ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை முன்பே துல்லியமாக கணித்த ஜோதிடர் பாலாஜி ஹாசன்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை முன்பே துல்லியமாக கணித்த ஜோதிடர் பாலாஜி ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Balaji Haasanஜோதிட உலகில் இந்த இளம் வயதிலேயே ஆச்சர்யத்தக்க வகையில் துல்லியமான கணிப்புகளை கூறி பிரமிக்க வைத்து வருகிறார் சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன். அமெரிக்கா தேர்தலில் உலகமே டிரம்ப் ஜெயிப்பார் என்று சொன்னபோது, ஜோ பைடன் தான் வெற்றி பெறுவார் என்று சொன்னதாகட்டும், இலங்கை தேர்தலில் ராஜபக்சே தான் வெல்வார் என சொன்னதாகட்டும், அவ்வளவு ஏன், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொலைக்காட்சி நேர்காணலிலேயே ஆணித்தரமாக அவர் கூறியது, என அவரது கணிப்புகள் தொடர்ந்து நிஜமாகி வருவது ஜோதிட உலகில் மாபெரும் ஆச்சர்யம்.

அந்தவகையில் இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில், யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து அவர் கணித்த கணிப்புகள் பல இடங்கள் அப்படியே முழுமையாக நடந்தேறி இருக்கின்றன.

கடந்த முறை மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்தபோதும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி சாதுர்யமாக ஆட்சியை தக்கவைத்து கொண்ட பின்னரும், இனி மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு எப்போதும் வாய்ப்பே இல்லை, என கடந்த சில வருடங்களாகவே பலரும் எதிர்மறை ஆருடம் சொல்லி வந்தனர்.

அந்த சமயத்தில், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தான், அடுத்த முதல்வராக வருவார் என்று, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே உறுதியாக கூறியிருந்தார் பாலாஜி ஹாசன்.

வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய கணிப்பில் கூட,, தான் ஏற்கனவே கூறிய கணிப்பில் இருந்து அவர் மாறவில்லை. அவர் கணித்தது போலவே திமுக பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று இதோ ஸ்டாலின் அவர்கள் முதல்வராகவும் பதவியேற்க போகிறார்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஜாதகங்களை கணித்து, இவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என பாலாஜி ஹாசன் கணித்தார். அதுமட்டுமல்ல, அவற்றை வாக்கு எண்ணிக்கைக்கு முன்கூட்டியே வீடியோவாக யூ ட்யூப்பிலும் பதிவேற்றம் செய்துள்ளார்.

அவர் கணித்து கூறியதில் 180 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். அந்தவகையில் அவரது கணிப்பில் 80 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளார்கள்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில், மறைந்த வசந்த் அன் கோ வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தான் வெற்றி பெறுவார் என தனது கணிப்பில் உறுதி செய்தார். பாலாஜி ஹாசன்.

அதேபோல நட்சத்திர தொகுதியாக மாறிய கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தான் வெற்றி பெறுவார் என்றே அனைத்து கருத்து கணிப்புகளும் கூறின. ஆனால் வானதி சீனிவாசன் தான் வெற்றி பெறுவார் என பாலாஜி ஹாசன் கணித்தார்.. கடைசி நேரம் வரை இவரா, அவரா என நடந்த இழுபறிக்கு பிறகு வானதி சீனிவாசனே வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோல மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கு எதிரான அலை உருவாகி விட்டதாகவும் அதனால் இந்தமுறை பிஜேபி தான் ஆட்சியை பிடிக்கும் என பலரும் கருத்துக்கணிப்பு சொல்லி வந்த நிலையில் தனது துல்லிய ஜோதிட கணிப்பு மூலமாக மம்தா வெற்றி பெறுவார் என உறுதியாக கூறினார் பாலாஜி ஹாசன்.. இதோ அதுவும் பலித்து விட்டது.

மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு தோல்வி என கணித்த அதேசமயம் அஸ்ஸாமில் பிஜேபி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்பதையும் கணித்து கூறி இருந்தார். இந்த தேர்தலில் பாஜக சற்றே ஆசுவாச பெருமூச்சு விட காரணமாக அமைந்தது இந்த அஸ்ஸாம் வெற்றி மட்டும் தான்.

இதேபோலத்தான் கேரளாவில் சபரிமலை விவகாரம், தங்க கடத்தல் விவகாரம் என கம்யூனிஸ்ட் அரசை பிரச்சனைகள் சூழ்ந்திருந்ததை காரணம் காட்டி, இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் தோல்வியுறும், காங்கிரஸ் வெற்றி பெரும் என்று கருத்துக்கணிப்புகள் கூறின.. ஆனால் பாலாஜி ஹாசனோ மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என கணித்தார். கணித்தது பலித்திருக்கிறது.

புதுச்சேரியை பொறுத்தவரை ரங்கசாமி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகள் கூறி வந்தன. அவர்கள் கருத்துக்கு ஏற்ப, ரங்கசாமி தான் முதல்வர் ஆவார் என்று கூறிய பாலாஜி ஹாசன், ஆனால் அவருக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி பலத்தில் தான் ஆட்சி அமைப்பார் என்றும் கணித்து கூறி இருந்தார். கடைசியில் அவர் சொன்னதுதான் நடந்துள்ளது.

அந்தவகையில் பாலாஜி ஹாசனின் துல்லியமான கணிப்புகள் மீண்டும் அவரை பற்றி மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பாக பேச வைத்துள்ளன.

Astrologer Balaji Haasan prediction on Election 2021

ஓடிடி-யை குறி வைக்கும் தனுஷ் விஜய்சேதுபதி நயன்தாரா த்ரிஷா சிவா

ஓடிடி-யை குறி வைக்கும் தனுஷ் விஜய்சேதுபதி நயன்தாரா த்ரிஷா சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

trisha nayantharaகொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

எனவே ஓடிடி-யில் படங்களை ரிலீஸ் செய்ய திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தனுஷின் ஜெகமே தந்திரம் படம் அடுத்த ஜுன் மாதம் ஓ.டி.டி.யில் வெளியாகவுள்ளது..

தற்போது விஜய் சேதுபதி மலையாளத்தில் நடித்துள்ள 19 (1) (ஏ) என்ற படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட உள்ளனர்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

வி.எஸ்.இந்து இயக்கியுள்ள இந்த படத்தில் இப்படத்தில் நித்யா மேனன், இந்திரஜித் சுகுமாரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஏற்கனவே விஜய்சேதுபதி & ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க.பெ.ரணசிங்கம் என்ற படம் ஓ.டி.டி.யில் வெளியானது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது விஜய் சேதுபதியின் அடுத்த படமான துக்ளக் தர்பார் படத்தையும் ஓடிடி.யில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

மிர்ச்சி சிவா நடித்துள்ள சுமோ படம் ஓடிடி.யில் ரிலீசாவது உறுதியாகி உள்ளது,

நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், த்ரிஷாவின் ராங்கி ஆகிய படங்களிம் ஓ.டி.டி.யில் வெளியாகலாம்.

Top celebrities films to release in OTT

கண்ணீர் நனைக்கிறது.. காலத்தை நினைக்கிறது..; தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மரணத்திற்கு டிஆர் இரங்கல்

கண்ணீர் நனைக்கிறது.. காலத்தை நினைக்கிறது..; தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மரணத்திற்கு டிஆர் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Ibrahimதயாரிப்பாளர் திரு E.M.இப்ராஹிம் அவர்களின் மறைவுக்கு டிஆர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில்..

1980ம் ஆண்டு வெளியான என் முதல் படமான ‘ஒரு தலை ராகம்’ படத்தின் தயாரிப்பாளர் E.M.இப்ராஹிம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாய் பாய்கிறது.

மீளா அதிர்ச்சிக்கு உள்ளானேன்,
காரணம் அவர் அரங்கக்குடியில் பிறந்தவர்
என்னை திரையுலகிற்கு அரங்கேற்றம் செய்தவர் வடகரை பக்கத்தில் வாழ்ந்தவர்
என் திரையுலக வாழ்க்கை படகை கரை சேர்த்தவர்

இன்று ஏன் மறைந்தார்..
இந்த உலகை விட்டு பிரிந்தார்..

கண்ணீர் கண்களை நனைக்கிறது..
என் மனம் கடந்த காலத்தில் அவரோடு வாழ்ந்த காலத்தை நினைக்கிறது..

அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இப்படிக்கு,
டி. ராஜேந்தர் M.A,
தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர்,
தலைவர்,
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.
கௌரவ ஆலோசகர்,
தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம்.
Oru Thalai Ragam film producer EM Ibrahim passed away

ஹே மச்சான்ஸ்.. ஒரு ஹாப்பி நியூஸ்.; ‘நமீதா தியேட்டர்ஸ்’ தொடங்கினார் நடிகை நமீதா

ஹே மச்சான்ஸ்.. ஒரு ஹாப்பி நியூஸ்.; ‘நமீதா தியேட்டர்ஸ்’ தொடங்கினார் நடிகை நமீதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் OTT தளங்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கணக்கற்ற வகையில் OTT தளங்கள் துவங்கப்பட்டு வருகின்றன.

இவை ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமல்லாது உலகம் முழுதும் பரந்து விரிந்து ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.

தரமான OTT தளங்களின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது “நமீதா தியேட்டர்ஸ்” தளம்.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தளத்தின் முதன்மை தூதுவராக ( Brand Partner ) நடிகை நமீதா அவர்களும் நிர்வாக இயக்குநராக ரவி வர்மா அவர்களும் உள்ளனர்.

இது குறித்து நடிகை நமீதா கூறியதாவது…

திரை உலக நண்பர்களும் மக்களும் கடந்த வருடங்களில் எனக்கு மிகுந்த பிரபலத்தையும் பெரும் அன்பையும் அளித்து வந்துள்ளார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அதை திருப்பி அளிக்க நினைத்தேன்.

பல விதமான ஐடியாக்களை நினைத்து வந்தபோது தான் ரவி வர்மா அவர்களை சந்தித்தேன். திரைப்பட தொழில்நுட்ப டிப்ளமோ படிப்பு முடித்து, பல வித கார்பரேட் வணிகங்களை செய்து வந்துள்ளார்.

அவர்தான் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் கதைக்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு OTT தளத்தை ஆரம்பிக்கும் ஐடியாவை தந்தார்.

புதிதாக திரைத்துறைக்கு வரும் இளம் திறமைகளுக்கு தேவையான உதவியை அளிக்கும் எண்ணம் எப்போதுமே என்னிடம் இருந்து வந்தது.

புதிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் இது ஒரு நல் வாய்ப்பாக அமையும்.

மேலும் சிறு படத் தயாரிப்பாளர்களும் இத்தளம் மூலம் தங்கள் திரைப்படங்களை திரையிடலாம்.

நாங்கள் இத்தளத்தை துவங்க ஆரம்பித்த கணமே, நாங்கள் நினைத்தே பார்த்திராத அளவு, இத்தளத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.

முதல் பகுதி கதைகள் திரைப்படங்களை நமீதா தியேட்டர்ஸ் தளத்தில் வெளியிட அடுத்த மாதத்தில் ஒரு நல்ல நாளை எதிர்பார்த்துள்ளோம்.

இந்த இனிய பயணத்தில் என்னையும் பங்கேற்க வைத்ததற்கு இந்நேரத்தில் ரவி வர்மா அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ரவி வர்மா கூறியதாவது..,

“நமீதா தியேட்டர்ஸ்” எனும் இந்த கனவு பயணத்தை அறிவிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.

முற்றிலும் தனித்த வகையிலான தராமான கதைகள் எந்த மீடியா அல்லது சினிமாவில் வெளியானாலும் நல்ல வரவேற்பை பெறும். அந்த வகையில் நான் ஒரு தனித்த ஐடியாவை உருவாக்கினேன் அதற்கு ஆதரவளித்து முதன்மை தூதுவராக நமீதா சம்மதித்தது மிகவும் மகிழ்ச்சி.

ஆனால் இந்த வாய்ப்பு கடந்த 27 வருடங்களாக Sunshine Casting Agency நடத்தி வரும் எனது நண்பர், நடிகர், நடிகர்கள் தேர்வாளர் மனோஜ் கிருஷ்ணா அவர்கள் மூலம் தான் இது அனைத்தும் சாத்தியமானது.

அவரும் நானும் 30 வருட கால நண்பர்கள். நடிகை நமீதா அவர்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும், நமீதா தியேட்டர்ஸ் தளம் குறித்து அவர் தந்த ஐடியாக்கள் மிகவும் மதிப்பு மிகுந்ததாகவும் இருந்தது.

அவருக்கு எல்லா வயதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மனோஜ்குமார் அவர்கள் நமீதா தியேட்டர்ஸ் தளத்தில் Chief Administrative Officer ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

சினிமா மீதான தீவிரமான காதல் ஈடுபாடு எங்களுக்குள் ஒரே அளவில் இருந்தது. இருவருக்கும் 40 வருட கால அனுபவம் சினிமா துறையிலும், வணிக துறையிலும் உள்ளது.

எங்கள் இருவரது பங்களிப்பும் நமீதா தியேட்டர்ஸ் தளத்தை மிக சிறப்பாக வழிநடத்தும் என நம்புகிறேன்.

மிக விரைவில் முதல் பகுதி கதைகள், திரைப்படங்களை நமீதா தியேட்டர்ஸ் தளத்தில் வெளியிடுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி.

namitha theatres

Actress Namitha starts new OTT

JUST IN ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..’ பாடல் புகழ் மாற்றுத் திறனாளி கோமகன் காலமானார்

JUST IN ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..’ பாடல் புகழ் மாற்றுத் திறனாளி கோமகன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Komaganசிநேகா, கோபிகா, மல்லிகா, கனிகா ஆகியோருடன் சேரன் இயக்கி நாயகனாக நடித்த படம் ‘ஆட்டோகிராஃப்’.

இந்த படத்தில் இடம்பெற்ற ’’ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!’’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

இந்த பாடலில் ‘’மனிதா உன் மனதைக் கீறி விதை போடு உரமாகும்’’ என்கிற வரிகளைப் பாடியவர் கோமகன்.

இவர் கோமகனின் ராகப்ரியா’ எனும் இசைக்குழுவையும் நடத்தி வந்தார்.

பிறப்பிலேயே பார்வையற்றவர் கோமகன். இவரது பூர்வீகம் நாகர்கோவில் என்றாலும் சென்னையிலுள்ள தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் வேலை செய்து வந்தார்.

அங்கேயே பணிபுரிந்த அனிதா என்பவருடன் காதல் மலர, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் போமகனுக்கு அரசு வேலை கிடைத்தது.

சில மாதங்களுக்கு முன் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றார்.

இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சையில் முன்னேற்றம் இல்லை.

இவரின் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து கொண்டே வந்ததால் வென்ட்டிலேட்டரிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக இன்று நள்ளிரவு 1.15 மணியளவில் மரணமடைந்தார்.

Autograph fame Singer Komagan passes away

அஜித்தை அறிமுகப்படுத்திய இயக்குனரின் தந்தை கொரோனா தொற்றால் மரணம்

அஜித்தை அறிமுகப்படுத்திய இயக்குனரின் தந்தை கொரோனா தொற்றால் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Selva fatherபிரபல டைரக்டர் செல்வா தந்தை பக்தவச்சலம் 85 இன்று காலை 7.15 மணியளவில் காலமானார்.

கொரோனா தொற்று காரணமாக பெரம்பூர் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

சிகிச்சை பலனின்றி இறந்தார்.

டைரக்டர் செல்வா குறிப்பு:

DD பொதிகை டி வி யில் பரபரப்பாக பேசப்பட்ட நீலா மாலா , சித்திரபாவை தொடர்களை இயக்கிய டைரக்டர் செல்வா இயக்கிய முதல் திரைப்படம் தலைவாசல். சூப்பர் ஹிட் ஆனது.

அஜித்குமாரை அறிமுகப்படுத்தி அமராவதி படத்திற்காக இயக்கினார். இதில் சங்கவி நாயகியாக நடித்திருந்தார்.

அதன்பிறகு கர்ணா, புதையல், பூவேலி, உன்னருகே நானிருந்தால், ஜேம்ஸ்பாண்டு, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், நான் அவனில்லை, தோட்டா போன்ற வெற்றிப் படங்களான 25 படங்களுக்கு மேல் டைரக்ட் செய்துள்ளார்.

இப்போது அரவிந்த் சாமி நடிக்கும் வணங்காமுடி படத்தை இயக்கி முடித்துள்ளார் செல்வா.

Fame director Selva’s father Bakthavachalam 85 passed away in Chennai, today 7.15 am battling COVID19 infection.

#RIPBakthavachalam | #selva #directorselva #COVID19 | #Coronavirus | #WearMask | #StaySafe
+91 98406 37906,
+91 98406 55333

More Articles
Follows