சுஷாந்த் சிங்கின் மரணத்தையும் விடாமல் படமாக்கும் பாலிவுட்

சுஷாந்த் சிங்கின் மரணத்தையும் விடாமல் படமாக்கும் பாலிவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sushant Singh Rajput suicide reveals Reel and Real heroesகிரிக்கெட் வீரர் எம்எஸ். தோனியின் வாழ்க்கை படத்தில் தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

இவர் அண்மையில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டார்.

ஆனால் சுஷாந்த்தின் உறவினர்கள் அது தற்கொலை அல்ல கொலை என்று கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் சுஷாந்த்தின் மரணமே தற்போது சினிமாவாகிறது.

இந்த படத்தை ஷாமிக் மௌலிக் என்பவர் இயக்க விஜய் சேகர் குப்தா தயாரிக்கிறார்.

சினிமா பின்புலமே இல்லாத குடும்பங்களில் இருந்து வரும் நபர்களை இந்தி திரையுலகம் எப்படி நடத்துகிறது, அவர்களின் போராட்டம் எப்படி பட்டது? என்பதை இந்த படம் சொல்லவிருக்கிறதாம்.

மேலும் பாலிவுட்டை மையப்படுத்தி இந்தப் படத்தை ஷாமிக் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Film inspired by Sushant Singh Rajputs life in process

ஊர் பேர மாத்துறீங்க… ஊரடங்குக்குள் ஊரடங்கு போடுறீங்க.. கடுப்பான கமல்

ஊர் பேர மாத்துறீங்க… ஊரடங்குக்குள் ஊரடங்கு போடுறீங்க.. கடுப்பான கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan slams TN Govt and lock down extension ஏற்கெனவே 83 நாட்களாக ஊரடங்கில் இருக்கும் சென்னைக்கு மீண்டும் ஒரு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது தமிழக அரசு.

இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டம் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக அறிக்கையில்…

வெளிப்படைத்தன்மையின்றி செயல்பட்டதால் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது.

முழு பொதுமுடக்க காலத்தில் என்ன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறோம் என மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை.’ எனத் தெரிவித்துள்ளார்.

அவரின் அறிக்கை இதோ…

மார்ச் 24ஆம் தேதி தொடங்கியது இந்த ஒத்துழைப்பு இயக்கம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடங்கியிருக்கும் முழு அடைப்பிற்கு முன், கொரோனாவில் இருந்து தப்பிக்க சொந்த ஊருக்கு, இரு சக்கர வாகனங்களில் கூட செல்லத் துணிந்து விட்ட மக்களை பார்க்கும் பொழுது என் மனதில் எழும் கேள்விகள் இவை.

வெளிநாட்டில் இருந்து வருவோர் மூலம் இந்த வியாதி பரவுகிறது எனும் நிலையில், விமான நிலையத்திலேயே அவர்களுக்கு பரிசோதனைகளை செய்திருந்தால் இத்தனை நீண்ட நெடிய ஊரடங்கினை நாம் எதிர்கொள்ள வேண்டியது இருந்திருக்காது.

உங்களின் அந்த ஒரு தவறுக்காக ஒட்டு மொத்த தமிழகமும் 68 நாட்கள் ஊரடங்கில் இருந்து, இப்போது தான் மெதுவாக மீளத் தொடங்கியிருக்கிறது.

“முன்பிருந்த நிலை” என்பதை அடைவதற்கே இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் விவாதித்து கொண்டிருக்கின்றனர். பல ஆண்டுகள் நம் பொருளாதார நிலையை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது இந்த நுண்ணுயிரி.

சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் பரிசோதனையே செய்யாமல், கொரோனா சென்னைக்குள் மட்டுமே இருப்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்க முயல்வது, பிற மாவட்டத்தினரின் உயிரை அலட்சியப்படுத்தும் செயல் என்பதை உணர்ந்து எப்போது செயல்படப்போகிறது இந்த அரசு?

பரவலான பரிசோதனையை எல்லா மாவட்டத்திலும் செய்து, உண்மை நிலையை தெளிவுபடுத்தியிருந்தால், கொரோனாவிலிருந்து தப்பிக்க, சென்னையை விட்டு வெளியேறினால் போதும் என்ற மக்களின் மனநிலையையும், காவல் துறை சோதனை சாவடிகள் அமைத்து தடுக்கும் நிலையினையும் தவிர்த்திருக்கலாம்.

இதை எதையுமே செய்யாமல் ஊர் பெயர்களை மாற்றி, பின் அதை திரும்பபெற்று என செயலாடிக் கொண்டிருக்கிறது அரசு. 83 நாட்களாக ஊரடங்கில் இருக்கும் சென்னையில், மீண்டும் ஒரு முழு ஊரடங்கு என அறிவித்திருந்தார் முதல்வர்.

ஏற்கனவே சற்றே தளர்த்தப்பட்ட ஊரடங்கில் இருக்கும் சென்னைக்கு எப்படி மறுபடியும் ஊரடங்கு என்பதைக் கூட யோசிக்காமல் அறிவிக்கும் முதல்வரும், அமைச்சர்களும் தான் நம்மை காப்பதற்கான பொறுப்பில் இருப்பவர்கள்.

“ஊரடங்கிற்குள் இன்னொரு ஊரடங்கு” என ஏற்கனவே அறிவித்து மக்களை பயமுறுத்தி, கோயம்பேடு தொற்றினை உருவாக்கினார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு செய்த தவறில் இருந்து கூட பாடம் கற்காமல் மீண்டும் அதே தவறைச் செய்கிறார்கள். மக்களின் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படுவதால் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

அத்தியாவசிய பொருட்களின் இருப்பும், விநியோகமும் உறுதி செய்யப்படும்” என்கின்ற உறுதிகள் வழங்கப்பட்டாலும் கூட மக்கள் கண்டிப்பாக பதட்டம் அடைவார்கள் என்ற முன்யோசனையின்றி செயல்படுவது ஏன்? ஊரடங்கு என்பது தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சி தான்.

ஆனால் ஏற்கனவே இருக்கும் தொற்றினைக் கட்டுப்படுத்த பரவலான பரிசோதனை முக்கியம் என்று அறிஞர்கள் சொன்ன போதெல்லாம், அதைக் காதில் வாங்காமல் 300, 400 பேருக்கு மட்டும் பரிசோதனை செய்ததின் விளைவு, இன்று இந்த பொது முடக்கமும், அதன் விளைவாக பொருளாதார முடக்கமும்.

மக்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து வென்றெடுப்பதற்கு, நேர்மையாக தகவல்களை பரிமாறாமல், வெளிப்படைத்தன்மையின்றி செயல்பட்டதன் விளைவே, ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆரம்பித்திருக்கும் இந்த முழு ஊரடங்கு காலத்திலாவது, மக்கள் உள்ளிருக்கும் போது அரசு என்ன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பதையும், அதற்கு மக்கள் ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை.

இவ்வாறு கமல் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Kamalhassan slams TN Govt and lock down extension

‘அய்யப்பனும் கோஷியும்’ பட இயக்குனர் சச்சி மரணம்; பிரபலங்கள் இரங்கல்

‘அய்யப்பனும் கோஷியும்’ பட இயக்குனர் சச்சி மரணம்; பிரபலங்கள் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ayyappanum Koshiyum director Sachy passes awayமலையாளத்தில் பிருத்விராஜ், பிஜூ மேனன் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் தான் அய்யப்பனும் கோஷியும்.

இப்படத்தை 48 வயதான ஆர்.சச்சிதானந்தம் என்பவர் சச்சி இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திடீரென இதயத்துடிப்பில் பிரச்னை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார்.

அவரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Ayyappanum Koshiyum director Sachy passes away

டொராண்டோ தமிழ் இருக்கையின் தூதரானார் இமான்

டொராண்டோ தமிழ் இருக்கையின் தூதரானார் இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

D Imman is ambassador at University of Torontos Tamil Chair100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள டி இமான் தற்போது தான் முதன்முறையாக ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திற்கு இசையைமத்து வருகிறார்.

இந்த நிலையில் செம்மொழி அந்தஸ்து பெற்ற பெருமைமிகு தமிழ் மொழியின் டொராண்டோ தமிழ் இருக்கை தூதராக இமானுக்கு விசேஷ கெளரவம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து டி.இமான் தெரிவித்துள்ளதாவது….

“உலகின் தொன்மையான மொழி எனப் போற்றப்படும் தமிழ், வாய் வழித் தொடர்பு மொழி என்பதைத் தாண்டி மனித குலத்தின் வாழ்வியல், நாகரீகம் மற்றும் கலாச்சாரங்களை தன் இலக்கியங்களில் உள்ளடக்கியதாகும்.

மொழிகளின் தாய் என தமிழ் புகழப்படுவது குறித்து தமிழன் என்ற முறையில் நான் பெருமையும் பேருவகையும் கொள்கிறேன்.

பல்வேறு கலை வடிவங்கள் மூலம் மொழிக்கு செழுமை ஏற்றிய மிகச் சிறந்த மனிதர்களால் ஆசிர்வதிக்கப்பட்டது தமிழ் நிலம். டொராண்டோ தமிழ் இருக்கையின் தூதராக நான் நியமிக்கப்பட்டபோது, இவற்றையெல்லாம் அறிந்து மிகவும் ஆச்சரியமடைந்தேன்.

கனடாவின் முதல் தர பல்கலைக் கழகமான டொராண்டாவில் நமது தாய்மொழிக்கு இருக்கை அமைத்து அங்கீகரித்தது, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கெல்லாம் உவகை தரும் பெருமைமிகு தருணம்.

டொராண்டோ பல்கலைக் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் நன்றி செலுத்தும் இந்த நேரத்தில், எனக்கு அளிக்கப்பட்ட இந்த கெளரவம், தாய் மொழி மீது நான் கொண்ட ஈடுபாட்டை இன்னும் மேம்படுத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

D Imman is ambassador at University of Torontos Tamil Chair

நடிகை எம்.என்.ராஜத்தின் கணவரும் பாடகருமான AL ராகவன் மரணம்

நடிகை எம்.என்.ராஜத்தின் கணவரும் பாடகருமான AL ராகவன் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor and Play back Singer AL Raghavan passed awayதென்னிந்திய மொழிகளில் பழம்பெரும் பாடல்களை பாடியவர் ஏ.எல்.ராகவன்.

1950-களில் இருந்து 1970 வரை வெளியான திரைப்படங்களில் நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்.

டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

இவரது மனைவி பிரபல நடிகை எம்.என்.ராஜம் ஆவார்.

இந்த நிலையில் ஏ.எல்.ராகவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

இவர் பாடிய காலத்தால் அழியாத சில சிறந்த பாடல்களாவன, எங்கிருந்தாலும் வாழ்க… சீட்டுக்கட்டு ராஜா… அங்கமுத்து தங்கமுத்து… பொம்பளை ஒருத்தி இருந்தாளாம் உள்ளிட்ட பாடல்கள் இவரது குரலில் பிரபலம்.

இறுதியாக ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்திலும் இவர் பாடியிருந்தார்.

ஏ.எல்.ராகவனின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ராகவன் பற்றிய சிறுகுறிப்பு…

சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த தென்னிந்தியாவின் பழம்பெரும் நடிகரும், திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரும் ஆவார். இவரது மனைவி பிரபல நடிகை எம்.என்.ராஜம்.

1950-களிலிருந்து 1980 வரை தமிழ்த் திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். 1947-ஆம் ஆண்டில் கிருஷ்ண விஜயம் என்ற படத்தின் மூலம் நடிகராக திரைத்துறைக்குள் நுழைந்தார். 1950-இல் வெளிவந்த “விஜயகுமாரி” என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். குமாரி கமலாவுக்காக பெண் குரலில் இப்பாடலைப் பாடினார். தமிழுடன் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பாடியுள்ளார்.

இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஆகியோர் இவருக்கு அதிகமான வாய்ப்புக்களை வழங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம் பெற்ற எங்கிருந்தாலும் வாழ்க என்ற மிகப் பிரபலமான பாடலைப் பாடியவர்.
கல்யாண் குமார், ஜெமினிகணேசன் போன்றோர் நடித்த பல படங்களுக்குப் பின்னணி பாடியவர்.

இவர் 1948-இல் தயாரிக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பின் 1951-இல் வெளிவந்த “சுதர்ஸன்” என்ற படத்தில் பகவான் கண்ணனாக நடித்திருக்கிறார். கல்லும் கனியாகும் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கல்லும் கனியாகும், கண்ணில் தெரியும் கதைகள் இரு படங்களைத் தயாரித்துள்ளார். கல்லும் கனியாகும் படத்தை பாடகர் டி.எம்.சௌந்தரராஜனுடன் இணைந்து தயாரித்தார்.

இப்படம் சுமாராகவே ஓடியது. அத்துடன் .சௌந்தரராஜன் படம் தயாரிப்பதை நிறுத்திக் கொண்டார். ஆனால் இவர் 1980-இல் கண்ணில் தெரியும் கதைகள் படத்தைத் தயாரித்தார். இப்படத்தில் ஜி.கே.வெங்கடேஷ், சங்கர் கணேஷ், கே.வி.மகாதேவன், ரி.ஆர்.பாப்பா, இளையராசா உள்ளிட்ட 5 இசையமைப்பாளர்களை இசையமைக்க வைத்தார்.

பாடல்கள் பிரபலமானாலும், கதையில் வலுவில்லாததால் படம் தோல்வியைத் தழுவி இவரைப் பல லட்சங்களை இழக்கச்செய்தது.

நாகேஷ் அவர்களுக்கு இவரது குரல் மிகப் பொருத்தமாக இருக்கும். ஆதலால் நாகேஷுக்குப் பல படங்களுக்கு நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியவர்.

வாடா மச்சான் வாடா (அன்று கண்ட முகம்), உலகத்தில் சிறந்தது எது (பட்டணத்தில் பூதம்), சாப்பிடத்தான் தெரியும் எனக்கு சமைக்கத் தெரியலியே (பவானி) ‘சீட்டுக்கட்டு ராஜா’, ‘என்ன வேகம் நில்லு பாமா'(குழந்தையும் தெய்வமும்), ‘அங்கமுத்து தங்கமுத்து’ (தங்கைக்காக), கடவுளும் நானும் ஒரு ஜாதி, அன்று ஊமை பெண்ணல்லோ உள்ளிட்ட பல பாடல்களால் அறியப்பட்டவர்.

எஃகோ வசதியில்லாத அக்காலத்தில் தனது குரலில் எஃகோ எஃபெக்டை கொடுத்தவர். மேடைகளில் ஆர்க்கெஸ்டிரா கச்சேரிகள் உருவானதன் முன்னோடி இவர்தான்.

எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ஆர்க்கெஸ்டிரா குழுவை உருவாக்கியவர். புதையல் படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து மெல்லிசை மன்னர் இசையில் முதன் முதலாக பாடியவர்.

Actor and Play back Singer AL Raghavan passed away

BREAKING கடைக்கு நடந்து போங்க; பழைய ஈபாஸ் செல்லாது..; மாஸ்க் இல்லனா மாட்டீனீங்க.. லாக்டவுன் கன்டிசன்ஸ்

BREAKING கடைக்கு நடந்து போங்க; பழைய ஈபாஸ் செல்லாது..; மாஸ்க் இல்லனா மாட்டீனீங்க.. லாக்டவுன் கன்டிசன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lockdown New conditions Dont use Bike Car Old EPass invalidசென்னை செங்கல்பட்டு திருவள்ளுர் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமுள்ளதால் நாளை ஜூன் 19 முதல் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை நிறைய நிபந்தனைகள் உள்ளது. அதன் தொகுப்பு இதோ…

சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும்.

* முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

*கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் கைகளை கழுவ சோப்பு தண்ணீர் சானிடைசர் வைக்க வேண்டும்

*நோய் தீவிரம் அடைந்துள்ளதால் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம்

*காய்கறி, மளிகை பொருட்களை வாங்க பைக், கார்களில் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது… அருகில் உள்ள கடைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் செல்ல வேண்டும்.

*உரிய காரணங்களின்றி வெளியே சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

*ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள், மறுபதிவு செய்ய வேண்டும் – பழைய இ-பாஸ் செல்லாது.

*திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது.

*போலி இ-பாஸ் மூலம் செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை.

*காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

*தேநீர் கடைகளுக்கு அனுமதியில்லை. பால் விற்பனை நிலையங்கள், மருந்துக் கடைகள் திறக்கலாம்.

*சென்னை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு கிடைக்கும்.

*சென்னையில் பணியாற்றும் செய்தியாளர்கள் தங்கள் நிறுவன அடையாள அட்டையை காண்பித்தால் மட்டும் போதுமானது.

*சென்னை நகருக்குள் மட்டுமே 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன

*முகக்கவசம் அணியாமல் வெளியேவருவோர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்.

*அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் மூடப்படும்.

*முழு ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லை.

*அறிவுரை சொல்லி அனுப்பியதால் கடந்த முறை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

*பணியாளர்கள் தினசரி சென்னை எல்லையை விட்டு வெளியேற அனுமதியில்லை… அனுமதிக்கப்பட்ட 33% ஊழியர்களுக்கு அடையாள அட்டை போதுமானது.

*சென்னை முழுவதும் ட்ரோன் கேமராக்கள் மூலம் காண்காணிப்பு.

இவ்வாறு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

#ChennaiLockDown | #CoronaVirus | #filmistreet l #TNFightsCorona l #Chennai | #EPass | #Lockdown l #Corona l

Lockdown New conditions Dont use Bike Car Old EPass invalid

More Articles
Follows