அருள்நிதிக்கு ஜோடியாகிறார் பிக்பாஸ்3 அழகி லொஸ்லியா

அருள்நிதிக்கு ஜோடியாகிறார் பிக்பாஸ்3 அழகி லொஸ்லியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Big Boss3 fame Losliya likely to pair with Arulnithi

தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சமிருந்தாலும், தற்போதைய ஹாட் டாப்பிக் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிதான்.

கடந்த முறை ஓவியாவிற்கு ஆர்மி உருவானது போல் இந்த ஆண்டு லொஸ்லியாவிற்கு புதிய ஆர்மி உருவாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக உருவெடுத்துள்ளார் லொஸ்லியா.

இந்த நிலையில், அருள்நிதி நாயகனாக நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தில் லொஸ்லியா நடிப்பார் என தகவல்கள் வந்துள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவர் சூட்டிங்கில் கலந்துக் கொள்வார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

Big Boss3 fame Losliya likely to pair with Arulnithi

அபாகஸ் போட்டியில் சென்னை மாணவர்கள் அசத்தல்

அபாகஸ் போட்டியில் சென்னை மாணவர்கள் அசத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

4000 Chennai Students Abacus Competitionநந்தம்பாக்கத்தில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி நடைபெற்றது. இதில், சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கு கணிதத்தை எளிய முறையில் கற்றுத்தருவதற்காக பயிற்றுவிக்கும் முறைகளில் குறிப்பிடத்தக்கது அபாகஸ்.

இந்த முறை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது.

இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் சார்பாக தேசிய அளவிலான அபாகஸ் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியை இந்தியன் அபாகஸ் நிறுவனத் தலைவர் பஷீர் அகமது தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில், முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். முன்னாள் எம்.பி. ராமராமநாதன் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்த போட்டியில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள் பங்கேற்றனர்.

அவர்களுக்கு 8 நிமிட மற்றும் 5 நிமிட போட்டிகள் நடத்தப்பட்டது. பின்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த போட்டி மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

4000 Chennai Students Abacus Competition

ஆர்.மாதேஷ் இயக்கும் ” சண்டகாரி- The பாஸ்” விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்…

ஆர்.மாதேஷ் இயக்கும் ” சண்டகாரி- The பாஸ்” விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)பாஸ் புரொடக்‌ஷன்ஸ் கார்ப்பரேசன் & மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து வழங்க J.ஜெயகுமார் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படத்திற்கு ” சண்டகாரி – The Boss என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளார்கள்..

இந்த படத்தில் விமல் கதா நாயகனாக நடிக்கிறார்…கதாநாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார்…முக்கியமான வேடத்தில் பிரபு , சத்யன், மற்றும் கே.ஆர், விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர், உமா பத்மநாபன் மற்றும் பல முன்னனி நடிக நடிகைகள் நடிக்கின்றனர்.. சூப்பர் ஹிட்டான மகதீரா படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் கில் முக்கிய வேடம் ஏற்கிறார்..

ஒளிப்பதிவு – குருதேவ் ,
இசை – அம்ரீஷ்
பாடல்கள் – கபிலன் விவேக்
எடிட்டிங் – தினேஷ்
கலை- அய்யப்பன்
நடனம் – அபீப்
ஸ்டண்ட் – கனல் கண்ணன்
திரைக்கதை அமைத்து இயக்குகிறார் R.மாதேஷ்……

விஜய் நடித்த மதுர, பிரசாந்த நடித்த சாக்லட் ,விஜய்காந்த் நடித்த அரசாங்கம் ,வினய் நடித்த மிரட்டல் ,திரிஷா நடித்த மோகினி ஆகிய படங்களை இயக்கியவர்.

மலையாளத்தில் திலீப் மம்தா மோகன் தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற மை பாஸ் என்ற படத்தை தழுவி எடுக்கப் படும் படம் இது…

திரிஷ்யம் எப்படி சூப்பர் ஹிட் அடித்ததோ அது மாதிரி மை பாஸ் கேரளாவில் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த படம் …
படப் பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது…முதல் கட்ட படப்பிடிப்பு நியூயார்க் வெனிஸ் லண்டன் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது…மற்றும் கொச்சின் கோவா காரைக்குடி போன்ற இடங்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடை பெற்றுக்கொண்டு உள்ளது…

படத்தைப் பற்றி இயக்குனர் மாதேஷ் ” வித்தியாசமான ஆக்‌ஷன் காமெடி படம்.முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி வருகிறது.. பெரும் பகுதி வெளி நாடுகளில் படப் பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது… தற்போது கேரளாவில் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது .. விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது..” என்றார் இயக்குனர் R.மாதேஷ்..

நடிகர் ஆரோவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த நடிகை “நிகிஷா பட்டேல்”

நடிகர் ஆரோவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த நடிகை “நிகிஷா பட்டேல்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)என்னமோ ஏதோ படத்தில் துவங்கி நாரதன், அரவிந்த்சாமி உடன் பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஜிவி பிரகாஷ் உடன் ஆயிரம் ஜென்மங்கள், மற்றும் தமிழ் ,தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நிகிஷா பட்டேல் தற்போது ஆரோவிற்கு ஜோடியாக `மார்க்கெட் ராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் ஒரு காட்சியில் ஆரோவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்க வேண்டிய காட்சி உள்ளது, அதை நிகிஷா பட்டேலிடம் இயக்குனர் கூறுகையில் முதலில் நடிக்க மறுத்த நிகிஷா பட்டேல், இயக்குனர் முழுக்கதையையும் நிகிஷா பட்டேலிடம் கூறிய பிறகு அந்த காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இதைப்பற்றி நிகிஷா பட்டேலிடம் கேட்டபோது இந்த காட்சி படத்தில் மிகவும் முக்கியமான காட்சி என்பதால் முத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதனால் இந்த காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டேன், மற்றபடி வல்கராவோ,முகம் சுளிக்க வைக்கும் காட்சியாக இருக்காது என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்,நான் சினிமா துறையை மிகவும் விரும்பிவந்தேன் அதோடு என்னோடைய கதாபாத்திரத்திற்கு என்ன தேவைப்படுகிறதோ அதை நிச்சயம் செய்வேன் என்று கூறினார்..

சந்தானம்-தாரா இணைந்துள்ள ஏ1 படம் ஜீலை 26ல் ரிலீஸ்

சந்தானம்-தாரா இணைந்துள்ள ஏ1 படம் ஜீலை 26ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)அறிமுக இயக்குனர் ஜான்சன், எழுதி, இயக்க, சந்தானம் நடித்துள்ள படம் ஏ1. இப்படத்தை அக்யூஸ்ட்டு 1 என்றும் அழைக்கின்றனர்.

சந்தானத்திற்கு ஜோடியாக, புதுமுகம் தாரா நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன், இசையமைத்துள்ளார்.

வருகிற ஜீலை 26ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் தொலைக்காட்சி, ‘டிஜிட்டல்’ உரிமம் மட்டும், 4.6 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் இதன் ‘டீசர்’ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

‘ராட்சசி’ ஆக நடித்த ஜோதிகாவுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு

‘ராட்சசி’ ஆக நடித்த ஜோதிகாவுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)ஜோதிகா நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘ராட்சசி’. இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் மக்களிடையை நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதில் கீதாராணி என்ற கேரக்டரில் ஜோதிகா அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையாக நடித்திருந்தார்.

அரசுப்பள்ளியின் அவல நிலையை இதில் காட்டியிருந்தனர்.

ஆசிரியர்களும், ஆசிரியைகளும் ஒழுங்காக பாடம் நடத்தாமல் இருப்பது போன்ற காட்சிகள் இருந்தன.

மாணவர்கள் சிகரெட் பிடிப்பது, ஜாதி வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிகளும் இருந்தன.

மேலும் அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக சம்பளம் பெறுவதாக காட்டப்பட்டு இருந்தன.

இந்த காட்சிகள் அரசுப்பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் ஜோதிகாவை கண்டித்து இணையத்தில் பேசி வருகின்றனர்

More Articles
Follows