தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்து இருந்தது.
தற்போது கொரோனா பாதிப்பு 500க்கும் கீழ் குறைந்துள்ளது. அதேபோல பலி எண்ணிக்கையும் 20க்கு கீழ் குறைந்துள்ளது.
ஏற்கெனவே அமலில் உள்ள ஊரடல்கு இன்றுடன் (திங்கள்கிழமை) முடியவடையவுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி & காரைக்காலில் நாளை ஜூன் 8 முதல் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் முழு விவரம் இங்கே..
புதுச்சேரி காரைக்காலில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் : ஜூன் 7 முதல் ஜூன் 14 வரை
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.
ஜூன் 8 முதல் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி.
கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதி.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படலாம். பார்களுக்கு அனுமதியில்லை.
உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.
தனியார் நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 50% ஊழியர்களுடன் செயல்படலாம்.
பத்திரப்பதிவு & வாகனப் பதிவு உள்ளிட்ட அரசு அலுவலங்கள் அனைத்தும் இயங்கும்.
அனைத்து மத வழிப்பாட்டு தளங்கள் திறக்க அனுமதி.
ஆட்டோ டாக்ஸி தனியார் & அரசு பேருந்துகள் மாலை 5 மணி வரை இயங்கலாம். பூங்கா தியேட்டர்கள் நூலகங்கள் திறக்க அனுமதியில்லை.
பெட்ரோல் பங்குகள், ஏடிஎம்,இண்டர்நெட் & கேபிள் ஆப்ரேட்டர், மீடியா குடிநீர் & மின்முறை ஊழியர்கள் 24 மணி் நேரமும் செயல்பட அனுமதி.
திருமணத்தி்ல் 25 நபர்களுக்கும் மரண நிகழ்வுகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதி.
முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை எங்கும் கடைப்பிடித்தல் அவசியம்.
Covid 19 Lockdown relaxation in Puducherry and Karaikal updates