தலைப்பாகையுடன் வந்தார்.. விவசாயிகளுக்கு குரல் கொடுத்தார்.; சட்டப் பேரவையை வியக்க வைத்த விஜயதாரணி

தலைப்பாகையுடன் வந்தார்.. விவசாயிகளுக்கு குரல் கொடுத்தார்.; சட்டப் பேரவையை வியக்க வைத்த விஜயதாரணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijayatharaniஇந்த ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத்திற்காக கலைவாணர் அரங்கம் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தது.

காலை 9 மணிக்கு காரில் வந்து இறங்கினார் ஒரு பெண்மணி. சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் கெடுபிடியாக இருந்தது.

காரிலிருந்து இறங்கிய போது, தலையில் பச்சை கலரில் தலைப்பாகை கட்டி கம்பீரமாக வெளியே வந்தார் காங்கிரஸ் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி.

பார்த்தவர்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். வந்தவர் நேரடியாக சட்டமன்றத்திற்குள் சென்றார்.

உள்ளே நுழைந்ததும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆச்சரியமாக பார்த்தனர். கவர்னர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவரது பார்வையும் ஒரே நேரத்தில் விஜயதாரணி பக்கம் கவனம் பெறும் வகையில் இருந்தது.

அவர் ஏன் தலைப்பாகையோடு இப்படி வந்திருக்கிறார் என்று பலரும் புலம்பிக் கொண்டிருந்தனர்.

கவர்னர் உரை தொடங்குவதற்கு முன்பே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார் விஜயதாரணி.

அவருடன் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் தலையில் தலைப்பாகை கட்டி வெளியே வந்து முழக்கமிட்டனர்.

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதை கண்டித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக கூறி முழக்கமிட்டார்.

இந்தியாவின் உயிர்நாடியாக இருப்பது விவசாயமும், விவசாயிகளும் தான்.

அவர்களின் குரலுக்கு செவி சாய்க்காத அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் தலைப்பாகை அணிந்து, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஓங்கி ஒலித்த குரலில் பேட்டி கொடுத்தார் விஜயதாரணி.

அப்போது திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இதை வியப்பில் பார்த்தனர்.

எப்போதுமே அதிரடியாக துணிச்சலோடு விமர்சனங்களுக்கு, அஞ்சாமல் மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் விஜயதாரணியின் இந்த செயலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Congress MLA Vijayatharani boycotted the Tamil Nadu assembly

சிஸ்டத்தைச் சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள் சரண்..; அரசியலுக்கு வரவே மாட்டேன்னு ரஜினி சொன்னாரா?.; மார்ச் 7 ட்விஸ்ட் வைக்கும் தமிழருவி மணியன்

சிஸ்டத்தைச் சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள் சரண்..; அரசியலுக்கு வரவே மாட்டேன்னு ரஜினி சொன்னாரா?.; மார்ச் 7 ட்விஸ்ட் வைக்கும் தமிழருவி மணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth tamilaruvi manian (1)தன் உடல்நிலை காரணமாக இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2020 டிசம்பர் 29ல் அறிவித்தார்.

இதனால் சில தினங்களில் அவரது ரசிகர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது…

“காந்திய மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்த பலர் இணைந்து பணியாற்ற விரும்பி என்னுடன் தொடர்பு கொள்கின்றனர். ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கு அன்புடன் ஒன்றை உணர்த்த விரும்புகிறேன்.

நீங்கள் அனைவரும் ரஜினி ஒரு நாள் அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பிலும், முதல்வர் பதவியில் என்றாவது அமர்வார் என்ற கனவிலும் அவருடைய ரசிகர்களாக மாறவில்லை.

அவருடைய இயல்பான நடிப்பு, செயற்கைப் பூச்சு இல்லாத பேச்சு, ஆணவத்திற்குச் சற்றும் இடம் தராத அடக்கம், உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றி உரைக்கும் நேர்மை, மிகச் சாதாரண மனிதனாகத் தன்னைப் பாவிக்கும் பண்பு நலன், அனைவரும் வியந்து பார்க்கும் ஆடம்பரமற்ற எளிமை, அன்பு சார்ந்து ஒவ்வொருவரிடமும் பழகும் உயர்குணம் ஆகியவற்றில் உங்கள் மனதைப் பறிகொடுத்துத்தான் நீங்கள் அனைவரும் அவருடைய ரசிகர்களாக மாறினீர்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

அவருக்காக எதையும் இழக்கத் துணியும் உங்கள் உயரிய அர்ப்பணிப்பைக் கடந்த நான்காண்டுகள் நேரில் கண்டு நான் நெஞ்சம் நெகிழ்ந்திருக்கிறேன்.

பாழ்பட்ட அரசியலைப் பழுது பார்க்கவே ரஜினி அரசியல் உலகில் அடியெடுத்து வைக்க முயன்றார்.

காலச்சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில் இப்போது அவர் கட்சி தொடங்குவதைத் தவிர்த்திருக்கிறார். நான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப்போவதில்லை என்று அவர் அறிவிக்கவில்லை.

ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைத்துவிடவுமில்லை.

இந்த நிலையில் அவருடைய கூற்றின்படி சிஸ்டத்தைச் சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள் சரண் அடைந்திருப்பதையும்,

சிலர் இளைப்பாறும் வேடந்தாங்கல் எதுவாக இருக்க முடியும் என்று அலைபாய்வதையும் கண்டு நான் வருந்துகிறேன். ரஜினி

மக்கள் மன்றத்திலிருந்து ஆள் பிடிக்கும் அநாகரிக அரசியலை நான் அடியோடு வெறுக்கிறேன்.

காந்திய மக்கள் இயக்கம் இந்த சந்தர்ப்பவாத செயலில் மறந்தும் ஈடுபடாது என்று உறுதிபட அறிவிக்கிறேன்.

காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்தின் சகோதர அமைப்பாகத் தொடர்ந்து செயற்படும். அவரவர் இடத்தில் இருந்தபடி கரங்கள் இணந்து காரியமாற்றுவோம். நான் ஒரு காந்தியவாதி இறக்கும் நாள்வரை இடையறாமல் தன்னலமின்றி சமூக நலன் சார்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

இழிந்த விமர்சனங்களை இம்மியும் பொருட்படுத்தலாகாது. மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும் பணியில் நீங்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று சான்றாண்மை மிக்க மூத்தோர் பலர் வழங்கிய அறிவுரையை ஏற்கிறேன்.

தரம் தாழ்ந்த, தன்னலம் வாய்ந்த அரசியலை என்றும் நான் நடத்தியதில்லை. எந்த லாவணிக் கச்சேரியிலும் ஒரு நாளும் நேரத்தை விரயமாக்காமல் ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள பணிகளில் காந்திய மக்கள் இயக்கம் முன்னிலும் முனைப்பாக ஈடுபடும்.

மார்ச் 7-ம் நாள் திருப்பூரில் பொதுக்குழு கூடவிருக்கிறது. நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தாலும் காந்திய மக்கள் இயக்கம் அவருடன் சேர்ந்தே பயணிக்கும். அவர் அரசியலுக்கு வந்தாலும், வராமல் விலகி இருந்தாலும் பக்திபூர்வமாக அவரை நெஞ்சில் நிறுத்தி நேசிக்கும் எந்த மன்ற உறுப்பினரும் எவர் விரிக்கும் வலையிலும் சிக்கமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி”

இவ்வாறு தமிழருவி மணியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tamilaruvi Manian writes to Rajini Makkal Manram members and fans

கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கையை சினிமாவாக்க காத்திருக்கும் இயக்குனர்கள்..; யாருக்கு ஓகே சொல்வார்.?

கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கையை சினிமாவாக்க காத்திருக்கும் இயக்குனர்கள்..; யாருக்கு ஓகே சொல்வார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

natarajanஅண்மையில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் வலைப்பயிற்சி பவுலராக சென்றவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன்.

இவர் தமிழகத்தை சேர்ந்தவர். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவரான நட்ராஜனுக்கு தற்போது 29 வயதாகிறது.

அந்த தொடரில் பந்து வீச்சில் சிறப்பாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இவரின் அண்மை பேட்டியில்…

ஐ.பி.எல். போட்டிக்கு முன்பு விராட்கோலி, டிவில்லியர்ஸ், டோனி போன்ற வீரர்களின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பதே என் கனவு.

அவர்களது விக்கெட்டை கைப்பற்றியது பெரும் மகிழ்ச்சி.

அதனை அடிக்கடி நினைக்கையில் தூக்கமே வரவில்லை.

ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு தற்போது வெளியில் போக முடியவில்லை.

முன்பு போல் இயல்பாக வெளியில் செல்ல நினைக்கிறேன்.

பழனி மலை முருகன் கோயிலுக்கு சென்று மொட்டை போட்ட பின்பும் பலர் என்னை அடையாளம் கண்டு கொண்டு பாராட்டினர்.

எனக்கு எப்போதும் போல சாதாரணமான மனிதனாக இருக்கவே ஆசை.

என் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க டைரக்டர்கள் சிலர் சந்திக்க வீடு தேடி வந்தனர்.

ஆனால் இப்போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை.

என் முழு கவனத்தையும் கிரிக்கெட்டில் செலுத்தவே விரும்புகிறேன்.”

இவ்வாறு நட்ராஜன் தெரிவித்துள்ளார்.

Tamil directors to do Yorker king Natarajan biopic ?

சினிமா துறை ஒரு மின்சாரம்.. தப்பா தொட்டா ஷாக் அடிக்கும்..; அமைச்சருக்கு அன்றே அட்வைஸ் சொன்ன ஜெயலலிதா

சினிமா துறை ஒரு மின்சாரம்.. தப்பா தொட்டா ஷாக் அடிக்கும்..; அமைச்சருக்கு அன்றே அட்வைஸ் சொன்ன ஜெயலலிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kadambur rajuசவுத் இந்தியன் சினி அண்ட் டிவி மேக்கப் ஆர்டிஸ்ட் அண்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் யூனியன் சார்பில் நேற்று ( பிப்ரவரி 1ம்தேதி) சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலை, ஏவிஎம் காலனியில் எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறப்பு விழா நடந்தது.

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நடிகையும், ஆந்திரா எம் எல் ஏவுமான நடிகை ரோஜா குத்துவிளக்கு ஏற்றினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:..

எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறந்து வைப்பதில் மகிழ்ச்சி. புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா சினிமாவிலிருந்து வந்தவர் கள். அவர்களை சினிமாவில் பார்த்து ரசித்து அவர்கள் சொன்ன நல்ல கருத்துக்களை கேட்டுதான் நாங்கள் அரசிய லுக்கு வந்தோம்.

எனக்கு செய்தி துறை அமைச்சர் பதவியை அம்மா அளித்த போது அதில் என்னவெல் லாம் பிற துறைகள் இடம் பெறும் என்பதை சொல்லி சினிமா துறையும் அதில் இருக்கும் அதை ஜாக்கிரதை யாக கையாள வேண்டும்.

சினிமா துறை மின்சாரம் போன்றது நன்கு ஒளி தரும் தவறுதலாக கைவைத்தால் ஷாக் அடித்துவிடும் என்று அறிவுரை வழங்கினார்.

சினிமா துறைக்காக திரைப்பட ஸ்டுடியோ அமைக்க வேண்டும் பெப்ஸி ஆர்.கே. செல்வமணி கோரிக்கை வைத்தபோது அதனை அம்மா விடம் சொன்னேன்.

அவர்கள் உடனடியாக பையனூரில் 5 கோடி செலவில் சினிமா ஸ்டுடியோ அமைத்து தருவ தாக அறிவித்ததுடன் நிதியும் அளித்தார்.

அம்மாவின் வழியில் இன்றைக்கு ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல் வரும் ஸ்டியோவுக்கான தவணை தொகை அளித்தார். மற்றொரு தவணையும் விரைவில் அளிப்பார்.
திரைப்பட துறைக்கு விருது வழங்குவதுபற்றியும் நம் முதல்வரிடம் கோரிக்கை வைத்தபோது 150 படங் களுக்கு தலா ரூ 7 லட்சம் அளித்தார்.

அதேபோல் கொரோனா காலகட்டத்தில் சினிமா துறை பாதிக்கப்பட்டி ருந்தபோது நிறைய உதவிகளை அரசு அளித்தது. மீண்டும் தொழில் தொடங்கவும் உடனுக்குடன் அனுமதி அளிக்கப்பட்டது,

தியேட்டர்களில் முதலில் 100 சதவீத டிக்கெட் அனுமதி அளித்தது தமிழக அரசுதான். ஆனால் அன்றைக்கு 50 சதவீத டிக்கெட் தான் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பியது.

15 நாட்கள் கழித்து இன்று மத்திய அரசே 100 சதவீத டிக்கெட் அனுமதி அளித்திருக்கிறது.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழக அரசுதான் செயல்பட்டது என்பதை குறிப்பிடுகிறேன்.

இங்கு கலந்துகொண்டு பேசிய ரோஜா எம் எல் ஏ ஆந்திரா வில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பக்க பலமாக இருந்துசெயல்படுகிறார். தனக்கு அரசியல் வழிகாட்டி யாக அம்மாதான் இருந்ததாக கூறினார்.

பெப்ஸி தலைவராக ஆர்.கே.செல்வமணி சிறப்பாக செயல்படுகிறார். பெப்ஸியில் அங்கம் வகிக்கும் தொழிலா ளர்கள் மற்றும் டெக்னீஷியன் களுக்கு என்ன தேவையென் றாலும் அரசிடம் கோரிக்கை வைத்து பெற்று தருகிறார்.

இன்றைக்கு தொடங்கப்பட்டி ருக்கும் இந்த மேக்கப் அகாடமி சிறப்பாக செயல் பட்டு தமிழகம் முழுவதும் கிளைகள் அமைத்து செயல் பட வேண்டும் என்று எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

Minister Kadambur raju about cine industry

சினிமாவுக்கு வந்தபோது என் நிறத்தை கிண்டல் செய்தனர்..; அமைச்சர் முன்னிலையில் நடிகை ரோஜா ஆதங்கம்

சினிமாவுக்கு வந்தபோது என் நிறத்தை கிண்டல் செய்தனர்..; அமைச்சர் முன்னிலையில் நடிகை ரோஜா ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rojaசவுத் இந்தியன் சினி அண்ட் டிவி மேக்கப் ஆர்டிஸ்ட் அண்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் யூனியன் சார்பில் நேற்று ( பிப்ரவரி 1ம்தேதி) சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலை, ஏவிஎம் காலனியில் எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறப்பு விழா நடந்தது.

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நடிகையும், ஆந்திரா எம் எல் ஏவுமான நடிகை ரோஜா குத்துவிளக்கு ஏற்றினார்.

இந்த விழாவில் நடிகை ரோஜா எம் எல் ஏ பேசும்போது…

’நான் சினிமா துறைக்கு வந்தபோது என்னை பலர் கிண்டல் செய்தனர். நான் கொஞ்சம் கலர் கம்மி அதனால் வெற்றி பெற மாட்டேன் என்றனர்.

ஆனால் என்னை சினிமாவில் அழகாக காட்டி, கலரும் கூட்டி காட்டி ரசிகர்கள் மனதில் பதிய வைத்தவர்கள் மேக் அப் மேன்கள்தான். இந்த விழா வுக்கு என்னை அழைத்தது மகிழ்ச்சி.

வீட்டில் விசேஷம் நடந்தால் மகளைதான் விளக்கு ஏற்ற வைப்பார்கள் அதபோல் இந்த விழாவில் என்னை விளக்கு ஏற்ற வைத்தி ருக்கிறார்கள்.

அரசியலில் நான் இன்றைக்கு பல போராட்டங் களை சந்தித்து வெற்றி பெற்ற தற்கு எனக்கு முன்னுதாரண மாக இருந்தவர் புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மா தான்’ என்றார்.

நிகழ்ச்சியில் விருகை வி.என்.ரவி எம் எல் ஏ, எஸ். சண்முக சுந்தரம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பெப்ஸி நிர்வாகிகள் மற்ற சங்கங்களின் நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர். ஏ.சபரி கிரிசன் நன்றி உரையாற்றினார்.

Actress Roja Selva Mani about her colour

கௌதம் மேனன்-விஜய் சேதுபதி-அமலா பால்-வருண்-மேகா இணைந்த படம் பிப்ரவரி 12ல் ரிலீஸ்

கௌதம் மேனன்-விஜய் சேதுபதி-அமலா பால்-வருண்-மேகா இணைந்த படம் பிப்ரவரி 12ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் ஆந்தாலஜி திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அண்மையில் அமேசான் பிரைம் வீடியோவில் ‘புத்தம் புதுக் காலை’ படமும், நெட்ஃப்ளிக்ஸில் ‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜி படமும் வெளியாகின.

இந்த வரிசையில் அடுத்து உருவாகியுள்ள ஆந்தாலஜி படம்தான் ‘குட்டி லவ் ஸ்டோரி’.

ITS ALL ABOUT LOVE

காதலை மையமாக வைத்து நான்கு இயக்குநர்கள் உருவாக்கியுள்ளனர்.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இந்த ஆந்தாலஜியைத் தயாரித்ததுள்ளது.

இந்த நான்கு கதைகளை வெங்கட் பிரபு, கெளதம் மேனன், விஜய் மற்றும் நலன் குமாரசாமி இயக்கியுள்ளனர்.

இவற்றில் கவுதம் மேனன் & அமலாபால் ஒரு படத்தில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி & அருவி அதிதி பாலன் வேறொரு படத்திலும் கதிர் & மேகா ஆகாஷ் அடுத்த படத்திலும் வருண் & சாக்‌ஷி அகர்வால் ஒரு படத்திலும் நடித்துள்ளனர்.

முதலில் ஓடிடி ரிலீசுக்குத் திட்டமிட்டு உருவானது இந்த படத்தை தற்போது நேரடியாகத் தியேட்டர்களில் வெளியிடுகின்றனர் வேல்ஸ் ஐசரி கணேஷ்.

ஓடிடி நிறுவனங்களும் முதலில் தியேட்டர் ரிலீஸை தான் விரும்புகிறதாம். தியேட்டர்களில் படம் பிரபலமானதும், ஓடிடியில் வெளியானால் இன்னும் பெரிய ரீச் நன்றாக இருக்கும் என ஓடிடி தளங்கள் விரும்புகிறதாம்.

Kutty Story in theatres on Feb 12th

More Articles
Follows