ஜோதிகா-ராதாமோகன் இணையும் பட டைட்டிலை சொல்லி விஐபி ஆகுங்க!

ஜோதிகா-ராதாமோகன் இணையும் பட டைட்டிலை சொல்லி விஐபி ஆகுங்க!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Guess Jyothika Radha Mohan film title and be their VIP guestஜூன் 2018 முதல் சென்னையில் எங்கள் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

துமாரி சுலு என்று இந்தியில் வெற்றிகரமாக ஓடியப் படத்தை தமிழில் இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார்.

ஜோதிகா – விதார்த் இன்னும் பலர் நடிக்கின்றனர். நீங்கள் அனைவரும் படப்பிடிப்புத் தளத்துக்கு வரவேற்கப்படுகிறீர்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்.. படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை யூகித்துச் சொல்ல வேண்டும்.

அதற்கான் க்ளூ பின்வருமாறு:

1. தலைப்பு இரு வார்த்தைகள் கொண்டது.

2. ஒரு வார்த்தை ராதாமோகன் மற்றும் ஜோதிகாவுடன் தொடர்புடையது.

3. மற்றுமொரு வார்த்தை எஃப்.எம்., ரேடியோவின் பெயர்.

இப்போது விளையாட்டைத் தொடங்குங்கள். எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

சரியான பதில்களை யூகித்துச் சொல்லும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்பு தளத்துக்கு அழைக்கப்படுவார்கள்.

ஒருநாள் முழுவதும் படப்பிடிப்பு தளத்தில் நீங்கள் இருக்கலாம். மேலும், நடிகர், நடிகை மற்றும் படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

இப்போதே உங்கள் சிந்தனையைத் தட்டி விடுங்கள் உங்கள் படைப்பாற்றலைக் காட்டுங்கள்.

போட்டி, வரும் ஏப்ரல் 20-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர் படத்தின் தலைப்பை ஒரு பிரபலம் அறிவிப்பார்.

Guess Jyothika Radha Mohan film title and be their VIP guest

FORM LINK : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfJq1N-sPDPy4T-dbbUJZ_dpYgkrH2DBgD-iLz7yQO19A9G3g/viewform

திருமணமான நடிகர்கள் மட்டும் முத்தமிட்டு நடிக்கலாமா? சமந்தா கேள்வி

திருமணமான நடிகர்கள் மட்டும் முத்தமிட்டு நடிக்கலாமா? சமந்தா கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samantha clarifies about Kiss scene in Rangasthalam movieசுகுமார் இயக்கத்தில் ராம்சரண்-சமந்தா நடித்துள்ள படம் ‘ரங்கஸ்தலம்’.

அண்மையில் வெளியான இந்த தெலுங்கு படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

’பாகுபலி’க்குப் பிறகு தெலுங்கில் அதிக வசூல் ஈட்டிய படம் இது என்கிறார்கள். இந்தப் படம் தமிழ், மலையாளம், இந்தி, போஜ்புரி மொழிகளில் டப் செய்து வெளியிடப்படுகிறது.

இந்தப் படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடந்தது. ராம் சரண் மற்றும் சமந்தாவின் அர்ப்பணிப்பையும் அனைவரும் புகழ்ந்து பேசினர்.

இந்த பட வெற்றியால் மகிழ்ச்சியான தயாரிப்பாளர் இப்பட இயக்குனருக்கு ரூ.10 லட்சம் பரிசு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ஒரு காட்சியில் முத்தம் கொடுப்பது போல் நடித்திருந்தார் சமந்தா. இவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இதுகுறித்து செய்தியாளர் கேட்ட்டபோது… “திருமணம் ஆன நடிகர்கள் முத்தக்காட்சியில் நடித்தால் மட்டும் யாரும் கேள்வி கேட்பது இல்லை. அதுவே நடிகைகள் என்றால்… ஏதேதோ கேட்கிறீர்கள்.

நான் ராம்சரண் கன்னத்தில் தான் முத்தமிட்டேன். அதை ‘கேமரா டிரிக்ஸ்’ மூலம் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டது போல் மாற்றிவிட்டார்கள் என சமந்தா சமாளித்தார்.

Samantha clarifies about Kiss scene in Rangasthalam movie

தயாரிப்பாளர் விஜய்சேதுபதிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

தயாரிப்பாளர் விஜய்சேதுபதிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijay sethupathiஒரு பக்கம் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார் விஜய்சேதுபதி.

இந்த நிறுவனம் சார்பில் முதன்முதலாக ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தை தயாரித்து நடித்தார்.

பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றிய லெனின் பாரதி இயக்கியிருக்கிறார்.

இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், துளுவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில், பார்வையாளர் மற்றும் நடுவர் குழுவின் சார்பாக சிறந்த படத்திற்கான விருதை வென்றுள்ளது.

ஒரு தயாரிப்பாளராக விஜய் சேதுபதிக்கு இந்த படம் சர்வதேச அங்கீகாரம் வாங்கிக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவையில்லாமல் கோகுல் இயக்கும் ஜுங்கா படத்தை தயாரித்து வருகிறார் விஜய்சேதுபதி. இதில் நாயகியாக சாயிஷா நடித்து வருகிறார்.

பயங்கரமான சாமி; விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த படக்குழு

பயங்கரமான சாமி; விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

saamy squareஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்து வரும் `சாமி ஸ்கொயர்’.

இதில் விக்ரம் அப்பா, மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

சாமி படத்தில் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவ்வின் மகனாக, பாபி சிம்ஹா இந்த படத்தில் 3 கெட்டப்புகளில் வில்லனாக நடித்து வருகிறார்.

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இதன் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டிய போதிலும் திரையுலக வேலை நிறுத்த போராட்டத்தால் எல்லா படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விக்ரம் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படத்தில் இருந்து மாஸான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்தை படக்குழு தெரிவித்துள்ளது.

அதில் சாமி பயங்கரமானவர் தான், ஆனால் விக்ரம் இனிமையானவர், நடைபெறும் ஸ்டிரைக்கால் அவரது ரசிகர்களுக்காக சிறப்பு விருந்து எதுவும் அளிக்க முடியவில்லை. எனவும் படக்ழுகு தெரிவித்துள்ளது.

ஸ்டிரைக் முடியும் வரை படம் தொடர்பாக டீசர், பர்ஸ்ட் லுக் எதுவும் வெளியிடக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது இங்கே நினைவு கூறத்தக்கது.

 

Thameens Films‏ @ThameensFilms

#Saamy is terrific but he is very sweet.. Just for you #Chiyaan fans.. #HBDChiyaanVikram With love – Team #SaamySquare #Saamy2

பாரதிராஜா இனி நீ பச்சோந்தி ராஜா; காரணங்கள் சொல்லும் ரஜினி ரசிகர்கள்

பாரதிராஜா இனி நீ பச்சோந்தி ராஜா; காரணங்கள் சொல்லும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bharathiraja became like Chameleon says Rajinikanth fansகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.

அப்போது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் போலீசாரை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டு அது வைரலானது.

இதை கண்டிக்கும் வகையில் ரஜினி தன் ட்விட்டரில் “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் இருக்கும் காவலர்கள் தாக்கப்படுவது தான்” என பதிவிட்டு இருந்தார்.

எதற்கும் வாய் திறக்காத ரஜினிகாந்த், இதற்கு மட்டும் வாய் திறக்கிறாரா? என கடுமையான கண்டனங்களை பாரதிராஜா தெரிவித்திருந்தார்.

மேலும் ரஜினி தமிழர் இல்லை. அவர் தமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழ்கிறார். கன்னடர்களின் தூதுவர் அவர் எனவும் விமர்சித்திருந்தார்.

பாரதிராஜாவின் இந்த அறிக்கை ரஜினி ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

எனவே அவர்களும் பாரதிராஜாவை விமர்சித்து வருகின்றனர்.

பாரதிராஜா தன் மகன் மனோஜை சினிமாவில் (தாஜ்மஹால் என்ற படத்தில்) அறிமுகப்படுத்தும்போது ரஜினியை வைத்தே அந்த விழாவை நடத்தினார்.

அதுபோல் பாரதிராஜா திரைப்பட நடிப்பு பயிற்சி நிறுவனம் ஒன்றை தொடங்கும்போது அதையும் ரஜினியை வைத்தே திறக்க செய்தார்.

இப்படி தன் வாழ்க்கையில் ஒவ்வொரு முக்கியமான நிகழ்வுகளுக்கும் ரஜினி என்ற சிறந்த மனிதர் தேவைப்பட்டார். ஆனால் தற்போது ரஜினியை தரக்குறைவாக விமர்சிக்க இவருக்கு என்ன தகுதியுள்ளது.?

ரஜினிகாந்த் வேறுமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்ததாக கூறப்பட்டாலும் அவரை வேறு மாநிலத்தவர்கள் மதராசி என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் இங்குள்ளவர்கள்தான் அவரை கன்னடர் என்று சொல்கிறார்கள்.

ரஜினிகாந்த் தன் மனைவியை தமிழ்நாட்டில் இருந்துதான் தேர்ந்தெடுத்தார். அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் என்ற தமிழரை மணமுடிக்க செய்தார். அவர் நினைத்தால் அதை தடுத்து இருக்கலாம். ஆனால் தமிழனாக வாழ்ந்து காட்டி வருகிறார்.

ஆனால் தமிழ் தமிழன் என்று வாய் கிழிய பேசும் பாரதிராஜா தன் மகன் மனோஜ்க்கு மருமகளாக கேரளத்து நடிகை நந்தனாவைதான் மண முடிக்க செய்தார். அப்போது அவரது தமிழ் பற்று என்ன ஆனது?

இப்படி பச்சோந்தி போல மாறிவரும் பாரதிராஜா இனி பச்சோந்தி ராஜா என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Director Bharathiraja became like Chameleon says Rajinikanth fans

manoj nandhana

மீண்டும் நடிக்க வருவார் கேப்டன் விஜயகாந்த்; பிரேமலதா உறுதி

மீண்டும் நடிக்க வருவார் கேப்டன் விஜயகாந்த்; பிரேமலதா உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Captain Vijayakanth will come again to act in movies says Premalathaவிஜயகாந்த் திரையுலகத்திற்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது.

தற்போது அரசியல் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருவதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் கலையுலகில் 40 ஆண்டுகளை கடந்துள்ள விஜயகாந்த்துக்கு அவரது தேசிய முற்போக்கு திராவிட கட்சி சார்பில் பாராட்டு விழா நடந்தது.

அந்த விழாவில் இயக்குனர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, சத்யராஜ், கலைப்புலி தாணு உள்ளிட்ட பல திரையுல பிரபலங்கள் கலந்துக் கொண்டு வாழ்த்தினர்.

அப்போது பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வரவேண்டும். அவருடன் நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

அதன்பின்னர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசும்போது… தற்போது சினிமா உலகம் கடுமையான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

அழிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது. தன்னை வாழவைத்த சினிமாவை அவர் அழிய விடமாட்டார். எனவே மீண்டும் அவர் சினிமாவில் நடிப்பார்” என உறுதியளித்து பேசினார்.

Captain Vijayakanth will come again to act in movies says Premalatha

More Articles
Follows