தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகம் போலவே கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்ததே.
இந்நிலையில், கேரளாவில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய் ரசிகரான ஜிதின் என்பவர் ஏதோ ஒரு நோயின் காரணமாக பார்வையை இழந்து வருகிறார்.
ஒரு கண்ணில் முற்றும் பார்வையை இழந்த அவருக்கு மற்றொரு கண்ணில் பார்வை 25% மட்டுமே உள்ளது.
இனி தன் கண்கள் முழு பார்வையை இழக்கும் முன்பு, தனக்கு விஜய்யை காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனை ரசிகர் மன்றங்கள் விஜய்க்கு தெரிவிக்கவே, ஜிதினை சென்னைக்கு வரவழைத்து, அவருடன் நீண்ட நேரம் செலவிட்டு ஆறுதல் கூறியுள்ளார் விஜய்.
மேலும் பார்வை முழுவதும் கிடைக்க என்ன சிகிச்சையாக இருந்தாலும் செய்யுங்கள். அதற்கான செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.