ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் கொடுத்த ‘எரும சாணி’ ஹரிஜா..; என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் கொடுத்த ‘எரும சாணி’ ஹரிஜா..; என்ன ஸ்பெஷல் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘எரும சாணி’ டியூப்பில் பிரபலமானவர் ஹரிஜா.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் கோவையில் செட்டிலானவர்.

எரும சாணி சேனலில் விஜய்யுடன் சேர்ந்து நடித்து பல வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

இவருடன் சில குறும்படங்களில் நடித்த அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஹரிஜா.

திருமணத்திற்கு பின்னரும் நடித்து வந்தார்.

மேலும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ஹரிஜாவுக்கு அவரது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Eruma Saani fame Harija announces pregnancy

eruma saani harija

மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரீ கொடுக்கும் ‘கருவாப்பையா’ பாடல் புகழ் கார்த்திகா

மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரீ கொடுக்கும் ‘கருவாப்பையா’ பாடல் புகழ் கார்த்திகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthika (2)‘தூத்துக்குடி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா.

அப்படத்தில் இடம்பெற்ற ‘கருவாப்பையா’ என்ற பாடல் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.

சில வருடங்கள் திரையுலகை விட்டு ஒதுங்கிய கார்த்திகா தற்போது மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்கிறாராம்.

இதுபற்றி கார்த்திகா கூறியதாவது…

“தமிழில் படங்களில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் தான், திடீரென தங்கையின் படிப்புக்காக மும்பை சென்று தங்க வேண்டிய சூழல் உருவானது.

மீண்டும் சென்னை வந்தபோது…இத்தனை நாளாக எங்கே சென்றீர்கள்..? நீங்கள் ஏன் மீண்டும் நடிக்கக் கூடாது? என தவறாமல் கேட்டனர்.

உடன் இருந்த உறவினர்கள் கூட, உன்னை எவ்வளவு பேர் மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அதற்காகவாவது மீண்டும் நீ நடிக்கவேண்டும் என்றனர்

ரசிகர்களின் அன்பை இவ்வளவு நாள் நான் மிஸ் பண்ணியிருக்கிறேன் என புரிந்தது.

அப்போது தெலுங்கு, தமிழ் என இருமொழிகளில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது.

இதுதான் சரியான தருணம் என அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இன்னும் 2 தெலுங்கு படங்களிலும் நடிக்க அழைப்பு வந்துள்ளது.

அதேபோல இங்கே தமிழிலும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இனி வெள்ளித்திரையில் என்னை அடிக்கடி நீங்கள் பார்க்கலாம்” என்றார் கார்த்திகா.

Thoothukudi fame Karthika re entry in films

ரூ 65 லட்சம் கடனுக்கு ரஜினியை இழுத்து விட்ட தனுஷ் தந்தை கஸ்துாரி ராஜா..; ஐகோர்ட் எச்சரிக்கை

ரூ 65 லட்சம் கடனுக்கு ரஜினியை இழுத்து விட்ட தனுஷ் தந்தை கஸ்துாரி ராஜா..; ஐகோர்ட் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012ம் ஆண்டில் சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் நடிகர் தனுஷின் தந்தை கஸ்துாரி ராஜா 2 தவணைகளில் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

அப்போது 2 புரோ நோட்டுகளையும் எழுதிக் கொடுத்திருந்தார்.

கடனைத் முகுந்த் சந்த் திருப்பி கேட்டபோது கஸ்தூரி ராஜா கொடுக்கவில்லை. இழுத்தடித்துள்ளார்

ஒரு கட்டத்தில், கடன் தொகையை தான் தரவில்லை என்றால் சம்பந்தியான ரஜினி தருவார் எனவும் போத்ராவுக்கு கஸ்தூரி ராஜா கடிதம் கொடுத்துள்ளார்.

அதன் பிறகும் பணம் கொடுக்காததால், போத்ரா தரப்பில், 2016ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில், கஸ்தூரி ராஜா வாங்கிய கடனுக்கு தான் பொறுப்பாக முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை ஏற்றுக் கொண்டார் நீதிபதி.

எனவே முகுந்த்சந்த் போத்ரா சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து முகுந்த்சந்த் போத்ரா இறந்து விட்டடார். இவ்வழக்கை தொடர்ந்து நடத்த அவரது மகன் ககன் போத்ராவுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்தது.

இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என கஸ்தூரிராஜா தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் பணத்தை திருப்பி தருவது தொடர்பாக கஸ்தூரிராஜா எழுதிய கடிதம், நடிகர் ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும் எனவும் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

தீ்ர்வுகாண முடியாவிட்டால், வழக்கை விசாரித்து, தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்பின்னர் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

High court warns Dhanush father Kasthuri Raja

rajini kasthuri raja

ப்ரியாவின் உதட்டை கடிக்க ஆசைப்பட்ட நபர்..; நடிகை கொடுத்த செம ஹாட் ரிப்ளை.!

ப்ரியாவின் உதட்டை கடிக்க ஆசைப்பட்ட நபர்..; நடிகை கொடுத்த செம ஹாட் ரிப்ளை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஓரு அதார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம் பெற்ற ‘மாணிக்க மலராய பூவே’ என்ற பாடலில் கண் புருவத்தை) சிமிட்டி இந்திய இளைஞர்களை கட்டிப் போட்டவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

இதனால் இவருக்கு ஐப்ரோ அழகி் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது.

2018-ஆம் ஆண்டில் இவரின் படமே அதிகளவில் இணையத்தில் வைரலானது.

இதன் பின்னர் சில படங்களில் நடித்தார்.

‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற ஹிந்தி திரைப்பட வாய்ப்பை பெற்றார்.

இவர் தன் இணைய பக்கங்களில் ரசிகர்களுடன் உரையாடுவார்.

”ஹேப்பி நியூ இயர்” என்ற படப் பாடலான “மான்வா லாகே” பாடலுக்கு உதட்டை அசைத்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதற்கு சரன் நாயர் என்பவர்.., “உங்கள் உதட்டை கடிக்கனும். எனக்குக் கற்றுக் கொடுங்கள்” என கேட்டுள்ளார்.

பிரியாவும் கொஞ்சம் கூட சளைக்காமல் “ஹ்ம்ம்ம்ம் I will.. நான் செய்வேன்” என பதிலளித்துள்ளார்.

Actress Priya Prakash Varrier reply to her fan

priya

இயக்குனர் ராஜேஷ்-ஜிவி பிரகாஷ் கூட்டணியில் இணையும் தனுஷ்

இயக்குனர் ராஜேஷ்-ஜிவி பிரகாஷ் கூட்டணியில் இணையும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush gv prakash (2)சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராஜேஷ்.

அதன் பின் அழகு ராஜா, VSOP, மிஸ்டர். லோக்கல் என படு தோல்விப் படங்களை கொடுத்தார்.

தற்போது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜேஷ்.

சன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இதில் நடிகை அம்ரிதா ஐயர், ரேஷ்மா, யோகி பாபு, பிக்பாஸ் டேனியல், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் தனுஷ் இணைந்துள்ளார்.

அதாவது ஜிவி இசையில் ஒரு பாடலை அவர் பாடவிருக்கிறாராம்.

‘டாட்டா பை பை’ என்ற முதல் பாடலை கானா வினோத் எழுதுகிறாராம்.

இப்பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

Actor Dhanush sung a song for GV Prakash next film

சிவகார்த்திகேயன்-யோகி பாபு-ஐஸ்வர்யா-இமான்-கௌதம் மேனனுக்கு கலைமாமணி விருது..; செம கடுப்பில் தமிழக அரசு

சிவகார்த்திகேயன்-யோகி பாபு-ஐஸ்வர்யா-இமான்-கௌதம் மேனனுக்கு கலைமாமணி விருது..; செம கடுப்பில் தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanகலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சி மற்றும் தொன்மையாக கலை வடிவங்களை பாதுகாக்கவும் உதவும் கலைஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் கடந்த 1954-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு காலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல் இன்று வெளியானது.

இதில் பழம்பெறும் நடிகைகளான, சரோஜா தேவி, சவுகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி, நடிகர் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர கலைஞர்கள் விவரம் வருமாறு…

நடிகைகள் தேவதர்ஷினி, மதுமிதா

இயக்குனர்கள்

கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா (நடிகர்)

இசையமைப்பாளர்கள், பாடகர்கள்:

டி இமான், தீனா, பாடகர்கள் சுஜாதா, அனந்து.

டிவி சீரியல் நடிகர்கள்

நடிகர் நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ் மற்றும் நித்யா

நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமகொடியன், காதல் மதி, வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது பட்டியல் (கலைமாமணி விருது) தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நிர்வாகிகள் லீக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த நிர்வாகம் மீது முதல்வர் அலுவலகம் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் அதற்கான விசாரணை நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Complete details on Kalaimamani Awards 2021

More Articles
Follows