சிம்புவின் டபுள் கெட்டப்பை டோட்டலாக மாற்றும் கௌதம் மேனன்

சிம்புவின் டபுள் கெட்டப்பை டோட்டலாக மாற்றும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Menon and Simbu to team up for 3rd time story updatesவிண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் முதன்முறையாக சிம்புவை இயக்கினார் கௌதம் மேனன்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா படத்திலும் இந்த கூட்டணி இணைந்தது.

ஆனால் இப்படம் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் 3வது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது என்பதை பார்த்தோம்.

இது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ஆம் பாகம் என சொல்லப்படுகிறது.

இதில் சிம்பு இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே மன்மதன், சிலம்பாட்டம் ஆகிய படங்களில் சிம்பு இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் சிம்புவை காட்டப் போகிறாராம் கெளதம்மேனன்.

Gautham Menon and Simbu to team up for 3rd time story updates

கதை திருடிய முருகதாஸ்.; பாக்யராஜ் கடிதத்தால் *சர்கார்* ரிலீசில் சிக்கல்.?

கதை திருடிய முருகதாஸ்.; பாக்யராஜ் கடிதத்தால் *சர்கார்* ரிலீசில் சிக்கல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar Story controversy Murugadoss and Bhagyaraj clash issueஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடித்துள்ள திரைப்படம் சர்க்கார்.

வருகிற நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று இந்த படத்தை திரைக்கு கொண்டு வரவிருக்கிறது சன் பிக்சர்ஸ்.
வெளிநாட்டில் வாழும் தொழில் அதிபரான விஜய், தேர்தலில் ஓட்டு போட தமிழ்நாடுக்கு வருகிறார். அவருடைய ஓட்டை வேறு யாரோ போட்டு விடுகிறார்கள்.

இதனால் ஆத்திரம் அடையும் விஜய், அரசியல்வாதிகளை எதிர்த்து களமிறங்குகிறார். அவர் அமைக்கும் சர்காரே இதன் ஒன்லைன்.

இந்தக் கதை தன்னுடையது எனவும் செங்கோல் என்ற தலைப்பில் இதை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன் எனவும் வருண் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் சர்கார் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு அக்டோபர் 30ஆம் தேதி வரை தடையில்லை எனவும், வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாகவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் சர்கார் கதையும், செங்கோல் கதையும் ஒன்றுததான்” என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் என்கிற முறையில் கே.பாக்யராஜ் அதிகாரபூர்மாக கடிதம் கொடுத்துள்ளார்.

அந்த கடித்தில் அவர் எழுதியிருப்பதாவது:

தெளிவாக விவாதித்து, ஒரு சிலர் கருத்து வேறுபட்டிருந்தாலும், மெஜாரிட்டி மெம்பர்களின் ஒப்புதலின் பேரில் தெளிவாக செங்கோல் என்ற கதையும், சர்கார் என்ற கதையும் ஒன்றே என்று முடிவு செய்தோம்.

இக்கடிதத்தின் மூலம் சங்கத்தின் உறுப்பினரான வருண் என்கிற ராஜேந்திரன் ஆகிய உங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் 21.11.2007ம் ஆண்டு பதிவு செய்த செங்கோல் என்ற கதையும் சர்கார் என்ற கதையும் ஒன்றே என்ற முடிவை சங்கம் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் பக்க நியாயத்திற்காக நீங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வதை நாங்கள் தடை செய்ய மாட்டோம். முழுமையாக உங்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறோம். என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை வருண் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இது சர்கார் படத்துக்கு எதிரான ஆதாரமாக கூறப்படுகிறது. எனவே சர்கார் பட ரிலீசின் போது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Sarkar Story controversy Murugadoss and Bhagyaraj clash issue

இனிமேல் ஃபுல் ரொமான்ஸ்தான்.; விஜய் ஆண்டனி திடீர் முடிவு

இனிமேல் ஃபுல் ரொமான்ஸ்தான்.; விஜய் ஆண்டனி திடீர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hereafter I wish to do more romantic movies says Vijay Antonyகணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு புடிச்சவன் படம் வருகிற நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி தினத்தில் ரிலீஸாகிறது.

எனவே படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது விஜய் ஆண்டனி பேசியதாவது…

தனிமரம் தோப்பாகாது என்பது போல இதில் என் பங்கு குறைவு தான். எந்த ஒரு படத்திலும் இயக்குனர் தான் ஹீரோ. இந்த படத்தை உருவாக்க கணேஷா சார் மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார்.

கடந்த இரண்டு படங்கள் வியபார ரீதியாக சரியாக போகவில்லை. படத்தின் வேலை முடிந்ததால் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இயக்குனருக்காக தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம்.

இந்த படத்தில் ரொமான்ஸ் இல்லை, இந்த படத்துக்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்க இருக்கிறேன் என்றார் நடிகர் விஜய் ஆண்டனி.

இந்த சந்திப்பில் விசுவல் எஃபெக்ட்ஸ் ரமேஷ் ஆச்சார்யா, நடன இயக்குனர் தஸ்தா, பாடலாசிரியர் அருண் பாரதி, நடிகர்கள் கதிர், வினோத், செந்தில் குமரன், நிக்ஸன், சாய் ராகுல், கிச்சா, ஜாக் ராபின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Hereafter I wish to do more romantic movies says Vijay Antony

ஏஆர். ரஹ்மானின் ஆன்மீக பாதையில் யாராலும் செல்ல முடியாது. : AH. காஷிப்

ஏஆர். ரஹ்மானின் ஆன்மீக பாதையில் யாராலும் செல்ல முடியாது. : AH. காஷிப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music composer AH Kaashif shares his experience about Kaatrin Mozhi‘காற்றின் மொழி’ படத்தின் இசையமைப்பாளர் A.H.காஷிஃப் பேசியது:-

‘காற்றின் மொழி’ படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். சிறு வயதிலேயே இசைப் பயில ஆரம்பித்தேன். எனது மாமாவிடம் (A.R.ரகுமானிடம் ) ‘Internship’ செய்தேன்.

பல படங்களில் அவருடன் பணிபுரிந்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் பாடல்களை ‘Youtube’ பதிவேற்றினேன். அப்போதுதான் தனஞ்செயன் சினிமாவில் இசையமைக்க ஆர்வம் இருக்கிறதா? என்று கேட்டார்.

அப்படிதான் இந்த பயணம் தொடங்கியது. ஹிந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ தான் ‘காற்றின் மொழி’. இப்படம் தொடங்கும் போதே எல்லோரும் தங்களுடன் தொடர்பு கொள்வார்கள்.

வெற்றிப் பெற்ற பாடல்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு முறை தான் பாடல்களைக் கேட்டேன். ஆனால், அதன்பிறகு பெரிதாக அதைப்பற்றி சிந்திக்கவில்லை.

ராதாமோகனுடன் இணைந்து இசையமைக்க ஆரம்பித்துவிட்டேன். பின்னணி இசையைப் பொறுத்தவரையில் படத்தின் முதல்பாதி மிகவும் சுலபமாக முடிந்துவிட்டது.

இரண்டாம் பாதியில் பல காட்சிகள் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால், தரமான இசையைத் தரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். ஆகையால், அதன் பணி நடந்து வருகிறது.

இப்படம் எளிமையான வாழ்க்கை, அதில் இருக்கும் உணர்ச்சிகரமான சம்பங்கள் போன்ற கதைக்கருக்கேற்ப இசை அமைந்திருக்கும். இப்படத்தின் சிறப்பைப் பற்றிக் கூறவேண்டுமானால், கதைக்கு என்ன தேவையோ, மேலும் ராதாமோகன் என்ன எதிர்பார்த்தாரோ அதை அப்படியே கொடுத்திருக்கிறேன்.

முதல் பாடல் மதன் கார்க்கி இணைந்து பணியாற்றியது, ‘டர்ட்டி பொண்டாட்டி’ (Dirty Pondatti) பாடலைத் தான் இசையமைத்து முடித்தோம். இப்பாடல் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

அடுத்த பாடல் ‘கௌம்பிட்டாளே விஜயலட்சுமி’, இந்தப் பாடல் ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையில் எவற்றையெல்லாம் பார்த்து ரசிப்பாள் என்பதை பற்றி சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாக அமைந்திருக்கும்.

இயக்குநர் ராதாமோகன் முதலிலேயே கூறிவிட்டார், அப்பாடல் தான் இப்படத்தின் அடித்தளம் என்று. ஆகையால், அதை மனதில் வைத்து அந்தப் பாடலின் இசையாகட்டும், வரிகள் ஆகட்டும் இயக்குநர் கூறியபடிதான் இருக்கும்.

இன்னொரு சிறப்பு பாடல்‘றெக்கைத் துளிர்த்த பச்சைக்கிளி, இனிமேல் நான் தான் காற்றின் மொழி’. தலைப்புப் பாடலாக அமைந்திருக்கும் இப்பாட்டின் உள்ளே படத்தின் மையக்கருவைக் கொண்டிருக்கும். பாடலைப் பார்க்கும்போது அதை நன்றாக உணரலாம்.

அடுத்ததாக இந்த படத்தின் க்ளைமாக்ஸ் மட்டுமல்லாமல் முழுப் படத்தின் கதையையுமே அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வது ‘போ உறவே’ பாடல் தான். இருப்பினும், ‘கௌம்பிட்டாளே விஜயலட்சுமி’ இந்தப் பாடல் தான் படத்தின் அடையாளமாக இருக்கும்.

பாடல்களை இசையமைத்து முடித்ததும் முதலில் எனது பாட்டியிடம் கொடுத்தேன், அடுத்து A.R.ரகுமானிடம் தான் கொடுத்தேன். மாமா என்ற உறவைத் தாண்டி அவர் பள்ளியில் பயின்றதால் அவர் எனக்கு குரு. ஆனால், பாடல்களை அவர் கேட்டாரா? என்று தெரியவில்லை.

மேலும், இப்படத்திற்கு புதுமுகமான என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த தனஞ்செயனுக்கும், ராதாமோகனுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜோதிகா பாடல்களைக் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்.

இதன்பிறகு மலையாளத்தில் அகஸ் சினிமாஸ் தயாரிப்பில் ‘பதினெட்டாம் படி’ என்ற படத்தில் இசையமைக்கவிருக்கிறேன்.

இதுவரை A.R.ரகுமானைத் தவிர யாரிடமும் பணியாற்றியதில்லை. யாருடைய வழிகாட்டுதலும் தேவையில்லை. அவருடைய வாழ்க்கையைப் பார்த்தாலே போதும்.

அவருடைய ஆன்மீகப் பாதையில் யாராலும் பயணிக்க இயலாது. அதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறேன். அவருடன் பணியாற்றி அனுபவம் மிகப் பெரியது. இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

‘காற்றின் மொழி’ படத்தின் இசை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். இளைஞர்கள், வயதானவர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

நவம்பர் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.

இவ்வாறு இசையமைப்பாளர் A.H.காஷிஃப் கூறினார்.

Music composer AH Kaashif shares his experience about Kaatrin Mozhi

*இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு* படம் யூடியுபில் சாதனை

*இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு* படம் யூடியுபில் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ivanukku Engeyo Macham Irukku movie youtube recordsசாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு“.

விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.

ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம்.

சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான்..இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும்.

அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர்…அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம்.

இன்று தியேட்ட்ருக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. இளைய தலைமுறையை சேர்ந்தவர்கள் தான் தியேட்டர்களுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை தான் கதையாக சொல்கிறோம்.

இந்த படத்தின் டீசரை 6 நாட்களில் யூ டியூப்பில் 20 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இதற்கு முன்பு விமல் படத்தின் டீசருக்கு இவ்வளவு வரவேற்பு எந்த படத்திற்கும் கிடைத்ததில்லை.

டீசருக்கு கிடைத்த இந்த வரவேற்புக்கேற்ற மாதிரி படமும் இருக்கும். படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்கள் நடை பெற்றது. தென்காசியிலும் சென்னையிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

முகம் சுளிக்கிற மாதிரி ஆபாசம் இல்லாமல் ரசிக்கிற மாதிரி கிளாமர் ஹுயூமர் படம் இது.

விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது என்றார் AR.முகேஷ்.

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்
இசை – நடராஜன் சங்கரன்
பாடல்கள் – விவேகா
கலை – வைரபாலன்
நடனம் – கந்தாஸ்
ஸ்டண்ட் – ரமேஷ்.
எடிட்டிங் – தினேஷ்
தயாரிப்பு மேற்பார்வை – சுப்ரமணி
தயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண்
திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகேஷ்.

Ivanukku Engeyo Macham Irukku movie youtube records

vimal and ashna zaveri

மலைவாழ் மக்களின் வாழ்வியலை சொல்லும் *எவனும் புத்தனில்லை*

மலைவாழ் மக்களின் வாழ்வியலை சொல்லும் *எவனும் புத்தனில்லை*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Evanum Buthanillai Motion poster launch and story line updatesவி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் “எவனும் புத்தனில்லை”.

இந்த படத்தில் நபி நந்தி ,சரத் இருவரும் கதாநாயகன்களாக நடிக்கிறார்கள்.

கதாநாயகிகளாக சுவாசிகா, நிகாரிகா ஆகியோருடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுர் நடிக்கிறார். மற்றும் கெளரவ வேடத்தில் சினேகன் நடிக்கிறார்.

மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் சங்கிலிமுருகன் எம்.எஸ் .பாஸ்கர் வேல.ராமமூர்த்தி சிங்கமுத்து முரு ஆரு கே.டி.எஸ்.பாஸ்கர் மாரிமுத்து பசங்க சிவக்குமார் சுப்புராஜ் எம்.கார்த்திகேயன் காதல் சரவணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ராஜா c.சேகர்
இசை – மரியா மனோகர்
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
பாடல்கள் – சினேகன்
வசனம் – S.T.சுரேஷ்குமார்
ஸ்டண்ட் – அன்பு அறிவு, மிராக்கில் மைக்கேல்
நடனம் – அசோக்ராஜா சங்கர்
கலை – A.பழனிவேல்
இணை தயாரிப்பு – கே.டி.எஸ்.பாஸ்கர், K.சுப்ரமணியன் I.ஜோசப் ஜெய்சிங், M.கார்த்திகேயன், V.C.சூரியன்
தயாரிப்பு – வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ்
கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் S.விஜயசேகரன்

ஜனரஞ்சகமான படமாக எவனும் புத்தனில்லை படம் உருவாகி உள்ளது.

அண்ணன் தங்கை பாசத்தை உள்ளடக்கிய படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன் திரில்லர் படமாக மலைவாழ் கிராம மக்களின் வாழ்வியலை இதில் சொல்லி இருக்கிறோம் என்கிறார் இயக்குனர் S.விஜயசேகரன்.

படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

Evanum Buthanillai Motion poster launch and story line updates

More Articles
Follows