‘விஜய்சேதுபதிக்கே சவால் விடுவார் ஜிவி.பிரகாஷ்…’ பாண்டிராஜ் பேச்சு

‘விஜய்சேதுபதிக்கே சவால் விடுவார் ஜிவி.பிரகாஷ்…’ பாண்டிராஜ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash vijay sethupathiiஇயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் இயக்கியுள்ள படம் புரூஸ் லீ.

கெனன்யா பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், கீர்த்தி கர்பன்ந்தா, ஆனந்த்ராஜ், ராமதாஸ், பால சரவணன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் நேற்று வெளியானது.

இதற்கான விழாவில் இயக்குனர் பாண்டிராஜ் கலந்துக் கொண்டு தன் உதவியாளரை வாழ்த்தி பேசினார்.

அப்போது… இவ்வருடம் மட்டும் விஜய் சேதுபதி படங்கள் 6 படங்கள் வெளியாகிவிட்டன்.

அடுத்த வருடம் விஜய்சேதுபதிக்கே சவால் விடுவார் ஜி.வி.பிரகாஷ். மாதம் ஒரு படத்தை ரிலீஸ் செய்வார்” என்று பேசினார்.

தனுஷின் நிஜ தம்பி கண்ணனுக்கு உதவும் ஆர்கே. சுரேஷ்

தனுஷின் நிஜ தம்பி கண்ணனுக்கு உதவும் ஆர்கே. சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kodai mazhaiஇன்றைய சினிமாசூழலில் எல்லா திரையரங்குகளையும் பெரிய படங்கள் ஆக்கிரமித்துக் கொள்வதால் சின்ன படங்கள் மட்டுமல்ல சிலநேரம் சிறப்பான, தரமான படங்கள் கூட வெளியிட முடியாமல் சிக்கலுக்குள்ளாகித் தவிக்கின்றன.

குறைந்த அளவிலேயே திரையரங்குகள் கிடைத்து அடையாளம் பெற முடியாமல் போய் விடுகின்றன.

‘கதிரவனின் கோடைமழை’ அப்படி ஒரு படம்தான். கிராமத்துக் கதையான அந்தப்படம், மார்ச் 2016-ல் வந்த படம். அப்போது ஊடகங்களில் குறைகள் பெரிதாகப் பேசப்படாமல் வரவேற்கப்பட்ட படம்.

ஆனால் திரையரங்குகள் கிடைக்காத பிரச்சினையால்அந்தப்படம் பாதிக்கப்பட்டது. அதனால் படம் வந்ததே யாருக்கும் தெரியவில்லை.

இருந்தாலும் இப்போது அப்படத்துக்கு மறு ஜென்மம் கிடைத்து இருக்கிறது.

கதிரவன் இயக்கத்தில் கண்ணன், (ஸ்ரீபிரியங்கா இப்போது ஸ்ரீஜா) இமான் அண்ணாச்சி நடித்த படம் தான்’கதிரவனின் கோடைமழை’.

யாழ் தமிழ்த்திரை சார்பில் கு.சுரேஷ்குமார். த.அலெக்ஸாண்டர் தயாரித்திருந்தனர்.

எங்கிருந்தோ வரும் ஒருவரால்தான் எல்லாவற்றிற்கும் விடிவு பிறக்கும்.

ராமனால் அகலிகை சாப விமோசனம் பெற்றது புராணக்கதை. அப்படி வந்தவர் தயாரிப்பாளர் ‘ஸ்டுடியோ 9’ சுரேஷ்.

அவர் இப்படத்துக்கு நேர்ந்த கதியை அறிந்தவர், படத்தைப் பார்க்கலாம் என்றிருக்கிறார்.

படத்தைப் பார்த்தவர் படம் இந்தளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

இதை எல்லாரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.நல்லபடியாக இந்தப்படத்தைக் கொண்டு சேர்த்தால் ஓடும். நானே வெளியிடுகிறேன். ”என்றிருக்கிறார்.

படம் வருகிற வெள்ளிக்கிழமை (நாளை அக். 21 தேதி) மீண்டும் வெளியாகிறது.

kodai mazhai

படம் பற்றி இயக்குநர் கதிரவன் பேசும்போது ‘பேரன்பு என்பது பெருங்கோபத்தைவிட ஆபத்தானது’ என்பதைச் சொல்கிற கதை.

படத்தில் வில்லன் என்று யாருமே கிடையாது. சூழல்தான் எல்லாரையும் மாற்றுகிறது.

அதிக அன்பு கொண்ட அண்ணனும் தங்கையும் படத்தின் பிரதானம் என்றாலும் கதையில் காதலும் உள்ளது.

இதில் நாயகனாக நடித்துள்ள கண்ணன் நடிகர் தனுஷின் சித்தப்பா மகன். அதாவது கஸ்தூரிராஜாவின் தம்பி சேதுரா மனின் மகன். எனவே தனுஷுக்கு தம்பி முறை ஆவார்.

நாயகியாக வரும் ஸ்ரீபிரியங்காதான் தங்கை. அண்ணனாக இயக்குநர் மு.களஞ்சியம் நடித்திருக்கிறார். ” என்கிறார் படத்தை எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள கதிரவன். இவர் பிரபுதேவா உள்ளிட்ட பலரிடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றவர் .

முழுப்படமும் சங்கரன் கோவிலில் எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாதிப்படம் கோடைக் காலத்திலும் மறுபாதிப்படம் மழைக்காலத்திலும் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் கவிஞர் வைரமுத்து மெட்டுக்கு மட்டுமல்ல எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்தும் பாடல்கள் எழுதியுள்ளது புதிய முயற்சி. படத்திலுள்ள நான்கு பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். இசை சாம்பசிவம். பின்னணிஇசை பவன்.

இப்படம் பல பகுதிகளில் வெளியாகவே இல்லை. சில ஊர்களில் சனி. ஞாயிறு காலைக் காட்சி என்று சுருங்கிப் போனது. மறுபிறவி எடுத்துள்ள இப்படம் இப்போது சில திருத்தங்களு டன் புது அவதாரம் எடுத்து வெளிவருகிறது.

‘புலி’யை தொடர்ந்து குழந்தைகளுக்காக உருவாகியுள்ள படம் ‘சாயா’

‘புலி’யை தொடர்ந்து குழந்தைகளுக்காக உருவாகியுள்ள படம் ‘சாயா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sonia agarwalவிஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் புலி. இப்படத்தில் உள்ள கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளை மிகவும் கவர்ந்திருந்தது.

தற்போதும் அதே குழந்தைகளை மனதில் வைத்து கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கி வருகின்றனர் சாயா படக்குழுவினர்.

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் சாயா.

இப்படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும் என்கிறார் இயக்குனர்.

ஆத்மா என்பது எப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்தபின் அவன் ஆத்மா அவனது உடலை பார்க்க முடியுமா? பார்த்தால் என்ன செய்யும்? இந்த ஆத்மா ஒரு மாணவியின் சம்பந்தப்பட்டது.

ஆத்மா விட்ட சவாலை மாணவியின் ஆத்மா ஜெயித்துக் காட்டியதா? என்பதற்கான விடை படத்தில் இருக்கிறது என்கிறார் படத்தின் இயக்குனர் V.S. பழனிவேல்.

இவரே படத்தின் கதை, பாடல்கள், பின்னணி இசையையும் கவனித்திருக்கிறார்.

படம் முடிவடைந்து கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகிறதாம். குழந்தைகளை கவர்வதற்காகவே கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து அறுபது நாட்களுக்கு மேல் பணிபுரிந்து வருகின்றனர்.

Y.G.மகேந்திரன் ஆத்மாவின் தந்தையாகவும், பாய்ஸ் ராஜன் தலைமையாசிரியராகவும் நடித்திருக்கிறார்கள்.

saaya movie stills

பஞ்சாயத்தார்களாக ஆர். சுந்தர்ராஜனும், பயில்வானும் கலக்கி உள்ளார்கள்.

இதற்கிடையே வாய் தவறி சொன்ன ஒரு வார்த்தையால் ஆத்மாவாக மாறி படம் முழுக்க சேட்டைகள் செய்திருக்கிறார்கள் நெல்லை சிவாவும், மனோகரும்.

வில்லன்களான பாலாசிங், மூகாம்பிகை ரவி, கராத்தே ராஜா ஆகியோர் இப்படத்தில் கிராமத்து பண்ணையார்களாக மிரட்டியிருக்கிறார்கள்.

புதுமுகம் சந்தோஷ் கண்ணா, நடிப்பிலும் சண்டைக்காட்சியிலும் திறமையாக நடித்துள்ளார். நாயகி டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த காயத்ரி படம் முழுக்க அனுபவ பட நடிகை போல் அசத்தி உள்ளார்.

சோனியா அகர்வால் விஜய சாந்தி இடத்தை நிரப்பும் அளவுக்கு, நிறைய காட்சிகளில் டூப் வேண்டாம் என அதிரடி நாயகியாக நடித்துள்ளாராம்.

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து வெயிடுகிறார் V.S. சசிகலா பழனிவேல். நவம்பர் வெளியீடாக வெளிவரவிருக்கிறது சாயா திரைப்படம். படத்திற்கு இசை ஜான் பீட்டர்.

விஜய்சேதுபதி ரசிகர்களை கன்ப்யூஸ் செய்த ‘கவண்’

விஜய்சேதுபதி ரசிகர்களை கன்ப்யூஸ் செய்த ‘கவண்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi madonnaகே.வி.ஆனந்த் இயக்கிய பல படங்களின் தலைப்புகள் ‘ன்’ என்றே எழுத்திலேயே முடியும்.

‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘மாற்றான்’, ‘அனேகன்’ ஆகிய படங்கள் இவரது இயக்கத்தில் வெளியானது.

ஆனால் ‘கோ’ படம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. கோ என்றால் அரசன் என்றும் பொருள்படும். (எப்பூடி கண்டு பிடிச்சோம்ல…)

இந்நிலையில் தற்போது இயக்கி வரும் படத்தின் கவண் என பெயரிட்டுள்ளார்.

இப்படத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த தலைப்பின் அர்த்தம் தெரியாமல் விஜய்சேதுபதி ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.

எனவே அவர்களுக்காக நாம் விசாரித்ததில்…

கவண் என்றால்… மனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னரே, அவன் தயாரித்த ஆயுதம் ‘கவண்’.

அதாவது இலக்கைக் குறி பார்த்து, கல் எறியும் கருவியாகப் பயன்பட்ட ஆயுதம்தான் கவண் ஆகும்.

‘கவண்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்த்துடன் இணைந்து சுபா மற்றும் கபிலன் வைரமுத்து இணைந்து பணியாற்றியுள்ளனர்.

‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சூட்டிங் பேக்-அப்; மீண்டும் செக்-அப்… அமெரிக்கா பறந்தார் ரஜினி

சூட்டிங் பேக்-அப்; மீண்டும் செக்-அப்… அமெரிக்கா பறந்தார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini shankarகபாலி படத்தை தொடர்ந்து ஷங்கரின் 2.ஓ படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கபாலி பட வெளியீட்டின் போது, உடல்நல குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தமிழகம் திரும்பினார் ரஜினி.

பின்னர் மீண்டும் ‛2.O’ படப்படிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.

சில நாட்கள் நடித்துவிட்டு, தற்போது மீண்டும் சிகிச்சை பெற அமெரிக்கா சென்றிருக்கிறார்.

ஓரிரு வாரங்கள் ஓய்வு எடுத்து விட்டு சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘விஜய்க்கிட்ட புடிச்ச விஷயங்களை லிஸ்ட் போடும் ‘பைரவா’ பரதன்

‘விஜய்க்கிட்ட புடிச்ச விஷயங்களை லிஸ்ட் போடும் ‘பைரவா’ பரதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa vijayஅழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார் இயக்குனர் பரதன்.

தற்போது இவர் பைரவா படப்பிடிப்பில் பரபரப்பாக காணப்படுகிறார்.

இவரது சமீபத்திய பேட்டியில் விஜய் பற்றி கூறியதாவது…

சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப அமைதியா இருக்கார். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார்.

காலையில சூட்டிங் வந்தார்ன்னா பேக் அப் சொல்றவரைக்கும் இருப்பார்.

நடந்து முடிந்த எதையும் பேசமாட்டார். மத்தவங்கள குறை சொல்ற பழக்கம் இல்லை.

இன்னைக்கு நம்ம வேலைய சிறப்பாக பண்ணிட்டோமா அது போதும் என நினைப்பவர் அவர்.

இது எல்லாம் விஜய்க்கிட்ட கத்துக்க வேண்டிய விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.

More Articles
Follows