தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாஜக. முக்கிய தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா அவர்கள் *ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதுதான் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும்.
ஆதலால் மக்கள் தங்கள் தாய் மொழிகளுடன் இந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது ஹிந்தி மொழியால் மட்டுமே முடியும்* என அண்மையில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.
இதற்கு தென்னிந்தியாவில் பலத்த எதிர்ப்பு உருவானது. நடிகர் கமலும்…
இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளேன். படத்தில் நடிப்பது என் தனிப்பட்ட ஆர்வம். எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார். ஆனால் இதுதான் மொழி என ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி பேசியதாவது…
எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் அது அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.
ஆனால், துரதிஷ்டவசமாக நம் நாட்டில் பொது மொழியை கொண்டு வர முடியாது. அதேபோல் இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்க கூடாது.
இந்தி மொழியை திணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தி திணிப்பை தமிழகம் மட்டுமல்ல தென் இந்தியாவில் எந்த மாநிலமும் ஏற்றுக்கொள்ளாது. வட இந்தியர்களே இந்த கொள்கையை ஏற்கமாட்டார்கள்.” என்றார்.
அதேபோல் பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணம் குறித்து ரஜினியிடம் கேட்டபோது…
“பேனர்கள் வைக்கக்கூடாது என எனது ரசிகர்களிடம் நான் ஏற்கனவே கூறிவிட்டேன். அதை அவர்கள் கடைபிடிப்பார்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
Hindi language cannot be Imposed says Rajinikanth