‘370’ பெயரில் பாபு கணேஷின் 48 மணி நேர கின்னஸ் படம்; மோடிக்கு அர்ப்பணிப்பு

‘370’ பெயரில் பாபு கணேஷின் 48 மணி நேர கின்னஸ் படம்; மோடிக்கு அர்ப்பணிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Guinness Babu Ganesh shot 370 movie within 48 hours நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் உள்ளிட்ட 14 கிராப்ட்களை ஒரே நேரத்தில் கையாண்டு கின்னஸ் உலக சாதனைப் படைத்திருக்கும் நடிகர் பாபு கணேஷ், புதிய சாதனையாக 48 மணி நேரத்தில் முழு படத்தையும் முடித்திருக்கிறார்.

‘370’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில், உலக ஆண் அழகன் போட்டியில் 6 வது இடம் பிடித்த ரிஷிகாந்த் ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக பெங்காலி நடிகை மெகாலி, நிஷா, உலக அழகி பட்டம் பெற்ற திருநங்கை நமீதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

வில்லன்களாக பெசண்ட் நகர் ரவி, கராத்தே கோபால், ராஜ்கமல், வெற்றி, சிவன் ஸ்ரீனிவாசன், ரோஜா, போகி பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சிறப்பு வேடத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் நடித்திருக்கிறார்.

சுவாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தாக்குவார் தங்கம், விஜய் ஆகியோர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ரமாதேவி மற்றும் அபிநயஸ்ரீ நடனம் அமைத்துள்ளனர்.

வெறும் 48 மணி நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்டிருக்கும் இப்படம் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர். அத்துடன் நம் இந்திய தேசத்திற்கான படமாகவும் உருவாகியிருக்கிறது.

தற்போது படத்தை முடித்துவிட்டு, படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பாபு கணேஷ் முதல் முறையாக நேற்று பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் தாணு கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது… “பாபு கணேஷ் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்ளார். ஆனால், இந்த புதிய சாதனை ஆச்சரியமாக இருக்கிறது.

48 மணி நேரத்தில் ஒரு படத்தை முடித்திருக்கிறார் என்றால் அவர் எப்படிப்பட்ட திட்டங்களை வகுத்திருப்பார். புதிதாக படம் தயாரிக்க வருபவர்கள் பாபு கணேஷ் போன்றவர்களிடம் திட்டமிடுதல் குறித்து கேட்டு அறிந்துக் கொள்ள வேண்டும். இந்த ‘370’ படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய பாபு கணேஷ்…

“இப்படி ஒரு படம் நான் எடுக்கப் போகிறேன், என்ற போது அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இது முடியுமா? என்றும் கேட்டார்கள், ஏன் படத்தில் நடித்தவர்களுக்கே அந்த சந்தேகம் இருந்தது. சரியான திட்டமிடுதல் இருந்தால் நிச்சயம் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

இந்த படத்தி ஹீரோவாக நடித்திருக்கும் ரிஷிகாந்த் (பாபு கணேஷின் மகன்), கமாண்டோ வேடத்தில் நடித்திருக்கிறார். அதற்காக அவர் காட்டிய ஈடுபாட்டை பார்த்து நானே அசந்துவிட்டேன்.

இந்த படம் ரிலீஸான பிறகு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி தயாரிப்பாளர்கள் அனைவரும் ரிஷிகாந்தை ஹீரோவாக வைத்து படம் பண்ண விரும்புவார்கள். அதேபோல் நாயகி மெகாலியும் சிறப்பாக நடித்திருக்கிறார். ” என்றார்.

நாயகி மெகாலி பெங்காலி பெண்ணாக இருந்தாலும் தமிழில் பேசினார். அப்போது இந்த 370 படத்தை பாரத பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக பேசினார்.

Guinness Babu Ganesh shot 370 movie within 48 hours

Guinness Babu Ganesh shot 370 movie within 48 hours

விஸ்வாசம் போல ‘ஹீரோ’ன்னு சொன்னாரே KJR..; கடுப்பில் SK ரசிகர்கள்

விஸ்வாசம் போல ‘ஹீரோ’ன்னு சொன்னாரே KJR..; கடுப்பில் SK ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan fans upset with Hero movie flop result சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடீயோஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்ட அளவில் வெளியிட்டது.

ரஜினியின் பேட்ட படத்துடன் இந்த படம் மோதியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படமும் இந்த வருடத்தின் வெற்றிப் பட வரிசையில் இணைந்துள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தை இந்த நிறுவனம் தான் தயாரித்து வெளியிட்டது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இதன் நிறுவனர் ராஜேஷ் கூறும்போது..

அஜித் ரசிகர்களுக்கு விஸ்வாசம் படம் எப்படி அமைந்ததோ அதுபோல சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஹீரோ படம் அமையும் என கூறியிருந்தார்.

ஆனால் படம் படு தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் படமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் வெறும் அறிவுரையாக மட்டுமே உள்ளதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Sivakarthikeyan fans upset with Hero movie flop result

எங்களை மதிக்காத நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்யமாட்டோம்.. -திருப்பூர் சுப்ரமணியம்

எங்களை மதிக்காத நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்யமாட்டோம்.. -திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Distributor Tirupur Subramaniam talk about Top hero movie lossகோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:-

தமிழக அரசின் மாநில வரி 8%-ஐ வரும் பிப்ரவரி மாத்திற்குள் திரும்ப பெற வேண்டும், இல்லை என்றால் மார்ச் 1 ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும்.

பட தயாரிப்பாளர்கள் படம் வெளியான 100 நாட்களுக்குள் டிஜிட்டல் தளத்தில் (அமெசான், நெட் ப்ளிக்ஸ்) படத்தை வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் அந்த தயாரிப்பாளர்களின் படத்தை திரையரங்குகளில் இனி வெளியிட மாட்டோம்.

உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்வியை அந்தந்த நடிகர்களே ஏற்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும்.

தியேட்டர் அதிபர்களின் இந்த திடீர் தீர்மானம், திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள் தரப்பில், ‘சம்பளம் பெற்று நடிப்பவர்களிடம், இழப்பீடு கேட்பது சரியல்ல’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர், திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது.. ”மாவட்ட ஆட்சியருக்கே, 1 லட்சம் தான் சம்பளம். நடிகர்களோ, கோடிகளில் சம்பளம் பெறுகின்றனர். எங்கள் தீர்மானத்தை மதிக்காத நடிகர்கள் படங்களை திரையிட மாட்டோம்,” என கூறியுள்ளார்.

Distributor Tirupur Subramaniam talk about Top hero movie loss

இளையராஜாவுக்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது

இளையராஜாவுக்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayarajaஇந்த 40 ஆண்டுகளில் இளையராஜா பாடல்கள் இல்லாமல் தமிழர்கள் ஒரு நாளையும் கடந்திருக்க முடியாது.

அன்னக்கிளியில் தொடங்கி இதுவரை 1000 படங்களுக்கு இசையமைத்துவிட்டார்.

தற்போதும் சைக்கோ, தமிழரசன், துப்பறிவாளன் 2, கிளாப், மாமனிதன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார்

இந்த நிலையில், இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கவுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

இந்த விருதை வருகிற 2020 ஜனவரி மாதம் 15ம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் மீண்டும் போலீஸாக அதர்வா

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் மீண்டும் போலீஸாக அதர்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atharvaaபடத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இவருடைய தயாரிப்பில் வெளியான

மைக்கேல் ராயப்பன் தயாரித்த ‘ஈட்டி’ படத்தில் அதர்வா நாயகனாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் அதே தயாரிப்பாளருடன் இணைகிறார்.

இந்த படத்தில் அதர்வா போலீசாக நடிக்கிறார். ஏற்கனவே ‘100’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

ரவீந்த்ர மாதவா என்பவர் டைரக்டு செய்கிறார். இவர் டைரக்டர்கள் சுசீந்திரன், பூபதி பாண்டியன் ஆகியோருடன் உதவி டைரக்டராக இருந்தவராம்.

அனுஷ்கா நடித்த ‘பாகமதி’ படத்துக்கு வசனம் எழுதியும் இருக்கிறார்.

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் நாயகி இன்னும் தேர்வாகவில்லை.

பாலியல் தொல்லைக்கும் வைரமுத்துக்கு டாக்டர் பட்டம் தரலாம்… சின்மயி எதிர்ப்பு

பாலியல் தொல்லைக்கும் வைரமுத்துக்கு டாக்டர் பட்டம் தரலாம்… சின்மயி எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vairamuthu chinmayiதனியார் பல்கலைக்கழகம் SRM சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு நாளை டிசம்பர் 28 -ந் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

இந்த டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்க உள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது கடந்த ஆண்டே நிறைய பாலியல் புகார் அளித்திருந்தார் பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி.

இந்த நிலையில் டாக்டர் பட்டம் வழங்கவுள்ள நிகழ்ச்சி அழைப்பிதழை தனது டுவிட்டர் பகிர்ந்து வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்த பதிவில் கூறியிருப்பதாவது:- “9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் கொடுக்க போகிறாராம்.

துன்புறுத்தியவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. ஆனால் வெளியில் சொன்ன எனக்கு வேலை செய்ய தடை வழங்கப்பட்டுள்ளது.

கவுரவ டாக்டர் பட்டம் என்பது வைரமுத்துவின் மொழி ஆளுமைத் திறனுக்காக வழங்கப்படுகிறது.

இத்துடன் பாலியல் துன்புறுத்தலுக்காகவும் வைரமுத்துவுக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் சிறந்த ரோல் மாடலை உதாரணமாக காட்டியிருக்கீங்க. வெல்டன் SRM பல்கலைக்கழகம்” என கடுமையாக பதிவிட்டுள்ளார்.

“வைரமுத்து இந்த ஒரு வருடத்தில் அரசியல் மற்றும் கலைதுறை பெரியவர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் மீதான புகார் குறித்து எந்த விசாரணையும் இல்லை. நல்ல நாடு.. நல்ல மக்கள்” என்றும் கூறி உள்ளார்.

More Articles
Follows