எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக கபாலி நடிகை ரித்விகா

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக கபாலி நடிகை ரித்விகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rythivikaபெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “ காமராஜ் “என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது.

ஆனையடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் கல்வி வறுமையால் தடைபட்டு நாடகக் கம்பெனியில் சேரும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த நாடக கம்பெனி முதலாளி, சிறுவன் தங்க விக்ரகம் போல் இருக்கிறான் எனக் கூறினாராம்.

எனவே இந்த படத்திற்கு அது போன்ற ஒரு சிறுவனுக்கான தேர்வு நடைபெற்றது. இறுதியில் அத்வைத் என்ற சிறுவன் தேர்வு செய்யப்பட்டு எம்.ஜி.ஆரின் பால்யகால வேடத்தில் நடிக்கிறான்.

எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துளுவாக Y.G.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கிறனர்.

மறைந்த முன்னால் முதல்வர்கள், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் பாத்திரங்களில் நடிக்க பொருத்தமான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விரைவில் துவங்க இருக்கும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக நடிகை ரித்விகா நடித்துள்ளார்.

ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை, வசனம் எழுத, எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்கிறார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.

Kabali fame Riythvika plays Janaki amma in MGR movie

எம்.ஜி.ஆர் பட டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

எம்.ஜி.ஆர் பட டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MGR movie trailer launch happened in Chennaiபெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “ காமராஜ் “என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது.

எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார்.

எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துளுவாக Y.G.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கிறனர்.

அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் முன்னாள் அமைச்சர் H.V.ஹண்டே, முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பி.வேணுகோபால், டாக்டர் பழனிபெரியசாமி, சத்யபாமா கல்லூரி துணைவேந்தர் லீனா மரியா ஜான்சன், கவிஞர் பூவை செங்குட்டுவன், நடிகை லதா, மக்கள் குரல் ஆசிரியர் ஆர்.முத்துகுமார், துரைகருணா, இயக்குனர் ஆதவன், எம்.ஜி.ஆராக நடித்துள்ள சதீஷ், பாலாசிங், மாஸ்டர் அத்வைத் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த படத்தின் டிரைலரை H.V.ஹண்டே வெளியிட சைதை துரைசாமி பெற்றுக்கொண்டார். விழாவிற்கு வருகைதந்த அனைவரையும் படத்தின் இயக்குனர் அ.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

MGR movie trailer launch happened in Chennai

யாரை பார்த்தும் பொறாமையும் பயமும் இல்லை.. : சிவகார்த்திகேயன்

யாரை பார்த்தும் பொறாமையும் பயமும் இல்லை.. : சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I dont have any fear says Sivakarthikeyan at Seemaraja Trailer launchசிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா திரைப்படம் வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்தில் சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையைமைத்துள்ள இப்படத்தை ஆர்.டி. ராஜா மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இதன் விளம்பரங்கள் மற்றும் புரோமோசன் நிகழ்ச்சிகள் அனைவரும் கவர்ந்து வரும் நிலையில் இதன் டிரைலரை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் படக்குழுவினர் வெளியிட்டனர்.

அப்போது சிவகார்த்திகேயன் பேசும்போது…

நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது.

சினிமாவில் என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன். நிறைய பிரபலமான நட்சத்திரங்கள் இந்த சினிமாவில் நானும் இருப்பதை பெருமையாக உணர்கிறேன்” என பேசினார்.

I dont have any fear says Sivakarthikeyan at Seemaraja Trailer launch

தமிழர் மன்னனாக நடித்து *பாகுபலி* பாராட்டை பெற்ற சிவகார்த்திகேயன்

தமிழர் மன்னனாக நடித்து *பாகுபலி* பாராட்டை பெற்ற சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan acted as Tamil King in Seemaraja It goes viral like Baahubali getupசிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக தான் இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’.

சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்கு பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

24AM ஸ்டூடியோஸ் மிகப்பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த சீமராஜா விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. ஏற்கனவே மதுரையில் மிக பிரமாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் எனக்கு கொஞ்சம் பயம் இருந்துட்டே இருக்கும். ஆனால் இந்த படம் ரிலீஸுக்கு எனக்கு சுத்தமா பயமே இல்லை. படத்தின் வெற்றி முன்பே எழுதப்பட்டு விட்டது.

கிராமத்து படம் என்றாலே அது பொன்ராம் சார், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரின் கோட்டை. அதில் எனக்கும் ஒரு நல்ல கதாபாத்திரத்தை வழங்கிய மொத்த குழுவுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் நாயகி சமந்தா அக்கினேனி.

சிவா இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார். குழந்தைகளை கவர சின்ன சின்ன விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார், படம் உங்கள் எதிர்பார்ப்புக்கும் மேலே இருக்கும் என்றார் நடன இயக்குனர் ஷோபி.

பொன்ராம் உடன் இது எனக்கு மூன்றாவது படம். படத்தை ஆரம்பிக்கும்போதே இது வெற்றி பெறும் என்று உறுதியாகி விட்டது. இப்போதைய எஸ்.பி. முத்துராமன் என்றால் அது பொன்ராம் தான். அனைத்து தரப்பையும் கவரும் விஷயங்கள் பொன்ராம் படத்தில் இருக்கும் என்றார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம்.

இன்று நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் தம்பி சிவகார்த்திகேயன் தான். முந்தைய படங்களை விட இந்த படத்தில் சிவா, சூரி காமெடி களைகட்டும். வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. கூட்டணி தாண்டி, இவரோடு நிச்சயம் வேலை செய்யலாம் என்ற அளவில் என்னையும் இந்த படத்தில் சேர்த்துக் கொண்டதற்கு மகிழ்ச்சி என்றார் இசையமைப்பாளர் டி.இமான்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என்னை எந்த அளவுக்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததோ அதை தாண்டி இந்த சீமராஜா என்னை கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பொன்ராம், சிவா, சூரி கூட்டணி நல்லா இருக்கும் என மக்கள் பேசுகிறார்கள். அப்படி எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி.

இந்த படத்தில் என் உடலை பார்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார்கள். சிவா, பொன்ராம், முத்துராஜ் என இந்த படத்தில் 3 ஹீரோக்கள். முத்துராஜ் சார் வேலை செய்யும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்ததே இல்லை.

அது இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. சிவா அதிர்ஷ்டத்துல மேல வந்துட்டார்னு சிலர் பேசுறாங்க. அதிர்ஷ்டம் வரும் போகும், ஆனா திறமை இல்லாம அந்த இடத்தை தக்க வைக்கவே முடியாது. இந்த நிலைக்கு வர சிவா எவ்வளவு கஷ்டப்பட்டார்னு எனக்கு தான் தெரியும்.

அது தான் ஒவ்வொரு குடும்பத்திலும் அவருக்கென ரசிகர்களை உருவாக்கியிருக்கிறது. எங்கு போனாலும் சிவாவை பற்றி எல்லோரும் பாசமாக கேட்கிறார்கள். அது தான் அவர் இந்த சினிமாவில் சம்பாதித்ததாக நான் நினைக்கிறேன் என்றார் நடிகர் சூரி.

பொன்ராம் சாரும், ராஜா சாரும் நெகடிவ் கேரக்டர் ஒண்ணு இருக்கு, பண்றீங்களா என கேட்டனர். ரொம்ப சவாலான கதாபாத்திரம். நான் கண்டிப்பா பண்றேன் என்றேன். சவாலான கதாபாத்திரங்கள் எனக்கு பிடிக்கும், அதனால் தான் பண்றேன். இது ஒரு பக்கா கமெர்சியல் படமாக வந்திருக்கிறது என்றார் நடிகை சிம்ரன்.

காதல், காமெடி என வழக்கமான படமாக இல்லாமல் ஏதாவது புதுசா பண்ணனும்னு நினைத்தோம். அதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது பட்ஜெட் பற்றி தயங்காமல் உடனே ஓகே சொன்னார். மண்ணுக்காக போராடுவது அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது.

அப்படி ஒரு விஷயம் இந்த படத்தில் இருக்கு. கதை கேட்டவுடன் நெகடிவ் கேரக்டர் நான் பண்றதில்லையே என்றார் சிம்ரன் மேடம். பின்னர் கதையின் விஷயங்களை புரிந்து கொண்டு நடிக்கிறேன் என சொன்னார். ஒரு நாயகியை பாடலுக்கு மட்டும் தான் பயன்படுத்துறாங்க என்ற குறை இருக்கு.

இதில் சமந்தாவுக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கிறது. அதற்காக அர்ப்பணிப்புடன் சிலம்பம் கற்றுக் கொண்டார். பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகும்போதும் ராஜா சார் பண்ணுங்க என நம்பிக்கையோடு சொன்னார். குடும்பம், குழந்தைகள் என எல்லோரும் வந்து பார்க்கும் படமாக சீமராஜா இருக்கும் என்றார் இயக்குனர் பொன்ராம்.

இந்த ட்ரெய்லரின் கடைசி 3 ஷாட் பார்த்து சமூக வலைத்தளங்களில் பாகுபலி மாதிரி இருக்கு என பாராட்டுக்கள் இருந்தன. அது எங்களுக்கு, எங்கள் உழைப்புக்கு கிடைத்த பெருமை. இந்த படத்தை விநாயகர் சதூர்த்திக்கு வெளியிட திட்டமிட்டபோதே இடையில் ஸ்ட்ரைக் வந்தது.

அதையும் தாண்டி படத்தை குறித்த தேதிக்கு வெளியிட உழைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள். படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம்.

ரஜினி முருகன் படத்தின்போதே இந்த ஐடியா பற்றி பொன்ராம் சாரும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். இந்த படத்திலும் காமெடி நிறையவே இருக்கிறது. என்றார் நாயகன் சிவகார்த்திகேயன்.

இந்த விழாவில் கலை இயக்குனர் முத்துராஜ், VFX சூப்பர்வைஸர் பிஜாய் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

Sivakarthikeyan acted as Tamil King in Seemaraja It goes viral like Baahubali getup

17 ஆண்டுகளுக்கு பிறகு களவாணி மாப்பிள்ளை பட தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ்

17 ஆண்டுகளுக்கு பிறகு களவாணி மாப்பிள்ளை பட தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kalavani mappillaiநம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர்.

அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப் பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மறைந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது.

மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் “ களவாணி மாப்பிள்ளை “ படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார்.

மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் காந்தி மணிவாசகம் அவர்களிடம் கேட்டோம்…

இரண்டு மணி நேரம் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கிற நோக்கில் எடுக்கப் பட்டிருக்கும் படமே களவாணி மாப்பிள்ளை.

பெண்களின் மனோபாவமே இந்த படத்தின் மையக்கரு. பெண்கள் காய்கறி கடைக்குப் போனால் அரை கிலோ வெண்டைக்காய் வாங்க கால் கிலோ வெண்டையை உடைத்து உடைத்துப் பார்த்துத் தான் வாங்குவார்கள்.

அதே மாதிரி ஒரு புடவை வாங்க ஒரு கடையையே புரட்டிப் போட்டு விடுவார்கள்.

அவ்வளவு பார்த்து பார்த்து எச்சரிக்கையாக நடந்து கொள்ளும் அவர்கள் தடுமாறும் இடமும் தடம் மாறும் இடமும் திருமண விஷயத்தில் தான்…அந்த ஒரு விஷயத்தில் மட்டும் எப்படி கோட்டை விடுகிறார்கள் என்பது மட்டும் இன்று வரை சிதம்பர ரகசியமே.

அப்படித் தான் தான் ஏமாந்து போய் கல்யாணம் செய்து கொண்டது போல் தன் மகளுக்கு நடந்து விடக் கூடாது என்று நினைத்து ஏங்கும் ஒரு தாயின் போராட்டமும், தன் காதல் தான் முக்கியம் என்று நினைக்கும் மகளின் என்ன ஓட்டமும் தான் படத்தின் கதையோட்டம். இறுதியில் ஜெயித்தது தாயா மகளா என்பது தான் திரைக்கதை.

படத்தில் தினேஷின் கதாபாத்திரம் தான் கதையின் ஆணி வேர்…தூள் கிளப்பி இருக்கிறார் தினேஷ்.

படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது என்றார் இயக்குனர் காந்தி மணிவாசகம்.

ஒளிப்பதிவு – சரவண்ணன் அபிமன்யு

இசை – என்.ஆர்.ரகுநந்தன்

பாடல்கள் – மோகன்ராஜன், ஏக்நாத்

கலை – மாயா பாண்டி

எடிட்டிங் – பொன் கதிரேசன்

நடனம் – தினேஷ்

ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்

தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்

நிர்வாக தயாரிப்பு – ஸ்டில்ஸ் ராபர்ட்

இணை தயாரிப்பு – திருமூர்த்தி

தயாரிப்பு – ராஜேஸ்வரி மணிவாசகம்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – காந்தி மணிவாசகம்.

3 ஆண்டில் 4500 இடங்களில் வாய்ப்பு தேடிய *60 வயது மாநிறம்* அருள் பேட்டி

3 ஆண்டில் 4500 இடங்களில் வாய்ப்பு தேடிய *60 வயது மாநிறம்* அருள் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vanjagar ulagam newsகூட்டத்தில் வரும் ஒருவராக முகம் காட்டியதிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லும் வில்லன் நடிகர் என்கிற நிலையை எட்டியிருப்பவர் நடிகர் அருள் .

மெல்ல மெல்லப் படியேறி வில்லன் நடிகர்நிலை வரை உயர்ந்து இருக்கிறார். இருந்தாலும் இப்போதும் படிப்படியாக முன்னேறவே ஆசை என்கிறார்.

நடிகர் அருள் தன் முன் கதைச் சுருக்கத்தைக் கூறுகிறார் :

” எனக்குச் சினிமா மீது எதனால் எப்படி ஆர்வம் வந்தது என்று அவ்வளவு சரியாகச் சொல்ல முடியாது. அப்படி ஒரு ஈர்ப்பு சினிமா மீது . நான் பி.எஸ்ஸி தொடங்கி எம்.பி.ஏ வரை பல படிப்புகள் முடித்தேன். ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலையில் இருந்தேன்.

மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினேன் . எனக்குச் சினிமா ஆர்வம் வந்ததும் ஒரு கட்டத்தில் அதாவது 2009-ல் வேலையை விட்டு விட்டேன். முதலில் எனக்கு இயக்குநராக வேண்டும் என்று தான் ஆசை இருந்தது.

2010 -ல் பாலுமகேந்திரா சாரைப் போய்ப் பார்த்தேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்தவர். உனக்கு நாற்பது வயதாகிறது. நீ நடிக்க முயற்சி செய்வதே உனக்குப் பாதுகாப்பு என்றார்.

பிறகு கூட படம் இயக்கலாம். இப்போது நடிகனாகப் பயிற்சி எடு என்று அவரது சினிமாப் பட்டறையின் நடிப்புப் பயிற்சி மாணவனாக்கிக் கொண்டார். ஆறு மாத காலப் பயிற்சி.

அது குருகுலவாசம் போன்றது. வெறும் நடிப்பு மட்டுமல்லாது சினிமாவின் பல பரிமாணங்களையும் செயல்பாடுகளையும் சொல்லித் தந்தார், பல உலகத்தரமான படங்களைப் போட்டுக் காட்டி அதன் சிறப்புகளைச் சொல்வார். எனக்கு நம்பிக்கை வந்தது. அதன் பின் வெளியே வந்து வாய்ப்பு தேடினேன். சில குறும்பட வாய்ப்புகளில் நடித்தேன்.

அப்படி நிறையவே வாய்ப்புகள் வந்தன இப்படியே 2014 வரை 32 குறும்படங்கள் , 18 விளம்பரங்கள் என்று நடித்தேன். ஒரு கட்டத்தில் இவற்றை நிறுத்திக் கொண்டு சினிமா தான் என்று வாய்ப்பு வேட்டையில் இறங்கினேன். ” என்று சற்றே நிறுத்தினார்.

சினிமாவில் வாய்ப்பு எளிதில் கிடைத்ததா? என்ற போது ,

“போய் வாய்ப்பு கேட்டதுமே கிடைத்துவிடும் என்று நான் கற்பனை செய்து கொள்ளவில்லை. போராடித்தான் இலக்கை அடைய முடியும் என்று நம்பினேன்.

தினமும் அலுவலகம் செல்வது போல சாப்பாட்டு மூட்டையுடன் கம்பெனி கம்பெனியாக படியேறுவேன். முகவரி தெரிந்த ஒருவரையும் கூட அழைத்துக் கொண்டு படியேறுவேன். இப்படி 3 ஆண்டுகளில் சுமார் 4500 இடங்களில் வாய்ப்பு கேட்டு இருப்பேன்.

முதலில் கூட்டத்தில் ஒருவராக வரும் வாய்ப்பு வந்தது. பிறகு முகம் தெரியும்படி வந்த முதல் படம் முரண். பிறகு எங்கேயும் எப்போதும், எதிர் நீச்சல், மாற்றான் போன்ற 18 படங்களில் மூன்று நான்கு காட்சிகளில் நடித்திருப்பேன்.

முதலில் விடியும் முன் படத்தில் 3 வில்லன்களில் ஒருவனாக வருவேன். நல்ல அடையாளமாக இருந்தது. பிறகு கவனம், அமரகாவியம் ,விழி மூடி யோசித்தால் , சிங்கம் போன்ற படங்கள்.

குறிப்பாக ஜீவாசங்கரின் அமர காவியம் மறக்க முடியாது. அதில் 16 காட்சிகளில் வந்தேன். எமன் படத்தில் வயதான வில்லன் வேடத்தில் நடித்தேன் என் நடிப்பை பலரும் பாராட்டினர் அந்த படத்தில் நான்தான் வில்லன் என்பது வெளியில் நிறைய பேருக்கு தெரியாது.

வயதான கெட்டப் அந்த மாதிரி. பிறகு துருவங்கள் 16ல் நல்ல அடையாளம் கிடைத்தது. அதே கார்த்திக் நரேனின் நரகாசுரன் படத்தில் என்னை நம்பிக்கையுடன் அழைத்து வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இப்போது 60 வயது மாநிறம் படத்தில் என் பாத்திரம் பெயர் சொல்லும்படி நல்ல வாய்ப்பாக இருக்கும். இப்போது குற்றம் புரிந்தால், உணர்வு உள்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறேன்” என்கிறார்.

நடிப்பில் எது இவரது எதிர்பார்ப்பு ? என்று கேட்டால் , ” சிறிய படம் பெரிய படம் என்கிற பாகுபாடு நான் பார்ப்பதில்லை, நமக்கு நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று மட்டுமே பார்ப்பேன்.

நான் இயக்குநரின் நடிகன். அவரது கைப்பாவையாக இருக்க,வே விரும்புகிறேன். ஒரே நாளில் உயரம் தொட விரும்பவில்லை. திடீரென்று மேலே வர ஆசைப்படவில்லை. ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக படிப்படியாக முன்னேறவே ஆசை. ” என்கிறார் உறுதியான நம்பிக்கையுடன்.

More Articles
Follows