சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதை ‘டேக் டைவர்ஷன்’

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதை ‘டேக் டைவர்ஷன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Take Diversionசென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கார் பயணத்தில் நடக்கிற கதையாக உருவாகி இருக்கிறது ‘டேக் டைவர்ஷன்’ படம்.

இப்படத்தை சிவானிசெந்தில் இயக்கியிருக்கிறார். சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.

‘திருமலை தென்குமரி’ முதல் ‘பையா’ வரை பயண வழிக் கதைகளைக் கொண்ட பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் சேரும் அளவிற்கு நம்பிக்கையோடு உருவாகி வரும் படம் தான்’ டேக் டைவர்ஷன்’ .

சென்னை ராயபுரத்தில் ஒரு வெப்பமான பின்புலத்தோடு காட்சிகள் தொடங்க, வழியில் பல்வேறுபட்ட நிலக்காட்சிகள் மாறி பாண்டிச்சேரி கடற்கரை வரை செல்லும் கதை இது. வழியில் பல வர்ண ஜாலங்களாகக் காட்சிகள் திரையில் விரிகிற கதையாக இப்படம் உருவாகியிருக்கிறது.

இப்படத்தை இயக்கி இருக்கும் சிவானி செந்தில் ஏற்கெனவே’கார்கில்’ என்ற படத்தை 2018-ல் இயக்கி இருந்தார் .அந்தப் படம் தமிழில் ஒரே ஒரு கதாபாத்திரம் தோன்றும் படமாக ஊடகங்களில் பேசப்பட்டது.

நாயகன் காரில் செல்கிற பயணம் சார்ந்த காட்சிகள் தான் அந்தப் படத்தின் கதையாக இருக்கும்.

அதே போல் இந்தப் படத்தில் நாயகிக்கு மூன்று பேரால் நடக்கும் பிரச்சினைகள் வரும். அதற்கான தீர்வை நோக்கிச் செல்லும்படி இந்த கதையின் ஓட்டம் இருக்கும். மூன்றாண்டு காலம் அவளுக்கு இருந்த பிரச்சினைகள் அந்த ஒரு நாள் பயணத்தில் தீர்கிறது. எப்படி என்பதுதான் கதையின் போக்கு.

படத்தின் தலைப்பைப் பற்றி இயக்குநர் கூறும்போது,

” நாம் அனைவருமே புறப்பட்ட பாதையிலிருந்து நேராகச் சரியாக அடையவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேருவதில்லை. காலம் நம்மை மாற்றுப்பாதையில் திசை திருப்பி வேறு ஒரு கிளை பிரித்து அங்கே பயணிக்க வைத்து இறுதியில் தான் அந்த இடத்தை அடைய வைக்கும்.

அப்படி வாழ்க்கையில் ‘ டேக் டைவர்ஷன் ‘ என்ற வார்த்தைக்குப் பொருள் அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்து இருப்பார்கள். அந்த வகையில்தான் இந்த பெயரை வைத்தேன். இதற்கான சரியான தமிழ்ப்பெயர் கிடைக்கவில்லை என்பது ஒரு காரணம். இது ஒரு கலர்ஃபுல்லான படமாக இருக்கும். இளமை ததும்பும் காட்சிகள் புதிதாக இருக்கும்” என்றவர்.

“இந்த கொரோனா காலத்தில் அவ்வப்போது படப்பிடிப்பு என்று திட்டமிடாமல் துண்டுதுண்டாக படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்க முடியாது என்பதால் ஒரே பயணத்திட்டத்தில் படத்தை முடிப்பது என்ற நோக்கில் ஆரம்பித்தோம். இதோ முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

இந்தப்படத்தில் எத்தனை பேர் இருந்தாலும் சரி கதைதான் ஹீரோ” என்கிறார் இயக்குநர்.

ஏனென்றால் அவர் கே. பாலச்சந்தரின் ரசிகர். அவரது அத்தனை படங்களிலும் எத்தனைக் கதாநாயக நடிகர்கள் நடித்து இருந்தாலும் திரைக்கதை தான் பிரதான நாயகனாக இருக்கும். அதுபோல்தான் இந்தப் படத்தில் பலபேர் நடித்திருந்தாலும் கதைதான் கதாநாயகன்.

இப்படத்தில் ‘கேஜி எப்’ படத்தின் துணை இயக்குநரும், கூத்துப்பட்டறையில் பத்தாண்டுகள் நடிப்புப் பயிற்சி பெற்றவருமான சிவகுமார் அறிமுக நாயகனாக நடித்து முத்திரை பதித்துள்ளார்.

‘பேட்ட’, ‘சதுரங்கவேட்டை’ படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முக்கியமான கதாபாத்திரத்தில் இளமை துள்ளலுடன் நடித்துள்ளார் .

பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார் .இவரது நடிப்பு அனுபவ சாலியைப் போல அற்புதமாக அமைந்துள்ளது.

இரண்டாம் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார்.ஜான் விஜய் வில்லனாக வருகிறார். படத்தில் 20 நிமிடங்கள் அவரது கலக்கல் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்படும் .விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலாஜி சந்திரன், சீனிவாசன், அருணாச்சலம், ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். கன்னடத்தில் இவர் ஒளிப்பதிவு செய்த ஒரு படத்திற்குத் தேசிய விருது கிடைத்திருக்கிறது.

படத்திற்கு இசை ஜோஸ் பிராங்க்ளின். இவர் ‘நெடுநல்வாடை’, ‘என் பெயர் ஆனந்தன்’ படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர். படத்தொகுப்பு -விது ஜீவா.

“பயண வழிப் படமாக இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை தரும். அதற்கு நான் உத்திரவாதம் “என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் இயக்குநர் சிவானி செந்தில்.
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

Film based on Chennai to Pondicherry journey

கமல்-விஜய்-சூர்யாவை அடுத்து அஜித்துடன் இணையும் மோகன்லால்..?

கமல்-விஜய்-சூர்யாவை அடுத்து அஜித்துடன் இணையும் மோகன்லால்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith mohan lal‘ஆராட்டு’ என்ற ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். இது விரைவில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் முதன்முறையாக இயக்குனராக அவதாரமெடுக்கிறார் லாலேட்டன் (எ) மோகன்லால்.

3டி-யில் உருவாகும் இந்த படத்திற்கு BARROZ என்று பெயரிட்டுள்ளனர்.

இது அரசர் காலத்து கதை என கூறப்படுகிறது. இதில் மோகன்லாலே நாயகனாக நடிக்கிறார்.

பிரித்விராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் ஸ்பானிஷ் நடிகர்கள் Paz Vega and Rafael Amargo உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர்.

ஏற்கெனவே லூசிஃபர் என்ற படத்தில் மோகன்லாலை இயக்கியவர் பிருத்விராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்திகளை நாம் நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் மோகன்லால் இயக்கும் இந்த 3டி படத்தில் முக்கிய ரோலில் நடிக்க அஜித்திடம் மோகன்லால் கேட்டுக் கொண்டதாகவும், அஜித் ஓகே சொன்னதாகவும் ஒரு செய்தி காட்டுத் தீயாக பரவியது.

ஆனால் பாரோஸ் படக்குழுவினர் இதை மறுத்துள்ளனர். அஜித் நடிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஆனால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்வதால் தமிழ் நடிகர்கள் எவரேனும் இடம்பெறுவார்கள் என்பது மட்டும் உறுதி எனவும் தெரிவித்துள்ளனர்.

கமலுடன் ‘உன்னை போல் ஒருவன்’, விஜய்யுடன் ஜில்லா & சூர்யாவுடன் ‘காப்பான்’ ஆகிய நேரடி தமிழ் படங்களில் மோகன்லால் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith and Mohan Lal joins for a new movie ?

சானியா மிர்சா வாழ்க்கை வரலாற்று படத்தில் அஜித்-தனுஷ் பட ஹீரோயின்.?

சானியா மிர்சா வாழ்க்கை வரலாற்று படத்தில் அஜித்-தனுஷ் பட ஹீரோயின்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

taapsee pannuபிரபலங்களின் வாழ்க்கையை திரைப்படமாக்குவது வழக்கமான ஒன்றுதான்.

தேசிய தலைவர்கள் முதல் சாதனையாளர்கள் வாழ்க்கையை படமாக்கி வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோரது வாழ்க்கை படங்கள் அதாவது (பயோபிக்) படங்கள் ஏற்கெனவே ரிலீசாகி வசூல் வேட்டையாடியது.

தற்போது கபில்தேவ், சாய்னா நேவல், ஜூலன் கோஸ்வாமி, கர்ணம் மல்லேஸ்வரி போன்ற பிரபலங்களின் வாழ்க்கை படங்களாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாக உள்ளது.

ரோனி ஸ்குருவாலா என்பவர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

சானியா மிர்சா வேடத்தில் நடிக்க டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜின் பயோபிக்கான ‘சபாஷ் மித்து’ எனும் படத்தில் நடித்து வருகிறார் டாப்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனுஷ் உடன் ஆடுகளம், அஜித்துடன் ஆரம்பம் படங்களில் நடித்தவர்.

Ajith and Dhanush film heroine to star in Sania Mirza’s biopic ?

தாதா சாகேப் பால்கே விருதின் வரலாறு..: ரஜினிக்கு முன்பே பெற்ற நட்சத்திரங்கள் யார்.? ஒரு பார்வை

தாதா சாகேப் பால்கே விருதின் வரலாறு..: ரஜினிக்கு முன்பே பெற்ற நட்சத்திரங்கள் யார்.? ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஏப்ரல் 1…. தமிழக தேர்தல் நேரத்திலும் மிகவும் பரபரப்பாக பேசப்படும் பொருளாக மாறியுள்ளது தாதா சாகேப் பால்கே விருது.. இதற்கு முக்கிய காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அந்த விருதின் வரலாறு குறித்த பார்வை இதோ…

தாதா சாகேப் பால்கே விருது..: இந்திய சினிமா துறையில் பெரும் சாதனை படைக்கிறவர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது இது.

இந்திய சினிமாவின் தந்தை என்று கருதப்படும் தண்டிராஜ் கோவிந்த பால்கேவின் பெயரில் வழங்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் முழுநீள சினிமாவாகக் கருதப்படும் ராஜா ஹரிச்சந்திராவை 1913 ஆண்டில் இயக்கி தயாரித்தார் இவர்.

அதற்கு முன்பு வரை திரைப்படங்கள் ஊமைப்படங்களாகவே இருந்தது.

அதை மாற்றிக் காட்டி தனது ‘ராஜா அரிச்சந்திரா’ திரைப்படம் மூலம் மாற்றத்தை தொடங்கியவர் தான் தாதா சாகேப்.

எனவே அவரது பெயரிலேயே சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட்டு வருகிறது.

1969ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் மிகப் பெரும் பங்களித்தவர்களை கௌரவப்படுத்தும் விதத்தில் இந்த விருதை அறிமுகப்படுத்தியது இந்திய அரசு.

முதன்முதலாக இந்த விருது இந்திய சினிமாவின் முதல் பெண் என்று கருதப்படும் தேவிகா ராணிக்கு வழங்கப்பட்டது.

அவருக்குப் பிறகு பிருத்விராஜ் கபூர், நௌஷத், எல்.வி. பிரசாத், சத்யஜித் ரே, வி. சாந்தாராம், நாகி ரெட்டி, ராஜ் கபூர், லதா மங்கேஷ்கர், நாகேஸ்வரராவ், திலீப் குமார், ராஜ்குமார், சிவாஜி கணேசன், ஆஷா போஸ்லே, யாஷ் சோப்ரா, தேவ் ஆனந்த், மிருணாள் சென், ஷ்யாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், கே. பாலச்சந்தர், குல்ஸார், கே. விஸ்வநாத், அமிதாப் பச்சன் உள்ளிட்டோருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது 2021 மே 3ஆம் தேதி ரஜினிகாந்த் இந்த விருதை பெறவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் தலைவா….

2a852108b4c1425ca1fdb30fc9493026 (1)

Everything you need to know about #DadasahebPhalkeAward

தமிழக தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளே டெல்லியில் ரஜினிக்கு கௌரவம்

தமிழக தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளே டெல்லியில் ரஜினிக்கு கௌரவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth (6)இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு ஏற்கெனவே கௌரவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தகவலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில் வெளியிட்டார். அந்த ட்வீட்டில் :

“இந்தியத் திரைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான 2019 ‘தாதா சாகேப் பால்கே’ விருதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியராக அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது.

நடுவர் குழுவில் இருந்த ஆஷா போன்ஸ்லே, சுபாஷ்கை, மோகன்லால், சங்கர், பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு நன்றி.”

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விருதுக்கான விழா இந்திய தலைநகர் டெல்லியில் வருகிற மே மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ளதாம்.

மே 2ஆம் தேதி தான் தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

எனவே இந்த மாநிலங்களின் அடுத்த முதல்வர் யார்? என்ற முழுமையான தகவல்கள் மே 3க்குள் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor #Rajinikanth, fondly known as Thalaiva by his fans, will receive the 51st #DadaSahebPhalke award, India’s highest film honour, on May 3, 2021.

He had also been honoured with the Padma Bhushan & Padma Vibhushan in the past.

@rajinikanth @MIB_India https://t.co/kCyrgLb358

Super Star Rajinikanth will receive the 51st #DadaSahebPhalke award, on May 3, 2021.

ஆ.ராசாவின் ஆபாச பேச்சு.; பிரச்சாரம் செய்ய தடை போட்டது தேர்தல் ஆணையம்

ஆ.ராசாவின் ஆபாச பேச்சு.; பிரச்சாரம் செய்ய தடை போட்டது தேர்தல் ஆணையம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DMK Raja (2)தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக எம்பி ஆ.ராசா பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

முதல்வரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனவே ராசா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து மனு மீதான உரிய நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ஆ.ராசா மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் தமிழகம் & தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையும் அனுப்பியது.

இதனையடுத்து புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆ.ராசா தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் முதல்வருக்கு எதிரான விமர்சனம் குறித்து ஆ.ராசா அளித்த விளக்கம் திருப்தி இல்லை எனவும் அவர் 2 நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்தது தேர்தல் ஆணையம்.

அத்துடன் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்தும் ஆ.ராசாவின் பெயரை நீக்கவும் உத்தரவிட்டது.

தேர்தல் விதிமுறைகளை மீறி ஆ.ராசா
பேசியது கண்டிக்கத்தக்கது,

இனி எச்சரிக்கையுடன் பேச வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Election Commission warns DMK Raja for his controversy speech

More Articles
Follows