விஸ்வாசம் மாஸான படம் மட்டுமில்லை; ரகசியம் உடைக்கும் எடிட்டர் ரூபன்

விஸ்வாசம் மாஸான படம் மட்டுமில்லை; ரகசியம் உடைக்கும் எடிட்டர் ரூபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Editor Ruben talks about his working experience in Viswasam நிச்சயமாக, ஒவ்வொரு திரைப்படத்தின் முதல் பார்வையாளரும், முதல் விமர்சகரும் அதன் படத்தொகுப்பாளர் தான்.

எனென்றால் அவர்கள் தான் தொகுக்கப்படாத காட்சிகளையும், தெளிவாக திருத்தப்பட்ட காட்சிகளையும் பார்த்து படம் எப்படி வந்திருக்கிறது என்று படத்தினை துல்லியமாக கணிப்பவர்கள்.

ஏராளமான படங்களில் ஒரே நேரத்தில் வேலை செய்தாலும், அஜித்குமாரின் விஸ்வாசம் படத்தை சற்றே சிறப்பாக உணர்கிறார்.

விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து படத்தொகுப்பாளர் ரூபன் கூறும்போது…

“விஸ்வாசம் ஒரு வெகுஜன திரைப்படம் என்பதையும் தாண்டி, பண்டிகைக்கான ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்.

இந்த பண்டிகை சீசனில் எல்லோருக்குமான ஒரு விருந்தாக அமையும் வகையில் அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு விருந்து. விஸ்வாசத்தில் பணி புரிவது மிகவும் சவாலானது.

இந்த படத்தின் கதை வேகமான திரைக்கதை, ஆக்‌ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளை கொண்டிருக்கும். அதற்கேற்ற வகையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. குறிப்பாக, டிரெய்லரின் இறுதி பதிப்பை கொண்டு வருவது மிகவும் சவாலாக இருந்தது.

ஏனென்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கவோ அல்லது குறைக்கவோ கூடாது, அதை சமநிலையில் வைக்க வேண்டும். சிவா மற்றும் தயாரிப்பாளர்களின் ஆலோசனையோடு நான் நிறைய பதிப்புகளில் வேலை செய்ய வேண்டியிருந்தது.

பார்வையாளர்களின் ரசிப்புத் தன்மைக்கு ஏற்ப டிரெய்லரை கொடுத்ததில் ஒட்டு மொத்த குழுவுக்கும் மகிழ்ச்சி” என்றார்.

ரூபன் படத்தில் மிகவும் ரசித்த விஷயங்களை பற்றி கூறும்போது…

“படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் மிகச்சிறப்பாக இருந்தது. குறிப்பாக மழையில் நடக்கும் அந்த சண்டைக்காட்சியும், இரண்டாம் பாதியில் நடக்கும் இன்னொரு சண்டைக்காட்சியும்.

அதில் அஜித் சார், எதிரிகளை அடித்து உதைக்கும்போது சில மாஸான பஞ்ச் டயலாக்குகளை சொல்வார்.

இந்த விஸ்வாசம் வெறும் மாஸான படம் என்பதையும் தாண்டி, ஒட்டுமொத்த குடும்ப பார்வையாளர்களுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும்” என்றார்.

சிவா இயக்கத்தில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படம் ஜனவரி 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

Editor Ruben talks about his working experience in Viswasam

அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சரண் இயக்கத்தில் ஆரவ்

அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சரண் இயக்கத்தில் ஆரவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Saran team up with Aarav for Market Raja MBBSஅஜித் நடித்த காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சரண்.

இயக்குனர் சரண் தற்போது தனது புதிய படமான ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படப்பிடிப்பை துவக்கியிருக்கிறார்.

இதில் பிக் பாஸ் புகழ் ஆரவ் மற்றும் தெலுங்கு நடிகை காவ்யா தப்பார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சரணின் படங்கள் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த முறை அவர் இதுவரை செய்யாத புது முயற்சி ஒன்றை கையிலெடுத்திருக்கிறார்.

இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது’ “என் முந்தைய திரைப்படங்களில் நான் ஃபேண்டஸியை முயற்சி செய்ததில்லை.

இந்த மார்க்கெட் ராஜா MBBS படத்தில் அதை செய்ய இருக்கிறேன், இதில் ஆக்‌ஷன் மற்றும் காமெடியும் இருக்கும்.

கமல் சார் நடித்து நான் இயக்கிய ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தின் தலைப்புக்கும், இந்த தலைப்புக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

அந்த படத்துக்கு முதலில் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ என்று தான் பெயரிடப்பட்டது, ஆனால் பின்னர் ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ என்று மாற்றினோம்” என்றார்.

நடிகர்கள் தேர்வு பற்றி சரண் கூறும்போது…

“கதை பெரம்பூர் பின்னணியில் அமைந்துள்ளது. இதில் கதாநாயகன் ஒரு ரயில்வே ஒப்பந்ததாரர் மற்றும் ஒரு உள்ளூர் தாதா.

அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற தோற்றம் உள்ள ஒருவரை தேடினேன்.

ஆரவ் என் மனதில் முதல் தேர்வாக தோன்றினார்.

காவ்யா தாப்பர் தெலுங்கில் இருந்து வந்தவர். நான் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தும் 18 வது நாயகியாக அவர் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாசர், ராதிகா சரத்குமார், சாம்ஸ், ஆதித்யா, யோகி பாபு, பாகுபலி புகழ் பிரபாகர் மற்றும் சில பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

நான் இங்கு குறிப்பிட்டுள்ளதை விட அதிகமாக எதையும் வெளிப்படுத்துவது படத்தின் சுவாரஸ்யத்தை குறைத்து விடும்.

ஆனால், படம் நகைச்சுவை, ஆக்‌ஷன் மற்றும் ஃபேண்டஸி கலந்த கலவையாக இருக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.

சைமன் கே கிங் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார். சரண் தனது இளைய சகோதரர் கே.வி.குகன் உடன் முதன் முறையாக இணைகிறார்.

Director Saran team up with Aarav for Market Raja MBBS

பெண்களுக்காக ஐயப்பன் கோயில் கட்டுவேன்..; கடமான் பாறை இசை விழாவில் சீமான் ஆவேசம்

பெண்களுக்காக ஐயப்பன் கோயில் கட்டுவேன்..; கடமான் பாறை இசை விழாவில் சீமான் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I will built Iyyappan temple for Women says Seeman at Kadamanparai Audio Launchமன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “கடமான்பாறை“ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார்.

இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது….

மன்சூரலிகானின் மகன் துக்ளக் இப்படத்தில் அறிமுகமாகிறார். அவர் சிறந்த நடிகராக உயர வேண்டும்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கவில்லை. அது நாட்டில் பெரும் சர்ச்சையாக உள்ளது.

கேட்டால் தீட்டு என்கிறார்கள். மற்ற கோயில்களில் மட்டும் பெண்களை அனுமதிக்கிறார்கள். அங்கு தீட்டு இல்லையா?,

அதை கேட்டால் ஐயப்பன் பிரம்மசாரி என்கிறார்கள். அப்படியென்றால் ஹனுமன் மற்றும் பிள்ளையார் எல்லாம் பிரம்மசாரிகள் இல்லையா? அங்கே பெண்கள் செல்லவில்லையா?,

என்னைக் கேட்டால் பெண்களை அனுமதிக்க பெண்களுக்காகவே ஒரு ஐயப்பன் கோயில் கட்ட வேண்டும் என்பேன். என்று ஆவேசமாக பேசினார் சீமான்.

I will built Iyyappan temple for Women says Seeman at Kadamanparai Audio Launch

I will built Iyyappan temple for Women says Seeman at Kadamanparai Audio Launch

ஸ்டன்ட் யூனியன் 2019 ஆண்டிற்கான நிர்வாகிகள் பதவியேற்பு விழா

ஸ்டன்ட் யூனியன் 2019 ஆண்டிற்கான நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Stunt Union new members elected for 2019 yearநமது தென்னிந்திய திரைப்பட சினி & டிவி ஸ்டன்ட் இயக்குனர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் யூனியன் 1966 ஆம் ஆண்டு பொன்மனச் செம்மல் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, உலகளவில் பல சாதனைகள் படைத்து ஐம்பது ஆண்டுகள் கடந்து, இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வரும் எங்கள் சங்கத்தில் மூத்த முன்னால் உருபினர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு 52 வது ஆண்டு கடந்து தற்போது 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்

சென்ற முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.S.G.சோமசுந்தரம் (எ) S.D சுப்ரீம் சுந்தரே இந்த ஆண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திரு.தவசிராஜ். S.D – உபதலைவர்
திரு.K.ராஜசேகர். S.D – துணைத்தலைவர்
திரு.G.பொன்னுசாமி S.A – செயலாளர்
திரு.V.மணிகண்டன் S.A – துணைச்செயலாளர்
திரு.S.S.M.சுரேஷ் S.A – இணைச்செயலாளர்
திரு.C.P.ஜான் S.A – பொருளாளர்

செயற்குழு உறுப்பினர்கள்
திரு.S.M.ராஜ் S.A
திரு.P.ரவிக்குமார் S.A
திரு.R.நாராயணன் S.A
திரு.R.பாபு S.A
திரு.A.வெங்கடேஷன் S.A
திரு.U.ஆனந்தகுமார் S.A
திரு.V.காசி S.A
திரு.M.வெற்றிவேல் S.D
திரு.M.சுகுமார் S.A
திரு.B.K.பிரபு S.D
திரு.E.பரமசிவம் S.A
திரு.K.சதாசிவம் S.A

மேலே குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் இந்த ஆண்டின் பொறுப்பாளர்கள் ஆவார்கள். அதுமட்டுமல்லாமல் 2019 ம் ஆண்டு தேர்தலை நல்ல முறையில் நடத்திக் கொடுத்த தேர்தல் அதிகாரி M.சாகுல் அமீர் S.D அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

பதவியேற்பு விழா இன்று ( 05.01.2019 ) காலை ஸ்டன்ட் யூனியனில் நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் கலைபுலி.S.தாணு, எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் , மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், வி.பிரபாகர், சண்முகசுந்தரம் உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

வெற்றிபெற்ற உருப்பினர்களுக்கு 24 சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் ஏராளமான ஸ்டன்ட் கலைஞர்களும், ஸ்டன்ட் இயக்குனர்களும் கலந்துகொண்டனர்.

இப்படிக்கு…

நிர்வாகஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள்
தென்னிந்திய திரைப்பட ஸ்டன்ட் நடிகர்கள் யூனியன்

Stunt Union new members elected for 2019 year

சாயாஜி ஷிண்டேவின் *அகோரி* பட டீசரை வெளியிட்ட விஷால்

சாயாஜி ஷிண்டேவின் *அகோரி* பட டீசரை வெளியிட்ட விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aghori Teaser Launched by Actor Vishalதயாரிப்பாளர் சங்கத் தலைவர் , நடிகர் சங்க செயலாளர் விஷால் ‘அகோரி ‘ படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

டீஸரைப் பார்த்த விஷால் பபம் பற்றியும் பக்குழுவினர் பற்றியும் விசாரித்து அறிந்தவர் இது ஒரு வித்தியாச முயற்சியாக இருப்பதாகத் தான் நம்புவதாகக் கூறியதுடன் படக்குழுனரை வாழ்த்தினார்.

ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து ‘அகோரி’ படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார்.

சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை, இது ஒரு முழுமையான ஆக்ஷன் த்ரில்லர் காமெடி காதல் சென்டிமெண்ட் எல்லா அம்சங்களும் உள்ள படம்.

ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும்.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகர் சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார்.

அவர் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிப்பவர், படத்தின் கதை தன் தோற்றம் எல்லாமும் கேட்டதும் உடனே நடிக்கச் சம்மதித்து இருக்கிறார். மிகவும் ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார்.

படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான ஹரிதுவார் செட் அமைத்து 150 அகோரிகளுடன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது.

இப்படத்திற்காக கேரளா காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகளும் படமாகியுள்ளன.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு மணி நேர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும்.தெலுங்கில் ‘சஹா ‘படத்தின் மூலம் புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார்.

இவரது உயரம் 6.5 அடி ஆகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார், இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர்.

இவர் ‘144 ‘பட நாயகி. மைம் கோபி , சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, கலக்கப்போவது யாரு சரத், டிசைனர் பவன், ஆகியோருடன் கூத்துப்பட்டறை பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு வசந்த். இவர் ஈகோ , கள்ளத்துப்பாக்கி படங்களின் ஒளிப்பதிவாளர். இசை அண்மையில் கேரளாவில் புகழ் பெற்று வரும் ஃபோர் மியூசிக் நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி இது.

ஆர்ட் டைரக்டர் ஜெயச்சந்திரன், வசனத்தை தயாரிப்பாளர் ஆர்.பி பாலா எழுதியுள்ளார். ‘அகோரி’ படத்தை விரைவில் வெளியிட உள்ளனர்.

Aghori Teaser Launched by Actor Vishal

அகோரி டீஸர் உங்கள் பார்வைக்கு

https://youtu.be/z0iH1mHSocw

வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி நெடுநல்வாடை படம் தயாரித்த 50 நபர்கள்

வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி நெடுநல்வாடை படம் தயாரித்த 50 நபர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

WhatsApp group members produced Nedunalvaadai movie “முஸ்தபா முஸ்தபா என்று தொடங்கி “ பசுமை நிறைந்த நினைவுகளே’ பாடலுடன் பள்ளி, கல்லூரி நட்புகளுக்கு எண்ட் கார்டு விழுந்துவிடுவதுதான் பெரும்பாலும் நிகழ்ந்து வருவது.

அதையும் மீறி ஒன்றிரண்டு நண்பர்கள் மட்டுமே வாழ்நாள் முழுக்க நம்மோடு பயணிப்பார்கள்.

ஒரு சிலிர்ப்பான சர்ப்ரைஸாக, தங்களுடைய வகுப்புத் தோழன், சினிமாவில் நல்லபடியா வரட்டுமே என்ற ஒரே காரணத்துக்காக 50 முன்னாள் மாணவர்கள் தயாரிப்பாளர்களாக மாறியிருக்கிறார்கள்.

இயக்குநரின் பெயர் செல்வகண்ணன். படம் “ நெடுநல்வாடை”.

2000 ம் ஆண்டு நெல்லை சங்கர் பாலிடெக்னிக்கில் படித்தவர் கண்ணன். இவருடன் படித்த நண்பர்களில் 90 சதவிகிதம் பேர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரு நிறுவனங்களில் பொறியாளர்களாக வேலை செய்கிறார்கள்.

காந்தி கிருஷ்ணா, சாமி, ராஜேஷ் எம்.செல்வா ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு, மற்றவர்கள் போலத் தனியாகப் படம் இயக்க தயாரிப்பாளர்களின் அலுவலகப்படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார் கண்ணன்.

இதை அறிந்த அவரது வகுப்புத் தோழர்களில் இருவர் மற்றவர்களை ஒவ்வொருவராகத் தொடர்பு கொள்ளத் துவங்கி செய்தியைப் பரிமாற ஆரம்பித்தார்கள்.

உடனே வாட்ஸ் அப்பில் ஒரு குழு உருவாக்கி மொத்த மாணவர்களும் தங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை கண்ணன் இயக்கும் படத்துக்கு முதலீடு செய்வதாக உறுதி அளித்தார்கள். இது கதையல்ல நிஜம்.

உறுதிமொழியில் இருந்து கடந்த ஒரு வருடத்தில் ஒருவர் கூட பின்வாங்காத நிலையில், சினிமாவில் வழக்கமாக சந்திக்கும் சில சங்கடங்களைக் கடந்து ‘நெடுநல் வாடை’ வரும் மார்ச்சில் திரைக்கு வருகிறது.

படத்தின் கதை குறித்துப் பேசிய இயக்குநர் செல்வகண்ணன்,’ மகன்வழிப் பேரன்,பேத்திகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமை, அங்கீகாரம் சமூகத்தில் மகள் வழி உறவுகளுக்கு கிடைப்பதில்லை. குறிப்பாக ஈமக்கடன்களில் கூட அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறேன்.

இன்னொரு பக்கம் காதல் தோல்விகளில் எப்போதும் பெண்கள் மட்டுமே குற்றவாளிகள் போல், துரோகம் இழைத்தவர்கள் போல் சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் தரப்பில் இருக்கும் யதார்த்ததை, நியாயத்தையும் பேசி இருக்கிறேன்.

இரண்டும் வெவ்வேறு சமாச்சாரங்கள் போல் தோன்றலாம். ஆனால் “நெடுநல்வாடை”யில் இவையிரண்டும் சரிசமமாக கலந்து, இணைகோட்டில் பயணித்து பார்க்கிறவர்களைக் கலங்கடிக்கும்’ என்கிறார் செல்வகண்ணன்.

முக்கிய கதாபாத்திரங்கள் :

பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

தயாரிப்பு : பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ்
இயக்குநர் : செல்வகண்ணன்
இசை : ஜோஸ் ஃபிராங்க்ளின்
ஒளிப்பதிவு : வினோத் ரத்தினசாமி
பாடல்கள் : கவிப்பேரரசு வைரமுத்து
படத்தொகுப்பு : மு.காசிவிஸ்வநாதன்
கலை : விஜய் தென்னரசு
சண்டை பயிற்சி : ராம்போ விமல்
நடனம் : தினா, சதீஷ்போஸ்
மக்கள் தொடர்பு : மணவை புவன்.

WhatsApp group members produced Nedunalvaadai movie

nedunalvadai movie stills

More Articles
Follows