கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் மருத்துவ செலவை ஏற்று பிறந்தநாள் கொண்டாடிய ஹன்சிகா

கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் மருத்துவ செலவை ஏற்று பிறந்தநாள் கொண்டாடிய ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது பிறந்த நாளை, எப்பொழுதும் பயனுள்ள வகையில் கொண்டாடுவதே வழக்கம்.

இந்த வருடமும் அதற்கு விதிவிலக்கல்ல. சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகளின் ஆசிரமத்தில் அவர் பங்களிப்பில் அவரது பிறந்த நாள் கோலகலமாக கொண்டாடப்பட்டது.

அதே நேரத்தில் மும்பையில் தன் குடும்பத்துடன் இந்த சந்தோஷ தருணத்தை பகிர்ந்துக் கொண்டாடிய அவர், தான் மும்பையில் தத்தெடுத்த பெண்களுடன் தனது பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளார்.

தான் பொறுப்பெடுத்துகொண்ட கேன்சரால் பாதிக்கப்பட்ட 10 பெண் குழந்தைகளின் மருத்துவச் செலவுகளை முழுவதுமாக இவரே ஏற்றுக் கொண்டுள்ளார்.

அவர்கள் அனைவரையும் முழுமையாக குணமடைய செய்து சாதாரண வாழ்க்கைக்கு கொண்டு வரும் முயற்சியில் தற்போது உள்ளார்.

மேலும் சென்னை ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு தான் வரும் பொழுதெல்லாம் உணவு வழங்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்த முறை, பிரபஞ்சம் அவரது பிறந்த நாளை மேலும் சிறப்பு வாய்ந்ததாக மாற்றியுள்ளது.

ஒரு புறம் தனது பிறந்த நாளை ஆதரவற்றவர்களுடன், அர்த்தமுள்ளதாக அவர் கொண்டாட, திரையுலகை சேர்ந்த நண்பர்கள் அவரது பிறந்த நாளை பிரமாண்டமானதாக மாற்றியுள்ளனர்.

அவர் நடித்து வரும் My Name is Shruthi, மற்றும் பரபர திரில்லரான One Not Five Minutes படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவர் பிறந்த நாளை ஒட்டி கோலகலகமாக வெளியாகியுள்ளது.

மேலும் அவரை உற்சாகப்படுத்தும் விதமாக, நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50 வது படமான ” மஹா ” படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் அவரை பெருமைப்படுத்தும் வகையில் ” A Glimpse of Princess work ” என்ற தலைப்பில் இன்று மாலை 6 மணிக்கு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட உள்ளார்.

அனைத்து புறங்களில் இருந்து வாழ்த்து மழையிலும், புகழ் மழையிலும் நனைந்து வருகிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி.

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது பிறந்த நாளை ஒட்டி, பொது மக்களிடம் சில வேண்டுகோளை வைத்துள்ளார்.

மக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் , தங்களது கைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், உயிரை பறிக்க கூடிய கொரோனா நோய்க்கு எதிராக செயல்படும் தடுப்பூசியை, அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும், என அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Hansika provides money for cancer affected student

வெந்து தணிந்தது காடு.; நொந்து நூடூல்ஸ் ஆகும் சிலம்பரசன் படக்குழுவினர்

வெந்து தணிந்தது காடு.; நொந்து நூடூல்ஸ் ஆகும் சிலம்பரசன் படக்குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயர் வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் பழைய தலைப்பை நீக்கிவிட்டு புதிய தலைப்பான ‘வெந்து தணிந்தது காடு’ என தலைப்பிட்டு சில தினங்களுக்கு முன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

எவருமே எதிர்பாராத வகையில் சிம்பு ஸ்லிம்மாகி பாலா பட நாயகன் போல இருந்தார்.

இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் நாவல் ஒன்றை தழுவி உருவாகிறதாம்.

இதன் படப்படிப்பும் திருச்செந்தூரில் தொடங்கி விட்டது.

இந்த நிலையில் இதே தலைப்பில் ஒரு படம் தயாராகி உள்ளது. இது இலங்கை தமிழர்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எழுத்தாளர் கவிதா பாரதி தெரிவித்துள்ளதாவது…

“இயக்குனர் கவுதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள். மதிசுதா என்பவர் ஈழத்து திரைக்கலைஞன். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தம்பி, வேறு எந்தத் தொழிலையும் பாராமல் திரைத்துறைக்காகத் தன்னை அர்பணித்துக் கொண்ட இளைஞன். உலகளவில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

எனினும் ஈழத்திரையுலகம் வணிக ரீதியாக வருமானம் தருமளவுக்கு விரிந்து பெருகவில்லை. ஒருபுறம் தனது சொந்த வாழ்க்கைக்கும், மறுபுறம் படத்தயாரிப்புச் செலவுகளுக்கும் சிரமமான சூழலிலேயே தம்பி மதிசுதா செயல்படுகிறான் இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் சிறு அளவில் நிதிதிரட்டிப் படமெடுத்து அதனை வெளியிடப் போராடிக் கொண்டிருக்கிறார்.

அந்த படத்தின் பெயர், வெந்து தணிந்தது காடு. இந்நிலையில் இதே தலைப்பில் தங்கள் படத்திற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனால் ஓடிடி தளத்தில் படத்தை விற்பதில் சிக்கல் நேர்ந்துள்ளது. மதிசுதாவின் படம் குறித்த தகவல் உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.

யானையின் காலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழந்துவிடக்கூடாது.

இவ்வாறு கவிதா பாரதி தெரிவித்துள்ளார்.

vendhu thaninthathu kaadu team is in trouble

அபராதம் கட்டிய சிவகார்த்திகேயன் படக்குழுவினர்.; ‘டான்’ டீம் தடுப்பூசி போட்டார்களா? என விசாரணை

அபராதம் கட்டிய சிவகார்த்திகேயன் படக்குழுவினர்.; ‘டான்’ டீம் தடுப்பூசி போட்டார்களா? என விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டான்’.

லைகா புரொடக்ஷன் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் சிவகார்த்திகேயனுடன் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன், நாயகி பிரியங்கா, ஷிவாங்கி, ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ஊர் மக்கள் நூற்றுக்கணக்கில் வேடிக்கை பார்க்க திரண்டனர்.

அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை எனவும் நிறைய பேர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை எனவும் சொல்லப்படுகின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆனைமலை தாசில்தார் விஜயகுமார் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளனர்.

இதன் பின்னர் காவலர்கள் உதவியுடன் மக்களை கலைந்து போகச் செய்தனர்.

தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனரா? என அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இத்துடன் ‘டான்’ படக்குழுவினருக்கு ரூ 10,000/- அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

Fine for Sivakarthikeyan’s new film Don

கர்ப்பம் தரித்த உடும்பை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்த சிம்பு அம்மா

கர்ப்பம் தரித்த உடும்பை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்த சிம்பு அம்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் அவர்களின் மனைவியும், சிலம்பரசனின் தாயாரும் முன்னாள் நடிகையுமான உஷாவின் டி.ஆர்.கார்டன் சென்னை மதுரவாயல் அருகே உள்ளது.

கடந்த சில நாட்களாக டி.ஆர்.கார்டனில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில், ஒரு உடும்பு அந்த இடத்தில் பதுங்கி இருப்பதை கண்ட பணியாளர்கள் தயாரிப்பாளர் உஷா ராஜேந்தரிடம் உடனே தெரிவித்தனர்.

உடனே விரைந்து வந்த அவர் உடும்பு கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தார்.

மதுரவாயல் காவல் நிலையத்தை அணுகி உடும்பு இருப்பதாக கூறியதும், வேளச்சேரியில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுக்கு உடனே விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் பாதுகாப்பாக அந்த உடும்பை எடுத்து சென்றனர்.

தாய்மை குணத்துடன் உடும்பின் நிலை கண்டு உடனே தகவல் தெரிவித்த உஷா ராஜேந்தருக்கு காவல் துறையினரும், வனவிலங்கு அதிகாரிகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Police and forest officers thanked Usha Rajendar

SC ஜாதியினர் கிரிமினல்ஸ்.; மீரா மிதுன் எல்லை மீறிய பேச்சு.; 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு

SC ஜாதியினர் கிரிமினல்ஸ்.; மீரா மிதுன் எல்லை மீறிய பேச்சு.; 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை மாடல் என பெயர் பெற்றவர் மீரா மிதுன்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.

கடந்த சில மாதங்களுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

சில தினங்களுக்கு முன்… பல நடிகைகள் தன்னுடைய முகத்தை தான் பயன்படுத்துகிறார்கள் என்வும் கூறினார். மீரா மிதுன் .

எஞ்சாமி புகழ் பாடகி தீ-யும் தன்னுடைய முகத்தை பயன்படுத்துவதாக கூறி இருந்தார்.

இதுகுறித்து வீடியோவில்.. சந்தோஷ் நாராயணன் உங்க பொண்ணு ஏன்? என் முகத்தை யூஸ் பண்றங்க.

அவரோட ஒரிஜினல் மூஞ்சி எல்லாருக்கும் தெரியும். உங்க ஒரிஜினல் மூஞ்ச காட்ட அவ்ளோ அசிங்கமா இருக்கா என்று கூறி இருந்தார்.

இத்துடன் SC இனத்தவர்களை விமர்ச்சித்துள்ளார்.

மீரா மிதுன் பேசியதாவது…

, “பொதுவாக நான் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி பேசுவது இல்லை. ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற மாதிரி வருகிறது என்றால், எல்லா தாழ்த்தப்பட்ட மக்களும் தப்பான, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அதனால்தான் அவர்களுக்கு நிறைய பிரச்னைகள் வருகிறது.

திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள் எல்லா வேலையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை” என பேசியுள்ளார்.

இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மேலும் மீராவை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பலரும் கூறி வருகின்றனர்.

மீரா மிதுன் மீது சென்னை வெப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு அளித்த புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன் மீது கலகம் செய்ய தூண்டுவது, சாதி, மத விரோதத்தை தூண்டுவது, இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குவது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Meera Mithun booked over derogatory remarks against SC peoples

ரசிகர்களுக்கு சேலஞ்ச் விடுத்த மகேஷ் பாபு.; நாடு நல்லா இருக்க ரஜினி விஜய் அஜித் சூர்யா செய்வார்களா.?

ரசிகர்களுக்கு சேலஞ்ச் விடுத்த மகேஷ் பாபு.; நாடு நல்லா இருக்க ரஜினி விஜய் அஜித் சூர்யா செய்வார்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகேஷ்பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து வரும் படம் ‘சர்காரு வாரிபாட்டா’.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு 2022 ஜனவரியில் திரைக்கு வரும் என தெரிகிறது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 9-ம் தேதியான நாளை மகேஷ் பாபுவின் பிறந்தநாள் வருகிறது.

இதனையொட்டி பசுமை இந்தியா சேல்ச் விடுத்துள்ளார் மகேஷ் பாபு.

அதில்,…” நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை கொண்டாட எனது பிறந்தநாளில் தலா 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் போட்டோக்களை எனக்கு சமூக வலைத்தளங்களில் எனக்கு டேக் செய்து அனுப்புங்கள்” என தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.

தமிழ் நாயகர்களின் ரசிகர்கள் கட் அவுட் பிளக்ஸ் பேனரை வைப்பதை தவிர்த்து இது போல செய்தால் நாடும் வளமாகும். சம்பந்தப்பட்ட நடிகர்கள் செய்வார்களா.?

Mahesh Babus Go Green Challenge to his fans to celebrate his birthay

More Articles
Follows