தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தொழிற்சங்க பேரவை தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தொழிற்சங்க பேரவையை தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசினார் கமல்ஹாசன்.
அவர் பேசியதாவது…
“தொழிலாளிகளை முதலாளிகளாக மாற்ற நம்முடைய மக்கள் நீதி மய்யத்தால்தான் முடியும்.
கண்ணதாசன் கவிதை, கலைஞர் வசனம் புரிந்த ஊரில் நான் பேசும் தமிழ் தமிழர்களுக்கு புரியாதா?
நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும்” என பேசினார் கமல்ஹாசன்.
Kamal speech at his party meeting