தல-தளபதியே வந்தாலும் அசராத ரஜினி-மோகன்லால்

தல-தளபதியே வந்தாலும் அசராத ரஜினி-மோகன்லால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali and Pulimurugan movies making records in Box Officeசினிமா உலகில் வெற்றிகரமாக 200வது நாள், 100வது நாள், வெற்றி விழா என்று செய்திகளை பார்ப்பது மிக அரிதாக விட்டது.

ஒரு படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஓடினால் பெரிய விஷயம் என்றாகிவிட்டது.

இதனையும் கடந்து, தல தளபதி உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் 50 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

இவர்களுக்கு தமிழகத்தில் பெரிய ரசிகர் வட்டம் உள்ளது நாம் அறிந்ததே.

இருந்தபோதிலும், இவர்களுக்கு சவால் விடும் வகையில் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக சினிமாவில் கோலோச்சி கொண்டிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த் மற்றும் மோகன்லால்.

ரஜினியின் கபாலி திரைப்படம் மதுரையில் உள்ள மணி இம்பாலா தியேட்டரில் அண்மையில் 250 நாட்களை கடந்துள்ளது.

அதுபோல் மோகன்லால் நடித்து மலையாள சினிமாவில் வசூல் வேட்டை செய்த புலிமுருகன் படம் 200 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

கபாலி படத்தின் ரிலீஸ் கேரள உரிமையை பெற்ற மோகன்லால், அதற்காக தன் புலிமுருகன் படத்தை ஒத்தி வைத்தது இங்கே கவனிக்கத்தக்கது.

Kabali and Pulimurugan movies making records in Box Office

kabali 250 days

சந்திப்பு குறித்து ரஜினி ரசிகர்களுக்கு ரகசிய கடிதம்..?

சந்திப்பு குறித்து ரஜினி ரசிகர்களுக்கு ரகசிய கடிதம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini will be having secret meeting with his fans in April 2nd week 2017முன்பெல்லாம் மாதந்தோறும் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினிகாந்த்.

அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு ரசிகர்களை சந்திப்பதை குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில் ரசிகர்களை ரஜினி ரகசியமாக சந்திக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

இது தொடர்பான கடிதம் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு மன்றத்திலுமிருந்து சுமார் 250 பேரை ரஜினி வரச் சொல்லியுள்ளதாக சொல்கின்றனர் ரசிகர்கள்.

கிட்டதட்ட 7000 பேர் இச்சந்திப்பில் கலந்து கொள்வார்கள் எனவும் அவர்கள் ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

இச்சந்திப்பானது, ஏப்ரல் 11 முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாம்.

இதில் நிச்சயம் அரசியல் தொடர்பான எந்த ஒரு விஷயமும் ஆலோசிக்கப்படாது எனவும் சொல்லப்படுகிறது.

Rajini will be having secret meeting with his fans in April 2nd week 2017

‘விஸ்வரூபம் 2 படத்திற்கு பிரச்சினை வராது என நம்புகிறேன்.’- கமல்

‘விஸ்வரூபம் 2 படத்திற்கு பிரச்சினை வராது என நம்புகிறேன்.’- கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan talks about Vishwaroopam 2 release issuesகமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்த படங்களில் ஒன்று ‘விஸ்வரூபம்’.

கடந்த 2013ஆம் ஆண்டில் வெளியான படம் இஸ்லாமியர்களை அவமதிப்பதாக கூறி பல சர்ச்சைகளை உண்டாக்கியது.

தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் இப்படம் வெளியானது.

இப்படத்தின் பிரச்சினையின்போதுதான் கமல், நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன் என தெரிவித்து இருந்தார்.

இதனால் கமலுக்கு ஆதரவாக பலரும் களம் இறங்க, பின்னர் சில காட்சிகளை வெட்டிவிட்டு இப்படத்தின் தடையை நீக்கியது ஜெயலலிதா தலைமையிலான அரசு.

இந்நிலையில் கமலின் சமீபத்திய பேட்டியில் இப்படம் தொடர்பாக தான் பட்ட கஷ்டங்கள் பற்றி கூறியுள்ளதாவது….

“விஸ்வரூபம்’ பட தடைக்கு முக்கிய காரணம் அப்போதைய அரசுதான்.

இந்த தடையால் எனது நிதிநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

எனது சொத்துகள் அனைத்தையும் அடகு வைத்தேன். அவமானத்துக்குள்ளானேன்.

ஆனால், ஊழலில் திளைத்திருக்கும் இந்த தேசத்தில் எனக்கு நேர்ந்தது போன்ற சம்பவங்கள் எளிதில் மறக்கடிக்கப்பட்டுவிடும்.

எப்போதுமே வரி ஏய்ப்பு செய்திராத நான் விஸ்வரூப பிரச்சினையால் ரூ.60 கோடியை இழந்தேன்.

‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு எந்த பிரச்சினையும் வராது என நம்புகிறேன். இருந்தாலும்.. எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது.” என்று தெரிவித்துள்ளார் கமல்.

Kamalhassan talks about Vishwaroopam 2 release issues

சூர்யாவை தொடர்ந்து கார்த்தி-தனுஷ் படங்களை இயக்கும் செல்வராகவன்

சூர்யாவை தொடர்ந்து கார்த்தி-தனுஷ் படங்களை இயக்கும் செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Selvaraghavan will direct Aayirathil Oruvan and Pudupettai sequels soonஎஸ்ஜே சூர்யா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இயக்கியுள்ளார் செல்வராகவன்.

இதனையடுத்து சந்தானம் நடிக்கும் ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் சூட்டிங்குங்காக விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளனர்.

இப்படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்களின் 2ஆம் பாகம் குறித்து செல்வராகவன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு படங்களின் 2ஆம் பாகத்தை இயக்க ஆசையுள்ளது. அதற்கான கதையை கூட எழுதிவிட்டேன்.

ஆனால் இப்போது அந்த படங்களை எடுக்க நேரமில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

ஒருவேளை சூர்யா படத்தை முடித்துவிட்டு, கார்த்தி (ஆயிரத்தில் ஒருவன்) மற்றும் தனுஷ் (புதுப்பேட்டை) படங்களை இயக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

Selvaraghavan will direct Aayirathil Oruvan and Pudupettai sequels soon

சிம்புவுடன் முன்பே இணைந்தவர் ‘அஅஅ’ படத்தில் 3வது நாயகியானார்

சிம்புவுடன் முன்பே இணைந்தவர் ‘அஅஅ’ படத்தில் 3வது நாயகியானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu sana khanசிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

யுவன் இசையமைக்க, மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதில் ‘மதுரை மைக்கேல்’, ‘அஸ்வின் தாத்தா’ உள்ளிட்ட 4 கேரக்டர்களில் நடிக்கிறார் சிம்பு.

இதில் ‘மதுரை மைக்கேல்’ கேரக்டருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.

‘அஸ்வின் தாத்தா’ கேரக்டருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

இந்நிலையில், 3வது கேரக்டருக்கு ஜோடியாக சனாகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் கேங்க்ஸ்டர் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் இதற்கு முன்பே ‘சிலம்பாட்டம்’ படத்தில் இணைந்து நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Sana Khan teams up again with Simbu for AAA movie

ரஜினியை மலாக்கா தூதராக்க மலேசிய அரசு முயற்சி

ரஜினியை மலாக்கா தூதராக்க மலேசிய அரசு முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini to replace ShahRukh as Malaysia Malacca tourism ambassadorரஜினிகாந்த் நடித்த கபாலி படம் 90% மலேசியாவிலேயே படமானது.

மேலும் இப்படத்தின் சூட்டிங் அங்கு நடைப்பெற்ற போது, வரலாறு காணாத வகையில் ரஜினிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து படமும் அங்கு மாபெரும் வசூலை அள்ளியது.

இதன் விளைவாக தற்போது, ரஜினியை அங்குள்ள மலாக்கா நகரின் தூதராக்க மலேசிய அரசின் சுற்றுலாதுறை முடிவு செய்துள்ளதாம்.

இது தொடர்பான கடிதத்தை ரஜினிக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு ரஜினி ஒப்புக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது இந்தி நடிகர் ஷாரூக்கான், மலாக்கா நகரின் தூதராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini to replace ShahRukh as Malaysia Malacca tourism ambassador

More Articles
Follows