தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘பிக் பாஸ்’ சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனார் நடிகர் ஆரி அர்ஜுனன்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஓரிரு படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
ஆனால் பொது நிகழ்ச்சிகளில் ஆரி பங்கேற்கவில்லை.
‘மக்களுக்கு முதல் வணக்கம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் முதன்முறையாக மக்களை சந்திக்க சென்றார்.
இது சென்னையில் நேற்று 21.02.2021ல் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் தன் ட்விட்டரில் ஆரி வருத்தம் தெரிவித்து இருந்தார்.
அதில்…
“மக்களுக்கு முதல் வணக்கம்”
21.2.21 என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.
வந்திருந்த அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ள, காலமும் சூழலும், மெரினா மாலில் ஒத்துழைக்காததிற்கு வருந்துகிறேன்.
புகைப்படம் எடுக்க வரிசையில் நின்ற உங்கள் பண்பிற்கும் அன்பிற்கும் இந்த ரசிகனின் ராயல் சல்யூட்.”
என பதிவிட்டுள்ளார் ஆரி.
Bigg Boss Aari message to his fans