தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் நமக்கு சான்ஸ் கிடைக்காத என்று லட்சணக்கான இளைஞர்கள் காத்திருக்கிறார்கள்.
ஆனால் ஒரு சிலர் மட்டுமே சினிமா சான்ஸையே தன்னை தேடி வர வைப்பார்கள்.
அப்படியொரு பெண்தான் ‘டப்ஸ்மாஷ்’ புகழ் மிருணாளினி.
‘டப்ஸ்மாஷ்’இல் தன்னுடைய அழகான முகபாவனைகளை பதிவு செய்து, இணையங்களில் ஒரு ரசிகர் வட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கும் இவர் தற்போது சினிமாவில் அறிமுகமாகிறார்.
அதுவும் இதுவொரு வித்தியாசமான படம்.
நகல் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஒரே ஒரு கேரக்டர்தானாம். அந்த கேரக்டரில்தான் இந்த மிருணாளினி நடிக்கிறார்.
இயக்குநர்கள் சசி மற்றும் சுசீந்திரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் எஸ் குமார் இப்படத்தை இயக்குகிறார்.
‘கரிஸ்மாட்டிக் கிரியேஷன்ஸ்’ சார்பில் தயாரிக்கிறார் மணிகண்டன் சிவதாஸ்.
இதுகுறித்து இயக்குனர் கூறியதாவது…
“நகல் படத்தில் ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் மட்டும் தான். அதனால் எங்கள் படத்தின் கதாநாயகியை தேர்வு செய்யும் பணி எங்களுக்கு சற்று சவாலாகவே இருந்தது.
தன்னுடைய பாவனைகளால் இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் தர கூடிய ஒரு நடிகை தான் எங்கள் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, நாங்கள் மிருணாளினியை தேர்வு செய்தோம்.
குறுகிய காலத்தில், தன்னுடைய டப்ஸ்மாஷ் காணொளிகளால், தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை சமுகவலைத்தளங்களில் உருவாக்கி இருக்கிறார் மிருணாளினி.
நகல் படத்தின் கதையை கேட்ட அடுத்த கணமே அவர் எங்கள் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டார். ஒரு பெண்ணின் அமானுஷிய அனுபவங்களை மையமாக கொண்டு தான் எங்களின் ‘நகல்’ படத்தின் கதை நகரும்” என்றார்.
Dubsmash fame Mirnalini plays the female lead in single characterized film