தமிழ் ஹீரோஸ் நல்லா நடிச்சா நாங்க ஏன் நடிக்க வர்றோம்? – கரு.பழனியப்பன்

தமிழ் ஹீரோஸ் நல்லா நடிச்சா நாங்க ஏன் நடிக்க வர்றோம்? – கரு.பழனியப்பன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If Tamil heros act in good manner directors wont be actors says Karu Pazhaniappanதரமணி படத்தை தொடர்ந்து ராம், யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைந்துள்ள படம் பேரன்பு.

பி.எல். தேனப்பன் தயாரித்துள்ள இப்படத்தில் மம்மூட்டி, அஞ்சலி, தங்க மீன்கள் சாதனா ஆகியோர் நடித்துள்ளனர்.

பல திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு இப்படம் பல விருதுகளை வென்றுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் பாரதிராஜா, மிஷ்கின், கரு பழனியப்பன், கே. எஸ். ரவிக்குமார், நடிகர் சித்தார்த் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

நடிகர் சித்தார்த் பேசும்போது..

தமிழ் சினிமாவில் உள்ள நல்ல இயக்குனர்கள் அனைவரும் நடிக்க வந்துவிட்டார்கள். ஏன்யா இப்படி நடிச்சு கொல்றீங்க? என்றார்.

அதன்பின்னர் கரு. பழனியப்பன் பேச வந்தார். அவர் சித்தார்த்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார்.

இந்த பேரன்பு படத்தில் மம்முட்டி அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். நாங்கள் படத்தை பார்த்து விட்டோம்.
நல்ல நல்ல இயக்குனர்கள் எல்லாம் நடிக்க வந்துவிட்டார்கள் என்றார் சித்தார்த்.

மம்மூட்டி போல நம்ம ஹீரோஸ் எல்லாம் நடிச்சிட்டிங்கன்னா நாங்க ஏன்யா? நடிக்க வர்றோம்.” என்று பேசினார்.

If Tamil heros act in good manner directors wont be actors says Karu Pazhaniappan

peranbu audio launch

அறிமுக நாயகியுடன் களமிறங்கும் *ஹவுஸ் ஓனர்* லஷ்மி ராமகிருஷ்ணன்

அறிமுக நாயகியுடன் களமிறங்கும் *ஹவுஸ் ஓனர்* லஷ்மி ராமகிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lakshmi Ramakrishanans House Owner movie news updates‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய வித்தியாசமான படங்களை தமிழ்ச் சினிமாவுக்குக் கொடுத்திருக்கும் பெருமைமிக்க பெண் இயக்குநர்.

இப்போது அவர் தனது அடுத்த படைப்பாக ‘ஹவுஸ் ஓனர்’ என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில், ‘பசங்க’ புகழ் கிஷோர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நாயகியாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.

மேலும் ‘ஆடுகளம்’ கிஷோர் படத்தின் தலைப்பு சுட்டிக் காட்டும் கேரக்டரில் நடிக்கிறார்.

‘மகளிர் மட்டும்’ புகழ் பிரேம் படத் தொகுப்பு செய்கிறார். கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்துக்கு பின்னணி இசை மட்டுமே தேவைப்படுவதால் முழு படப்படிப்பையும் முடித்த பின்னரே இசையமைப்பாளர் தேர்வு செய்யப்படுவாராம்.

சென்னை வெள்ளத்தின்போது நடக்கும் ஒரு சம்பவம்தான் படத்தின் கரு. முழுக்க, முழுக்க காதல் கதையாக அதே சமயம் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகிறது இந்தப் படம்.

இதில் தீவிரமான காதல் கதை இருந்தாலும், படத்தில் பாடல்களே இல்லையாம். ஆனால் சென்னை வெள்ளம் சார்ந்த எந்த ஒரு காட்சியும் இருக்காதாம்.

இப்படம் பற்றி இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன் பேசுகையில்…

“ஆரம்பத்தில், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து இதே ‘ஹவுஸ் ஓனர்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை எடுக்கும் யோசனை எனக்கு இருந்தது.

ஆனால் அந்த நேரத்தில் கதையின் முதல் டிராஃப்ட் மட்டுமே தயாராக இருந்ததால், அது தொடங்கப்படவில்லை. இடையில், சம்பந்தப்பட்ட நடிகர், நடிகை இருவருமே அவரவர் வேலைகளில் பிஸியாகிவிட்டனர்.

மேலும், இப்போது அவர்கள் தங்களுடைய கமிட்மெண்ட்டுகளை முடித்து விட்டுத்தான் திரும்ப வருவார்கள் என்பது புரிந்தது.

இதற்கு மேலும் காத்திருப்பது வீணானது என்பதை உணர்ந்து கிடைத்த நட்சத்திரங்களை வைத்து உடனேயே இந்த ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ஆரம்பித்துவிட்டேன்.

அடுத்த வாரம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது, மேலும் இரண்டு கட்ட படப்பிடிப்போடு, செப்டம்பர் மாதத்தில் முழு படத்தையும் முடிக்க திட்டமிட்டிருக்கிறோம்…” என்றார்.

Lakshmi Ramakrishanans House Owner movie news updates

தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தயாரிப்பாளர்கள் மாற வேண்டும் என மைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் விழாவில் ஆர்.கே. செல்வமணி பேச்சு

தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தயாரிப்பாளர்கள் மாற வேண்டும் என மைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் விழாவில் ஆர்.கே. செல்வமணி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

FEFSI President speech in Microplex Studios Opening Ceremonyமைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் FEFSI தலைவர் ஆர். கே. செல்வமணி, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எஸ். ஆர். பிரபு, 5 ஸ்டார் கதிரேசன், நடிகர் பார்த்திபன், மயில்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் FEFSI தலைவர் R. K. செல்வ மணி பேசியதாவது:-

இந்தியாவிலேயே முதன் முதலில் தயாரிப்பாளர்கள் தங்களுக்கென மாஸ்டரிங் யூனிட்டை உருவாக்கியிருப்பது இதுதான் முதல் முறை. அதற்கு உதவியாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், மார்ட்டின் குருஷ் கம்பெனிக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மூன்று மாதத்திற்கு முன் தமிழ் திரைப்பட துறையில் ஏற்பட்ட வேலை நிறுத்தம் ரீ ஜென்ரேஷன் இந்த நிகழ்வுக்கு முன் விரைவில் தமிழ் திரைப்பட துறையில் மாஸ்டர் யூனிட் ஆரம்பிக்கப்படும் என உறுதிமொழி கொடுக்கப்பட்டது இன்று அது முதல் படி எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து ஏறகுறைய 60 நாட்களில் முறைப்படி செய்து உலக தரத்திற்கு இணையாக அனைத்து விதமான தொழில்நுட்பத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இருக்கும் திரையரங்கிற்கும் உடுமலை சண்முகா திரையரங்கிற்கும் டெலிவரி செய்து சோதனை சொய்யப்பட்டது. 100% இது வெற்றி அடைந்தது.

இது ஒரு நல்ல நிறுவனம் முதல் அடி எடுத்து வைத்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தன் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான முதல் ஆரம்பம். இதன் விலை தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.

சரியான விலையில் தரமான பொருளை தர அந்த நிறுவனம் முன் வந்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த முயற்சியை இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரைப்பட தயாரிப்பாளர்கள் தனக்கென சொந்தமாக மாஸ்டர் யூனிட் ஆரம்பிக்கபடலாம்.

இது யாருக்கும் எதிராக ஆரம்பிக்கப்பட்டதல்ல. திரைப்பட துறை பல்வேறு விதமாக வளர்ச்சி அடைகிறது. தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஷ்தகர்கள் அவர்களுக்கு ஒரு டெக்னிஷியனாக நட்புடன் ஒரு விஷியத்தை விளக்க விரும்புகிறேன் என்னவென்றால் தற்போது மாறும் தொழில்நுட்பத்திற்கேற்ப நாம் மாறவில்லை என்றால் நம் இடத்திற்கு வேறு யாராவது வந்துவிடுவார்கள்.

பிலிமிலிருந்து டிஜிட்டலுக்கு மாறுவதற்கு 5 முதல் 10 வருடம் தேவைப்பட்டது. இப்போது அடுத்த கட்டத்திற்கு செல்ல அவ்வளவு காலம் தேவைப்படாது 5 மாதங்களே போதுமானது.

இந்த தொழில் நுட்பத்தை தயாரிப்பாளரோ, விநியோகஷ்தர்களோ புரிந்துகொள்ளவில்லை என்றால் இத்துறை நம்மை விலக்கி வைத்துவிடும்.

தயாரிப்பாளர்கள், விநியோகஷ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பகைமை இல்லாமல் எந்த கருத்து வேறுபடாக இருந்தாலும் நமக்குள்ளேயே பேசி சுமுகமாக தீர்ப்பது நல்லது.

இது தயாரிப்பு துறை தனக்கான சந்தையை தானே உருவாக்கிய நுட்பமே தவிர யாருக்கும் எதிராக ஆரம்பிக்கப்பட்டதல்ல.

இதனால் தயாரிப்பாளர்களுக்கு 100 சதவீதம் நன்மை உண்டு. சென்சாருக்கு ஒரு திரையரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் மிக குறைந்த விலையில் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்படுவதாக உறுதிமொழி அளித்துள்ளார்கள்.

நிர்வாகிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு விளக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் தொழிலாளர்கள் நன்றாக இருக்க முடியும். இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன் படுத்த வேண்டும் நன்றி வணக்கம்.

விழாவில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது:-

இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நாற்காலிகள் எல்லாம் பின்னாடி இருந்தது நாங்க தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னாடி தள்ளிட்டு வந்தோம்.

ஏனென்றால் தமிழ் சினிமாவை முன்னுக்கு கொண்டு வரும் வழி இந்த நாற்காலிகளை முன்னுக்கு கொண்டு வருவதுதான். அது போல தான் இந்த மைக்ரோ பிளக்ஷ் ஸ்டுடியோவின் முதல் படி.

ஒருவன் பார்மஸியில் கேட்கிறான் ஏன்பா தேள் கொட்டியது என்று மருந்து வாங்கி சென்றாயே இப்போது மறுபடியும் எதுக்கு வந்தாய் என்று கேட்கிறான் அதன்கு அவர் மருந்து கொட்டிவிட்டது என்றான்.

தேள் கொட்டினால் கூட பரவாயில்லை மருந்து கொட்டியதேன்றால் ரொம்ப கஷ்டம். அதுபோல் சினிமா வியாபாரத்தில் என்ன பிரச்சனையும் இருக்கலாம் அதற்கு நமக்குள்ளேயே ஒற்றுமை இருந்தால் தான் அதை சீர் செய்ய முடியும்.

குறிப்பா திரு செல்வமணி பெப்சியின் தலைமைக்கு அவர் வந்த உடன் நல்ல ஒற்றுமை வந்துள்ளது. நான் கிட்டதட்ட 25வருடம் சினிமாவில் உள்ளேன். அப்போது இல்லாத ஒற்றுமை இப்போது வந்துள்ளது.

தமிழ் சினிமா செல்வமணி சொன்னது போல் டெக்னிக்கெல்லாம் புரிந்து கொண்டு சினிமாவை நல்ல முறையில் கொண்டு வருவோம். திரு விஷால் அவர்களுக்கும் திரு மார்டின் அவர்களுக்கும் நன்றி.

விழாவில் தயாரிப்பாளர் சங்க பொருளாளர் S. R. பிரபு பேசியதாவது:-

இவ்விழாவுக்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். முதலாவதாக மைக்ரோ பிளக்ஷ் குலோபல் நிறுவனத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மூன்று மாதத்திகு முன் ஆளுக்கொரு கருத்துக்களையும் விவாதத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அடிப்படை பிரச்சனை என்னவென்று பார்த்த போது தயாரிப்பாளர்களுக்கு சுய சார்பு நிலை என்று சொல்லலாம்.

அதன் தொகுப்பை நாமே மேற்கொண்டு திரையரங்கத்தின்கு கொண்டு செல்லும் விஷயம் திரையரங்கிற்கு சாதனங்களை கொடுக்கும் இன்னொரு தொழிலை செய்ததால் அது சார்ந்த ஒரு தொழிலை காப்பாற்ற இன்னொரு சிக்கல் குளப்பம் ஏற்பட்டு அதை சரி செய்ய என்ன செய்யலாம் என்று யேசித்த போது நமக்கு தோன்றிய விஷியம் தயாரிப்பாளர் சங்கம் மூலமே மாஸ்டர் மற்றும் கண்டன்ட் டெலிவரி செய்ய வேண்டும் என்று தோன்றியது. பல நிறுவனங்கள் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்து இதை கொண்டு வர வேண்டும் என முன் வந்தார்கள்.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மாறலாம் ஆனால் அதன் முயற்சிகள் மாறாது. நல்ல டெக்னாலஜியை அதை நன்றாக தெரிந்தவர்கள் எடுத்து சென்றால் அது நீண்ட நாள் நிலைக்கும். இதற்கு கார்த்தி போன்ற நண்பர்கள் துணை நின்றார்கள்.

திரு கார்த்தி அவர்களுக்கும் திரு அல்பர் அவர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெரிய வேலை நிறுத்தத்திற்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளோம் இந்த செட்டப்பை உருவாக்க இவ்வளவு காலம் எடுத்துள்ளது

ஆனால் 6மாதங்கள் இணைந்து நமக்கு இந்த செட்டப்பை கொடுத்துள்ளார்கள். அதில் அவர்களின் அர்பணிப்பு தெரிகிறது. இதன் தொடக்கமும் முதல் படியும் வர இரண்டு மாதங்களாகும். அடுத்த கட்டத்திற்கு நாம் நினைத்ததை கொண்டு செல்ல இந்த முதல் கட்டத்திற்கு இந்த நிறுவனம் தயாராக உள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக மைக்ரோ குலோபல் நிறுவனத்திற்கு நன்றியை தொரிவித்துக் கொள்கிறேன்.

விழாவில் தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் பேசியதாவது:-

மைக்ரோ பிளக்ஷ் நிறுவனத்தை துவக்கி வைக்க வந்துள்ள மார்ட்டின் அவர்களுக்கும், செல்வமணி அவர்களுக்கும், பத்திரிக்கை துறை சார்ந்த அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நீண்ட நாள் கோரிக்கையாக ஒரு மாஸ்டர் யூனிட் ஆரம்பிக்க ஏகப்பட்ட போராட்டங்கள் இருந்தது. அந்த போராட்டத்தில் 48 நாள் வேலை நிறுத்தம் நடந்தது அப்போது அடிப்படை விஷியமாக தயாரிப்பாளர் சங்கம் சார்பாக மாஸ்டர் யூனியன் வேண்டும் என்ற கோரிக்கையாக இருந்தது.

அப்போது நிர்வாகிகள் அனைவரும் கலந்து பேசி டெக்னாலஜியை அப்டேட் பன்னக்கூடிய ஒரு நிறுவனம் வேண்டும் என்ற போது எல்லா விதத்திலும் சேர்ந்து இருக்கும் திரு அல்பர்ட் அவர்களுக்கும் அவருடன் பணியாற்றிய திரு கார்த்தி அவர்கள் கிட்டதட்ட பத்து ஆண்டுகள் சாப்ட்டுவேரில் அப்டேட்டாக தெரிந்தவர்.

அடிப்படை ஆரம்பம் தான் மைக்ரோ பிளக்ஷ் என்ற விழா. இது தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கும், திரைதுறையினருக்கும் பயன் அளிக்கும். அனைவருக்கும் மேற்கொண்டு பல நற்செய்திகளை மைக்ரோ பிளக்ஷ் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

FEFSI President speech in Microplex Studios Opening Ceremony

microplex studios

விவசாயத்தை பாதிக்காத வகையில் 8 வழிச்சாலை அமைய ரஜினி வேண்டுகோள்

விவசாயத்தை பாதிக்காத வகையில் 8 வழிச்சாலை அமைய ரஜினி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chennai to Salem 8 Ways Road should not affect farmers says Rajinikanthஇன்று காமராஜரின் பிறந்த தினத்தில் செய்தியாளர்களை தன் போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார் ரஜினிகாந்த்.

அப்போது அவர் பேசியதாவது…

சென்னை முதல் சேலம் வரை 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் உருவானால்தான் நாடு முன்னேறும், தொழில் வளர்ச்சி பெருகும். வேலைவாய்ப்புகளும் பெருகும். இதுபோல் செய்யும்போது இழப்பீடு என்பது சிலருக்கு வரும்.

பாதிக்கப்படுபவர்களின் மனம் திருப்தி அடையும் அளவுக்கு அவர்களுக்கு இழப்பீட்டு தொகையோ அல்லது நிலத்தையோ அரசு அளிக்க வேண்டும். முடிந்த வரை விவசாய நிலத்தை பாதிக்காத அளவுக்கு 8 வழிச்சாலை அமைத்தால் இன்னும் நல்லது.

கல்வி துறையில் மற்ற மாநிலங்களை விட, தமிழகம் சிறப்பாக உள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்படுகிறார். இது என்னுடைய கருத்து.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும்.” என்றார்.

Chennai to Salem 8 Ways Road should not affect farmers says Rajinikanth

1 கோடி பேர் என் கட்சியில் இணையவில்லை; உண்மையை சொன்ன ரஜினி

1 கோடி பேர் என் கட்சியில் இணையவில்லை; உண்மையை சொன்ன ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Till now 1 crore members not joined in Rajini Makkal Mandram says Rajiniபெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான இன்று செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

தமிழருவி மணியன் தலைமையில் உள்ள காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைய உள்ளதா? என்று கேட்டனர்.

இணைந்தால் மகிழ்ச்சி. என்றார்.

ரஜினி மக்கள் மன்றத்தில் இதுவரை ஒரு கோடி இணைந்துவிட்டதாக செய்திகள் வந்துள்ளதே இது உண்மையா? என்று கேட்டனர்.

அந்த செய்தி தவறானது. அந்த இலக்கை நோக்கி பயணிக்கிறோம். என்றார்.

பொதுவாக புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் கூட எங்கள் கட்சியில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இரண்டு கோடி மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்பார்கள்.

ஆனால் முதன்முறையாக அரசியலில் இறங்கும் ரஜினி இப்படி உண்மைய சொல்லியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் காமராஜர் போன்ற தலைசிறந்த அரசியல்வாதிகள் தமிழகத்தில் உருவாக வேண்டும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Till now 1 crore members not joined in Rajini Makkal Mandram says Rajini

நேர்மை சிறுவன் யாசினை பாராட்டி கல்வி செலவை ஏற்றார் ரஜினி

நேர்மை சிறுவன் யாசினை பாராட்டி கல்வி செலவை ஏற்றார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini met Yaasin who handed rupees 50 thousands to police from roadநடுரோட்டில் கிடந்த ரூ. 50,000 பணத்தை தானே எடுத்துக் கொள்ளாமல் காவல் துறையிடம் ஒப்படைத்த சிறுவன் யாசின் பற்றி பார்த்தோம்.

அவனுடைய நல்ல உள்ளத்துக்கு பலரும் உதவி செய்ய காத்திருக்க, அவனோ எனக்கு உதவிகள் வேண்டாம். ரஜினி அங்கிளை பார்க்கனும் என்றான்.

இத்தகவலை அறிந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் ரஜினிக்கு தகவலை தெரிவித்தனர்.

அதன்படி ஈரோட்டில் இருந்து தன் வீட்டுக்கு அந்த சிறுவனை வரவைத்து அவனை பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

அந்தச் சிறுவனின் செயலைப் பாராட்டி அவனுக்கு ஒரு தங்க சங்கிலியையும் பரிசாக வழங்கினார்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி…

“பணத்துக்காகக் கொலை, கொள்ளை எனப் பல விசயங்கள் நடக்கும் இந்தக் காலகட்டத்தில், யாசின் தனக்கு கிடைத்த பணத்தை எண்ணுடையது இல்லை எனப் திருப்பி தந்துள்ளான்.

இந்தக் குணம், இந்த மனம் இதை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இவனைப் பெற்றவர்கள் இவ்வளவு பண்பானவனாக வளர்த்தவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

தற்போது சிறுவன் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். அவன் அங்கேயே படிக்கட்டும் என நான் பெற்றோர்களிடம் கூறியுள்ளேன்.

யாசின் எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டுமென ஆசைப்பட்டாலும், அவனை என் பிள்ளைபோல் நினைத்து நான் படிக்க வைப்பேன்.

இவர்களைப் போன்ற குழந்தைகள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள் . காமராஜரின் பிறந்த நாளான இன்று யாசினை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார்.

Rajini met Yaasin who handed rupees 50 thousands to police from road

More Articles
Follows