தமிழக ரிசர்வ் தொகுதிகளை கைப்பற்ற திமுக போடும் ‘மாஸ்டர்’ பிளான்

தமிழக ரிசர்வ் தொகுதிகளை கைப்பற்ற திமுக போடும் ‘மாஸ்டர்’ பிளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியே ரிசர்வ் தொகுதிகள்தான்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 44 தொகுதிகள் பட்டியல் இனத்தவருக்கான தனித் தொகுதிகள்.

ஆட்சிக்கு 118 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி சுலபத்தில் ஆட்சி அமைக்கும்.

ஆக ஆட்சிக்கு தனித் தொகுதிகளான 44 இடங்களும் மிக முக்கியமானவை.

அதில் இதுவரை திமுகவை விட அதிமுகவே அதிகம் தொகுதிகளை ஒவ்வொரு தேர்தல்களிலும் கைப்பற்றி வருகிறது.

ரிசர்வ் தொகுதிகளில் திமுக அதிக கவனம் செலுத்தாமல் போனதற்கு காரணம் புரியாமல் போன உ.பி.க்களுக்கு இப்போது உற்சாக செய்தி கிடைத்து இருக்கிறதாம்.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பொறுப்பேற்ற நாள் முதல் தனித் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது திமுக.

அதிமுக பாணியை மிஞ்சும் விதமாக ரிசர்வ் தொகுதிகளில் தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் அனைவரும் முழுமையான பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்க முடிவு செய்து இருக்கிறதாம்.

இந்த முடிவுக்கு திமுக வந்ததற்கு பல காரணங்கள் இருந்தாலும் உதாரணமாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 2 ரிசர்வ் தொகுதிகள் கடந்த தேர்தலிக் கை நழுவியதற்கு தவறான வேட்பாளர் தேர்வுதான்.

கே.வி.குப்பம் தொகுதியில் அம்முலு என்பவரும், அரக்கோணம் தொகுதியில் பவானி வடிவேலு என்பவரையும் தலைமை அறிவிக்க தொகுதிகளில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

இதற்கு காரணம் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் இருவரும் பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களின் கணவர்கள் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

ஏற்கனவே இந்த பகுதிகளில் இந்த இரு சமூகத்தினர் இடையே எப்போதும் உரசல் முட்டல் மோதல் இருந்து கொண்டே இருக்கும்.

இதனால் தான் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது அதன் காரணமாக அரக்கோணம் தொகுதியில் மட்டும் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டார். அப்படியிருந்தும் அந்த தொகுதிகளில் தோல்விதான் கிடைத்தது.

அதை மிக தாமதமாக புரிந்து கொண்ட தலைமை இந்த முறை அப்படி எந்த மிஸ்டேக்கும் நடக்க கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறது.

மொத்தமுள்ள 44 தொகுதிகளையும் கைப்பற்ற தீவிரமான மாஸ்டர் பிளான் போட்டு அதன்படி வேட்பாளர் தேர்வும் மிக ரகசியமாக நடத்திக் கொண்டு இருக்கிறது திமுக தலைமை.

அரக்கோணம் தொகுதியை பொறுத்தவரை “6 கோணம் உள்ள தொகுதி அரக்கோணம்” என உட்கட்சி கோஷ்டிகளை மனதில் வைத்து திமுக தலைவர் கருணாநிதி நையாண்டி செய்வாராம்…

அப்படி அரக்கோணம் கொண்ட அரக்கோணத்தில் கண்டிப்பாக திமுக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உ.பி.க்கள் இப்போதில் இருந்தே மிக உற்சாகமாக தேர்தல் வேலைகளை செய்து வருகிறார்கள். அவர்களை குஷி படுத்தும் விதமாக எந்த கோஷ்டியிலும் சிக்காத புதிய வேட்பாளரை களம் இறக்க திமுக தலைமை முடிவு செய்திருக்கிறதாம்.

அந்த வகையில் மாவட்ட வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளர் எழில் இனியனுக்கு யோகம் அடிக்கிறதாம்.

காரணம், சிட்டிங் எம்.எல்.ஏ.ரவியை எதிர்த்து பண பலத்திலும், படை பலத்திலும் வக்கீல் எழில் இனியன் மிக பலமாக இருப்பதால் தொகுதியில் எடுக்கப்பட்ட சர்வேக்களிலும் இவர் பெயரே பலமாக ஒலிக்கிறதாம்.

அரக்கோணம் திமுக கோட்டையானால் ஆட்சியும் நம்முடையதுதான் என அரக்கோணம் செண்டிமெண்ட் தெரிந்த உ.பி.க்கள் உற்சாகத்தில் திளைக்கிறார்களாம்.

DMK master plan in upcoming election

Stalin Raja

ஏழு படங்கள் கை வசம்..; 13 கிலோ எடை குறைத்து ஜொலிக்கும் ஐஸ்வர்யா தத்தா

ஏழு படங்கள் கை வசம்..; 13 கிலோ எடை குறைத்து ஜொலிக்கும் ஐஸ்வர்யா தத்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya Duttaசினிமாவின் மீது தீவிர காதலும் அர்ப்பணிப்பும் கொண்ட நடிகை ஐஸ்வர்யா தான் நடிக்கும் “SSHHH” ஆந்தாலஜி படத்தின் கதாப்பாத்திரத்திற்காக புதியதோர் உச்சத்தை தொட்டுள்ளார்.

கதாப்பாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடையை குறைப்பதையும், கூட்டுவதையும் நாம் அறிந்திருப்போம்.

ஆனால் எப்போதும், நடிகைகள் அவ்வாறு செய்வதில்லை. ஆனால் இந்த விதியினை உடைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

திரைத்துறை மீதான காதல் மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாக SSHHH படத்தில் தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்தின் தன்மைக்காக 13 கிலோ உடல் எடையினை குறைத்து புத்தம் புது பொலிவுடன் தோற்றமளிக்கிறார்.

பிக்பாஸ் மூலம் புகழடைந்த அவர், தற்போது தமிழில் நாயகியாக 7 படங்களில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் வின்னர் ஆரி நடிக்கும் அலேகா, PUBG, கூடவன், கன்னி தீவு, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, பாலாஜி மோகன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் தலைப்பிடப்படாத படம் மற்றும் மிளிர் முதலான படங்களில் நடித்து வருகிறார்.

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான கதைகளங்களில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்துடன் அமைந்திருக்கின்றன.

இப்படங்கள் தன் திரைவாழ்வின் முக்கியமான படங்களாக, திருப்புமுனை தருமென பெரும் நம்பிக்கையில் உள்ளார்.

Actress Aishwarya dutta sheds 13kgs for Sshh

‘பத்து தல’ சிம்பு படத்தை முடித்துவிட்டு ‘செல்லப்பிள்ளை’ ஆக மாறும் கௌதம் கார்த்திக்

‘பத்து தல’ சிம்பு படத்தை முடித்துவிட்டு ‘செல்லப்பிள்ளை’ ஆக மாறும் கௌதம் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் கார்த்திக் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகி வரும் படங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை குவித்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது SST Productions தயாரிப்பாளர் ஃபைரோஸ் ஹுசேன் ஷெரீஃப் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்கும் “செல்லப்பிள்ளை” படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது இப்படத்தின் முதல்கட்ட பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்காக முன்னணி நடிகர்கள் குழு மற்றும் பிரபல தொழில்நுட்ப கலைஞரகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

அடுத்த மாதத்தில் மொத்த படக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டு படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

படம் குறித்து இயக்குநர் அருண் சந்திரன் கூறியதாவது…

இது ஒரு மாஸ் கலந்த ஆக்சன் படம். கௌதம் கார்த்திக் இது வரையிலும் செய்யாத புது மாதிரியான படமாக இப்படம் இருக்கும். அவர் தற்போது மிக முக்கியமான சில படங்களில் நடித்து வருகிறார்.

அப்படங்களின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாய் முடிந்த பிறகு, இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும்.

இப்படத்திற்கு நாயகனாக கௌதம் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டதை பற்றி கூறும்போது…

“அவரது தந்தை நவரச நாயகன் கார்த்திக்கை போலவே கௌதம் கார்த்திக அவர்களும், எந்த ஒரு கதாப்பாத்திரத்திலும் மிக எளிதாக பொருந்தி போக கூடியவர்.

ஆகவே எனது திரைக்கதைக்கும், கதாப்பாத்திரத்திற்கும் சரியாக அவர் பொருந்திப் போவார் என நினைத்தேன்.

இப்படத்தில் கௌதம் கார்த்திக்கின் கதாப்பாத்திரம் கண்டிப்பாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும்.

“செல்லப்பிள்ளை” படத்தின் பெயர்க்காரணம் குறித்து கூறும்போது…

“கதைக்காக மட்டும் இந்த தலைப்பை வைக்கவில்லை, கௌதம் கார்த்திக் தனது தாத்தா முத்துராமன் மற்றும் தந்தை நவரச நாயகன் கார்த்திக் ஆகியோரின் ரசிகர்களால் செல்லப்பிள்ளையாகவே பார்க்கப்படுகிறார்.

அவர் அனைத்து தலைமுறையினராலும் அன்போடு நேசிக்கப்படுகிறார். அதனால் “செல்லப்பிள்ளை” தலைப்பு மிகச் சரியான தலைப்பாக இருக்கும்.

தற்போது கௌதம் கார்த்திக் தமிழில் முக்கியமான சில படங்களில் நடித்து வருகிறார். சிலம்பரசன் TR உடன் இணைந்து “பத்து தல” படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் மதுரையை பின்னணி களமாக கொண்டு உருவாகும் புதியதொரு குற்ற விசாரணை செய்யும் திரைப்படத்திலும் நடிக்கிறார்.

Gautham Karthik next film is titled Chella Pillai

பீர் குளியல்… கால விரிக்க யோசிச்சிருக்கனும்..; காதலர் தினத்தில் BACHELOR செய்த அடாவடிஸ்

பீர் குளியல்… கால விரிக்க யோசிச்சிருக்கனும்..; காதலர் தினத்தில் BACHELOR செய்த அடாவடிஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள படம் ‘பேச்சிலர்’ Bachelor.

இப்பட டீசர் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது.

இந்த டீசரில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு காட்சியில் பீரில் குளிக்கிறார். F–K மயிர், கால விரிக்க யோசிச்சிருக்கனும், ஓ— உள்ளிட்ட பல கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.

இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த டீசரை பார்த்துள்ளனர்.

இப்படம் குறித்த இதர தகவல்கள் இதோ…

Axcess Film Factory தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்திருக்கும் “பேச்சிலர்” படத்தின் டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் படம் குறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார், தயாரிப்பாளர் G.டில்லிபாபு கலந்துரையாடினர்.

Axcess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு கூறியதாவது….

எங்கள் நிறுவனத்தின் சார்பில், தரமிகுந்த கதைகளை மட்டுமே தொடர்ந்து தயாரித்து வருகிறோம்.

வித்தியாசமான கதைகளங்கள் கொண்ட படங்களையே இது வரையிலும் அளித்து வந்திருக்கிறோம்.

இந்த திரைப்படமும் அந்த வகையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும். இந்தப்படம் வயது வந்தோர் மட்டுமே, பார்க்கும் தன்மை கொண்ட படமல்ல.

இத்திரைப்படம் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பார்க்கும் அழகான கமர்ஷியல் படமாகும். “ஓ மை கடவுளே” போன்று இப்படமும் ஒரு அழகான கருத்தை சொல்லும்.

ஆனால் அதிலிருந்து மாறுபட்டிருக்கும். படத்தை சென்சார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. 2021 கோடை காலத்தில் படம் வெளியாகும்.

இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கூறியதாவது…

கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஒரு இளைஞனின் வாழ்வில், ஒரு பெண் குறிக்கிடும்போது நடக்கும் சம்பவங்களே இந்தப்படம்.

இளம்பிராயத்து இளைஞன், வளர்ந்த ஆண்மகன் என ஜீவி பிரகாஷ் குமார் இப்படத்தில் இரு விதமான தோற்றங்களில் அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

தேனி ஈஸ்வர் படத்தில் ஒவ்வொரு ஃப்ரேமையும் அழகுடன் செதுக்கியுள்ளார்.

படத்தின் டீஸர், இப்படம் வயது வந்தோர்க்கான படமாக தோற்றம் தரலாம்.

ஆனால் இப்படம் குடும்பத்தில் அனைவரும் இணைந்து பார்க்கும்படியான படமாகும். படத்தில் எந்த விதமான சர்ச்சைக்குரிய விசயங்களும் இல்லை.

வாழ்வின் எதார்த்தத்தை அப்படியே அதே அளவில் படம் சொல்லும். அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இருக்கும். இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்கு தயாரிப்பாளர் G.டில்லிபாபு அவர்களுக்கு நன்றி.

திவ்யபாரதி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். முனீஷ்காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜீ.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

விரைவில் திரைக்கு வருகிறார் இந்த பேச்சிலர்.

Audience response on Bachelor teaser

அதர்வா & அனுபமா இணைந்த படம் இனியும் தள்ளிப் போகாமல் விரைவில் திரையில்.!

அதர்வா & அனுபமா இணைந்த படம் இனியும் தள்ளிப் போகாமல் விரைவில் திரையில்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் கண்ணன் இயக்கத்தில் உலுவாகியுள்ள காதல் திரைப்படம் “தள்ளிப் போகாதே”.

இப்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திரைக்கு தயாராகியுள்ளது.

சமீபத்தில் கண்ணன் இயக்கிய ‘இவன் தந்திரன்’ எனும் ஆக்சன் கமர்ஷியல் படம் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்தது.

இதனை தொடந்து அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு, தற்போது தனது தனித்தன்மை மிகுந்த ரொமான்ஸ் வகை படத்திற்கு திரும்பியுள்ளார்.

முழுக்க முழுக்க காதல், நகைசைவை, உணர்வுகள் நிரம்பிய அழகான குடும்ப படத்தினை இயக்கியுள்ளார். அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, அமிதாஷ் ஆடுகளம் நரேன், வித்யூலேகா ராமன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் டப்பிங் பணிகள் முதல், அனைத்து கட்ட பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது படத்தின் விளம்பர முன்னோட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன. படத்தின் திரை வெளியீடு குறித்த அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதியுள்ளார்.

இயக்குநர் R.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் Masala Pix நிறுவனத்தின் சார்பில் M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

Atharvaa’s Thalli Pogathey is ready for release

AVM-க்குள் சசிகலா பெயரில் புதிய நிறுவனம்.; பாக்யராஜ் தன்ஷிகா அம்ரீஷ் பங்கேற்பு

AVM-க்குள் சசிகலா பெயரில் புதிய நிறுவனம்.; பாக்யராஜ் தன்ஷிகா அம்ரீஷ் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AVMகொரோனா காலங்களில் பாதிக்கப்பட்ட துறைகளில் பெருமளவு பாதிக்கப்பட்டது சினிமா துறை ஆகும், திரைத்துறை தற்போதுதான் தன் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறது.

அதற்கு வலு சேர்க்கும் வகையில் சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் ஒரு வாய்ப்பை தரும் தளமாக உருவாகியுள்ளது சசிகலா தயாரிப்பு நிறுவனம்.

இந்த நிறுவனம் இளம் இயக்குனர்கள், புதிய தயாரிப்பாளர்கள், வெப் சீரிஸ் , குறும்பட இயக்குனர்கள் ஆகியோருக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.

இந்நிறுவனம் பட தயாரிப்பு சார்ந்த அனைத்து வகையான வசதிகளையும் கொண்டுள்ளது.

மேலும் இது இளம் மாணவ இயக்குனர்கள் மற்றும் அறிமுக இயக்குனர்களுக்கு புரோடக்ஷன் மற்றும் போஸ்ட் புரொடக்ஷனிற்கு தேவையான உதவிகளையும் அத்தோடு மேலும் சில சிறப்பு சலுகைகளையும் செய்ய தயாராக உள்ளது என்பதை இதன் நிர்வாகத இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சினிமா துறை சார்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் “Freedom of Film making ” எனும் தாராக மந்திரத்துடன் விரைவில் இதன் பணிகள் துவங்கவுள்ளன.

இதனை பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்கள், நடிகை சாய் தன்ஷிகா, நடிகர் இசையமைப்பாளர் அம்ரிஷ் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.

இதில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் அவர்கள்..” இது வாய்ப்புக்காக காத்திருக்கும் கலைஞர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் மேலும் இந்த தயாரிப்பு நிறுவனம் தரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது அதன் கட்டமைப்பிலே புரிகிறது.

மேலும் இந்நிறுவனத்திலிருந்து பல தரமான கலைஞர்கள் வெளி வருவார்கள்”/என கூறியிருந்தார்.

அதற்கடுத்து நடிகை தன்ஷிகா அவர்கள் பேசுகையில்…

“நாம் படங்களின் விமர்சனங்களை ஒரு நொடியில் விவரித்து விடுகின்றோம். ஆனால் திரைக்கு பின் பல கலைஞர்கள் உழைக்கின்றனர்.

அத்தகு கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் இந்நிறுவனம் அமைந்திருப்பது சிறப்பு எனக் கூறியிருந்தார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளார்.

இசையமைப்பாளர் அம்ரிஷ் அவர்கள் பேசுகையில்…

” குட்டி எவிம் விரைவில் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் விரைவில் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடும்.

IMG-20210215-WA0018

Sasikala production company in AVM studio

More Articles
Follows