சூரி – கதை நாயகன்… விஜய்சேதுபதி – கதாநாயகன்..; இளையராஜா புதிய ஸ்டூடியோவில் வெற்றிமாறன் பேச்சு

சூரி – கதை நாயகன்… விஜய்சேதுபதி – கதாநாயகன்..; இளையராஜா புதிய ஸ்டூடியோவில் வெற்றிமாறன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi sooriசென்னை கோடம்பாக்கத்தில் (பழைய MM தியேட்டர்) தன் இசை பணிகளை தொடர புதிய ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா.

இன்று பிப்ரவரி 3 முதல் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி – விஜய் சேதுபதி நடிக்கும் பட பாடல் ரெக்கார்டிங்கை தொடங்கியுள்ளார்.

(45 வருடங்களாக தன் இசை பணிகளை பிரசாத் ஸ்டூடியோவில் செய்து வந்தார். சில பிரச்சனைகளால் அவர் அங்கிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.)

எனவே இளையராஜாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் விஜய் சேதுபதி பேசியதாவது…

“நான் இளையராஜாவின் பெரிய ரசிகன். அவர் எங்க வீட்டுக்குப் பக்கத்தில் வந்தாச்சு.

சூரி நாயகனாக நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பதே சந்தோஷம்.

எங்க பட பாடல்கள் உருவாக்கம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறனுடன் பணிபுரிய வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை. என் வாழ்க்கையில் இந்த நாள் முக்கியமான நாள்.” என்று தெரிவித்தார்.

வெற்றிமாறன் பேசியதாவது…, “இளையராஜாவின் இசையைக் கேட்டுத்தான் நாம் வளர்ந்திருக்கிறோம்.

ஒவ்வொரு பட உருவாக்கத்தின்போதும், அவருடைய பாடல்களை முன்வைத்தே பேசுவோம்.

இளையராஜா உடன் பணிபுரிவது, இந்தப் படத்தில் அமைந்திருப்பது சந்தோஷம்.

அவரின் புதிய ஸ்டுடியோவில் எங்கள் பட முதல் பாடல் ரெக்கார்டிங் நடக்கிறது என்பது இன்னொரு சந்தோஷம்.

இந்த படத்தின் கதை நாயகன் சூரிதான், கதாநாயகன் விஜய் சேதுபதி. சூரியின் மீதுதான் முழுக் கதையும் நடக்கும்.” என வெற்றிமாறன் பேசினார்.

சூரியின் அப்பாவாக விஜய்சேதுபதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Vetrimaaran talks about his upcoming film

கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது..; ‘விஷமக்காரன்’ விஜய்யின் வில்லத்தன பேச்சு

கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது..; ‘விஷமக்காரன்’ விஜய்யின் வில்லத்தன பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VishamakaranTeaserஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஷமக்காரன்’.

இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய்).

அனிகா விக்ரமன் மற்றும் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் புகழ் சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்துள்ளனர்.

மனித வாழ்க்கையில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கையாளுதல் என்பது அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கூட உருவாக்கும்.

அந்தவகையில் இந்தப்படத்தின் கதையே மனிதர்களை தங்களுக்கு ஏற்றபடி திறமையாக கையாளுதல் என்கிற மையக்கருவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது

விரைவில் தியேட்டர்களில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.. படக்குழுவினர் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

பியார் பிரேமா காதல் இயக்குனர் இலன், ‘பைனலி’ பாரத் மற்றும் நீலு ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

படத்தொகுப்பாளர் மணிக்குமரன் பேசும்போது, இந்தப்படம் எடுப்பதற்கு முன்னால் இந்த கான்செப்ட் என்னவென்று அவ்வளவாக புரியவில்லை..

ஆனால் படத்தை பார்த்தபோது தான் எல்லோருக்குள்ளும் ஒரு விஷமக்காரன் இருக்கிறான் என்பதை புரிந்துகொண்டேன். ஆங்கிலப்படத்துக்கு இணையாக ஒரு புது விஷயத்தை இதில் முயற்சித்திருக்கிறார்கள்.” என கூறினார்.

நாயகி அனிகா விக்ரமன் பேசும்போது…

“இந்தப்படத்தின் கதை குறித்து ஒரு சிறிய பகுதியை தான் கேட்டேன்.. உடனே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள எனது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் இருந்தது. படக்குழுவினரின் ஒத்துழைப்பும் நன்றாக இருந்தது” என கூறினார்.

இன்னொரு நாயகியான சைத்ரா ரெட்டி பேசும்போது, “கதை கேட்கும்போதே புதிதாக இருந்தது.. அதிலும் எனது கதாபாத்திரம் கொஞ்சம் வில்லி போலத்தான் இருக்கும். அது ஒரு சவால் என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன்” என கூறினார்.

படத்தின் நாயகனும் இயக்குனருமான வி (விஜய்) பேசும்போது…

“இந்தப் படத்தில் இயக்குநர், நடிகர், பாடகர் என மூன்று பொறுப்புகளை ஏற்றுள்ளேன். சினிமா எடுக்கிறோம் என முடிவு செய்ததுமே ஏதாவது புதிய விஷயத்தை மையமாக வைத்து கதையை உருவாக்க நினைத்தபோது தோன்றியதுதான் இந்த ‘விஷமக்காரன்’ படத்தின் கதை.

இதில் ஹீரோவாக நடிப்பது சாதாரணம் என நினைத்தேன்.. ஆனால் ஹீரோவை வைத்து தான் இந்தப்படத்தின் மொத்த கதையுமே நகர்கிறது. அப்போது தான் ஹீரோவாக நடிப்பதன் கஷ்டம் தெரிந்தது.

இங்கே சத்யம் தியேட்டரில் இந்த விழாவுக்காக வந்தபோது கூட, கார் பார்க்கிங்கில் ஹீரோ யார் என விசாரித்தார்கள். யாரோ புது ஹீரோ என சொன்னேன்.. உடனே காரை அப்படி ஓரமா கொண்டுபோய் பார்க் பண்ணுங்க என சொன்னார்கள்.

ஹீரோவாக இருந்தால் தான் தியேட்டர் பார்க்கிங்கிலேயே மரியாதை தருகிறார்கள். இங்கே கதைகூட முக்கியமில்லை.. ஹீரோதான் முக்கியம்.. ஆனால் என்னை பொறுத்தவரை கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது என்றுதான் சொல்வேன்..

இந்தப்படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, திரைப்பட நிர்வாகம் மற்றும் உருவாக்கம் தொடர்பான ‘ஹனிபிலிக்ஸ்’ என்கிற ஒரு சாப்ட்வேரை உருவாக்கினோம். ஒரு படம் துவங்குவதற்கு தேவையான பட்ஜெட், ஸ்க்ரிப்ட், கால்ஷீட், செலவுகள் என அனைத்தையும் இந்த சாப்ட்வேரே உருவாக்கி தந்தது.

இந்த சாப்ட்வேர் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி, திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள், 13 கால்ஷீட்டுகளிலேயே மொத்தப்படத்தையும் முடித்துவிட்டோம். மேலும், இந்தப்படம் வெளியான பின்பு, மற்ற அனைவரும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக இலவசமாகவே வழங்க இருக்கிறோம்..

முதலில் ஓடிடி தளத்தில் வெளியிடலாம் என்கிற எண்ணத்தில் இந்தப்படத்தை உருவாக்கி வந்தோம்.. ஆனால் இந்தப்படத்தின் புதிய அனுபவம் ரசிகர்களுக்கு சென்றுசேர வேண்டும் என்பதற்காக தியேட்டர்களிலேயே ரிலீஸ் செய்ய இருக்கிறோம்” என கூறினார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

ஒளிப்பதிவு ; J கல்யாண்

இசை ; கவின்-ஆதித்யா

படத்தொகுப்பு S.மணிக்குமரன்

இயக்கம் ; V

தயாரிப்பு ; ஹனி பிரேம் ஒர்க்ஸ்

Hero V Vijay speech at Vishamakaran Teaser and audio launch

சிம்பு பிறந்த நாளில் புதிய படம்.; தயாரிப்பாளர் சங்கத்திற்காக STR அதிரடி முடிவு.!

சிம்பு பிறந்த நாளில் புதிய படம்.; தயாரிப்பாளர் சங்கத்திற்காக STR அதிரடி முடிவு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu‘ஈஸ்வரன்’ படத்தை முடித்து விட்டு ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

இதில் சிம்பு உடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன் பணி புரிய, இசையமைப்பாளராக யுவன் ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர்.

சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு (நாளை பிப்ரவரி 3ஆம் தேதி) மதியம் 2.34 மணிக்கு ‘மாநாடு’ பட டீசரை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் சிம்புவின் அடுத்த படமான ‘பத்து தல’ படக்குழு பிப்ரவரி 3 நள்ளிரவு 12.06 மணிக்கு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட உள்ளதாம்.

இந்த நிலையில் டிஆரின் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக சிலம்பரசன் TR புதிய படம் ஒன்றை நடித்து கொடுக்கவுள்ளார்.

இப்படத்தை ‘லிங்கா’ புகழ் பிரபல விநியோகஸ்தர் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிக்க ஞானகிரி என்பவர் இயக்குகிறார்.

சிம்பு & அனுஷ்கா நடித்த ‘வானம்’ படத்தில் வசனகர்த்தாவாக பணி புரிந்துள்ளார் ஞானகிரி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் லாபம் சங்க வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

STR new film kickstarts on his birthday

தெலுங்கு ரீமேக்கில் சந்தானத்தை இயக்கும் ‘வஞ்சகர் உலகம்’ பட இயக்குநர்

தெலுங்கு ரீமேக்கில் சந்தானத்தை இயக்கும் ‘வஞ்சகர் உலகம்’ பட இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானத்தின் சமீபத்திய படங்கள் வெற்றி பெற்று வருகின்றன.

அவரது கைவசம் தற்போது பாரிஸ் ஜெயராஜ், மன்னவன் வந்தானடி, சபாபதி உள்ளிட்ட படங்கள் உள்ளன.

இந்த நிலையில், 2019ல் தெலுங்கில் வெற்றி பெற்ற ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் சந்தானம்.

அவருக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ‘வஞ்சகர் உலகம்’ பட இயக்குனர் மனோஜ் பீதா இயக்குகிறார்.

Santhanam’s next with Vanjagar Ulagam director

vanjagar ulagam director

அருண் விஜய் & ப்ரியா கூட்டணியில் இணைந்தார் ‘குக் வித் கோமாளி’ புகழ்

அருண் விஜய் & ப்ரியா கூட்டணியில் இணைந்தார் ‘குக் வித் கோமாளி’ புகழ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pugazhதமிழ் சினிமாவில் மளமளவென படங்களை குவித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.

அதர்வாவுடன் ‘குருதி ஆட்டம்’, ஹரிஷ் கல்யாண் உடன் ‘ஓ மணப்பெண்ணே’, எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘பொம்மை’, ஜீவா & அருள்நிதியுடன் ‘களத்தில் சந்திப்போம்’ உள்ளிட்ட படங்கள் இவர் கைவசம் உள்ளன.

இந்த படங்கள் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’, சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.

மேலும் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

இவர்கள் ஜோடியுடன் யோகி பாபு, பிரகாஷ் ராஜ், ராதிகா ஆகியோர் இணைந்த நிலையில் ‘குக் வித் கோமாளி’ புகழ் என்பவரும் இணைந்துள்ளார்.

இப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சக்திவேல் தயாரிக்கிறார்.

Cooku with comali fame Pugazh part of Arun Vijay 33

அடேங்கப்பா.. ‘மாநாடு’ பட டீசரை மெகா நாடாக மாற்றிய படக்குழு..; சிம்புவுக்கு கை கொடுக்கும் இந்திய ஸ்டார்ஸ்

அடேங்கப்பா.. ‘மாநாடு’ பட டீசரை மெகா நாடாக மாற்றிய படக்குழு..; சிம்புவுக்கு கை கொடுக்கும் இந்திய ஸ்டார்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maanaadu (2)‘ஈஸ்வரன்’ படத்தை முடித்து விட்டு ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

இதில் சிம்பு உடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன் பணி புரிய, இசையமைப்பாளராக யுவன் ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு (நாளை பிப்ரவரி 3ஆம் தேதி) மதியம் 2.34 மணிக்கு ‘மாநாடு’ பட டீசரை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த டீசரை தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் & ஹிந்தி ஆகிய மொழிகளில் அந்தந்த மொழி பிரபலங்கள் வெளியிடவுள்ளனர்.

மலையாள டீசரை நடிகர் ப்ருத்விராஜ், ஹிந்தி டீசரை நடிகர் அனுராக் காஷ்யப், கன்னட டீசரை நடிகர் சுதீப் & தெலுங்கு டீசரை நடிகர் ரவி தேஜா வெளியிடவுள்ளனர்.

தமிழ் பதிப்பு டீசரை யார் வெளியிட போகிறார்கள்? என்பதை (இந்த செய்தி பதிவாகும்வரை) இன்னும் அறிவிக்கவில்லை.

மேலும் சிம்புவின் அடுத்த படமான ‘பத்து தல’ படக்குழு பிப்ரவரி 3 நள்ளிரவு 12.06 மணிக்கு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட உள்ளதாம்..

Indian top celebrities joins for STR

More Articles
Follows