தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று நடிகர் கமல் தன் 65வது பிறந்தநாளை கொண்டாடினார். அதன் தொடர்சியாக இன்று கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவன புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
இதில் மறைந்த இயக்குனர் கே. பாலசந்த்தர் அவர்களின் சிலை திறப்பு நடைபெற்றது. மேலும் கே.பி.யின் நெருங்கிய நண்பர் அனந்து அவர்களின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய விழாவில் ரஜினிகாந்த், வைரமுத்து, தனஞ்செயன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
இறுதியாக கமல்ஹாசன் பேசினார். அவர் பேசியதாவது…
எங்கள் ஆரம்பகாலங்களில் நானும் ரஜினியும் நிறைய பேசிக் கொள்வோம். எங்கள் பேச்சை கேட்டால் எங்கள் ரசிகர்களே ஆச்சரியப்படுவார்கள்.
ரசிகர்கள் அடித்துக் கொண்டாலும் நாங்கள் நட்பாக இருப்போம். நிச்சயம் இரண்டு அணிகள் இருந்தால்தான் மேட்ச் நன்றாக இருக்கும்.
ஒரு சமயத்தில் ரஜினி சினிமாவை விட்டு விலக இருந்தார். நான்தான் அவரை தொடர்ந்து நடிக்க சொன்னேன்.
நீங்க போய்ட்டால் என்னையும் போக சொல்லிடுவாங்க. நீங்க நடிக்கனும்.
ரஜினி நிறைய வெற்றி படங்களை கொடுத்துள்ளார். எனவே அதில் என் பங்கும் இருக்கிறது.
சினிமாவில் ரஜினியின் 40 வருட சாதனைக்கு ஐகான் விருது கொடுக்கவுள்ளனர். அவர் சினிமாவில் நடிக்க வந்த முதல் வருடமே ஐகான் ஆகிவிட்டார். எல்லாருக்கும் அந்த வாய்ப்பு அமையாது.
பராசக்தி என்ற முதல் படத்தில் சிவாஜிக்கு அது அமைந்துவிட்டது.
விரைவில் எங்கள் நிறுவனத்தின் 50வது படம் குறித்த அறிவிப்பு இருக்கும் “ என கமல் பேசினார்.
I have part in Rajinis success says Kamal at Rajkamal films event