தந்தையை வைத்து 1200 கிமீ சைக்கிள் ஓட்டிய 15 வயது ஜோதி; இந்திய விளையாட்டு ஆணையம் அழைப்பு

தந்தையை வைத்து 1200 கிமீ சைக்கிள் ஓட்டிய 15 வயது ஜோதி; இந்திய விளையாட்டு ஆணையம் அழைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

CFI will give an opportunity to Jyothi who reached 1200 kms on cycle with her father கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் ஏழை மக்கள் வருமானமின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்கள் தொழிலுக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேறு வேறு மாநிலங்களில் சிக்கியுள்ளனர்.

பீகாரை சேர்ந்த 15 வயது சிறுமி ஜோதி குமாரி. 8-ம் வகுப்பு மாணவி தனது தந்தை மோகன் பஸ்வானுடன் அரியானா மாநிலம் குர்கானில் (குருகிராம்) வசித்து வந்தார்.

மோகன் பஸ்வான், ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார்.

கொரேனா ஊரடங்கால் இவரிடம் இருந்த ஆட்டோ ரிக்‌ஷாவை அதன் உரிமையாளர் திரும்ப பெற்றுக்கொண்டார்.

இதனால் சொந்த ஊருக்கே செல்ல தீர்மானித்துவிட்டார் மோகன்.

தன் சொந்த ஊர் 1200 கி.மீ. தொலைவில் இருப்பதால் எப்படி செல்வது என யோசித்துள்ளார்.

இதனையடுத்து ஒரு சைக்கிளை வாங்கி அதில் செல்ல தீர்மானித்துள்ளார்.

தன் தந்தை மோகனை சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு, ஜோதி குமாரி 7 நாட்கள் இரவும், பகலும் தொடர்ந்து சைக்கிள் ஓட்டியுள்ளார்.

இந்த செய்தியும் புகைப்படங்களும் வீடியோவும் வைரலானது.

இந்த செய்தி டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள உள்ள தேசிய சைக்கிளிங் பெடரேசன் அமைப்புக்கு தெரிய வந்துள்ளது.

இந்த அமைப்பு இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் அமைப்பாகும்.

சிறுமியின் இந்த தொடர் சைக்கிள் ஓட்டம் பற்றி இந்த அமைப்பின் தலைவர் ஓங்கர் சிங் தெரிவித்துள்ளதாவது…

“ஒரு எட்டாம் வகுப்பு மாணவி இதை செய்திருக்கிறார் என்பது வியக்க வைக்கிறது. அந்தச் சிறுமியிடம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். இல்லையென்றால் 1,200 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் ஓட்டுவது என்பது சாதாரணமானது அல்ல.

அந்தச் சிறுமியை அழைத்து கணினிமயமாக்கப்பட்ட சைக்கிளில் அமர வைத்து சோதிப்போம்.

நாங்கள் தேர்ந்தெடுக்கும் தேர்ச்சி பெறுகிறாரா என்று பார்ப்போம். தேர்ச்சி பெற்று விட்டால், ஜோதிகுமாரி பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்க முடியும்.” என தெரிவித்துள்ளார்.

CFI will give an opportunity to Jyothi who reached 1200 kms on cycle with her father

சலூன் & ப்யூட்டி பார்லர்ஸ் திறக்க அரசு அனுமதி; இந்த கண்டிசன்ஸ் படிங்க

சலூன் & ப்யூட்டி பார்லர்ஸ் திறக்க அரசு அனுமதி; இந்த கண்டிசன்ஸ் படிங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Salons beauty parlours can function from 24th May except in containment zonesகொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொது முடக்கம் வருகிற மே 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது.

இருந்த போதிலும் சில விதிமுறைகள் மற்றும் தளர்வுகளுடன் வணிக நிறுவனங்கள் திறக்க மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நாளை மே 24 முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சலூன் கடைகள் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளி, முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்துதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என சலூன் கடைக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு அம்மா அவர்களின்‌ அரசு, தமிழ்நாட்டில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்த்தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. மேலும்‌, கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றின்‌ தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில்‌ எடுத்து வருகிறது.

தற்போது, பொதுமக்களின்‌ வாழ்வாதாரத்தை கருத்தில்‌ கொண்டு, நோய்‌ பரவலை தடுக்க முன்னெச்சரிக்கைக்கென சில பாதுகாப்பு வழிமுறைகளுடன்‌ தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

ஏற்கனவே ஊரக பகுதிகளில்‌ முடி திருத்தும்‌ நிலையங்கள்‌ 19.5.2020 அன்று முதல்‌ இயங்குவதற்கு நான்‌ அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தேன்‌.

தற்போது முடி திருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலைய தொழிலாளர்களின்‌ கோரிக்கையை மாண்புமிகு அம்மாவின்‌ அரசு கனிவுடன்‌ பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத்‌ தவிர, இதர மாநகராட்சிகள்‌, நகராட்சிகள்‌ பேரூராட்சிகளில்‌ முடி திருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலையங்கள்‌ 24.5.2020 அன்று முதல்‌ (தினமும்‌ காலை 7 மணி முதல்‌ மாலை 7 மணி வரை மட்டும்‌) இயங்குவதற்கு
அனுமதிக்கப்படுகிறது.

எனினும்‌, தடை செய்யப்பட்ட பகுதிகளில்‌ உள்ள முடிதிருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலையங்கள்‌ இயங்க அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வருகின்ற முடிதிருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலைய தொழிலாளர்களை பணியமர்த்தக்‌ கூடாது.

ஏற்கனவே ஊரக பகுதிகளில்‌ முடி திருத்தும்‌ நிலையங்கள்‌ 19.5.2020 அன்று முதல்‌ இயங்குவதற்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில்‌, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட ஊரக பகுதிகளைத்‌ தவிர தமிழ்நாட்டின்‌ அனைத்து ஊரக பகுதிகளில்‌ தற்போது அழகு நிலையங்களும்‌ 24.5.2020 முதல்‌ (தினமும்‌ காலை 7 மணி முதல்‌ மாலை 7 மணி வரை மட்டும்‌) இயங்குவதற்கு அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.

இந்த முடிதிருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலையங்களில்‌ பணிபுரியும்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ வாடிக்கையாளர்கள்‌ சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்‌.

இந்நிலையங்களில்‌ பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கோ அல்லது வருகின்ற வாடிக்கையாளர்களுக்கோ காய்ச்சல்‌, சளி, இருமல்‌ போன்ற அறிகுறிகள்‌ இருந்தால்‌ அவர்களை இந்நிலையங்களுக்குள்ளே அனுமதிக்கக்கூடாது.

வாடிக்கையாளர்கள்‌ அனைவருக்கும்‌ கிருமிநாசினி கண்டிப்பாக வழங்குவதையும்‌, முககவசங்கள்‌ அணிவதை உறுதி செய்யுமாறும்‌, கடையின்‌ உரிமையாளர்‌ முடி திருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலையங்களில்‌ ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்குமாறும்‌, வாடிக்கையாளர்களும்‌, பணியாளர்களும்‌ அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவதை உறுதி செய்யுமாறும்‌ நான்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. குளிர்சாதன வசதி இருப்பின்‌ அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது.

மேலும்‌, முடி திருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலையங்களை இயக்குவதற்கான விரிவான வழிமுறைகளை தனியாக வழங்கப்படும்‌.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Salons beauty parlours can function from 24th May except in containment zones

வேண்டாம் விபரீதம்.; விமான சேவையை நிறுத்த மோடிக்கு எடப்பாடி கடிதம்

வேண்டாம் விபரீதம்.; விமான சேவையை நிறுத்த மோடிக்கு எடப்பாடி கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

modi epsகொரோனா பொது முடக்கம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு 50 நாட்களை கடந்துவிட்டது.

தற்போது சில தளர்வுகளுடன் வணிக நிறுவனங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

வருகிற ஜீன் 1ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்காக அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களும் தயாராக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 25ஆம் தேதி தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

கொரோனா பாதிப்பு இன்னும் தமிழகத்தில் அதிகமாக இருப்பதால், ஜூன் மாதத்திற்கு பிறகு விமான சேவையை தொடங்கலாம் என முதல்வர் அதில் கேட்டு கொண்டுள்ளார்.

மே 25 முதல் சென்னை, கோவையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டதும் இங்கே கவனிக்கத்தக்கது.

2 மாதங்கள் வெளிநாட்டில் சிக்கிய பிருத்விராஜ் கேரளா திரும்பினார்

2 மாதங்கள் வெளிநாட்டில் சிக்கிய பிருத்விராஜ் கேரளா திரும்பினார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prithvi rajதமிழில் கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் மலையாள நடிகர் பிருத்விராஜ்.

இவர் அண்மையில் மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.

இவர் பிளஸ்ஸி இயக்கும் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மார்ச் மாதம் ஜோர்டான் நாட்டுக்கு சென்றிருந்தார்.

அதன்பின்னர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பொது முடக்கம் அமலுக்கு வந்தது.

இதனால் பிருத்விராஜால் இந்தியா திரும்ப முடியவில்லை.

ஜோர்டான் நாட்டில் ஒரு தீவில் சிக்கினாலும் அங்கு படப்பிடிப்பை நடத்தி வந்தார்.

சூட்டிங் முடிந்தவுடன் எங்கும் செல்லமுடியாமல் தவித்து வந்தார்.

இந்த நிலையில் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அதன்படி பிருத்விராஜ் படக்குழுவினர் உள்ளிட்ட 57 பேரும் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இன்று காலை கேரளாவில் உள்ள கொச்சியை அவர்கள் வந்தடைந்தனர்.

லூசிபர் ரீமேக்.; சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் விஜய்-தனுஷ் பட நடிகை

லூசிபர் ரீமேக்.; சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் விஜய்-தனுஷ் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chiranjeevi geneliaசந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், சச்சின், உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழக ரசிகர்களை கவர்ந்தவர் ஜெனிலியா.

கடந்த 2012ல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

தற்போது சினிமாவில் ரீ எண்ட்ரீ கொடுக்கவிருக்கிறாராம்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான லூசிபர் படத்தை தெலுங்கில் உருவாக்கவுள்ளனர்.

நடிகர் பிருத்விராஜ் இயக்கிய இந்த படத்தில் மோகன்லால் நாயகனாக நடித்திருந்தார். நாயகியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இதன் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்க அவருக்குதான் ஜெனிலியா ஜோடியாக நடிக்கிறாராம்.

சாஹோ பட இயக்குனர் சுஜித் இந்த படத்தை இயக்க உள்ளார்.

தமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது

தமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

masterதமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது

இந்தியளவில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் படமான விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் புதிய அப்டேட் சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது.

மேலும் நடிப்பிற்காக எந்தத் தோற்றத்தையும் தனக்குள் கொண்டு வரும் சியான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் 90 நாட்கள் ஷுட்டிங் நிறைவுற்றுள்ளது. அஜய் ஞானமுத்து எழுதி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25% மட்டுமே பாக்கி இருக்கிறது

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் ஷுட்டிங் 35 நாட்கள் நடைபெற்றுள்ளது. விறுவிறுப்பான கதை அம்சம் உள்ள இப்படம் சிறப்பாக வளர்ந்து வருகிறது

மேலும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் இளைஞர்களின் ஆதர்ச இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ஆக்ஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. விஜய்சேதுபதி நயன்தாரா விக்னேஷ் சிவன் ஏற்கெனவே வெற்றிக்கூட்டணி என்பதால் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் முக்கியமான படமாக இருக்கிறது.

கொரோனாவின் தாக்கம் குறைந்து தளர்வு வந்ததும் இப்படங்களின் அடுத்தக்கட்ட பாய்ச்சல் இருக்கும் என்று நம்பலாம்.

More Articles
Follows