தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் முதன்முறையாக சிம்புவை இயக்கினார் கௌதம் மேனன்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா படத்திலும் இந்த கூட்டணி இணைந்தது.
ஆனால் இப்படம் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் 3வது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது என்பதை பார்த்தோம்.
இது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ஆம் பாகம் என சொல்லப்படுகிறது.
இதில் சிம்பு இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே மன்மதன், சிலம்பாட்டம் ஆகிய படங்களில் சிம்பு இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் சிம்புவை காட்டப் போகிறாராம் கெளதம்மேனன்.
Gautham Menon and Simbu to team up for 3rd time story updates