10 & 12ஆம் வகுப்புகளைத் தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் ALL PASS..?..; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

10 & 12ஆம் வகுப்புகளைத் தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் ALL PASS..?..; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sengottaiyanஈரோடு மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது…

“தமிழகத்தில் தற்போது 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. 94% மாணவர்கள் வருகிறார்கள்.

ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர வாரத்தில் 6 நாட்கள் (திங்கள் முதல் சனி) பள்ளிகள் நடைபெறும்.

பள்ளி நேரம் முடிந்ததும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் நடைபெறும்.

தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.

பள்ளி வேலை நாட்களை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார்.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்விற்கான அட்டவணை உறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும்.

10, 12ஆம் வகுப்புகளைத் தவிர, மற்ற வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் வகுப்புகள் எப்போது தொடங்கப்படும்.? மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்களா? என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்ட போது ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

Education Minister Sengottaiyan talks about school reopen for Primary students

நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை

நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Doctor கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘நவரசா எனும் ஆந்தாலஜி’ படத்தில், நடிக்கிறார் சூர்யா.

இதனையடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

இதன் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது..

இவர் தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

கன்னடத்தில் ஒரு படத்திலும் தெலுங்கில் நானி ஜோடியாக, கேங்க் லீடர் படத்திலும் நடித்துள்ளார் பிரியங்கா அருள் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya gets Sivakarthikeyan movie heroine for his next

ஜிவி பிரகாஷ் இசையில் லாரன்ஸ் & ப்ரியா நடிக்கும் ‘ருத்ரன்’..; கதிரேசன் தயாரித்து இயக்குகிறார்

ஜிவி பிரகாஷ் இசையில் லாரன்ஸ் & ப்ரியா நடிக்கும் ‘ருத்ரன்’..; கதிரேசன் தயாரித்து இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rudhranபொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்தவர் 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன்.

தற்போது ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் “ருத்ரன்” படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இவரே இயக்குகிறார்.

K.P.திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் “ருத்ரன்” படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

தயாரிப்பாளர் S.கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் “ருத்ரன்” படப்பிடிப்பு இன்று ஜனவரி 20ல் பூஜையுடன் துவங்கியது.

நடிகர்கள்

ராகவா லாரன்ஸ்
பிரியா பவானி சங்கர்
நாசர்
பூர்ணிமா பாக்யராஜ்

தொழில் நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு – 5 Star கிரியேஷன்ஸ்
இசை – G.V.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு – R.D.ராஜசேகர்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
கதை, திரைக்கதை – K.P.திருமாறன்
இயக்கம் – 5 ஸ்டார் S.கதிரேசன்்

Raghava Lawrence in Rudhran shoot starts today

சசிகலாவுக்கு திடீரென மூச்சுத் திணறல்..; சிறையிலேயே மருத்துவர்கள் சிகிச்சை.!

சசிகலாவுக்கு திடீரென மூச்சுத் திணறல்..; சிறையிலேயே மருத்துவர்கள் சிகிச்சை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sasikalaசொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் விதித்தது.

இதனையடுத்து மறைந்த ஜெயலலிதாவைத் தவிர மீதமுள்ள 3 பேரும், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது சசிகலாவின் தண்டனைக் காலம் நிறைவு பெறவுள்ளது.

எனவே சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார்? என்று கேள்வி எழுந்தது.

விரைவில் விடுதலையாகவுள்ள நிலையில் கடந்த மாதம் அபராத தொகையை செலுத்தினார் சசி.

அதன்படி ஜனவரி 27 காலை 10 மணி அளவில் சசிகலா விடுதலை செய்யப்படுகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கர்நாடக சிறைத்துறை.

இந்தநிலையில் இன்று ஜனவரி 20ஆம் தேதி சசிகலாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

உடனடியாக சிறை வளாகத்திலுள்ள டாக்டர்கள் சசிகலாவுக்கு சிகிச்சையளித்தனர்.

தற்போது, சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என தகவல்கள் வந்துள்ளன.

Sasikala shifted to Bowring Hospital after developing breathing difficulties.

இந்திய சுதந்திர தினத்தில் ரிலீசாகுமா ‘வலிமை’..? அஜித் ரசிகர்கள் ஆர்வம்.!

இந்திய சுதந்திர தினத்தில் ரிலீசாகுமா ‘வலிமை’..? அஜித் ரசிகர்கள் ஆர்வம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimai வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.

இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்கிறார்.

இவர்களுடன் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, பவல் நவகீதன், யோகி பாபு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடிகர் புகழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

வரும் பிப்ரவரிக்குள் வலிமை படத்தை முடித்துவிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி விரைவில் வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோவிற்கு படக்குழுவினர் செல்ல இருக்கிறார்களாம்.

இந்த நிலையில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி வலிமை ரிலீசாகும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி அஜித்தின் சென்டிமெண்ட் நாளான வியாழக்கிழமையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு எதுவும் இதுவரை இல்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Ajith’s Valimai gearing up for Independence Day release ?

சித்ரா தற்கொலை.. நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம்..; கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்த போலீஸ்

சித்ரா தற்கொலை.. நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம்..; கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்த போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vj chithra husbandகடந்தாண்டு டிசம்பர் 9-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார் சின்னத்திரை நடிகை விஜே சித்ரா.

எனவே இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் உறவினர்களுடன் விசாரணை நடத்தினர்.

அதன்படி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, ஹேம்நாத்தை டிசம்பர் 14ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஹேம்நாத்.

அவர் தன் மனுவில்…”சீரியல்களில் நடிக்கக் கூடாது எனவோ சித்ரா நடத்தையில் சந்தேகம் கொண்டதாகவோ தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை

தனக்கும், சித்ராவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

எனவே தனக்கு ஜாமீன் வழங்க மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் ஹேமநாத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சித்ராவின் பெற்றோர் சார்பிலும், அவரது நண்பரான சையது ரோஹித் என்பவர் சார்பிலும் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் இன்று நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது,

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாவதி, நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சார்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில்… “சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதார். அதனால்தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Police report on Chithra suicide case

More Articles
Follows