தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் தொற்றால் சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரையும் இழந்து வருகிறோம்.
இந்த நிலையில் ‘திராவிட பெண்கள்’ என்ற ஓவியங்கள் மூலம் பிரபலமானவர் ஓவியர் இளையராஜா. இவர் இன்று மே 7ஆம் தேதி கொரோனா தொற்றால் காலமானார்.
கொரானோ தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்தார்.
தனது அழகிய ஓவியங்களால் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர் இவர்.
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலின் தன் இரங்கல் குறிப்பில்…
தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் திரு. இளையராஜா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!
கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்! https://t.co/1ssRWmzDjS
இந்த நிலையில் ஓவியர்இளையராஜா மறைவுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில்…
“பேரன்பு மிக்க அண்ணன் ஓவியர் இளையராஜா அவர்களின் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத தவிப்பையும், அடக்க முடியாத துயரத்தையும் தருகிறது. இந்த நோயின் கொடூரத்தை வெல்ல முடியாத சூழலை கண்டு பெரும் மன உளைச்சல் அடைகிறேன். ஆழ்ந்த இரங்கல்! https://t.co/8zj8MeT4Ie எனப் பதிவிட்டுள்ளார்.
இன்று மே 7ல் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கிய ‘காலா’ படம் ரிலீசாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Director PA Ranjiths condolence message to artist ilayaraja