சிகரெட் வேண்டாம்; மாம்பழம் சாப்பிடுங்க… சந்தானம் அடித்த ‘டகால்டி’

சிகரெட் வேண்டாம்; மாம்பழம் சாப்பிடுங்க… சந்தானம் அடித்த ‘டகால்டி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dagaalty first look isse Santhanam promises will not promote smokingகாமெடியனாக வளர்ந்து தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் சந்தானம்.

இனிமே இப்படித்தான் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார்.

இந்த நிலையில் அவரின் அடுத்த படமான ‘டகால்டி’ பட போஸ்டர் வெளியானது.

அந்த பட போஸ்டரில் சந்தானம் தம் அடிப்பது இருந்தது.

இப்பட போஸ்டருக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் கண்டனம் எழுந்தன.

இதனையடுத்து சிகரெட்டுக்கு பதிலாக சந்தானம் மாம்பழம் சாப்பிடுவது போல் போஸ்டர் வெளியானது.

இதுகுறித்து சந்தானம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

“டகால்டி’ முதல் பார்வை போஸ்டர் கவனக்குறைவாக பதிவேற்றப்பட்டது. உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் புகை பிடிப்பதை அது ஊக்குவிப்பதாக இருந்தது என்பதை உணர்கிறேன்.

என்னுடைய வருங்காலப் படங்களில் அப்படிப்பட்ட போஸ்டர்கள் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Dagaalty first look isse Santhanam promises will not promote smoking

பிறந்த நாளில் தளபதி 63 பர்ஸ்ட் லுக் வேண்டாம்..; விஜய் உத்தரவு..?

பிறந்த நாளில் தளபதி 63 பர்ஸ்ட் லுக் வேண்டாம்..; விஜய் உத்தரவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 63 first look poster release preponedதளபதி 63 படத்திற்காக விஜய்யுடன் அட்லி, ஏஆர். ரஹ்மான் மற்றும் ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் இணைந்துள்ளது.

இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்த்ராஜ், சௌந்தர் ராஜா, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்பட சூட்டிங் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

மீனம்பாக்கம் பின்னி மில்லில் போடப்பட்ட செட்டிலும், இவிபி ஸ்டுடியோவில் போடப்பட்ட கால்பந்தாட்ட மைதானம் செட்டிலும் நடைபெற்றன.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூன் 22-ஆம் தேதி அதாவது விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில் பிறந்தநாளுக்கு முன்னதாக ஜூன் 18 அன்றே வெளியிட இருப்பதாக சில தகவல்கள் வந்துள்ளன.

ஒருவேளை இது விஜய்யின் உத்தரவாக இருக்குமோ?

Thalapathy 63 first look poster release preponed

சசிகுமாரை தங்கள் அன்பால் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மும்பை வாழ் தமிழ் மக்கள்

சசிகுமாரை தங்கள் அன்பால் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மும்பை வாழ் தமிழ் மக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (10)கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரிப்பில் சசிகுமார் நடிக்கும் “தயாரிப்பு எண் 3” மும்பையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதிரடி ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படமான இதில் சமீபத்தில் இணைந்த சரத்குமார் பங்கு பெறும் மிக முக்கியமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், நடிகர் சசிகுமார் மீது மும்பை வாழ் தமிழ் மக்கள் காட்டிய நிபந்தனையற்ற அன்பு அவரை வியப்பில் ஆழ்த்தியது, இது அவருக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒரு தருணமாகவும் அமைந்தது.

இது குறித்து இயக்குனர் என்.வி.நிர்மல் குமார் கூறும்போது, “சசிகுமார் மும்பையின் நெரிசல் மிகுந்த ரோடுகளில் சில ரவுடிகளை துரத்திக் கொண்டு ஓடி, அடிப்பது போன்ற ஆக்‌ஷன் காட்சிகளை நாங்கள் படமாக்கிக் கொண்டிருந்தோம். பொது மக்களுக்கு தெரியாத வண்ணம் மறைக்கப்பட்ட காமிராக்களைப் பயன்படுத்தி முழு காட்சியை படம் பிடிக்க முடிவு செய்தோம். இருப்பினும், இந்த சூழ்நிலையானது தலைகீழாக மாறியது. இது ஒரு உண்மையான மோதல் என்று நினைத்த மக்கள் உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்து விட்டார்கள். நாங்கள் சில விஷயங்களை தெளிவுபடுத்தி விட்டு, எங்கள் வேலைக்குத் திரும்புவதற்கு முன்பு, சசிகுமார் சாரை அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் அடையாளம் கண்டு கொண்டு எங்களை ஆச்சரியப்படுத்தினர். இது ஒரு சாதாரண வரவேற்பாக இல்லாமல், ஒரு பெரும் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டது. அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டு, அவரிடம் ஆட்டோகிராஃப் பெற்றுக் கொண்டனர். உண்மையில், சசிகுமார் சார், தனது சொந்த மாநில எல்லைகளுக்கு அப்பால் தனக்கு இந்த அளவு அங்கீகாரம் கிடைக்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை, அதனால் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களை கொண்டிருந்தார். அவரால் சில நிமிடங்களுக்கு பேச முடியவில்லை. இத்தகைய அன்பும் பாசமும் தான் எங்களை போன்ற நடிகர்களுக்கு எப்பொழுதும் ‘உத்வேகம்’ தரக்கூடியவை, அவர்களுக்காக மிகச்சிறந்த நடிப்பையும் படங்களையும் தர வேண்டும் என சசிகுமார் சார் கூறினார்” என்றார்.

மும்பையில் 15 நாட்கள் படப்பிடிப்புக்கு திட்டமிட்டிருக்கும் படக்குழு, ஏற்கனவே முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்திருக்கிறது. “சலீம்” திரைப்படத்தில் என்.வி.நிர்மல்குமாருடன் பணிபுரிந்த கணேஷ் சந்திரா இந்த படத்தின் ஒளிப்பதிவை கையாளுகிறார். ஆனந்த மணி (கலை), சக்தி சரவணன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். முன்னணி இசையமைப்பாளர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஜீவி படத்துக்கு தணிக்கை குழுவில் ‘U’ சான்றிதழ்

ஜீவி படத்துக்கு தணிக்கை குழுவில் ‘U’ சான்றிதழ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)‘மைண்ட் கேம்ஸ்’ அடிப்படையிலான த்ரில்லர் படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் எந்த ஒரு தடையும் இன்றி கவர்ந்திருக்கிறது. அத்தகைய திரைப்படங்களுக்கு எப்போதுமே சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு. குறிப்பாக, பார்வையாளர்கள் தங்களை படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில நேரங்களில் சீட்டின் நுனிக்கு வர வைக்கும் படங்களையும் எதிர்பார்க்கிறார்கள். சமீபத்தில் “ஜீவி” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் அத்தகைய தாக்கத்தை உருவாக்கியது. அதன் ஒவ்வொரு கூறுகளும் இது எப்படிப்பட்ட ஒரு படம் என்பதை அறியும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. மிகச்சிறந்த குழுவின் உழைப்பால், மொத்த படமும் குறித்த நேரத்தில் முடிவடைந்திருக்கிறது. தற்போது, படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள், படத்துக்கு ‘U’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இது குறித்து கூறும்போது, “ஒரு அறிமுக இயக்குனரான எனக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம். குறிப்பாக, தங்கள் துறைகளில் புகழ்பெற்ற பிரபலங்களாக இருக்கும் இந்த உறுப்பினர்களிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சி. விஞ்ஞானம் மற்றும் மாயவித்தைகளுக்கு இடையே மனித உணர்வுகள் எப்படி ஏமாற்றப்படுகின்றன என்பதை வலியுறுத்தும் ஒரு திரில்லர் படத்தை தர முயற்சி செய்திருக்கிறோம். ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் அணுகுமுறையை இந்த படத்துக்கு கொடுத்திருக்கிறோம், இது பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் என நம்புகிறேன்” என்றார்.

வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் எம்.வெள்ளபாண்டியன் படத்தின் வெளியீட்டு தேதியை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார். சுந்தரமூர்த்தி கே.எஸ். (இசை), பிரவீன் குமார் (ஒளிப்பதிவு), பிரவீன் கே.எல். (படத்தொகுப்பு), வைரபாலன் (கலை) மற்றும் ஐ.பி.கார்த்திகேயன் (லைன் புரொடுயூசர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணிபுரிய, பாபு தமிழ் கதை, திரைக்கதை எழுத வி.ஜே.கோபிநாத் படத்தை இயக்கியிருக்கிறார்.

சுட்டுப்பிடிக்க உத்தரவு-இம்மாதம் 14 ஆம் தேதி வெளிவரும்.

சுட்டுப்பிடிக்க உத்தரவு-இம்மாதம் 14 ஆம் தேதி வெளிவரும்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)“சுட்டு பிடிக்க உத்தரவு” படத்தின் டிரெய்லர் மற்றும் காட்சி விளம்பரங்கள் ரசிகர்களிடையே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கூடுதலாக, படத்தின் தலைப்பு இது நிக் ஆஃப் டைம் த்ரில்லர் வகையை அடிப்படையாக கொண்டது என்பதை குறிக்கிறது. இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா, முன்னணி இயக்குனர்களான மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோரை இந்த படத்தில் ஏன் நடிக்க வைத்தார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இது குறித்து ராம்பிரகாஷ் ராயப்பா கூறும்போது, “அவர்கள் வெறும் இயக்குனர்கள் என்பதையும் தாண்டி, தமிழ் சினிமாவில் எல்லாவற்றையும் அறிந்த மேதைகள். படப்பிடிப்பில் பல நேரங்களில், நானே அவர்களின் நுணுக்கமான நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன். ஸ்கிரிப்ட்டில் நான் எழுதிய கதாபாத்திரங்களுக்கு அவர்களின் நடிப்பு மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர்கள், அவர்களை இயக்கும்போது தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. இருப்பினும், அத்தகைய தவறான கருத்துக்களை படப்பிடிப்பில் தூள் தூளாக்கி விட்டனர். அவர்கள் நடிப்பில் மட்டுமே தங்கள் முழு கவனத்தையும் செலுத்தினார்கள், ஒரு சிறிய ஆலோசனையோ அல்லது மாற்றங்களையோ கூட என்னிடம் சொல்லவில்லை. பல நேரங்களில், விக்ராந்த் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு நடிகர் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். தற்போது நல்ல நல்ல படங்கள் அவர் கைவசம் உள்ளன. அவரது நடிப்பு நிச்சயம் அனைவராலும் மிகவும் பாராட்டப்படும். அதுல்யா ரவி தனது நடிப்பில் ஒரு யதார்த்தமான தன்மையை கொடுக்கும் ஒரு அரிதான நடிகை. இந்த படத்தில் நடித்த அத்தனை பேருமே மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்” என்றார்.

படத்தின் கதை மற்றும் களத்தை பற்றி கேட்டபோது படத்தை பற்றி எதையும் வெளிப்படுத்த அவர் விரும்பவில்லை. ஆனால், “இது ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியமான விஷயங்களை கொண்ட ஒரு த்ரில்லர் திரைப்படம் மற்றும் உணர்வுபூர்வமாகவும் இருக்கும்” என்பது குறிப்புகள் மூலம் தெளிவாகிறது.

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த சுட்டுப் பிடிக்க உத்தரவு வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். சுஜீத் சாரங் ஒளிப்பதிவு செய்ய, ஜி.ராமாராவ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

நடிகர் சங்கம் எங்கள் தாய் வீடு, அரசியலுக்கு அப்பாற்பட்டது. நடிகை லதா

நடிகர் சங்கம் எங்கள் தாய் வீடு, அரசியலுக்கு அப்பாற்பட்டது. நடிகை லதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)நடிகர் சங்கம் எங்கள் தாய் வீடு, அரசியலுக்கு அப்பாற்பட்டது. நடிகை லதா ஜூன் 23 ம் தேதி நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நான் பாண்டவர் அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டி இடுகிறேன். கடந்த காலத்தில் நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு நடிகர் சங்கத்துக்கும் நலிந்த கலைஞர்களுக்கும் நல்ல பல சேவைகளை செய்து வருகின்றனர். ஆகவே நானும் அவர்களுடன் இணைந்து செயல்பட விரும்பி செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறேன். நடிகர் சஙகத்துக்கும் நடிகர், நடிக்கைகளுக்கும் நல்லது செயப்பவர்களுடன் இணைந்துள்ளேன். இதை சிலர் அரசியல் வண்ணம் பூசுவது வருத்தம் அளிக்கிறது. நடிகர் சங்கம் எங்கள் தாய் வீடு, அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. வெவ்வேறு அரசியல் கொள்கை உடையவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே சங்கத்தில் உறுப்பினார்களாகவும் நிரர்வகிகளாகவும் இருந்து வந்துள்ள வரலாறு நாம் அறிவோம். புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் வெவ்வேறு அரசியல் கொள்கை கொண்டவர்கள். அவர்கள் இருவரும் நிர்வாகிகளாக இருந்த வேளையில் அரசியலை கலக்காமல் நடிகர் சஙகத்துக்காகவும் நடிகர்களின் நலனுக்காகவும் உழைத்து, நடிகர் சங்கம் அரிசயலுக்கு அப்பாற்பட்டது என்று அவர்கள் வழி காட்டினார்கள். அதை போல வெவ்வேறு அரசியல் கொள்கை உடையவராக இருந்தாலும், அரசியலுக்கு அப்பாற்பட்டு நடிகர் சஙகத்துக்காக நடிகர் நடிகைகளின் நலனுக்கக்காக உழைக்கும் ஒரு அணியுடன் சேர்ந்து நானும் பணியாற்ற ஆசைப்பட்டு பாண்டவர் அணியில் போட்டியிடுகிறேன். இதில் அரசியல் காலக்காதீர்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன். அரசியலை நாம் வெளியே வைத்து கொள்வோம். நாமும் நம்முடைய முன்னோர்களான புரட்சி தலைவரும் நடிகர் திலகமும் பயணித்த பாதையை பின்தொடர வேண்டும் என்று வேண்டுகிறேன். ”
நன்றி
– லதா சபாபதி

More Articles
Follows