருடங்களுக்கு பிறகு கமல் பிறந்தநாளில் அவரின் படம் தொடர்பான அறிவிப்பு வருவது அனைத்து ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தான்.

Kamal 232 title reveal teaser on Kamalhassan birthday

அப்பாகிட்ட விஜய் பேசுறது இல்ல.; கட்சியிலிருந்து விலகிட்டேன்.. – ஷோபா

அப்பாகிட்ட விஜய் பேசுறது இல்ல.; கட்சியிலிருந்து விலகிட்டேன்.. – ஷோபா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shobha Chandrasekar statement regarding Vijay Political party launchபுரட்சி இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் விஜய் பெயரில் கட்சி தொடங்கி அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆனால் இந்த கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

மேலும் ரசிகர்கள் யாரும் அதில் இணைய வேண்டாம். என் பெயரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பிரபல ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில்…

ஒரு மாதத்திற்கு முன்பு அசோசேஷியன் தொடங்கப்போவதாக தான் என்னிடம் எஸ்ஏசி கையெழுத்து கேட்டார். நானும் கையெழுத்து போட்டேன்.

ஆனால் தற்போது ஒரு வாரம் முன்பு பொறுப்பாளர் பதவிக்கு என்னை கையெழுத்து போட சொன்னார். நான் போடவில்லை. கட்சியிலிருந்து விலகி விட்டேன்.

கட்சி பற்றி மீடியாக்களிடம் பேச வேண்டாம் என விஜய் சொன்னார். ஆனால் எஸ்ஏசி பேசிக் கொண்டிருக்கிறார். எனவே இருவரும் தற்போது பேசுவது கிடையாது என ஷோபா பேசினார்.

Shoba Chandrasekar statement regarding Vijay Political party launch

நிறைய மைக் முன்னாடி பேசி பழக்கமில்ல..; இப்போ டைம் இல்ல..; விஜய் கட்சி குறித்து SAC பேட்டி

நிறைய மைக் முன்னாடி பேசி பழக்கமில்ல..; இப்போ டைம் இல்ல..; விஜய் கட்சி குறித்து SAC பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SA Chandrasekar reaction for Acto Vijays statement நடிகர் விஜய் பெயரில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் அவரது தந்தை எஸ்ஏசி பதிவு செய்துள்ளார்.

கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என பதிவு விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இதை நடிகர் விஜய் மறுத்து ஒரு விளக்கம் அளித்திருந்தார்.

அப்பா தொடங்கியுள்ள அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்“

இவ்வாறு நடிகர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் தீடீரென எஸ்ஏ. சந்திரசேகரை சந்தித்து இந்த கட்சியின் அவசியம் என்ன? இது விஜய்க்கு தெரியாதா? என்று பல கேள்விகளை அடுக்கினர்.

எஸ்ஏசி அளித்த பேட்டியில்…

நான் உங்களை அழைக்கவில்லை. நீங்களாக வந்து விட்டீர்கள். எனக்கு பேச நேரம் இல்லை என்றே தொடங்கினார்.

விஜய்க்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை. மற்றவர்களின் கற்பனைக்கு பதில் சொல்ல முடியாது.

கட்சி தொடங்கியது விஜய்க்கு தெரியலன்னு அவர் சொல்வாரு. 1993ல் அவரது பெயரில் ரசிகர் மன்றமாக ஆரம்பமானது. பின்னர் நற்பணி மன்றமாக மாறியது. பிறகு மக்கள் இயக்கமாக மாறியது.

அரசியல் கட்சி எனக்கு அவசியம். ஆனால் இப்போதைக்கு அதற்கான அவசியத்தை சொல்ல எனக்கு நேரமில்லை.

நிறைய மைக் முன்னாடி பேசி எனக்கு பழக்கமில்லை. இப்போ டைம் இல்லை. தனியாக வாருங்கள் சொல்றேன்..

இவ்வாறு எஸ்ஏ சந்திரசேகர் பதிலளித்தார்.

SA Chandrasekar reaction for Acto Vijays statement

‘வலிமை’ படத்தில் அஜித் கேரக்டர் பெயர் இதுவா..? டிரெண்டிங் செய்யும் தல ரசிகர்கள்

‘வலிமை’ படத்தில் அஜித் கேரக்டர் பெயர் இதுவா..? டிரெண்டிங் செய்யும் தல ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

valimai ajithவினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் “வலிமை”.

போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

ஹுமா குரேஷி அஜித் ஜோடியாக நடிக்க வில்லனாக கார்த்திகேயா நடித்து வருகிறார்.

இந்த பட அப்டேட் எப்போது கிடைக்கும் என அஜித் ரசிகர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அஜித் கலந்து கொண்டு நடித்து வருகிறார் என்று தகவல் பரவியுள்ளது.

இந்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரப் பெயர் ‘ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ்’ என டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

அது அதிகாரப்பூர்வமான தகவலா? என்பதுதான் கேள்வி..

Ajith’s character in Valimai revealed ?

தேர்தலில் போட்டியிடுவேன்.; ரஜினி ஆதரவை கேட்பேன்..; உடல்நலனை ரஜினி கவனிக்க வேண்டும்.. கமல் பக்கா ப்ளான்

தேர்தலில் போட்டியிடுவேன்.; ரஜினி ஆதரவை கேட்பேன்..; உடல்நலனை ரஜினி கவனிக்க வேண்டும்.. கமல் பக்கா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamalஇன்று வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.

பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் கமல்.. அப்போது அவர் பேசியதாவது..

வட அமெரிக்காவைச் சேர்ந்த கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தில் உள்ளவர்கள் மூலம் மதுரை மாவட்ட துவரிமான் என்ற ஊரில் உள்ள தொடக்கப் பள்ளி சீரமைக்கப்பட்டுள்ளது.

இதுபோல் மேலும் சில பிறந்த நாள் பரிசுகளை நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

கடந்த சில மாதங்களில் ஒரு லட்சம் பேர் மக்கள் நீதி மய்யத்தில் புதிதாக சேர்ந்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. நானும் போட்டியிடுகிறேன். தொகுதியை அறிவிப்பேன்.

பழிபோடும் அரசியலாக இல்லாமல், வழிகாட்டும் அரசியலாக இருக்கும் என்று நம்புகிறோம்.

பாஜகவுடன் தேர்தலில் கூட்டணி சேருவீர்களா என கேட்டதற்கு, “பல்வேறு கட்சிகளில் பல நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடன் வர வேண்டும். நல்லவர்களுடன் நாங்கள் கூட்டணி சேருவோம்” என்றார்.

நடிகர் ரஜினிகாந்த், தனது உடல்நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஒரு நண்பராக அவருக்கு அறிவுறுத்துவேன். அரசியலுக்கு வருவது பற்றி அவர்தான் முடிவெடுக்க வேண்டும்.

அரசியல் பற்றி ரஜினியும் நானும் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து முன்னரே எனக்குத் தெரியும்.

சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவை கோருவீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, அவரது ஆதரவை தருமாறு கேட்பேன்.” என்று கமல் பதில் அளித்தார்.

ஓரிரு தினங்களுக்கு முன்… “பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுவது உண்மைதான். அதனை என்னை வாழ வைத்து அவர்களிடமே மீண்டும் கொட்டுவேன்..” என கமல் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan seek rajinikanths support in politics

‘ஈஸ்வரன்’ பட சூட்டிங்கை முடிச்சிட்டாரா சிம்பு..? இவ்ளோ ஸ்பீட் ஆகாதுப்பா..

‘ஈஸ்வரன்’ பட சூட்டிங்கை முடிச்சிட்டாரா சிம்பு..? இவ்ளோ ஸ்பீட் ஆகாதுப்பா..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

eeswaran movieதிரைத்துறையில் பல திறமைகள் நிறைந்தவர் நடிகர் சிம்பு. இவருக்கு சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரும் உண்டு.

ஆனால் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார் என்ற குற்றச்சாட்டுகள் இவர் மேல் எப்போதுமே உண்டு.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

அவருடன் பாரதிராஜா, நிதி அகர்வால், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

குறுகிய கால படமாக இப்படத்தை படமாக்கி வந்தார் சுசீந்திரன்.

சிம்புவின் காட்சிகளை 2 வாரங்களுக்கு நடத்த திட்டமிட்டிருந்தாராம்.

ஆனால் தற்போது பத்தே நாட்களில் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.

இது படக்குழுவினரையே ஆச்சரியமடைய வைத்துள்ளது..

இன்னும் சில தினங்களில் ஈஸ்வரன் பட மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஈஸ்வரன் படப்பிடிப்பை வெகு விரைவாக முடித்து விட்ட சிம்பு இன்னும் சில நாட்களில் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

Silambarasan TR wraps his shoot for Eeswaran

More Articles
Follows