தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிநேகா, கோபிகா, மல்லிகா, கனிகா ஆகியோருடன் சேரன் இயக்கி நாயகனாக நடித்த படம் ‘ஆட்டோகிராஃப்’.
இந்த படத்தில் இடம்பெற்ற ’’ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!’’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.
இந்த பாடலில் ‘’மனிதா உன் மனதைக் கீறி விதை போடு உரமாகும்’’ என்கிற வரிகளைப் பாடியவர் கோமகன்.
இவர் கோமகனின் ராகப்ரியா’ எனும் இசைக்குழுவையும் நடத்தி வந்தார்.
பிறப்பிலேயே பார்வையற்றவர் கோமகன். இவரது பூர்வீகம் நாகர்கோவில் என்றாலும் சென்னையிலுள்ள தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் வேலை செய்து வந்தார்.
அங்கேயே பணிபுரிந்த அனிதா என்பவருடன் காதல் மலர, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் போமகனுக்கு அரசு வேலை கிடைத்தது.
சில மாதங்களுக்கு முன் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றார்.
இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சையில் முன்னேற்றம் இல்லை.
இவரின் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து கொண்டே வந்ததால் வென்ட்டிலேட்டரிலேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக இன்று நள்ளிரவு 1.15 மணியளவில் மரணமடைந்தார்.
Autograph fame Singer Komagan passes away