தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின் போது கடை திறந்தமைக்காக போலீஸார் தாக்கியதில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்தச் சம்பவத்தை கண்டித்து வருகின்றனர்.
நீதித்துறை அந்த போலீசாருக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ஜெயராஜின் மனைவி, மகளிடம் பேசிய அவர் அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
இத்தகவலை கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ரஜினியை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஜெயராஜின் மனைவி, மகளிடம் பேசியுள்ளார். அவர்களிடம் ஆறுதல் கூறியுள்ளார்.
மேலும் தன் மநீம சார்பாக அதன் பொதுச்செயலாளர் அருணாச்சலம் நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.
ஏற்கெனவே போலீசாரின் தாக்குதலை கண்டித்து கமல் தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அந்த செய்தியை நம் தளத்தில் நீங்கள் படித்திருப்பீர்கள் என நம்புகிறோம்.
திமுக சார்பில் நடிகர் உதயநிதி நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kamal and Rajini spoke to Jayaraj and Fenix family at Sathankulam