ஊழலற்ற தமிழகத்தை உருவாக்க அரசியலில் நுழைந்தார் முன்னாள் IAS அதிகாரி சகாயம்

ஊழலற்ற தமிழகத்தை உருவாக்க அரசியலில் நுழைந்தார் முன்னாள் IAS அதிகாரி சகாயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sagayam IAS (1)ஊழல் நிறைந்த உலகத்தில் நேர்மையானவர் என பெயர் எடுப்பது அறிதாகிவிட்டது.

அதிலும் தமிழக அரசு துறைகளில் நேர்மைக்கு கூட விலை பேசுவார்கள்.

இந்த நிலையிலும் நேர்மையான IAS (ஐஏஎஸ்) அதிகாரி என பெயரெடுத்தவர் சகாயம்.

புதுக்கோட்டையை சேர்ந்தவர் இவர்.

முதலில் தமிழக அரசின் சிறிய துறைகளில் பணியாற்றினார்.

பின்னர் பதவி உயர்வு மூலம் ஐஏஎஸ் பணிக்கு தேர்வானவர் இவர்.

கிரானைட் முறைகேடு, மணல் முறைகேடு, பெப்சி கம்பெனி நடவடிக்கை என பல அதிரடிகளை மேற்கொண்டு தமிழக மக்களின் ரியல் ஹீரோவானார்.

இவரின் நேர்மைக்காகவே இவரை பலரும் நேசித்தனர்.

இவர் கடைசியாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றினார்.

நேர்மையாக இருந்தால் தான் வாழ விடமாட்டார்களே.. பல இன்னல்களை சந்தித்தார். மன உளைச்சலுக்கு ஆளானார்.

எனவே வேறு வழியில்லாமல் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார்.

இவர் விருப்ப ஓய்வு பெற்ற பிறகு எப்போது அரசியலுக்கு வருவார்? என பலரும் காத்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் மக்கள் பாதை சார்பில் “அரசியல் களம் காண்போம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என யார் நினைக்கிறார்களோ அவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வில் பேசினார் சகாயம்..

‘இளைஞர்களே எல்லோரும் வாருங்கள்.

அனைவரும் சேர்ந்து ஊழலற்ற புதிய தமிழகத்தை உருவாக்குவோம்.

அரசியல் கோபம் உண்டு. ஆனால் அரசியல் பதவி ஆசை இல்லை. நான் எந்த திரைப்பட நடிகரிடமும் பேசியதில்லை.

அரசியல் களம் காண்போம். நான் ஏற்றுக்கொள்கிறேன். அரசியல் களம் காண்பதை ஆமோதிக்கிறேன்.

இளைஞர்களே… கடைசி வரை நேர்மையாக, சாதியை உடைத்தெரிக்கிற லட்சிய நேர்மையாளர்களாக இருக்க வேண்டும்’ என பேசினார் சகாயம்.

Former IAS Officer Sagayam announces his political entry

முதல்வரிடம் கலைமாமணி விருது பெற்ற சிவகார்த்திகேயன் உருக்கம்..; புற்றுநோய் மருத்துவமனையில் ரசிகர்கள் உதவி

முதல்வரிடம் கலைமாமணி விருது பெற்ற சிவகார்த்திகேயன் உருக்கம்..; புற்றுநோய் மருத்துவமனையில் ரசிகர்கள் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan (2)தமிழகத்தில் இயல், இசை, நாட்டியம், நாடகம், சினிமா, இசை நாடகம், நாட்டுப்புறக் கலைகள், சின்னத்திரை உள்ளிட்ட கலைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு தமிழக அரசின் கலை மற்றும் கலாச்சாரத்துறை சார்பாக ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சௌகார் ஜானகி, பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, எடிட்டர் ஆண்டனி, தயாரிப்பாளர் தாணு, ஐசரி கணேஷ் உள்ளிட்ட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை பிப்ரவரி 20ல் சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலைஞர்களுக்கு வழங்கினார்.

விருதினை பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் தன் தாயின் காலில் விழுந்து வணங்கிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அத்துடன்.. “சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி.

தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம் https://t.co/EtBPVyycNK

என ட்விட்டரில் பதிவிட்டார்.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை பாராட்டும் விதமாக அவரது ரசிகர்கள் கேன்சர் நோயாளிகளுக்கு உதவிகள் செய்துள்ளனர்.

கலைமாமணி விருது பெற்ற அண்ணன் @Siva_Kartikeyan சந்தோசத்தை கொண்டாடும் விதமாக புற்றுநோய் மருத்துவமனையில் ஹார்லிக்ஸ், பிஸ்கட்ஸ், பழங்கள், பால் மற்றும் சாப்பாடு டாப்பகள் @Chengai_SKFC பம்மல் நகர நற்பணி இயக்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது

@AllIndiaSKFC @navneth @AnandSkfc https://t.co/Ikgr4LpMFc

Actor Sivakarthikeyan dedicated his Kalaimamani award to his mom

மெஜாரிட்டி இல்லாமல் புதுச்சேரியில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்..; என்ன நடந்தது.. சின்ன ப்ளாஷ்பேக்!

மெஜாரிட்டி இல்லாமல் புதுச்சேரியில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்..; என்ன நடந்தது.. சின்ன ப்ளாஷ்பேக்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Narayanasamy (2)தமிழகத்தைப் போலவே புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்களே உள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி் அரசு கவிழ்ந்துள்ளது.

என்ன நடந்தது..: ப்ளாஷ்பேக்

புதுச்சேரியில் 2016 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 15 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆட்சி அமைத்தது.

முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார். மூன்று தி.மு.க., – MLAக்கள், மாகி தொகுதி சுயேச்சை MLA, ஆட்சிக்கு ஆதரவளித்தனர்.

2020 கடந்தாண்டு ஜூனில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த காரணத்தினால் பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர்.

இதனால் 18ஆக இருந்த காங். கூட்டணி கட்சியிலிருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 17ஆக ஆனது.

இந்தாண்டு 2021 ஜனவரியில்… முதல்வர் நாராயணசாமி உடனான மோதல் காரணமாக பபொதுப்பணித்துறை அமைச்சரும், வில்லியனூர் தொகுதி MLA நமச்சிவாயம் மற்றும் உசுடு தொகுதி MLA தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும் ராஜினாமா செய்து பாஜக.வில் இணைந்தனர்.

எனவே காங். கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் 17லிருந்து 15ஆக ஆனது.

இதன் பின்னர் புதுச்சேரி யானம் MLA மல்லாடி கிருஷ்ணா ராவ் கடந்த 15ஆம் தேதியும் அடுத்த நாள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜர் நகர் MLA ஜான்குமார்‌ இருவரும் ராஜினாமா செய்தனர்.

அதே பிப்ரவரி 16 இரவில்… புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்த கிரண் பேடியை விடுவித்து, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக ஜனாதிபதி ஒப்படைத்தார்.

பிப்ரவரி 17ஆம் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க ராகுல்காந்தி புதுச்சேரி வந்தார்

பிப்ரவரி 18ஆம் தேதி காலை 9 மணிக்கு துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றார் தமிழிசை சௌந்தரராஜன்.

நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார் ஆளுநர் தமிழிசை.

இதையடுத்து நாராயணசாமி நியமன பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்களிக்கும் உரிமை கிடையாது என்றார்.

இதற்கு பாஜக மாநில தலைவரும், நியமன சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன், “உச்சநீதிமன்றம் நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது.. நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் பங்கு பெறுவோம்‌” என்றார்.

பிப்ரவரி 21ஆம் தேதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்பவன் MLA லட்சுமி நாராயணன் & திமுகவை சேர்ந்த தட்டாஞ்சாவடி தொகுதி MLA வெங்கடேசன் இருவரும் ராஜினாமா செய்தனர்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது…”புதுச்சேரியில் பாஜக ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியிருப்பதாகக் கூறிநீர்.

ஆனால், ராஜினாமா செய்த திமுக எம்எல்ஏ வெங்கடேசன் குறித்து எதுவும் பேசவில்லை.

தற்போது கட்சியிலிருந்து தற்காலிகமாக வெங்கடேசன் நீக்கப்பட்டுவதாக திமுக அறிவித்துள்ளது.

ஆக மொத்தம் புதுச்சேரியில் 6 MLAக்கள் பதவி விலகியதால், 17ல் இருந்து 11ஆக ஆனது. இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது மெஜாரிட்டியை இழந்தது.

இன்று சட்டசபையில் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை.

பெரும்பான்மை இல்லாமல் போனதால் நாராயணசாமி அரசு கவிழ்ந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த தமது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே நாராயணசாமி வெளிநடப்பு செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதனால் நாராயணசாமி அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதன் மூலம் புதுச்சேரியின் 14ஆவது சட்டப்பேரவை காலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

துணைநிலை கவர்னரிடம் தனது அரசு மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தனர்.

இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

Pondy CM Narayanasamy failed to show majority in floor test

பிராமணப் பெண்ணுக்கும் கிறித்தவ இளைஞனுக்கும் உள்ள காதலை சொல்லும் ‘மழையில் நனைகிறேன்’

பிராமணப் பெண்ணுக்கும் கிறித்தவ இளைஞனுக்கும் உள்ள காதலை சொல்லும் ‘மழையில் நனைகிறேன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mazhaiyil Nanaikiren (2)ராஜ் ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஷ்குமார், ஸ்ரீவித்யா ராஜேஷ் ஆகியோர் தயாரிக்க, சுரேஷ் குமார் இயக்கி இருக்கும் படம் “மழையில் நனைகிறேன்”.

எதார்த்தமான வாழ்வியலுடன் அழகான காதலை சொல்லும் இப்படம் சென்னை உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் டீசர் பத்திரிக்கையாளர்களுக்குக் திரையிடப்பட்டது.

படம் பற்றிப் இயக்குனர் டி சுரேஷ் குமார் கூறியதாவது..:

”எஞ்சினியரிங் படித்த ஒரு பிராமணப் பெண்ணுக்கும், படித்து விட்டு வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டு இருக்கும், ஒரு கிறித்தவ இளைஞனுக்கும், ஏற்படும் காதலும் அதன் விளைவுகளுமே, இந்தப் படம்.

காதலில் ஒரு பிரச்னை வரும்போது ஒன்று காதலர்கள் காயப்பட வேண்டி இருக்கிறது .

அல்லது காதலர்களின் பெற்றோர்கள் காயப்பட வேண்டி இருக்கிறது. அது பற்றியும் இந்தப் படம் பேசுகிறது . படத்தில் சண்டைக் காட்சி இருந்தாலும் வில்லன் என்று யாரும் இல்லை.

படத்தில் நாயகி அறிமுக காட்சியும், இறுதிக் காட்சியும் மழையில் நடக்கும் . அதனால்தான் படத்துக்கு இந்தப் பெயர் பொருத்தமாக இருக்குமென வைத்தோம்.

தற்போது படம் உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாகும் அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள்.
எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும்” என்றார் .

தயாரிப்பாளர் பி. ராஜேஷ் குமார் கூறியதாவது….

*படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்ன விதமும், குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதியும் என்னை மிகவும் கவர்ந்தது . அதனால்தான் இந்தப் படத்தைத் தயாரித்தேன் .

இது குடும்பத்தோடுஎல்லோரும் பார்க்க வேண்டிய படம் என்றார் .

அன்சன் பால், பிகில் படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான், சங்கர் குரு ராஜா ஆகியோர் நடித்துள்ளார்கள். விஷ்ணு பிரசாத் இசை அமைப்பாளராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.

இவர் ஏ ஆர் ரகுமான் பள்ளியில் பயின்றவர். ஒளிப்பதிவு கல்யான், படத் தொகுப்பு வெங்கடேஷ். இயக்குநர் விஜி, கவின் பாண்டியன் இணைந்து வசனம் எழுதியுள்ளனர்.

படத்தின் வெளியீட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Producer P Rajesh Kumar about Mazhaiyil Nanaikiren

‘மக்களுக்கு முதல் வணக்கம்’ நிகழ்ச்சி..; வருத்தம் தெரிவித்தார் ‘பிக் பாஸ்’ ஆரி

‘மக்களுக்கு முதல் வணக்கம்’ நிகழ்ச்சி..; வருத்தம் தெரிவித்தார் ‘பிக் பாஸ்’ ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aari (2)‘பிக் பாஸ்’ சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனார் நடிகர் ஆரி அர்ஜுனன்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஓரிரு படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஆனால் பொது நிகழ்ச்சிகளில் ஆரி பங்கேற்கவில்லை.

‘மக்களுக்கு முதல் வணக்கம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் முதன்முறையாக மக்களை சந்திக்க சென்றார்.

இது சென்னையில் நேற்று 21.02.2021ல் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் தன் ட்விட்டரில் ஆரி வருத்தம் தெரிவித்து இருந்தார்.

அதில்…
“மக்களுக்கு முதல் வணக்கம்”
21.2.21 என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.
வந்திருந்த அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ள, காலமும் சூழலும், மெரினா மாலில் ஒத்துழைக்காததிற்கு வருந்துகிறேன்.
புகைப்படம் எடுக்க வரிசையில் நின்ற உங்கள் பண்பிற்கும் அன்பிற்கும் இந்த ரசிகனின் ராயல் சல்யூட்.”

என பதிவிட்டுள்ளார் ஆரி.

Bigg Boss Aari message to his fans

100 நாட்களுக்கு பிறகு FDFS கொண்டாடிய ‘சூரரைப் போற்று’.; தடை போட்ட தியேட்டர் உரிமையாளர்களை கடுப்பேற்றிய சூர்யா ரசிகர்கள்

100 நாட்களுக்கு பிறகு FDFS கொண்டாடிய ‘சூரரைப் போற்று’.; தடை போட்ட தியேட்டர் உரிமையாளர்களை கடுப்பேற்றிய சூர்யா ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soorarai pottru (2)சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி, ஊர்வசி, காளி வெங்கட், ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘சூரரைப் போற்று’.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க சூர்யாவே இப்படத்தை தயாரித்து இருந்தார்.

குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கும் முயற்சியை இந்தியாவில் முன்னெடுத்த ஏர் டெக்கான் நிறுவன தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்ட சமயத்தில் இதன் ஓடிடி ரிலீசை அறிவித்தார் சூர்யா.

இதனால் சூர்யாவுக்கு பலத்த எதிர்ப்பு உருவானது.

சூர்யா தன் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேண்டும்.

அவர் தன் ஓடிடி முடிவை மாற்றாவிட்டால் இனி சூர்யா நடித்த தயாரித்த படங்களை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என அறிவித்தனர்.

இந்த அறிவிப்புக்கு சூர்யா ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சூர்யா தன் முடிவை விட்டு விலகாமல் ‘சூரரைப் போற்று’ பட லாபத்தை திரைத்துறை மற்றும் மக்களுக்கு பகிர்ந்து அளித்தார்.

அந்த சூழ்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது.

ஆனாலும் தியேட்டர்களில் படத்தை வெளியிடாமல் நவம்பர் 12ல் ‘சூரரைப் போற்று’ படத்தை அமேசான் ஓடிடியில் ரிலீஸ் செய்தார் சூர்யா.

இப்படம் ரிலீசாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. தற்போது 100 நாட்களை கடந்துள்ளது இந்த படம்.

சென்னையில் 18வது சர்வதேச திரைப்பட விழா வரும் 18ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற்று வரும் தற்போதைய நிலையில் இதே படம் சென்னை சத்யம் தியேட்டரில் திரையிடப்பட்டது.

முதல் நாள் முதல் காட்சி FDFS போல ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டரில் ரசித்தனர்.

எந்த (சூர்யா) படத்தை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என கூறினார்களோ இப்போது அதே படத்தை நாங்கள் திரையில் பார்த்து விட்டோம் என சூர்யா ரசிகர்கள் இணையங்களில் பதிவிட்டு தியேட்டர் உரிமையாளர்களை கடுப்பேற்றி வருகின்றனர்.

*கூடுதல் தகவல்கள்…*

18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடைபெறவுள்ளது.

இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது.

உலகெங்கிலும் உள்ள 53 நாடுகளில் இருந்து 37 மொழிகளில் (10 இந்திய மொழிகள் உட்பட) 92 திரைப்படங்கள் பங்குபெறவுள்ளன.

18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி 18.2.2021 அன்று பிவிஆர் மல்டிபிளெக்ஸின் சத்யம் திரையில் நடைபெற்றது.

25.2.2021 அன்று பிவிஆர் மல்டிபிளெக்ஸின் சத்யம் திரையில் நிறைவு விழா நடைபெறவுள்ளது.

Chennai film festival turned into fans show

More Articles
Follows